“ஆய்வு”

ஒரு மேலாளர் தனது தொழிற்சாலைப் பகுதியில் மேற்பார்வை (இந்தக்காலச் சொல்லில் “ஆய்வு”)செய்து கொண்டிருந்தார். ஓர் இளைஞன் எந்த வேலையும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவனிடம் சென்று, “ஏம்பா, உன் சம்பளம் என்ன?” என்றார். “ரெண்டாயிரம் ரூபாய் சார்” என்றான் அவன். உடனே பாக்கெட்டிலிருந்து நாலாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து “இந்தா ரெண்டு மாச சம்பளம். இனிமே இந்தத் தொழிலகம் பக்கமே தலையைக் காட்டாதே..சோம்பேறிகளுக்கு இங்கே இடமில்லை” என்றார். அவன் வாங்கிக் கொண்டு போய்விட்டான். 
பிறகு அவர் பக்கத்திலிருந்த தொழிலாளியிடம் “அவன் என்ன வேலை செய்துவந்தான்” 
என்று கேட்டார். “சார், அவன் பக்கத்து சங்கீதா மெஸ் ஆள். நாங்க அங்கதான் சாப்பிடுவோம். இங்கே மத்தியான சாப்பாடு இன்னிக்கு எததனை பேருக்கு வேணும்னு கேட்டுத் தெரிஞ்சிக்க வந்திருந்தான்” என்றார் அந்தத் தொழிலாளி.

General