தமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்

tamil-ilakkiya-1
ரெனி வெல்லக்ஆஸ்டின் வாரன் எழுதிய ஒப்பிலக்கியக் கொள்கை நூலில் இலக்கியக் கல்வியை இலக்கிய வரலாறுஇலக்கியக் கொள்கைஇலக்கியத்திறனாய்வு என மூன்றாகப் பிரித்துஒன்று இன்றி மற்றது இல்லை எனக் காட்டினார்கள். இலக்கியக்கொள்கை அடிப்படையிலேயே மதிப்பிடுதல் நிகழ்வதால், இலக்கியக் கொள்கை இன்றித் திறனாய்வு இல்லை. எவை சிறந்த நூல்கள் என்பதை மதிப்பிடும் துறைதான் இலக்கியத்திறனாய்வு ஆகையால் இலக்கிய வரலாற்றில் எந்தெந்த நூல்களை நாம் தேர்ந்தெடுத்து எப்படி விளக்கப் போகிறோம் என்பதற்குத் திறனாய்வே அடிப்படை. இலக்கியத் திறனாய்வோ, இலக்கிய வரலாறோ இன்றி இலக்கியக்கொள்கை என ஒன்றை வகுக்கவோ வரையறுக்கவோ முடியாது.

ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை இலக்கிய வரலாறு என்றார்கள், ஃபிரெஞ்சு இலக்கியவாதிகள். தமிழில் இதுவரை சரியான இலக்கிய வரலாறு எழுதப்படாத காரணத்தினாலேயே ஒப்பிலக்கிய வளர்ச்சியும் சரிவர ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. வையாபுரிப்பிள்ளைதெ.பொ.மீசி. ஜேசுதாசன்மு.வ. போன்றோர் எழுதிய இலக்கிய வரலாறுகள் எல்லாம் முழுமைத் தன்மையுடையனவாக இல்லை. பிறர் எழுதிய இலக்கிய வரலாறுகள் யாவும் தேர்வுக்குறிப்புகளாகபட்டியல்களாக அமைந்துள்ளன.

      மு.அருணாசலம்பிள்ளைமயிலை சீனி. வேங்கடசாமிஆ.வேலுப்பிள்ளை போன்றோர் முயற்சிகள் குறிப்பிடத்தக்கன. என்றாலும் முழுமையான இலக்கிய வரலாறுகளாக இவற்றையும் பல காரணங்களால் கருதமுடியவில்லை. மு. அருணாச்சலத்தின் இலக்கிய வரலாறு சில நூற்றாண்டுகளுக்கு மட்டுமே விரிவாகக் கிடைக்கிறது. தமிழில் இலக்கிய வரலாற்றுப் பிரச்சினைகளைக் கோடிட்டுக்காட்டும் முறையிலும்எப்படித் தமிழ் இலக்கிய வரலாற்றை அமைக்க வேண்டும் என ஆலோசனை கூறும் முறையிலும் கா. சிவத்தம்பியின் தமிழில் இலக்கிய வரலாறு என்னும் நூல் அமைந்துள்ளது.

tamil-ilakkiya-2

“உண்மையான இலக்கிய வரலாறு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை,அதன் இலக்கியங்களைக் கொண்டுஅதன் இலக்கியங்களின் அடிநாதங்கள்,வெளிப்பாடுகள்தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக்கூறுவதாகும். இலக்கிய வரலாறு என்னும் தொடரை நாம் நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு விட்டோம். அதனை ஓர் உம்மைத் தொகையாகக் கொண்டு இலக்கியமும் வரலாறும் இன்றியமையாவகையிற் பின்னிப் பிணைந்து கிடப்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் சிவத்தம்பி. (தமிழில் இலக்கிய வரலாறுப.9)

இலக்கியப்போக்கில்வரலாற்றில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை இலக்கிய வரலாறு உணர்த்த முனைய வேண்டும். ஆனால் அவற்றுக்குப் பாதுகாப்புரை வழங்கவோ அவற்றை நியாயப்படுத்தவோ முனையக்கூடாது. காலப்போக்கில் ஒரு மொழியில் ஏற்பட்ட படைப்புணர்வு அனுபவங்களின் பரிணாமத்தை வெளிப்படுத்துவதாக இலக்கிய வரலாறு அமையவேண்டும்.

tamil-ilakkiya-3

ஆங்கிலத்தில் இலக்கிய வரலாறு எழுதிய ஜார்ஜ் சாம்சன்செயிண்ட்ஸ்பரிகாம்டன் ரிக்கட் போன்றவர்கள் காலவரிசை அடிப்படையிலே தங்கள் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதினார்கள். தமிழ் இலக்கிய வரலாற்று முயற்சிகள் இவற்றைப் பின்பற்றிஆனால் சுருக்கமாக அமைந்தன. ராபர்ட் இ. ஸ்பில்லர் போன்ற நவீன அறிஞர்கள் கால அடிப்படை இல்லாமலே இலக்கிய வரலாற்றை அமைத்துள்ளார்கள். குறித்த ஒரு மொழியில் நிகழும் படைப்பியக்க வெளிப்பாடுகள் தற்செயலாக ஒரு காலப்போக்கில் அமைந்து விடுகின்றன. இவற்றில் சில எழுத்துருப் பெறுகின்றன,சில எழுத்துருப் பெறாமலே மறைந்துபோகின்றன.

