நாலடியார்

நாலடியார் என்னும் நீதிநூலைச் சமண முனிவர் பலர் இயற்றினர் போலும்.
அவற்றில் கிடைத்த பாடல்கள் நானூற்றைப் பதுமனார் என்பவர் தொகுத்து வைத்தாராம்.
இதன் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள்.
திருக்குறளோடு ஒப்பிட இயலாத நூலாக இருப்பினும், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற பிரிவு இதில் இருக்குமாறு தொகுக்கவே பலசமயங்களில் குறளோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 பாட்டுகளைக் கொண்டுள்ளது. குறள்போலன்றி, கடவுள் என்ற சொல்லையே இது ஆள்கிறது.
“நான் எண்ணிய காரியம் முடிவதற்குக் கடவுளைத் தொழுகிறேன்” என்கிறார் இயற்றியவர். இவை யாவுமே குறள் மரபுக்கு மாறானவை. மேலும், திருக்குறள் பொருட்பால் என்பதில் செல்வத்தைப் போற்றுகிறதே ஒழிய இழித்துக்கூறவில்லை. நாலடியாரோ செல்வம் நிலையாதது என்பதில்தான் (முதல் அதிகாரம்-செல்வ நிலையாமை) தொடங்குகிறது. சமண முனிவர்கள் இயற்றியதாலோ என்னவோ நிலையாமைதான் நாலடியாரின் மையக்கரு. (செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை…).
ஆனால் இலக்கியச் சிறப்பு-அதாவது கருத்துணர்த்தல் சிறப்பு இந்நூலில் நன்கு அமைந்துள்ளது. சான்றாகக் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே, நிலம் என்பதை அளக்கும் மையமாக வைக்கிறார் ஆசிரியர். கடவுள் கால்கள் நிலத்தில் தோயா இயல்பு கொண்டவன். ஆகவே நாங்கள் எங்கள் தலையை நிலத்தில் படியவைத்து அவனைப் போற்றுகிறோம் என்ற முரண் சிறப்பாக உள்ளது.
மேலும் நோக்குவோம்.

தினம்-ஒரு-செய்தி