பண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்

பண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்

(தமிழ்ப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை 27-02-1988, 28-02-1988 நாட்களில் நடத்திய தமிழ்நாவல்களில் உளவியல் சித்திரிப்பு பற்றிய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை இது.)

முன்னுரை
தமிழ் நாவல் வரலாற்றில், 1965-70 காலப்பகுதியை ஓர் எல்லையாகக் கொண்டு அதற்கு முந்தைய நாவல்கள், அதை ஒடடிய, அதற்குப் பிந்திய நாவல்கள் என இரண்டாகப் பகுத்துக்கொள்ளலாம். முந்தைய நாவல்களில் குடும்பம் என்னும் அமைப்பின் சிதைவுதான் முக்கியப் பொருளாக ஆளப்பட்டுள்ளது. இச்சிதைவு, பணத்தினால் நேரிடுகிறது. கமலாம்பாள் சரித்திரம் முதலாக, தி. ஜானகிராமன், ஆர். ஷண்முகசுந்தரம், க.நா. சுப்பிரமணியம் முதலியோர் நாவல்கள் வரை வணிக மதிப்பீடுகளால், பணத்தினால், குடும்ப நிறுவன உடைவு என்பதே பொருள். இதற்குச் சான்றாகப் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நாவல், அவ்வளவாகப் புகழ்பெறாத ஒரு நாவல் இவற்றில் பாத்திரச் சித்திரிப்புகளைக் காணலாம்.

பொய்த்தேவு
க.நா. சுப்பிரமணியத்தின் ‘பொய்த்தேவு’ நாவலில், சோமு முதலியாரின் பாத்திரப் படைப்பு குடும்பச் சிதைவினைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இப் பாத்திரப்படைப்பு, சம்பிரதாயமான விவரணை முறையிலோ, உரையாடல்கள் முறையிலோ அமையவில்லை. இரண்டு ஊர்களுக்கிடையிலான இழுநிலையான உறவு வழி சோமு பாத்திரம் உருவாகிறது. சோமு பிறந்த ஊர் சாத்தனூர். பழையகாலப் பாரம்பரிய மதிப்புகளின், குடும்ப உறவு முறையின் குறியீடு. சோமு தன்னைச் சாத்தனூர் மேட்டுத் தெருவிலிருந்து துண்டித்துக்கொள்ளவே விரும்புகிறார். தன் மனைவி பாப்பாத்தி மறைந்ததும், சாத்தனூருக்கும் தனக்கும் உறவு அற்றுப்போய் விட்டதாகக் கருதுகிறார். கும்பகோணம் என்பது வணிக கலாச்சாரத்தின் குறியீடு. ரங்காச்சாரி, பாலாம்மாள் போன்ற கும்பகோணவாசிகள், வணிகமனோபாவக் குறியீடுகள். தன்னைக் கும்பகோணவாசி என்று முதலியார் கருதிக்கொண்டாலும், சோமுவின் மகன், “நடராஜன் அவன் செய்த ஒவ்வொரு காரியத்திலும அவரை மீண்டும் மீண்டும் சாத்தனூர் மேட்டுத் தெருவில் கொண்டுபோய் நிறுத்திக்கொண்டி ருந்தான்.” இச்சமயத்தில்தான் சோமுவின் உள்ளத்தில் சாத்தனூர் கோயில் மணியோசை எழுகிறது. சோமு முதலியார் தனது பொய்த் தெய்வங்களை உதறிவிட்டு, கும்பகோண வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று ஜெயில் செல்கிறார். பிறகு சோமுப் பண்டாரமாகி, வேறொரு சாத்தனூர்ச் சாலையில் செத்துக்கிடக்கிறார்.

மனிதன், தன் பழைய கலாச்சாரப் பாரம்பரியத்திலிருந்து விடுபட முடியாது, நவீன வணிகமயமாதலின் பொய்ம்மைகளில் நிறைவெய்த முடியாது என்பது நாவலின் செய்தி. குடும்ப உறவுகள் அனைத்தும் பணத்தின்முன் பலியாவது இந்த நாவலில் சிறப்பாக வெளியிடப்படுகிறது. சான்றாக ஓரிடம். சோமு முதலியாரின் மகன் நடராசன் மனத்தில் ஒரே கவலைதான் இருந்தது. தன் நண்பனிடம், “ஏண்டா, இந்தக் கிழம் எத்தனை நாளடா இருந்துகொண்டு என்னை வதைக்கும்?” என்கிறான். தன் தந்தையின் வைப்புகளான பாலாம்பாள், கமலாம்பாளுடன் அவனும் தொடர்பு வைத்திருக்கிறான். இதில் அவன் கூச்சமோ அருவருப்போ சற்றும் அடையவில்லை.

அறுவடை
ஆர். ஷண்முகசுந்தரத்தின் அறுவடை நாவலில் ஒரு பெண்ணின் காதல்தான் விஷயம். காதலிலும் பணம் என்னும் பொய்த்தேவு குறுக்கிடுகிறது. தேவானையின் காதலன் சுப்ரமணியத்தின் பாட்டனுக்கே விலை பேசப்படுகிறாள் தேவானை. அவளு டைய காதலன் சுப்ரமணியமோ, அவளைத் தன் தாத்தாவின் சம்பிரதாயமான மனைவியாகவும் தனக்கு வைப்பாகவும் இருக்கச் சொல்கிறான். “இதுக்குமுன்னே (என் தாத்தா) படிதாண்டாப் பத்தினிகளைத்தான் கூட்டிகிட்டு வந்து வச்சிருந்தாரா? எல்லாந் தேவடியாள்கள்தானே?” என்று அநாயசமாக பதிலுரைக்கிறான். பணத்தின் ஆகாயமளாவிய ஆகிருதியின்முன் பெண்மை, கற்பு, குடும்பம் என்னும் பாரம்பரியக் கருத்தாக்கங்கள் இற்று விழுகின்றன என்பதுதான் இங்குச் செய்தி. ஆனால் தேவானை தற்கொலை செய்துகொள்கிறாள்.