ஒரு நல்ல இலக்கிய வரலாறு இலக்கியப் பிரதிகளின் நம்பகத்தன்மைமூலபாடம்இலக்கியத் தகுதி,மொழியடிப்படைகள்இவற்றிற்கும் மூலமாக உள்ள சிந்தனைக் கட்டமைப்புகள் போன்ற அனைத்தையும் கணக்கில் கொண்டு விவாதிக்க வேண்டும். தமிழில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடைக்கின்றஅல்லது கிடைக்காத நூல்களின் வரலாற்றுத்தன்மை முழுவதையும் கணக்கில் கொண்டு ஓர் இலக்கிய வரலாற்று நூலை உருவாக்குவது மிகக்கடினம்.

tamil-ilakkiya-4

தமிழில் ஒரு நல்ல இலக்கிய வரலாற்று நூலை உருவாக்குவதற்கு இரு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்றுநமக்குக் கிடைக்கும் மூல ஆதாரங்கள் மிகக்குறைவானவை. இரண்டுஇவற்றை நாம் எந்த அளவுக்குப் புறவயநோக்கில் (முழு அளவிலான புறவயநோக்கு என்பது இயலாதது என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும்இயன்ற அளவிற்கு இதனைக் கையாள முயலுதல் சிறப்பு) கிடைக்கும் தகவல்களை விளக்கி எழுத முனைகின்றோம் என்பது. இந்த இரண்டிலுமே எண்ணற்ற குறைகள் இருப்பதனால் ஒரு சரியான இலக்கிய வரலாற்றை உருவாக்க இயலவில்லை. இலக்கிய வரலாறு என்பது காலப்போக்கில் என்னென்ன படைப்புகள் தோன்றின எனப்பட்டியலிடுவதன்று. இப்பட்டியல்களுக்கு ஆதாரமாக அமையக்கூடிய மெய்ம்மைகள்அதற்கு அடிப்படையாக உள்ள காலச்சூழல் போன்றவை எப்படி அக்கால அனுபவங்களோடு தொடர்புறுகின்றன என்று காட்டவேண்டும். எந்திரத்தனமாகஅடுத்தடுத்துக் காலவரிசைப்படி தோன்றுதல் என்னும் முறையில் இலக்கிய வகைகள் தோன்றவில்லை. குறித்த ஒரு காலத்தில் எப்படி ஒரு இலக்கியப் படைப்பு தோன்றியதுஎப்படி அது சமூகத்தில் வெளியானதுஎப்படி ஏற்கப்பட்டது என்பனவற்றை எல்லாம் இலக்கிய வரலாறு சொல்லவேண்டும்.

இலக்கிய வரலாற்றின் பிரச்சினைகளை ஆராய மரபு ரீதியாகக் கையாளப்படும் வழிமுறைகள் சில உள்ளன. அவற்றுள் முதலாவதும் பழையதுமான வழிமுறைஇலக்கியப் படைப்புகளைத் தேர்ந்தெடுத்துஅவற்றைக் காலவரிசையின்படி அமைத்துக் கூறுவதாகும். ஆங்கில இலக்கியத்தில் பேராசிரியர் ஜார்ஜ் செயின்ட்ஸ்பரி இம்மாதிரி முறையில் எழுதியவர். ஆனால் இம்முறையைத் தமிழில் கையாளுவதில் அடிப்படையான வினாக்கள் உள்ளன.

“தமிழின் இலக்கிய வரலாற்றை எழுதுவதிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகி.பி.1300க்கு முந்தியனவாக நம்மிடத்தே இன்றுள்ள தமிழிலக்கியங்கள் எந்த அளவுக்குப் பூரணமானவைஎந்த அளவுக்கு உண்மையில் இருந்த இலக்கியங்களின் முற்று முழுதான தொகுதியாகக் கொள்ளப்படத்தக்கன என்பதாகும். அதாவது உள்ள இந்த இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் முற்று முழுதானஐயந்திரிப்பற்ற இலக்கிய வரலாற்று ஆய்வினில் இறங்கலாமா? என்பதே பிரச்சினையாகும் என்கிறார் கா. சிவத்தம்பி. அதாவது இருக்கும் இலக்கியங்களை நம்பி இலக்கிய வரலாறு எழுத முடியுமா? என்பதே பிரச்சினை. இதற்குள் இன்னும் ஒரு பிரச்சினையும் உண்டு. அதாவது குறிப்பிட்டதொரு காலப்பகுதியிலிருந்தாவது (சங்க காலம் என்று வைத்துக் கொள்வோம்) தமிழில் இயற்றப்பட்ட எல்லா இலக்கியங்களும் இன்று நமக்குக் கிடைக்கின்றனவா? என்பதும் சந்தேகம்.

