இனம் இனத்தோடு சேரும்

ஒருவனின் வீட்டுவாசலில் ஒரு நாய் செத்துக்கிடந்தது.
அவன் போலீசிடம் சொன்னான்.
“போய்யா, இது எங்க வேலை இல்லை” என்று சொல்லிவிட்டு போலீஸ்காரன் போய்விட்டான்.
துப்புரவு ஆய்வாளரிடம் சொன்னான்.
“இது எங்கவேலை இல்லை, தினசரி குப்பைகூட்ட வருபவர்களிடம் சொல்” என்றான் அவன்.
குப்பைகூட்டப் பல நாட்களாக யாருமே அந்தப்பக்கம் வருவதில்லை.
கடைசியாக அந்த வார்டு கவுன்சிலரிடம் போய்ச் சொன்னான்.
“உன் வீட்டு வாசலில்தானேய்யா கிடக்கிறது? அது உன் வேலைதான். போய் நீயே எடுத்துப்போடு” என்றான் அவன்.
“சரி சரி, என் வேலைதான். ஆனால் செத்தவரை எடுத்துப் போடுவதற்குமுன் அவர்களின் சொந்தக்காரருக்குச் சொல்வது வழக்கம். அதன்படி சொன்னேன்” என்றான் வீட்டுக்காரன்.

தினம்-ஒரு-செய்தி