நல்ல செய்தி

அல்சூரில் தாக்கப்பட்ட திருவள்ளுவர் நூலகத்தைத் தமிழ் வளர்ச்சிக்கழகம் செம்மைப்படுத்த உதவப்போவதாக அறிந்து தமிழர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
நூலகம் என்பது அறிவுக் களஞ்சியம். அறிவில் என் அறிவு உன் அறிவு என்றெல்லாம் கிடையாது. எந்த மொழியின் சிறந்த நூல்கள் அழிந்தாலும் அது உலகத்திற்குப் பொதுவான பேரிழப்புதான். இந்த நூற்றாண்டில் நாம் ஆங்கிலத்திலிருந்து, பிரெஞ்சிலிருந்து, ஜெர்மனிலிருநது, சமஸ்கிருதத்திலிருந்து, இந்தியிலிருந்து, ஏன் கன்னனடம் மலையாளம் போன்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்ப்பு வாயிலாக எவ்வளவு அறிவைப் பெற்றுள்ளோம்! இன்றும் தமிழ் தலித் இலக்கியத்திற்கு மூலம் மராட்டியும் கன்னடமும் என்று பெருமைப்படுகிறோம். ஆனால் அங்கிருக்கும் சிலர் இப்படியிருக்கிறார்கள் என்பது வருத்தம் தருகிறது.

தினம்-ஒரு-செய்தி