tamil-ilakkiya-5

இன்னொரு வழி இலக்கிய வரலாற்றுக்குரிய படைப்புகளை அவற்றின் வரலாற்று மூலங்களுடன் சேர்த்தும்படைப்பாளிகளின் இலக்கிய அனுபவங்கள் கலாச்சார அனுபவங்கள் ஆகியவற்றோடும் சேர்த்தும் கூறுவதாகும். மூன்றாவது முறை,காலத்தின் இயக்கத்திற்கேற்ப இலக்கியப்படைப்புகளைத் தொடர்புபடுத்தல். இலக்கியப் படைப்புகள் காலப்போக்கில் சுழற்சிமுறையில் அமைகின்றன என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அமெரிக்க இலக்கிய வரலாற்றை எழுதியவர் ராபர்ட் இ. ஸ்பில்லர் என்பவர். இதுவரை எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறுகளை ஆராயும் கா. சிவத்தம்பி அவற்றிற் காணப்படும் பலவேறு குறைபாடுகளையும் சுட்டியுள்ளார். உதாரணமாகசைவத்தை மட்டுமே தமிழ் இலக்கியத்திற்குரிய பாரம்பரியமாகக் கொண்டுபிற சமயத்தவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியதாகக் கருதும் மனப்பாங்கு அடிப்படையில் காணப்படும் ஒன்று. இதைப்பிற சமயத்தவர்களும் (கிறித்தவர்களும்முஸ்லீம்க ளும்) எதிர்க்கவில்லை.

இன்னொன்றுபிறநாட்டு அறிஞர்கள் தமிழில் எழுதியுள்ளனவற்றை ஆராயும்போது அவற்றுள் அந்த அறிஞர்களின் தாய்மொழி மரபு எவ்விதம் தொழிற்பட்டுள்ளது என்பதை இதுவரை எவரும் ஆராய்ந்ததில்லை. “உதாரணமாக வீரமாமுனிவருடையஅன்றேல் தத்துவபோதகருடைய தாய்மொழி இலக்கிய மரபுகள் எந்த அளவுக்கு அவரவர் ஆக்கங்களிலே காணப்படுகின்றன என்பது பற்றி நாம் இதுவரை ஆராயவில்லை (மு.நூ.,ப.172).

tamil-ilakkiya-6

மேலும் தமிழ்மக்களின் முழுமையான இலக்கிய வரலாற்றை எழுதுவது பற்றிச் சிந்திக்கும்போது, “தமிழர்களால் வடமொழியில் எழுதப்பட்டுள்ள நூல்கள் பற்றிய முற்று முழுதான ஆய்வு மேற்கொள்ளப்படல் வேண்டும் என்கிறார் கா. சிவத்தம்பி. வடநாட்டில் முஸ்லிம்கள் ஆட்சி நிலைபெற்ற பின் தமிழ்நாட்டிலிருந்தே பிரதானமாக வடமொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன என்று கூறிஆதாரமாக பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய வடமொழி இலக்கிய வரலாற்றைக் காட்டுகிறார். மேலும் தெற்கிலிருந்து எழுதப்பட்ட சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமரபுத்தொடர்நடை ஆகியவற்றில் வடக்கிலிருந்து எழுதப்பட்டவையிலிருந்து மாறுபடுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகையதொரு ஆய்வினை – அதாவது கேரளத்திலிருந்து எழுதப்பட்ட சமசுக்கிருத இலக்கியங்கள் பற்றிய ஆய்வினை குஞ்சுண்ணி ராஜா என்பவர் மலையாளத்தில் எழுதியுள்ளார். அதுபோன்றதொரு முயற்சி தமிழில் உருவாக வேண்டும்.

