முப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்

poornachandran6பேராசிரியர், முனைவர் க.பூரணச்சந்திரன் அவர்களின் இணையதள அறிமுகம், அறக்கட்டளை தொடக்கம், மின் நூல்கள் வெளியீடு ஆகியவற்றின் நிகழ்வுத் தொகுப்பு:-

முனைவர்திரு. ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். பிஷப் ஈபர் கல்லூரி முதல்வர்திரு.பால் தயாபரன் அவர்கள் இணைய வெளியீடும் சிறப்புரையும் ஆற்றினார்.

poornachandran5

எழுத்தாளர்நாவலாசிரியர் இமயம் சிறப்புரையும் மின் இதழ்கள் வெளியீடும் செய்துபேராசிரியர் அவர்களுடனான தமது இலக்கிய தொடர்பு, தமது முதல் நாவலாகிய கோவேறுகழுதைகள் உருப்பெற பேராசிரியரின் துணை ஆகியவற்றை மலரும் நினைவுகளாகவும், எழுத்தாளனின் கடமையும் பொறுப்பும் குறித்தும் விரிவாகப் பேசினார்.

poornachandran2

புனிதசிலுவை மகளிர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஜெசின்பிரான்சிஸ் அவர்கள் அறக்கட்டளை அறிமுகம்-செயல்பாடுகள் குறித்த விளக்கம், பேராசிரியர் அவர்களின்ஆசிரியப்பணி ஆகியவை குறித்து உரையாற்றினார். அறக்கட்டளையின் தற்போதையநிதி, பின்னர் மேலும் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் ஆய்வு மாணவர்களுக்குஆண்டுதோறும் இலக்கிய திறனாய்வுப் பயிலரங்கம் நடைபெறுவது குறித்தும்விளக்கினார்.

poornachandran1

பிஷப்ஈபர் கல்லூரி முதல்வர் திரு.பால் தயாபரன் அவர்கள், பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரனின் இணையமான www.poornachandran என்ற இணையத்தை வெளியிட்டு தலைமை உரையாற்றினார். தங்கள் கல்லூரியின் தமிழ்த் துறைதலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியது கல்லூரிக்கு கிடைத்த பெருமைஎன்று போற்றினார். அதன் மெய்மை அவர்களது மாணவர்களின் கூட்டு முயற்சியில்உருபெற்ற இணையம் / அறக்கட்டளை ஆகியவையே சான்று என்றும் கூறினார்.

திரு.அமுதன் அடிகளார் அவர்கள் சிறப்புரை ஆற்றி, பேராசிரியர் அவர்களுடன்தமக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு, திருச்சி வாசகர் வட்டம் நிகழ்வுகள், இலக்கியப் பட்டறைகளுக்கு அவருடன் இனைந்து பயணித்த நாட்களும், இலக்கியம்,சமூகம் சார்ந்த சீரிய பார்வையும் கொண்ட அவரது செயல்பாடுகள்திருச்சி வாசகர் வட்டம், திருச்சி நாடக சங்கம், திருச்சி திரைப்பட சங்கம்என்று விரிவடைந்து அவற்றின் செயல்பாடுகளை செழுமை அடையச் செய்ததையும், தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரியின் முது நிலை விரிவுரையாளராகவும்பணியாற்றி, இதழியல் குறித்த சிறந்த நூல்களை தமிழுக்குத் தந்தவராகவும் மிகச்சிறந்த மொழி பெயர்பாளராகவும், அதனை அதி விரைவாக மொழிபெயர்த்து தரக்கூடியவராகாவும் இருப்பது என்பது அவரது ஆற்றலின் சான்றுகளாய் இருக்கின்றதுஎன்றார்.

poornachandran4

இங்கே பல கல்லூரி முதல்வர்களும் கூட மாணவர்களாய் தங்கள் நினைவுகளைப் பகிரும் போது எனக்கு மட்டும் அவர் நண்பராகவே அறிமுகமாகி, நண்பராகவே இருக்கின்றார் என்று தமது உரையில் திரு.அமுதன் அடிகளார் நினைவுகூர்ந்தார். திருச்சி வாசகர் வட்டம் குறித்த நினைவுகளுடன் கிராமியன்அவர்களின் சிறப்புரையும், பிஷப் ஈபர் கல்லூரியின் தற்போதைய தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் இரா.விஜயராணி அவர்கள் தமது உரையில் தேர்ந்த பண்பாளரானபேராசிரியர் அவர்களுடன் பணியாற்றியதும், அவரது நேர்மையான வெளிப்படையானபேச்சும் இலக்கியத்துறைக்கு இன்றியமையா ஒன்று என்று கூறினார். பேராசிரியர்அவர்களிடம் மானவர்களாய்ப் படித்தவர்கள் பெருமைப்பட வேண்டிய ஒன்று என்றும்கூறினார். நிகழ்ச்சி நடைபெற துறை சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்தார்.

அடுத்து பேராசிரியர் அவர்களின் பழைய மாணவர்களான முனைவர் அரங்கமல்லிகா, முனைவர் பகவத் கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

www.poornachandran.com என்ற இணையத்தை அழகுற வடிவமைத்து பேராசிரியர் அவர்களின்நூல்களை மின் நூலாக வடித்து தந்த துளிர் மென்பொருள் நிறுவனத்தின் சௌமியன் தர்மலிங்கம் அவர்களுக்கு பேராசிரியரின் மாணவர் நெற்குப்பை காசிவிசுவநாதன்பொன்னாடை வழங்கி அறக்கட்டளை சார்பாக சிறப்பித்தார்.

நிகழ்ச்சியினை முனைவர்திரு.சாம் கிதியோன் அவர்கள் அழகுற ஒருங்கிணைத்து நன்றியுரையும் வழங்கினார்.

poornachandran3

பேராசிரியர் பூரணச்சந்திரன் அவர்களின் படைப்புகளை இணையத்திலும், மேலும் அவரது சிந்தனைகள் மாணவர்களைச் சென்றடைவதற்கு அவர்களின் பழைய மாணவர்களான முனைவர் திரு. ராஜ்குமார், சாம் கிதியோன் தலைமையில் ஒரு பணிக்குழு அமைத்து புனித சிலுவை மகளிர் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ஜெசின் பிரான்சிஸ், முனைவர் ப.சிவசெல்வன், முனைவர் பகவத் கீதா, நெற்குப்பை காசிவிசுவநாதன், பூ.செவ்வேள் ஆகியோர் ஒன்றிணைந்து மிகக் குறைந்த காலத்தில் நிகழ்ச்சியும், அறக்கட்டளையும் இனைந்து நடைபெறும் வகையில் விழா எடுத்து இந்த நிகழ்வினை செயல் வடிவமாக்கினர்.

மேலும் தமிழகத்தில் இதுகாறும் இலக்கியத் திறனாய்வுநோக்கில் பயிலரங்கம், நூல்கள் ஆகியவற்றிற்கு அறக்கட்டளைகள் இல்லாத நிலையில்பேராசிரியரின் சிந்தனைகள் செயல் வடிவம் பெற்று, எடுத்து வைக்கப்பட்ட முதல்படியாகவும் அமைகின்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும்அறக்கட்டளையின் வைப்பு நிதிக்கு மேலும் நிதி திரட்டித் தருவதாகவும்கூறினர்.

நிகழ்வுகள்