போராட்டத்தின் அடிப்படை
1965க்கு முற்பட்ட நாவல்களில் குடும்பச் சிதைவினை எடுத்துக்காட்ட மேற்கண்ட சான்றுகள் போதுமானவை. இம்மாதிரி நாவல்களில் ஒரு பெரிய கலாச்சாரத்தினுள் உள்ள சிறுசிறு பண்பாட்டுக்குழுக்கள் சார்பாகவே தனிமனிதன் இயங்குகிறான். உபகுழுக்கள் மோதலே இங்குக் காணப்படும் பண்பாட்டுச் சிக்கல். நாவலின் முக்கியக் கதாபாத்திரம் சார்ந்திருக்கும் சிறுகுழு உலாகாயதமான மதிப்புச் சாராததாக இருக்க, இவர்களுடன் போராடுபவர்கள் உலோகாயத மதிப்புகளை மட்டுமே முன்¬வ்ப்பவர்களாக உள்ளதனால் இப்போராட்டம் நிகழ்கிறது. இப்போராட்டத்தை நன்மை தீமைக்கான போராட்டமாக எளிமைப்படுத்தியும் உள்ளனர். போராட்டம் என்னும் அம்சம் வெளிப்படையாக முக்கியத்துவம் பெறுவதனால் இந்த நாவல்களில் ஒரு முழுமையான கதையமைப்ப அவசியமானதாகிறது. இம்மாதிரி நாவல்களில் காணப்படும் இரு முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன.

1. தனிமனிதன் இந்த நாவல்களில் பாரம்பரியமான இலட்சிய மதிப்புகளை ஆதரிக்கும் குழுவினைச் சார்ந்திருக்கிறான். இக்குழுவில் இவன் தன்னை ஒத்திசைத்துக்கொள்வ தால், இவனது அந்நியமாதல் தவிர்க்கப்படுகிறது. எனவே அந்நியமாதல் என்னும் பிரச்சினை நாவல்களில் எழுப்பப்படவில்லை.

2. இந்த நாவல்களில் யதார்த்த நிலையில் வணிக மதிப்புகளே வெற்றி பெறுவதாகச் சித்திரிக்கப்பட்டாலும், தலைமை மாந்தர்கள் தியாகம், துறவு, மரணம் போன்றவற்றில் நிறைவெய்து கிறார்கள். அதாவது தனிமனிதனுக்கென இலட்சியங்கள் உள்ளன, தங்கள் இலட்சியத்திற்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கின்றனர்.

இலட்சியத்தில் வெற்றி கிடைக்கிறது. வாழ்க்கை தோற்றாலும், படிக்கும் வாசகர் இவற்றால் அதிகமாகத் தொல்லைக்குள்ளாக்கப்படுவதில்லை. எனவே இவற்றைத் தன்னிறைவு தரும் நாவல்கள் எனலாம். ஏனெனில் ஒரு காவிய அமைதி இவற்றால் கிடைக்கிறது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் நம்பிக்கை அளிக்கப்படுகிறது. சான்றாக, சி. சு. செல்லப்பா, பொய்த்தேவு பற்றிக் குறிப்பிடுவது, “சோமுப்பண்டாரமாக அவர் சாலையில் அறுபதுவயது சமயத்தில் செத்துக்கிடந்தது சோகமான முடிவு இல்லை.” இவ்வாறு கூறிவிட்டு அரிஸ்டாடிலின் ‘கெதார்சிஸ்’ கோட்பாடு பற்றியும் செல்லப்பா குறிப்பிடுகிறார். இத்தகைய இலட்சியச் சித்திரிப்புகளைக் கண்டுதான் ரால்ஃப் பாக்ஸ் போன்றோர நாவல்களைத் ‘தற்கால உரைநடைக் காவியம்’ என்று வருணித்தனர் போலும்.

1965க்குப்பின்
1965க்குப் பின் நகர்மயப்படுத்தல், நவீனமயப்படுத்தல் ஆகியன காரணமாகக் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல, தனிமனித வாழ்க்கையும் சிதைந்து போயிற்று. அதனால் நாவலின் பிரச்சினைகள் வேறாக ரூபமெடுத்தன. கூட்டுக்குடும்பங்களை நகர்ப்புறங்களில் காண்பது அரிதாகிவிட்டது. 1965க்கு முந்திய நாவல்களில் கூட்டுக் குடும்ப அமைப்பையே காணலாம். (இது தமிழ்த் திரைப்படங்களுக்கும் பொருந்தும்.) பின்னர் வந்த நாவல்களில் பெருமபாலான வற்றில் நகர்ப்புற மனிதனின் தனிமனித ஆளுமைச் சிதைவு சித்திரிக்கப் படலாயிற்று. இதற்கு விதிவிலக்கு, இக்காலப் பகுதியிலும் கிராப்புற மக்களைச் சித்திரித்த நாவல்கள் மட்டுமே. சான்றாக நீல. பத்மநாபனின் தலைமுறைகள், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் போன்றவை.

நேற்றிருந்தோம்
எனினும் நகர்ப்புற மக்கள் அனவைரும் பழைய நிலவுடைமை மதிப்பீடுகளிலிருந்து முற்றாக விடுபட்டுவிட்டனர் என்று கூற இயலாது. இதனைக் கிருத்திகாவின் நேற்றிருந்தோம் நாவல் காட்டுகிறது. நாவலின் தலைப்பே நாம் நேற்றைய மதிப்பீடுக ளில் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறது. இன்று நாம் இல்லை, ஏனெனில் இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான புதிய மதிப்புகளையும் அளவுகோல்களையும் நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை. நேற்றைய மதிப்புகள் இன்றைய வாழ்க்கைக்குப் பழைய சட்டை போல் பொருந்தாமல் போகின்றன.
இந்த நாவலில், வெளிநாட்டிலிருந்து விட்டு வந்த பத்மேஷ்-உளவியல் டாக்டர்-வாஸவேச்வரம் நகரின் இன்றைய வாழ்க்கை அலங்கோலங்களைக் காண்கிறான். இந்த மாதிரி அலங்கோலங்களுக்குக் காரணம், நாம் நேற்றிருந்த மதிப்புகளைக் கைவிட்டதுதான் என்ற முடிவுக்கு வருகிறான்.

