இரண்டு அதிசயங்கள்!

ஸ்விட்சர்லாந்தில் (நமது நாட்டில் அல்ல!) நிகழ்ந்த இரண்டு அதிசயங்கள்!

முதல் அதிசயம்:

சில நாட்களுக்கு முன்னால் ஸ்விஸ் அரசாங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

1. ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் அடிப்படை ஊதியமாக 2500 பிராங்க் (ரூ.1,75,000) வழங்கப்படும்.

2. ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை ஊதியமாக 625 பிராங்க் (ரூ.45,000 ) வழங்கப்படும்.

ஸ்விஸ் நாட்டில் ஐந்துவருடமாக இருக்கும் வெளிநாட்டவர்க்கும் இந்தச் சட்டம் செல்லும்.

இதற்கு நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை.
சும்மா இருந்தாலே போதும்.

உதாரணமாக, ஒரு குடும்பத்தில், ஒரு கணவன், மனைவி, குழந்தை இருந்தால், 5625 பிராங்க் (ரூ.3,95,000) ஊதியமாகக் கிடைக்கும்.

இரண்டாம் அதிசயம்:

இந்தச் சட்டத்தை அமல்படுத்த ஒரு பொது வாக்களிப்பை அந்த அரசாங்கம் நடத்தியது.

எழுபத்தெட்டு சதவீதம் பேர், இந்தச் சட்டம் வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.
அவர்கள் கூறிய காரணங்கள்.

1. இச்சட்டம் எங்களையும் எங்கள் சந்ததியினரையும் சோம்பேறிகளாக மாற்றும்.
2. இம்மாதிரி இலவச ஊதியத்தால் எங்கள் அடிப்படை உரிமையை நாங்கள் இழக்க நேரிடும்.
3. இதனால் அயல்நாட்டவர்கள் நமது நாட்டுக்குள் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் நுழைவார்கள்.

“ஆகவே இலவச ஊதியம் வேண்டாம்.”

ஆயிரம் ரூபாய் இலவசத்துக்காகத் தங்கள் வாக்குரிமையை விற்கும்  ‘முன்தோன்றி மூத்த குடியினர்’ கற்க வேண்டிய முதல் பாடம் இது.

நன்றி-நண்பர் மனோகர் ராஜன்

சமூகம்