சடங்குகள்

வேதகாலத்திற்குப் பிறகு பலரும் சமயச் சடங்குகளை எதிர்த்ததால் வேதச் சடங்குகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன, ஆனால் இன்றுவரை அவை தொடரவே செய்கின்றன. சான்றாக, ஹைடிரஜன் குண்டு பரவுவதைத் தடுக்க 1957இல் இந்திய பிராமணர் குழு ஒன்று மிகப்பெரிய யாகம் ஒன்று செய்தது.

பிறகு, 1970இல், இந்திரா காந்தியை எதிர்த்த அன்றைய அரசியல்வாதிகள், அவர் இறப்பதற்கென யாகம் வளர்த்த ஒரு புரோகிதனை ஏற்பாடு செய்தனர். ஆனால் வேடிக்கை, இந்திராகாந்தியைக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட புரோகிதனே யாகம் செய்துகொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்துபோனான்.

கேள்வி: அவனது கர்மவினை, அப்படித்தானே?

பதில்: நவீன இந்துமத நோக்கிலிருந்து பார்த்தால், ஒருவேளை, ஆமாம். ஆனால் இந்திய-பிராமணக் காலப்பகுதியில் இந்தியர்கள் கர்மம் (கர்மவினை) என்ற கருத்தைக் கண்டுபிடித்திருக்கவில்லை. உண்மையில் அவர்கள் அப்போது இந்துக்களாகவே இல்லை. ஏதோ தங்களுக்கென சில புனித நூல்கள்-வேதங்கள், பிறகு வேதக்கடவுளர்களை அழைக்க மிக விரிவான சடங்குகள் கொண்ட அமைப்பு இவற்றைத்தான் வைத்திருந்தார்கள்.
(கீழைத்தத்துவம் என்ற நூலில், இந்தியத் தத்துவம் என்ற பகுதியிலிருந்து)
இன்றும் விடாமல் யாகங்கள் செய்கிறார்கள். எதற்கு, யார் என்று உங்களுக்கே தெரியும்.

தினம்-ஒரு-செய்தி