தலைமுறைகள்
மேற்குநாட்டு அடிப்படையிலான நகரிய வாழ்வுக்கு நாம் ஆட்பட்ட போதிலும், கிராமப்புறங்கள் மாறிவிடவில்லை. நிலவுடைமைச் சமூக மதிப்புகளே அங்கு ஆதிக்கம் செய்கின்றன என்னும் முரண்நிலையை நீல. பத்மநாபனின் தலைமுறைகள் மிக நன்றாக எடுத்துக்காட்டுகிறது. இதற்குமுன் வேறு எந்தத் தமிழ்நாவலிலும் ஒரு சமூகம் இவ்வளவு நெருக்கமாக, நுணுக்கமாக, தலைமுறை தலைமுறையாக ஆராயப்பட்ட தில்லை. இதனால் பழைய நாவல் அமைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பை இந்த நாவல் கொண்டிருக்கிறது. வணிக மதிப்புகள் மோதல்-குடும்பச் சிதைவு என்னும் பழைய கருபபொருள் இந்த நாவலிலும் இல்லாமல் போகவில்லை. கூனங்காணிப் பாட்டாவின் வீழ்ச்சி மூலம் குடும்பச் சிதைவு, நிலவுடைமைக் கட்டுமான அமைப்பின் சிதற்ல் ஆகியவை சித்திரிக்கப்படுகின்றன. எனினும் இந்த நாவலில் இது முக்கியமில்லை. கூனங்காணிப் பாட்டா ஒரு துணைப்பாத்திரமே. இதனையும் தாண்டி மனிதமன ஆழங்களைக் காண அழைக்கிறது இந்நாவல். திரவி, செவந்தப் பெருமாள் ஆகியோரின் பாத்திரப் படைப்புகள் இதனை உறுதிசெய்யும்.

திரவியின் கவலையெல்லாம் அவனது அக்கா நாகுவின் வாழ்வைப் பற்றித்தான். நாகு, காலங்காலமாக இந்தியாவில் உள்ள அடிமைப் பெண்களின் வகைமாதிரி. இவள் போன்றோர், தங்கள்மீது சுமத்தப்பட்ட சமூக நிர்ப்பந்தங்களை எதிர்ப்பதில்லை. திரவியிடம் அந்நியமாதல் பிரச்சினையும் உண்டு. தனது சமூகத்திடமிருந்து, அதன் மதிப்புகளிலிருந்து அவன் அந்நியப்பட்டவன். எனினும் குடும்பப் பற்றும் பாசமும் முற்றிலும் அவனை அந்நியமாக்கவில்லை. படிக்கும் பருவத்திலேயே அவனது மதிப்பு கள் சமூகத்துடன் ஒத்துச் செல்லவில்லை. உண்ணாமலை ஆச்சியிடம் ஏழூர்ச் செட்டிமார் தங்கள் குடும்பப் பெண்களை ராஜாவுக்குக் கலியாணம் செய்து வைக்காமல் அழித்த கதையைக் கேட்டு, “ஆனானப்பட்ட மகாராஜாவை சாம்சாமுன்னு கல்யாணம் செய்யாமே தங்கம்மையும் தாயம்மையும் ஏன் மண்ணோடு மண்ணாகணும்?” என்று அவன் இளமனம் கேள்விகேட்கிறது. பொய்யான இறுகிப்போன மதிப்புகளில் கட்டுண்டு, தன் மக்களை பலிவாங்கும் சமூகத்திடம் அவனுக்கு மதிப்பேற்படவில்லை. நாகுவின் நிலை பற்றியும் இவ்வாறே அவன் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கிறான். ஆ£ல் உண்ணாமலை ஆச்சியோ, அவன் தாய்தந்தையரோ இவ்வாறு சிந்திப்பதில்லை. எல்லவற்றையும் விதி என்று ஏற்றுக்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் சடங்குகள் மிக முக்கியமானவை. அவற்றின் அர்த்தங்கள் முக்கியமானவை அல்ல. உண்ணாமலை ஆசசிக்கு ஆசாரங்களில் இம்மியளவுகூடப் பிசகுவதில் இஷ்டம் கிடையாது. பணத்துட்டுன்னு சொல்லி காலங்காலமாக அனுஷ்டித்துவரும் பழக்க வழக்கங்களை பலிகொடுப்பது ஆச்சிக்குச் சம்மதமில்லை.

உண்ணாமலை ஆச்சியின் அண்ணன் கூனங்காணிப் பாட்டாவும் பழைய கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் ஆட்பட்ட சமூகப் பிரதிநிதிதான். “வீடே தீப்பிடிச்சு எரிஞ்சாலும் அங்கே கிடந்து நீறிச் சாம்பலாவாளே தவிர, தாலியறுத்த செட்டிச்சி ஸாப்பை விட்டு வெளியில் வரமாட்டாள். வரக்கூடாது.”

அவரது குடும்பம் சிதறி, யாவரும் அவரைக் கைவிட்டபோதும், விதிக்கொள்கையை நியாய்ப்படுத்துகிறார். “நாம சின்னப்புள்ளையா இருக்கப்பட்ட சமயம் அனுபவிசசுத் தீத்த பாசத்தைத்தான் நம்ப புள்ளைகளுக்கு நாம் திருப்பிக் கொடுத்தோம்…..அதோட கணக்கு தீந்தாசசு.”
இவ்வாறு இறுகிப்போன சமுதாயத்தில் போராடும் புதிய மனிதன் திரவி. தன் அக்கா குற்றவாளி அல்ல என்று ஊருக்கு ருஜுப்படுத்திவிட வேண்டும் என்ற வைராக்கியத்தின் தீப்பிழம்புகள் திரவியின் மனத்தினுள் கிளர்ந்தெழுந்து அவனைச் சுட்டெரித்துக்கொண்டே இருந்தன.

சாலத்தின் சடங்கும், திருமணமும், உண்ணாம¬ல் அக்காவின் பிள்ளை பிறப்பு, காது குத்தல் சடங்குகளும் மாமூல சம்பிரதாயச் சடங்குகளில் அவனை வெறுப்புக்கொள்ள வைக்கின்றன. அறிவியல் பூர்வமான சிந்தனை இருப்பதால் தான் நாகுவை மருத்துவச் சோதனை செய்து, சமூகத்திற்கு அவள் குறையற்றவள் என்று நிரூபிக்கிறான். ஆனாலும் செவந்தப்பெருமாள், தன் தோல்வியை-யதார்த்தத்தைச் சந்திக்கத் தயாராக இல்லை. யதார்த்தத்தைச் சந்திக்க இயலாத சமுதாயம், தன் தோல்வியைத் தந்திரங்களில் மறைக்கிறது. எனவே செவந்தப் பெருமாளால், நாகுவை மறுமணம் செய்ய இருந்த குற்றாலத்தின் மரணம் நேர்கிறது. செவந்தப் பெருமாள் இந்தப் போலித்தனமான சமூகத்தின்-அதன் முரண்பாடுகள், வெற்று மதிப்பீடுகள், கள்ளத்தனங்கள், சூழ்ச்சிகள், குரூரங்கள் ஆகியவற்றின் குறியீடு. குத்தாலம், பழங்காலப் பாங்கான பலன் பாரா அன்பு, தைரியம் இவற்றின் குறியீடு. தைரியமும் அன்பும் பலியிடப்படுகின்றன; நல்லவர்கள் இச் சமூகத்தைவிட்டு விரட்டப்படுகிறார்கள். ஆனால் தீயவருக்கும் வாழ்வில்லை. பைத்தியக்காரனாக வேடந்தரித்த-அல்லது ஆகிவிட்ட-செவ்ந்தப்பெருமாளும் போலீஸ் ஜீப்பில் கொண்டு செல்லப்படுகிறான். இது எவரது வெற்றி? தேங்கிக் குட்டையாகக் கிடக்கும் தனது சமூகத்தைவிட்டு திரவி தற்காலிகமாக வெளியேறினான் என்றால், இது நன்மையின் வெற்றிதான். ஆனால் சமூகத்தில் நன்மைதான் வெற்றியடைகிறதா? வரலாறு இதனை நிரூபிக்குமா? செவந்தப் பெருமாள் போன்ற காரணமற்றுத் தீங்கு செய்யும் மனிதர்கள் ஏன் இருக்கிறார்கள்? வெறும் குடும்பச்சிதைவு என்பதன்றி, இத்தகைய ஆழமான கேள்விகள் இந் நாவலில் கேட்கப்படுகின்றன.

