ஜீவனாம்சம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மணவிலக்கு நடைபெறுவது அதிகம் என்பது நமக்குத் தெரியும். அச்சமயத்தில் ஆண், பெண்ணுக்கு மணவிலக்குத் தொகை (ஜீவனாம்சம்) பல சமயங்களில் தரவேண்டி வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மிக அதிகமான மணவிலக்குத் தொகை தரவேண்டி ஆடவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இது:

ஒரு நீதிபதி பெண்ணுக்கு மேலும் அதிக ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்: கணவன் ஏற்கெனவே தன் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை மனைவிக்கு ஜீவனாம்சமாகத் தர ஒப்புக் கொண்டுவிட்டான்.

“நீ இரண்டாம் 1/3 பகுதியைத் தரவேண்டும்” என்றார் நடுவர்.
“முடியாது, நான் ஏற்கெனவே அதைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றான் அந்த ஆள்.
“அப்படியா? அப்போது மூன்றாம் 1/3 பகுதியையும் தரவேண்டும்”.
“முடியாது, அதையும் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.”
“என்ன சொல்கிறாய்? உனது ஊதியம் முழுவதையும் முன்னாள் மனைவியருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? அப்படியானால் எதை வைத்து வாழ்கிறாய்?”
“என் மனைவி வேறு ஐந்து ஆண்களிடமிருந்து பெறும் ஜீவனாம்சத்தை வைத்து” என்றான் அந்த ஆள்.

தினம்-ஒரு-செய்தி