எது முந்தியது?

ஒரு மருத்துவர், பொறியியலாளர், அரசியல்வாதி மூவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். தங்கள் தொழில்களில் எது மூத்த தொழில் என்பதில் அவர்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தனது தொழில்தான் முற்பட்டது என்று நினைத்தார்.
மருத்துவர் சொன்னார்: “இறைவன் உலகைப் படைத்தபோது ஆறாம் நாள் ஆதாமின் எலும்பை எடுத்து அறுவைமருத்துவம் செய்து ஏவாளை உருவாக்கினார் . ஆகவே மருத்துவம்தான் உலகில் முதல் தொழில்”.
பொறியியலாளர் சொன்னார்: “ஆனால் அதற்கு முன்பே குழப்பத்திலிருந்து உலகத்தைக் கடவுள் உருவாக்கினார். ஆகவே பொறியியல்தான் உலகின் முதல் தொழில், மருத்துவத்திற்கும் முன்னால்”.
அரசியல்வாதி எழுந்தார். “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் சற்று யோசியுங்கள்.  அந்தக் குழப்பத்தையெல்லாம் உருவாக்கியது யார் என்று நினைக்கிறீர்கள்?”

தினம்-ஒரு-செய்தி