அபிதா
தலைமுறைகளின் தூலமான புறவுலகுக்கு மாறாக, அகவுலகைச் சித்திரிக்கும் லா.ச.ரா.வின் அபிதா நாவலிலும் தனிமனித, சமூக மோதலைக் காணலாம். அடிமன ஆழத்தின் பிம்பங்கள் உணர்ச்சிச் சுழிப்புகளாக அவரது எழுத்தில் வெளிப்படுகின்றன. லா.ச.ரா.வில் தூல உலகின் சித்திரிப்புக் குறைவு. எனினும் அபிதாவில் தேவையான அளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது. அம்பி, பணத்துக்காகத் தான் மணந்த சாவித்திரியுடன் ஓயாது நிழற்போரிடுவதாக நினைக்கிறான். சலிப்பை மறுக்கப் பூர்வீகம் திரும்ப, அங்குக் காதலி சக்கு வடிவில், அவள் அபிதா. மனித சாத்தியங்கள் பற்றிய ஆழமான எண்ணம் எழவைக்கிறார் லா.ச.ரா. நமது பாரம்பரிய மதிப்புகளின்படி, அம்பி-அபிதா உறவு நிகழ இயலாதது. எனவே மனமுறிவும் இரண்டுபட்ட ஆளுமையும், அம்பிக்கு இயல்பாகின்றன. கன்னிக்குளம் காட்சி, அம்பியின் ஆசைக்குக் கற்பனை வடிகால் தருகிறது. காதல் சாத்தியமற்ற சமூகத்தில், கற்பனை வடிகால்கள்தான் மிகவும் தேவைப்படுகின்றன. நமது திரைப்படங்களின் கனவுமயமாக்கல், இந்த விஷயத்தையே நம்பியுள்ளது. நமது பண்பாடு நிழல்போல் நம்மைக் கவிந்துள்ளது என்று கரடிமலையைக் குறியீடாக வைத்துச் சொல்கிறார் லா.ச.ரா. கரடிமலை, ஆன்மிகத்தின், பழம்பண்பாட்டின் குறியீடு. ஆனால் அங்குதான் சக்கு உயிர்விட்டாள். அபிதாவும் அதன் படிகளில்தான் இறக்கிறாள். அவள் மூத்த அம்பிக்கு மட்டுமல்ல, இளைய அம்பிப்பயலுக்கும் கிட்டாது போகிறாள். அம்பிப்பயலின் வாகனம்-மோட்டார் சைக்கில்-நவீன நாகரிகத்தின் குறியீடு. பற்றி எரிகிறது.

இக்கதையில் வரும் அம்பியும் அந்நியமானவன் அல்ல. கரடிமலை அவனுக்கு ஒரு நெருக்க உணர்வைத் தருகிறது. அம்பி-அபிதா உறவுக்குப் புறச்சமூகம் தடையாக உணரப்படவில்லை. ஆனால் சமூக மதிப்புகள் ஒழுக்கமாக, மனச்சாட்சியாக, சூபர் ஈகோவாக, ஆன்மிகமாக அடிமனத்தில் உறைந்துபோயிருக்கின்றன. அபிதாவைச் சக்குவின் வடிவில் கண்டதும், அவனது இட் உணர்வு தலைதூக்குகிறது. சூபர்ஈகோ வுக்கும் இட் உணர்வுக்கும் ஏற்படும் போராட்டமே அவனது ஸ்கிஸாய்டு நிலைக்குக் காரணம். எனினும், இறுதியில் ஒரு தூய்மையாதல் அவனிடம் நிகழ்கிறது. சப்ளிமேஷன் என்பதற்கும் மேலேபோய், ஒரு தெய்விகக் காட்சி, தாய்மைக் காட்சி அவனுககுச் சித்திக்கிறது.
“யாருக்குமே, ஏதோ ஒருசமயம், இதுபோல் தரிசனம் நேரத்தான் நேர்கிறது. மடிப்பு விரிந்தாற்போன்று இதயம் திடீரென்று அகன்று அதனுள் எரியும் விளக்கு தெரிகிறது.” என்று சிந்திக்கிறான். இதற்கு ஒருவகையில் அவனுககு அபிதாவின் வீட்டில், விருந்தோம்பல் பண்பாட்டின் ஒரு சடங்காக அளிக்கப்பட்ட எண்ணெய்க் குளியல் காரணமாகிறது.

எண்ணெய்க்குளியல் என்னும் சடங்கு-தூய்மையாதல்-தெய்விகக்காட்சி (ரிச்சுவல் சப்ளிமேஷன், விஷன்) என்று தொடர்புபடுத்திக் காணும்போது லா.ச.ரா.வின் பார்வை புலனாகிறது. “சம்பிரதாயமான சடங்குகளும் உதவலாம். ஆன்மிகத்தின் உறைவில்தான் மனிதனின் இருபபுக்கு அர்த்தம் காண முடியும்”. அம்பிக்கு வெளிப்படையான காதல் நிறைவைத் தராமல் கனவுநிறைவைத் தருதல், அவரது ஒழுக்கச் சார்பையும், உடன்பாட்டு மதிப்புகளை வலியுறுத் தலையும் காட்டுகிறது.

