நாம் யார்?

சராசரி இந்து மனத்தில், மேற்கத்தியச் செல்வாக்கினால் கெடுக்கப்படாமல் இன்னும் நிறைந்திருக்கும் பரந்த மனப்பான்மை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, உண்மை, தியாகம், எல்லா உயிர்கள்மேலும் அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகள் இந்துக் கலாச்சாரத்தின் பெருமைக்குப் பெரிய சான்றாக அமைகின்றன…. இந்துஸ்தானத்திலுள்ள இந்துஅல்லாத மக்கள்….இந்த நாட்டில் தங்கள் சகிப்புத்தன்மை இன்மையையும், நன்றி யின்மையையும் கைவிடுவதோடன்றி…எதையும் உரிமையெனக் கேட்காமல், எந்த முன்னுரிமைகளும் இன்றி, சலுகைநடத்தையென எதனையும் பெறாமல்-ஒரு குடிமகனுடைய உரிமைகளைக்கூடக் கேட்காமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள வேண்டும். -மாதவ சதாசிவ கோல்வால்கர் (1906-1973)

எனக்கு இந்துமதம் பற்றித் தெரியும் என்றால், அது எல்லாவற்றையும் உள்ளடக்கியது, என்றும் வளர்ந்து கொண்டிருப்பது, என்றும் எதற்கும் ஈடுகொடுக்கக்கூடியது. அது கற்பனைக்கும் யூகத்திற்கும் அறிவுக்கும் மிகச் சுதந்திரமான வாய்ப்பை அளிக்கிறது….இந்து மதத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்ற பூசாரிகளைச் சுற்றி வளைத்திருக்கும் ஒரு பக்கச் சார்பு, மூடநம்பிக்கை ஆகிய உணர்ச்சிகளைத் தங்கத் தராசில் வைத்து எடைபோடவும் காத்திருக்கவும் இயலாது. -மகாத்மா காந்தி (1869-1948)

தினம்-ஒரு-செய்தி