ஒரு குறிப்பு

1981 முதலாக நான் தமிழ்ப்பொழில் தந்த தமிழ் ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கென ஆய்வு செய்து வந்தேன். முனைவர் பட்டம் பெற்ற பிறகு அந்த ஆய்வேட்டினை வெளியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆய்வேட்டினை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினை அணுகியபோது அச்சமயத்தில் உடன்பாடான பதில் கிடைக்கவில்லை. எனவே ஆய்வேடு கிடப்பில் போடப்பட்டது. எனினும் அது பலருக்கும் வரலாற்று அளவிலான பயனளிக்கும் என்பதனால், அதற்கென எழுதிய கட்டுரைகளை இந்த என் இணைய தளத்தில் வெளியிடக் கருதியுள்ளேன். அதன் ஒரு பகுதியாகத் ‘தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்’ என்ற கட்டுரை வெளியிடப்பெறுகிறது. தொடர்ந்து பிற கட்டுரைகளும் வெளியாகும். (கட்டுரைகள் எவ்வித வரிசைமுறைப்படியும் அமையவில்லை. அவ்வப்போது கிடைத்தனவற்றை வெளியிடுகிறேன்.)

தினம்-ஒரு-செய்தி