தலைமுறைகள், அபிதா போன்றவை, எழுபதுகளில் வந்த நாவல்களாயினும், உடன்பாடடு மதிப்புகளையே முன்வைக்கின்றன. இவ்விதத் தில் இவை அதற்கு முந்திய நாவல்களுடன் ஒத்துச் செல்கின்றன. பழைய நாவல்கள் உடன்பாட்டு மதிப்புகளை உண்டுபண்ணுவதைத் தமது பணியாகக் கொண்டவை. இதற்குத் தி. ஜானகிராமனின் நாவல்களும் விலக்கல்ல. அவரது அம்மா வந்தாள், மரப்பசு போன்றவை எதிர்மறை மதிப்புகளை முன்வைப்பவையாகச் சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளன. நாவலி£சியரின் கோணத்தில் அவ்வாறு அல்ல. மரப்பசு நாவலில், அம்மணி ஒரு மரப்பசுவாகவே (போலியானவள், சமூகத்தில் பயனற்றவள்) இருக்கிறாள்.

எழுபதுகளில் தமிழ்நாவலில் முக்கியத் திசைதிருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்த நாவல்களில் சமூக மதிப்புகள், உடன்பாடானவை-எதிர்மறையானவை என்னும மதிப்பீடும், அவற்றில் நாவலாசிரியனின் கோணப்படி, உடன்பாடானவற்றை வலியுறுத்துதலும் இருந்தது. ஆனால், அணுயுக-விண்வெளி-கம்ப்யூட்டர் யுகத்தில், நகர்ப்புறம் நாகரிகமயம் ஆதலிலும், மேற்குமயமாதலிலும் சிக்கி, குடுமப உறவுகளிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு விடுகிறான். அவனுக்கு எவை உடன்பாடான மதிப்புகள்-எவை எதிர்மறை யானவை என்று தெளிவடைவதே இயலாததாகிவிடுகிறது. மதிப்புகள், பண்பாட்டின் அடிப்படை அம்சங்கள், பண்பாட்டிலிருந்து அந்நியப்பட்டுவிட்ட மனிதனுக்கு, மதிப்புகளும் இல்லை. இத்தகைய மனிதனை எழுபதுகளின் சில நாவல்கள் மிக உக்கிரமாகச் சித்திரித்துள்ளன. இவற்றில் வரும் மனிதனுக்கு மதிப்புகள் அவனது கலாச்சாரத்தினால் வருவதல்ல ஆகலின், அவனுக்கு ஓயாது கேள்விகள் தோன்றுகின்றன. இந்த நாவல்கள் இவனைப் பற்றிச் சித்திரிக்கும் போது இவன் பக்கம் சாயாமல், சார்பற்ற நிலைப்பாடு கொள்கின்றன. ஆதவன், ஜி. நாகராஜன், சா. கந்தசாமி போன்றோரின் சில நாவல்களை இத்தகைய சித்திரிப்பிற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

என்பெயர் ராமசேஷன்
ஆதவனின் இரு நாவல்கள், உளவியல் நாவல்கள் என்னும் தன்மைகள் கொண்டவை. அதவனின் பாத்திரங்கள் தங்கள் ஒவ்வொரு செயலையும் ஓயாது அலசி ஆராய்ந்து கொள்கிறார்கள். ஆனால் புறநிலை யதார்த்தங்களால் தாக்கப்பட்டு சிதறுகிறார்கள். ஆதவனின் இரண்டாவது நாவல், என்பெயர் ராமசேஷனில், இதுவரை தமிழ்நாவல்களில் தொடப்படாத அளவுக்கு, தன்னிலைச் சிக்கல் (ஐடெண்டிடி க்ரைசிஸ்) பிரச்சினை ஆராயப்படுகிறது. பொறியியல் படிக்கும் ராம சேஷனுக்குத் தனது சாராம்சம் தெரியவில்லை. தது தாய், தந்தை, அத்தை ஆகியோர் மீதுள்ள வெறுப்பின் காரணமாக, தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாக, தனது இயல்பான பிம்பத்தை அணிய மறுக்கிறான். வேறு பிம்பம்-தனக்குரியது எது என்று அவனால் நிச்சயிக்கமுடியாததால் தேடி அலைகிறான். தனக்குப் பரிச்சயமான பெண்களுடன் உடன்று தன் பிம்பத்தை நிச்சயிக்க முயலுவதில் அவனுக்குத் தோல்விதான் நேர்கிறது. அவர்களுடன் ஒத்துப்போய் அவர்கள் மனத்துக்குப் பிடித்தமான வேஷங்களையே இவன் அணிய நேர்கிறது. ஒருத்தி, அவனை அல்சேஷன் நாயாக உணரச் செய்கிறாள். இன்னொருத்தியின் நேசத்திற்காக ஓர் இண்டலெக்சுவல் பிம்பம் அணிந்தும், அவளது மெலிந்த உடலைப் பார்த்தவுடன் அவன் காதல் பறந்துவிடுகிறது. தன்னைவிட மூத்தபெண்மணியான பங்கஜம் மாமியுடனான உறவுதான் அவனுக்கு ஓரளவு நிறைவளிக்கிறது. இது ஈடிபஸ் சிக்கலின் வெளிப்பாடு. ஆயினும் அங்கும் அவனுக்கு உண்மையாக இருக்க முடியவில்லை. இதனாலெல்லாம் அவனுக்கு ஒரு காஸனோவா பிம்பம் ஏற்பட்டதுதான் மிச்சம். இறுதியில் அவன் ஏற்க மறுத்த பிம்பம் அவனுக்குத் தானாக வந்து பொருந்துகிறது. தன் தங்கையை அவள் காதலனுடன் ஒருநாள் சினிமாவில் கண்டதும், சநாதன மதிப்புகள் உள்ள குடும்பத் தலைவனாகத்தான் அவன் காட்சியளிக்கிறான்.

மனிதனின் இயல்பான ஆளுமை உள்ளிருந்து விகசிக்கும் ஒன்றே அன்றி, வெளிப்புறத் தோற்றங்களுக்கேற்ப வேஷம் போட்டுக் கொள்வதல்ல என்னும் தெளிவுதான் இந்த நாவலின் செய்தி.

