எளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி

சீனாவில் ஒரு வ்ங்கிக் கொள்ளை நடந்தது. கொள்ளையர்கள் துப்பாக்கியை வைத்து அனைவரையும் மிரட்டினர். “இந்தப் பணம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது” என்றார்கள். அனைவரும் அசையாமல் படுத்துவிட்டனர்.
(மனத்தை மாற்றும் முறை என்பது இதுதான். Mind changing concept, changing the conventional way of thinking)
அப்போது ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்பவேண்டி சற்று அநாகரிகமாக நடந்தாள். அப்போது கொள்ளையர்களில் ஒருவன் கூறினான். “இங்கு நடக்கப்போவது கொள்ளைதான். நாங்கள் கற்பழிப்பு செய்பவர்கள் அல்ல” என்று மிரட்டி அவளை உட்கார வைத்தான்.
(செய்யும் தொழிலில் கவனம் தேவை என்பது இதுதான். Being professional and focussed only on what you are trained)
கொள்ளையடித்துவிட்டுத் தங்கள் இடம் வந்தவுடன் ஒருவன், “சீக்கிரம் பணத்தை எண்ணிவிடலாம்” என்றான். “பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது, எண்ண நிறைய நேரம் ஆகும். நாளைச் செய்திகளில் அரசாங்கமே நாம் எவ்வளவு கொள்ளையடித்தோம் என்பதை வெளியிட்டுவிடும்” என்றான் தலைவன்.
(படிப்பைவிட அனுபவம் சிறந்தது என்று இதைத்தான் சொல்கிறோம். Always experience is more important than qualifications)
வங்கி மேலாளர் இதைக் காவல்துறையிடம் சொல்லமுனைந்தபோது அவனுடைய மேலாளர் தடுத்து, “வங்கியில் கொள்ளைபோனது இருபதுகோடிதான். நாம் முப்பதுகோடி பதுக்கி வைத்துக் கொண்டு, ஐம்பதுகோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவித்துவிடலாம். இதுதான் சந்தர்ப்பம்” என்றான்.
(காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது இதுதான். Swim along with the tide, Convert an unfavourable situation to your benefit)
இதைக் கேட்ட மற்றொரு அதிகாரி, “இம்மாதிரி வருஷம் ஒருதடவை கொள்ளை நடந்தால் நன்றாக இருக்கும்” என்றான்.
(This shows personal happiness is much more important than your job)
மறுநாள் பத்திரிகையில், வங்கியில் 100 கோடி ரூபாய் கொள்ளையிடப்பட்டதாக செய்தி வந்தது. கொள்ளையர்கள் அதிர்ந்து போனார்கள். பணத்தை எத்தனை முறை எண்ணி எண்ணிப் பார்த்தும் இருபது கோடிதான் இருந்தது. ஒருவன் எரிச்சல் அடைந்து,
“நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த அரசு அதிகாரிகளும் வங்கி அதிகாரிகளும் தாங்கள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளையடித்து விட்டார்கள்” என்றான்.
தலைவன் சொன்னான்:”இப்போதுதான் படிப்பின் அவசியம் புரிகிறது.”
(Knowledge nowadays is very important than money).

தினம்-ஒரு-செய்தி