இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 3

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 3

கட்டம் 2: சோதித்துப் பார்த்தல், 1977-1991

இந்தக் காலப்பகுதி, காங்கிரஸ் கூட்டுக் கட்சிகள் அல்லாத, ஜனதாக் கட்சி 1977இல் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1980இல் இந்திரா காந்தி பிரதமராகத் திரும்பினார். 1984இல் அவர் கொலை செய்யப் பட்டார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி 1991இல் தான் கொல்லப்படும் வரை நீடித்தார். இந்தத் தாய்-மகன் இரட்டையர், முதல் கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கடுமை யான–ஆனால் நன்னோக்குடைய–திட்டங்களை இல்லாமல் செய் யும் பல சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டனர்.

இடையில் குறைந்த காலமே பதவியில் இருந்த ஜனதாக் கட்சி அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விஷயத்தில் எந்த விளைவும் அற்றதாக இருந்தது. இப்போது தனது திறனின்மை, ஊழல் ஆகியவற்றிற்காக மட்டுமே அது நினைவுகூரப்படுகிறது.

ஜனதாக் கட்சி என்பது பொதுவுடைமைக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டு; இந்திரா காந்திக்கும் அவசரநிலைக்கும் எதிரானது. இந்தக் கூட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு முன்னோடி யான பாரதிய ஜனசங்கமும், பிற சில கட்சிகளும் இருந்தன. இவை அனுபவமிக்க சமதர்மவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறிய, ‘ஜே.பி’. என அழைக்கப்பட்ட, ஜயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ‘முழுமைப் புரட்சி’ என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவை.

கூட்டணியில்தான் என்றாலும், ஜனசங்கம் போன்ற ஓர் இந்து தேசியக் கட்சி மையத்தில் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறை.

ஜனதாக் கட்சி, காந்திய மற்றும் ஜனசங்கத்தின் இந்துப் பாரம் பரியப் பார்வையைக் கொண்டிருந்தது. பெருந்தொழில்களுக்கு மாறாக சிறிய, கிராமப்புற அடிப்படையிலான தொழில்களுக்கும் கிராமப் பஞ்சாயத்துக்கும் முக்கியத்துவத்துவம் தரப்பட வேண்டும் என மாற்ற விரும்பியது. ஆனால் இவ்வாறெல்லாம் இருப்பினும், தொழிற்கொள்கை மீது அதன் நிஜமான பாதிப்பு ஒன்றுமே இல்லை. நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிக ளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என அழுத்தம் தரப்பட்டது தான் ஒரே ஒரு சிறிய மாற்றம்.

மிகுந்த அளவில் மாறாததும், மிகக் கட்டுப்படுத்தக்கூடியதுமான விதிமுறையமைப்புகளில் சிலவற்றுக்கு நியாயம் கற்பிக்கவும், சிலவற்றைத் தளர்த்தவுமான நிஜமான பணி, முதலில் அவற்றை உருவாக்கிய பொறுப்புள்ள ஒருவருக்கே வந்து சேர்ந்தது. அதாவது இந்திரா காந்திக்கு. அவருடைய கொலையைத் தொடர்ந்து, அவர் மகன் ராஜீவ் காந்திக்கு.

1980இல் இந்திரா காந்தி ஒரு புதிய வீச்சோடு பதவிக்குத் திரும் பினார். பொருளாதாரம் மிகக்குறைந்த அளவே செயல்படுகிறது என்பதும், தனியார் துறை மீதான கட்டுப்பாடுகள் வெகுதொலை வுக்குச் சென்றுவிட்டன என்பதும் அவருக்கே புரிந்தது. 1980 ஜூலையில் இந்திரா காந்தி ஒரு புதிய தொழிற்கொள்கையை அறிவித்தார். அவர் முதல்முறை (அவரசநிலைக்கு முன்னால்) பதவியிலிருந்தபோது ஏற்படுத்திய ‘கழுத்தை நெறிக்கும்’ ஆட்சிக்கு எதிராகச் சின்னச்சின்ன விலகல்களை முற்றிலும் எதிர் திசையில் கொண்டு செல்வதாக அது அமைந்தது. இந்தச் சீர்திருத்தங்கள், இறக்குமதிகள்மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கின, தனியார் தொழில்துறை மேலும் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளவும், ஏகாதிபத்திய உரிமைக்கு எதிரான சட்டங்களின் பயமின்றித் தொழிலகங்கள் பெரிதாகவும் அனுமதி அளித்தன.

