அடுத்த பிறவி

சாதியைவிடக் கடுமையாக நாம் எதிர்க்கவேண்டியது இந்துமதத்திலுள்ள முற்பிறவி-அடுத்தபிறவி-தலைவிதிக் கொள்கை. சமுதாயத்தை மாற்றமின்றி, போராட்டமின்றி வைத்திருக்கவும் அடிமைகளை அடிமைகளாகவுமே வைத்திருக்கவும் உருவாக்கப்பட்ட கொள்கை இது.

மலம் அள்ளுபவனையும் மாட்டுத்தோல் உரிப்பவனையும் “இதெல்லாம் உன் பூர்வ ஜென்ம பலன்”

“நீ இந்த சாதியில் பிறந்ததே உன் முன்வினை”

என்று சொல்லும்போது அவன் சமுதாயத்தை எப்படி எதிர்ப்பான்? பெண்ணாகப் பிறந்து அதனாலேயே பலவிதக் கஷ்டங்களுக்குள்ளாகும் ஒருத்தியைப் பார்த்து,

“எல்லாம் உன் தலைவிதி, போன ஜென்மத்தின் பலன், அடுத்தபிறவி உனக்கு நல்லதாகக் கிடைக்கும்”

என்று சொல்லிவிட்டால் அவள் என்ன செய்ய முடியும்?

“உனக்குக் குறைவான கூலி கிடைக்கிறதா, எல்லாம் போன ஜென்ம வினையப்பா, தலையெழுத்து”

என்று சொல்லிவிட்டால் அவன் அதிக ஊதியத்துக்குப் போராடுவானா?

பூர்வஜென்மத்தையும் மறுபிறவியையும் ஆதரிக்கும் முற்போக்காளர்கள், அடுத்தபிறவியில்தான் புரட்சி செய்யவேண்டும். இந்தக் கொள்கை இந்தியாவில் நிலைத்திருக்கும் வரை கார்ல் மார்க்ஸ் இங்கு உள் நுழையவே முடியாது.

சரி, “அப்படியானால் செய்த வினைக்குப் பலனே இல்லையா” என்று கேட்கிறீர்களா? உண்டு, எல்லாம் இந்தப் பிறவிக்குள்தான்.

சமூகம்