தமிழில் பிராமண மனப்பான்மையுடையவர்கள்அனைத்தும் சமஸ்கிருதத்திலேயிருந்தே வந்தன என்னும் மனப்போக்கை இன்றளவும் கொண்டுள்ளார்கள். இது ஒரு தலைச்சார்பானது என்பது மட்டுமன்றி,தமிழ்க்கலாச்சாரம் சார்ந்த அவர்களது பங்களிப்பை அவர்களே மறுப்பதாகவும் அமைகிறது. எனவே நடுநிலையானசமஸ்கிருத இலக்கியமும் தமிழிலக்கியமும் திரிபறக்கற்ற அறிஞர்கள் இத்துறையில் ஈடுபட வேண்டும். இது இந்தியப் பண்பாட்டில் தமிழரின் பங்களிப்பினை நன்கு வெளிப்படுத்துவதாகவும் அமையும். வடமாநிலத்தவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் நிலவும் தேவையற்ற மொழிகலாச்சாரப் பிரச்சினைகள் பலவற்றைத் தீர்ப்பதாகவும் அமையும். இதுபோலவே பிற திராவிட மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவும் சரிவர ஆராயப்படவேண்டும். இதற்கு ஒப்பிலக்கியத்துறையின் வளர்ச்சி தேவை.

இதனை ஒட்டிக் கருத்துரைக்கும் கா. சிவத்தம்பி, “நேர்சீரான தமிழிலக்கிய வரலாறானதுதமிழர்களின் சிந்தனை வளர்ச்சியின் தன்மையையைம் அளவையும் நன்கு நிறுவிக் கொள்வதற்காக வடமொழிதெலுங்குமலையாளம்,சிங்களம் போன்ற மொழிகளிலுள்ள தொடர்பான நூல்கள் பற்றிய ஆய்வையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அத்தகைய ஓர் ஆய்வினாலே தான் தமிழின் இந்தியத் தன்மையை நிறுவுதல் முடியும். தமிழிலக்கியத்தின் சர்வதேசியத் தன்மை (நாவல்சிறுகதைபுதுக்கவிதை போன்ற இலக்கிய வகைகளின் வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் மூலம்) இன்று வற்புறுத்தப்படுவது போன்றுதமிழிலக்கியத்தின் இந்தியத் தன்மையும் நன்கு வலியுறுத்தப்படல் வேண்டும் என்கிறார் (மு.நூ.,ப.175)

இதுவரை நாம் கண்ட கருத்துகளே தமிழ் இலக்கிய வரலாற்றிற்கும்ஒப்பிலக்கிய ஆய்வுக்கும்தமிழின் தனித்தன்மை பற்றி நாம் பேசுவனவற்றை நிரூபிக்க வேண்டிய நிலைக்குமான தொடர்புகளை நன்கு எடுத்துக்காட்டக்கூடியவை.

இவையன்றிஇலக்கிய இயக்கங்களுக்கும் இலக்கிய வரலாற்றிற்கும் ஒப்பிலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய இயக்கங்கள் யாவும்அடிப்படையில்பொதுவான கலை இயக்கங்களே. எனவே பல்வேறு கலைகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கலாச்சார அடிப்படையில் ஆராய்வது முக்கியமானது. உதாரணமாக, “கி.பி.600க்குப்பின்வரும் இலக்கியங்களில் வரும் மரபுநிலைப்பட்ட உவமைகள் படிமக்கலையை ஆதாரமாகக் கொண்டவை என்பது அதிகம் உணரப்படுவதில்லை(மு.நூ.ப.177). எனவே கலையியக்கங்கள்-செவ்வியம்ரொமாண்டிசிசம் முதல் படிம இயக்கம்குறியீட்டியம் போன்றவை ஊடாக இப்போதைய பின்நவீனத்துவபிற்காலனியதலித்தியபெண்ணிய இயக்கங்கள் வரைஎந்தெந்தத் தாக்கங்களால் எவ்விதம் காலப்போக்கில் பரவியுள்ளனஒரு குடும்ப மொழிகளுக்குள்ளும்பிறமொழிகளின் ஊடாகவும் இவை எவ்வகை மாற்றங்களை இலக்கியத்திலும் பிற கலைகளிலும் ஏற்படுத்தியுள்ளன என்பதையெல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது. உதாரணமாகவங்காளி மொழியின்தாகூரின் பாதிப்பினால் தான் தமிழின் ரொமாண்டிய இயக்கம் கூர்மைப்பட்டது என்பதை மறுக்க இயலாது.

இவற்றோடு புத்தக அபிவிருத்தி (புத்தக உற்பத்திபுத்தக வியாபாரம்புத்தக விநியோகம்நூல் மதிப்புரை முறைகள்எழுத்தறிவு வீதம்நூலகங்கள் போன்றவை) பற்றிய ஆய்வு இன்றி நவீன கால இலக்கிய வரலாறு எழுதப்படவும் முடியாது என்பதை சிவத்தம்பி வலியுறுத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழில் இனிவரும் இலக்கிய வரலாறுகள் எழுதப்படவேண்டும். இம் முயற்சிகள் தமிழில் ஒப்பிலக்கியத்தின் வளர்ச்சிக்கும்தமிழுக்கும் பிறமொழிகளுக்குமான உறவுகள் சீர்ப்படுவதற்கும் பெரிதும் துணை புரியும்.

திறனாய்வு