காகித மலர்கள்
என்பெயர் ராமசேஷனைவிடக் கட்டமைப்பில் சிறந்த நாவல், காகித மலர்கள். தன்னிலைச் சிக்கல் இதிலும் விவாதிக்கப்படும் ஓர் அம்சம். வேஷமணிதல், அந்நியமாதல் போன்ற பிரச்சினைகளோடு, சமுதாயத்தின் இருமை நிலை மிக விரிவாக இதில் அலசப்படுகிறது. நிகழ்ச்சிகள் குறைவு. பாத்திரங்களின் மனஅலசல்கள் வாயிலாகவே நாவல் நடக்கிறது.
நகர்ப்புறச் சமுதாயம் முழுவதுமே இன்று போலியான வாழ்வுக்குப் பழகிவிட்டது. அதன் இலட்சியப் பண்பாட்டு அம்சங்களாக அது வெளிப்படுத்து வதற்கும் அது கடைப்பிடிப்பதற்கும் முற்றிலும் சம்பந்தமேயில்லை. மதுவிலக் குப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் மேலும் மேலும் கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும். கள்ளச்சாராயமும் அன்றாட வாழ்க்கை அம்சங்கள். தன்னிறைவான அன்பான குடும்பம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் விபசாரத் திற்கெனத் தனிப்பகுதிகளே உள்ளன. நேர்மை வியந்து பேசப்படுகிறது. ஆனால் ஊழலும் லஞ்சமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள். இவ்வித ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளிலிருந்து விலகிவாழ முயல்பவன்-லட்சிய விதிகளைக் கடைப்பிடிப்பவன்-பிழைக்கத் தெரியாதவனாகவும், ஒத்துப்போகாதவனாகவும், தோல்வியடைந்தவனாகவும் முத்திரை குத்தப்படுகிறான்.

காகித மலர்கள், இந்த வேஷப்பூச்சை தீவிரமாக விமரிசனம் செய்கிறது. டைம்ஸ் பத்திரிகை நரசிம்மனும் விடுதலை பெற்ற பெண்மணியாகத் தன்னை அடையாளம் காணும் பாக்கியம் பசுபதியும் இளைஞர் சமூகத்தைத் திறனாய்கிறார்கள். “படிப்புக்கு மதிப்பில்லாத ஒரு சூழ்நிலையில், சாதாரணப் பொதுஅறிவுகூட இல்லாதவர்கள் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கும் ஓர் அமைப்பில் இக்குழந்தைகள் வளருகின்றன. வீட்டில் பணம் மறுக்கப்பட்டால், கொள்ளையடிக்கப் போகவும் தயங் காத மனநிலை அவர்களிடம் வளர்ந்து வருகிறது.” என்கிறார் நரசிம்மன். தொடர்ந்து சொல்கிறார். “சமூகத்தில் கண்கூடாக மதிப்பும் கௌரவமும் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கும் நியதிகள், வாழ்க்கை சித்தாந்தங்கள் ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட நியதிகளையும் சித்தாந்தங்களையும் நாம் நம்முடைய குழந்தைகள்மேல் மட்டும் திணிக்க முடியுமா? அதை அவர்கள் ஏற்பார்களா?”
இக்கால இளைஞர் சமுதாயம் இருளடைந்திருப்பதைப் பற்றி இருவருமே கவலைப் படுகிறார்கள். இந்த நிலையில் சோகத்தினால் பாதிக்கப் பட்டவர்களாய், அவர்கள் அப்போது ‘இன்னும் சில பெக்குகள் விஸ்கி யருந்தினார்கள்.’

மூத்த தலைமுறையினரின் அக்கறை போலியானது, பொறுப்பற்றது என்று தனது கேலியான தோரணை மூலம் உணர்த்துவதோடன்றி, இவர்கள் வாய்கிழியப் பேசும் இலட்சியங்களை இவர்களே கடைப்பிடிக்கத் தயாராக இல்லை என்ற முரண்நிலையைக் காட்டுகிறார். சமூகத்தின் இருமை நிலையை ஆதவன் சாடுவதற்கு இது ஒரு சான்று.

செல்லப்பா என்ற இளைஞனின் தன்னிலைச் சிக்கல், இக்கதையின் முதற்பகுதியில் பிரதானமாகிறது. ஆனால் அவன் ‘ஞானம்’ பெற்றுவிடுகிறான். ஒரு அணில், சுதந்திரத்தின் குறியீடாக வருகிறது. “ஏராளமான அறிவுமூட்டையை ஒரு தோளிலும், இன்னொரு தோளில் சட்ட திட்டங்களையும் சடங்குகளையும் சுமந்துகொண்டு எதிலும் நிச்சயமோ ஆறுதலோ இல்லாமல் சங்கடப்படும் மனிதனைவிட மூன்று நான்கு விஷயங்களை மட்டும் தெரிந்துகொண்டு அவற்றில் தெளிவுடனும் நிச்சயத்துடனும் இருக்கும் அணில்கள் எவ்வளவோ மேல னவை. எவ்வளவு குழப்பமில்லாத சுலபமான வாழ்க்கை அவற்றி னுடையது?”

இவனைப் போன்று தன்னிலைச் சிக்கலால் பாதிக்கப்படாமல், சர்வநிச்சயத்துடன் செயலில் இறங்கும் இவனது தம்பி பத்ரி, ஒரு கிரிமின லாகிறான். இவனைப் போன்றே தன்னிலைச் சிக்கலால் பாதிக்கப்பட்ட விசுவம்-இவனது விஞ்ஞானி அண்ணன்-தனது மனைவியின் பிரசவ சந்தர்ப்பத்தில் ‘ஞானம்’ பெறுகிறான்.

இந்த நாவல் முழுதும் தன்முனைப்புப் போராட்டங்கள், அதற்கான திட்டமிடல்கள், வேஷங்கள், தாய் தந்தை போன்றவரிடமும் நெருக்கமாக, இயல்பாக இருக்கமுடியாத நிலை. ஒவ்வொருவருக்கும் ஏற்ப வேஷம் அணிய வேண்டிய நிலை. இருபத்திநாலு மணிநேரமும் வேஷம் அணிந்தணிந்து சிலருக்குச் சுயம் என்பதே இல்லாமலும் ஆகிவிடுகிறது. இன்றைய சமூகத்தில் நன்கு பிழைக்கத் தெரிந்தவர்களாக, வெற்றி பெற்றவர்களாக அத்தகையோர்தான் பாராட்டுப் பெறுகிறார்கள்.

இந்த நாவலில் வரும் அத்தனைபேரும் அந்நியப்பட்டவர்கள். இந்த அந்நியமாதல்தான் தன்னிலைச் சிக்கலுக்கு ஊற்றுக்கண். முக்கியமாக இவர்கள் கலாச்சார ரீதியாக அந்நியப்பட்டவர்கள். மேற்கத்திய மதிப்புகளை மேற்பூச்சாகக் கொண்டு வாழும் பாக்கியம், ஓரிரவை ஒரு அமைச்சனுடன் கழிக்கவேண்டி வந்தபோது தனது ஆழ்மனத்தில் தான் மரபு மதிப்புகளுக்கே ஆட்பட்டிருப்பதை உணர்ந்துகொள்கிறாள். அவளுடைய மனப்போராட்டத்தில் அவள் வாழ்வு முடிகிறது.
பிழைப்புக்காக, சுயதிருபதிக்காக, என்று எல்லாவற்றிற்கும் வேஷ மணிந்து தீரவேண்டிய இந்த உலகில் நிஜமான மனிதப்பண்புகளே அற்றுப் போகின்றன; இதுவே மேற்கத்திய நாகரிகம் நமக்கு அளித்த கொடை என்று ஆதவன் முடிவு கூறுவதுபோல் தோன்றுகிறது. ஆதவனின் நகர்ப்புற நாவல்களுக்கு மாறாக, வண்ணநிலவனின் நாவல்கள் இயங்குகின்றன.

