அதிகாரிகள், அலுவலகங்கள்

இந்தியாவின் அதிகாரிகள், அலுவலகங்கள்
திரு. குன்னர் மிர்தால், 1968இல் ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பரந்த வீச்சுள்ள ஒரு நூலை எழுதினார். அதில் நம் நாட்டில் அலுவலகங்களில் காரியங்கள் எப்படி நடக்கின்றன என்பதை விவரிக்கிறார்.
“பலநேரங்களில் காரியங்கள், அவை வரிசை முறையில் உடனே செய்யப்பட வேண்டியவையாக இருப்பதனால் செய்யப்படுவதில்லை, அவை மிகக் கடுமையாகி விடுகின்றன என்பதனால்தான் செய்யப்படுகின்றன. முடிவுகள் காலதாமதமாக நடந்தாலும், இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்ற நிலையில்தான் காரியங்கள் நடக்கின்றன. இம்மாதிரியான “பிரச்சினை நேர்ந்தால்தான் நிர்வாகம்” என்ற நிலை, ஓர் ஆரோக்கியமற்ற சமூகத்தின் வெளிப்படையான அறிகுறியாகும்.
சமூக அல்லது பொதுமக்கள் தளத்திலும் செய்திகள் நன்றாக இல்லை. “பணியில் ஒழுங்கின்மை, மிகக் கீழான நிலைமை, காலதாமதம், ஒழுங்கின்மை; மூடநம்பிக்கை, பகுத்தறிவற்ற பார்வை; மாற்றம் சோதனை ஆகியவற்றை மேற்கொள்வதில் விழிப்புணர்வோ, தகஅமைதலோ, ஆர்வமோ சற்றும் இன்மை, உடலுழைப்பில் வெறுப்பு, அதிகாரத்துக்கும் பணத்துக்கும் கீழ்ப்படிதல் மற்றும் சுரண்டல்…”
1968இல் இருப்பதாக மிர்தால் வருணிக்கின்ற இந்த நிலை, இன்று நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியிருக்கிறது? சிந்தியுங்கள்.

தினம்-ஒரு-செய்தி