1984இல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். முன் தலைமுறையின் சமதர்ம அல்லது காந்தியச் சிந்தனையினால் சிறிதும் தொல்லைப் படாமல், நவீன வசதிகளான தனியார் வாகனங்கள், வண்ணத் தொலைக்காட்சி போன்றவற்றை மேலும் ஏற்றுக்கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை வளர்த்தும், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், பொருளாதாரப் போட்டியை ஊக்கு வித்தும் ராஜீவ் காந்தி இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்குள் செலுத்த முனைந்தார். மேற்கத்திய நுகர்வுப் பாணிகளை விரும்பிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவை இது அவருக்குப் பெற்றுத் தந்தது.

1980களின் மேட்டுக்குடியினர் தலைமை ஏற்ற இந்தக் கட்டுப்பாட்டு நீக்கம், தனியார் துறைகளின்மீது இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது, இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களிலி ருந்து தயாரிக்கப்பட்ட வாகனங்களையும் வண்ணத் தொலைக் காட்சிகளையும் வைத்துக் கொள்ளுமாறு நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியையும் நுகர்வோருக்கான வரிவிலக்கையும் தாராள மாக்கியது. இதன் விளைவாக நீடித்துழைக்கும் பொருள்கள் உற்பத்தித் துறை 1980களில் ஆண்டுக்கு 8 முதல் 22 சதவீதமாக வளர்ச்சியடைந்ததோடு, அது நுகர்வோர் பெருக்கத்தையும் உரு வாக்கியது. ஒட்டு மொத்த உற்பத்திவீதம் 5.6 சதவீதம் ஆகியது. இது கடந்த ஆண்டுகளின் ஜனதா கட்சியின் அவப்புகழ் பெற்ற ‘இந்து வளர்ச்சி வீதமான’ 3.5 சதவீதத்தைவிட மிகுதி. வெளி நாட்டுக் கடனும், கடன்மீதான வட்டியும் 1980களில் முன்னைவிட மூன்றுமடங்காக, 23.8 பில்லியன் டாலரிலிருந்து 62.3 பில்லியன் டாலராக அதிகரித்தது.

ஆனால், இறக்குமதி சார்ந்த இந்த நுகர்வோர் வளர்ச்சிக்கேற்ற வாறு ஏற்றுமதியின் அதிகரிப்பு இல்லை. இது, அயல்நாட்டுப் பணத்தின் இருப்புநிதியில், அந்நியச் செலாவணியில் ஒரு கடுமையான பற்றாக்குறை நிலையை உருவாக்கியது.

1991இல் ஒரு தேர்தல் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, ஸ்ரீலங்காவில் சிங்களருக்கு ஆதரவாக இந்தியாவின் குறுக்கீட்டை விரும்பாத ஓர் இலங்கைத் தமிழ்த் தற்கொலைப் படையாளியினால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இரண்டு காந்திகளும் தொடங்கிவைத்த சிறிய சிறிய சீர்திருத்தங்கள், நவதாராளமயச் சீர்திருத்தங்கள் முழு அளவில் நிறைவேறுவதற்கான மேடையை அமைத்தன. அவற்றைச் செய்தவர் நரசிம்ம ராவ். ராஜீவ் காந்தி கொலையினால் கிடைத்த அனுதாப அலை வாக்குகளைக் கொண்டு 1991 ஜூனில் காங்கிரஸ் கட்சி தேர்தலை வென்றபோது அவர் பிரதமர் ஆனார்.

சமூகம்