ரெயினீஸ் ஐயர் தெரு
வண்ணநிலவன் கிராமப்புற மக்களை அன்புருவான தோற்றத்தில் படைககிறார். அவர்கள் இயற்கையோடு இசைந்திருப்பவர்கள்; வேஷமற்ற வர்கள்; ஞாபகங்களில் வாழ்பவர்கள்; சின்னச் சின்ன விஷயங்களில் ஆனந்தமடைபவர்கள். ஆனால் அங்கும் அடக்குமுறை, தண்டனை, தடைகள். அவரவர் தனித்தனி உலகில் வாழ்கிறார்கள். சந்தோஷம் தொலைந்துபோய் விட்டது. வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெருவில் வரும் பிலோ மிக்கு ”மலைமீது சாயங்காலப் பொழுதில் தன்னந்தனியாக ஏறிப்போகிற அந்தகாரம் மனசில் இருந்தது.” ஒரு மலையளவு சுதந்திரம் தனக்கு வேண்டும் என்று அவள் நினைக்கிறாள்.

நாளை மற்றுமொரு நாளே
ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே இன்றை நகர்ப்புறக் குப்பங்களில் வசிக்கும் மனித வாழ்வை வெளிப்படுத்துகிறது. ஒருவிதத்தில் இந்த நாவலின் முக்கியப் பாத்திரமான கந்தன், தமிழகத்தின் சமூக மனிதன். தமிழகத்தில் மட்டுமல்ல, ‘மூன்றாம் உலக நாடுகளின் மாதிரி மனிதன் இவன்’ என்கிறார் கவுதமன். ஜி. நாகராஜன் இவனுக்கென்று எந்த மதிப்புகளையும் தருவதில்லை. ஏனெனில் இவனுக்கு நேற்றும இல்லை, அதனால் கலாச்சாரம் பண்பாடு அவற்றின் மதிப்புகள் எவையும் இல்லை,

நேற்று இல்லாததால் நாளையும் இவனுக்கு இல்லை. இவனுக்கு இன்று மட்டும்தான் உண்டு. நாளை இன்றுபோல மற்றுமொரு நாள். அவ்வளவு தான். நேற்று இல்லாத இவன், தமிழகத்தில் கலாச்சார ரீதியாக அந்நியப்பட்ட மனிதர்களில் ஒருவன். கீழ்நிலைப் பிரஜை. கல்வியறிவு கிடையாது. சிந்தனை, அப்போதைய நடை முறைக்கேற்றது. சுதந்திரம், லட்சியம், முன்னேற்றம் என்று உயரத்திலிருப்பவர்கள் கூறும் சொற்கள் யாவும் இவனுக்குப் பொருளற்றவை. பெண்களை சப்ளை செய்வது, அடாவடித்தனம், இவனது பிழைப்பு.

இந்த நாவலின் நிகழ்ச்சிகள், கந்தனின் ஒரு நாளைய நிகழ்ச்சிகள். இந்த நாவல், ஒரு கனவின் விழிப்பில் தொடங்கி மற்றொரு கனவின் விழிப்பில் முடிகிறது. எழுந்ததும் முதலில் செய்யும் காரியம் குடி. குடிக்காகவே தன் மனைவியிடம் பொய்சொல்கிறான். வள்ளி லாட்ஜில், பெண் தேடிய நபரை ஏமாற்றிப் பணம் பறிக்கிறான். “எதிராளி ஆயுதம் வச்சில்லாட்டியும், முடிஞ்சா அவன் அசந்திருக்கப்பப் பின்னுக்கிருந்துதான் தாக்கணும்.” என்று தன் தோழனுக்கு உபதேசிக்கிறான். அவன் அப்படித்தான் இருக்கமுடியும், ஆயினும் தமிழ்வீரத்தின், தமிழ்ப்பண்பாட்டின், புறநானூற்றின் பிள்ளைதான் இவன். அவன் கண்ட உலகம் பின்னுக்கிருந்து தாக்கும் உலகம் மட்டுமே.
இதுதான் தமிழ் லட்சியப் பண்பாட்டிற்கும் யதார்த்தப் பண்பாட்டிற்கும் உள்ள முரண். இந்த முரண் தான் கந்தன் போன்றோரை விளைவித்துள்ளது. எனினும் மனிதாபிமானத்தின் வேர் இவனிடம் அற்றுப்போகவில்லை. மீனா விடம் அவனுக்கிருந்த அன்பே அவளுக்கு ஒரு மறுவாழ்வைத் தேடவைக்கிறது. பக்கத்து வீட்டு ஜீவாவுக்கு, சாராயக் கடைக்காரனுக்கு, தன் நண்பனுக்கு உதவி செய்கிறான். இறுதியில் மனிதாபிமானம் காரணமாகவே அவன் செய்யாத குற்றத்திற்காகச் சிறைப்படவும் நேர்கிறது. கந்தன் செயலில் இன்பம் காண்பவன். அன்பு, மனிதாபிமானம் காரணமாக அவன் அந்நியப்பட்டவன் போல் மேற் பார்வைக்குத் தெரிவதில்லை. அவனது அந்நியப்பட்ட நிலை அவன் பலமுறை ஒரு நாளில் நாடிச் செல்லும் சாராயக்குடிச் செயலால் உணர்த்தப்படுகிறது.

