சில தகவல்கள்

2015க்குரியனவாக இரண்டு பணிகள் என்னைப் பொறுத்த அளவில் நிறைவேறின. ஒன்று, அருட்தந்தை கிஸ்பர்ட் என்பார் எழுதிய சமூகவியல் நூலை மொழிபெயர்த்தமை. மற்றது, தொல்காப்பியப் பொருள்கோள் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதி முடித்தமை. பொருள்கோள் பற்றிய நூல் அடுத்த மாதம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியாக இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சென்ற ஆண்டின் இடைப்பகுதியில் உலகத் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரின் சார்பாகப் பேராசிரியர் சதீஷ் இந்தத் தலைப்பில் என்னைப் பேச அழைத்தார். அப்போது ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பேசப் பட்ட குறிப்புகள்தான் இந்த நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.

தினம்-ஒரு-செய்தி