கந்தன் அந்நியமானவன், ஆனால் அதை உணராதவன். ஆதவனின் பாத்திரங்கள் அந்நியமான உணர்வை முற்றிலுமாகப் பெற்றவர்கள். அவர்களது படிப்பு அவ்வுணர்வு பற்றிய சிந்தனையை அவர்களுக்கு அளித்துள்ளது. மக்கள் கும்பலில் ஒருவனான, மேட்டுக்குடி மக்களாலும் படித்தவர்களாலும் எள்ளப் படுபவனான கந்தனுக்கும் மனமுறிவுகள் ஏமாற்றங்கள் ஏக்கங்கள் உண்டு. அவனது மனமுறிவுகளும், ஏக்கங்களும் அவனது கனவுகளில் வெளிப்படுகின்றன. அவனது ஓடிப்போன மகன் சந்திரனைக் கனவில் காண் கிறான்; முதல் கனவு அவனது தாய்மை ஏக்கத்தையும், இறுதிக்கனவு குழந்தை ஏக்கத்தையும் குறிப்பாக உணர்த்துகின்றன. கீழ்நிலை உலக மக்களில் ஒருவனாயினும், அவன் தன்மீது சுமத்தப்படும் எதையும் கேள்வியின்றி ஏற்பவனல்ல. தனது தேர்வுகளுக்குப் பொறுப்பேற்கும் ஓர் எக்சிஸ்டென்ஷியல் மனிதன் கந்தன். அதனால்தான் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அவனுடைய எண்ணவோட்டம் இவ்வாறு செல்கிறது. “எல்லாரும் அவனைவிட்டு எங்கோ சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் எங்குச் செல்லவேண்டும் எப்படிச் செல்லவேண்டும் என்பது தெரிந்திருந்தது. அவனுக்கு மட்டும் தெரியவில்லை…….அவனுக்கும் அவளுக்கும் இருந்ததெல்லாம் இன்று மட்டும்தான். நாளைகூடப் பிடிபடவில்லை.”

இந்த நாவலில் கந்தனின் பின்னோக்கில் எத்தனையோ மனிதர்கள். இவர்களின் சின்னச்சின்ன உள்ளச் சித்திரிப்புகளில் நாகராஜன் காட்டும் வெளிச்சம் மிகுதி. கந்தனிடம் சிணுங்கிக்கொண்டே வரும் ராக்காயி, அவளை மோகனா என்று பெயரிட்டுக் கூப்பிடச் சொல்கிறாள். ராக்காயி என்னும் பெயர் அவள் தொழில் தேவைகளுக்கு உதவாது. அப்பெயரின் தொனிகள் அவளைத் தேடிவருவோரை விரட்டவும்கூடும். மோகனா என்னும் பெயர் இதற்கு எதிர்மறைப் பயனை அளிக்க வல்லது.

பணம் என்பதே ஒரு மானங்கெட்ட விஷயம் என்று அவனுககு போதிக்கும் தரகு அந்தோணி சொல்கிறார்: “(ஆதாம் ஏவாள் கதையில்) தோல்வி யாருக்கு? கடவுளுக்கா? சாத்தானுக்கா? கடவுளுக்குத்தான். இது எங்க மதத்தில் ஒரு முக்கியமான பாடம்னு நெனைக்கிறேன்.”

அதனால்தான் பங்களா, காரோடு பிரபலமான பணக்காரராக வாழ்க்கை நடத்த அவரால் முடிகிறது. ஆனால், இன்றைய திரைப்படங்களைப் பார்த்து விட்டு, அதே போலக் கனவுமயக் காதலில் ஈடுபடும் பரமேஸ்வரன் என்னும் நாவித இளைஞனோ, குரூரமாகப் போலீசாலும், பணபலத்தாலும் தாக்கப்பட்டு, “வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக” அறிவிக்கப்படுகிறான். இந்த உலகம், தரகு அந்தோணிகள், சோலைப் பிள்ளைகள் போன்ற சேடிஸ்டுகளின் கையில்தான் உள்ளது. கந்தன் போன்ற நன்னம்பிக்கை உடையவர்களுக்கும் இவ்வுலகம் இல்லை, பரமேஸ்வரன் போன்ற கனவுக் காரர்களுக்கும் கிடையாது. இந்த இருத்தலியல் முரண் தான் இந்த நாவலின் பிரதானக் கேள்வி. இந்தச் சமுதாயம் முழுவதும் நிறைந்திருக்கும் வணிகச் செயல்பாடுகள், இளைஞர்களைத் தந்திரமாக வலைவிரித்துச சிக்கவைத்துப் பிடித்து நசுக்குவ¬த் நுணுக்கமாக எடுத்துக்காட்டுகிறது இந்த நாவல்.

சா. கந்தசாமியின் மூன்று நாவல்கள்
சா. கந்தசாமியின் சமீபத்திய நாவல்களின் பாத்திரங்களும் கந்தனைப் போன்றவர்களே. ‘அவன் ஆனது’, ‘தொலைந்து போனவர்கள்’, ‘சூரிய வம்சம்’ ஆகியவற்றில் இந்தக் கலாச்சாரத்தினின்றும் தொலைந்து போனவர்களைக் கந்தசாமி நன்கு சித்திரிக்கிறார். இந்த நாவல்களில் வரும் பாத்திரங்களும், எந்தவித மதிப்புகளும் அற்றவர்கள். அதனால் நாளை அற்றவர்கள். இவர்க ளுடைய பால்ய உலகம், கிராமப் புறங்களில் இருந்தது. அப்போது இவர்களுக்கு மதிப்புகளும் இருந்தன; வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் இருந்தது. இபோது அந்தப் பழைய வாழ்க்கையும் பால்யமும் தொலைந்துபோய்விட்டன. இவர்களுக்கு மனைவிகளும் தொலைந்து போகிறார்கள். உறவுகளும் அற்றுப் போகின்றன.

ஜி. நாகராஜனின் நடையாவது உணர்ச்சியுள்ள, தொனியுள்ள நடை. எனவே சில சமூக விமரிசனங்களை முன்வைக்கிறது. சா. கந்தசாமி இந்த நாவல்களில் கையாள்வது தொனியற்ற வெறும் விவரணை நடை. சா. கந்தசாமியின் பாத்திரங்களும் இளமையில் அனுபவித்த சில தாக்குதல்களே அவர்கள் இப்படித் தொலைந்துபோவதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஆக இங்கும் அடக்குமுறை, சேடிஸம். இவர்களுடைய நிகழ்காலம் வெறுமையாக இருக்கிறது. சா. கந்தசாமியின் நாவல்களும் அடிப்படையான இருத்தல் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. தாமோதரன் போன்றோரை, க்ந்தன் போன்றோரை, இந்த உலகம் ஏன் உருவாக்குகிறது அல்லது உற்பத்தி செய்கிறது?

வெவ்வேறு சூழல்கள், வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு மனிதர்க ளைப் பற்றிச் சித்திரித்தாலும், ஆதவன், ஜி. நாகராஜன், வண்ணநிலவன், சா. கந்தசாமி போன்றோர் எழுப்பும் கேள்விகள் ஒரே தன்மையானவைதான். என் மனித வாழ்க்கை இவ்வளவு அன்பற்று, அர்த்தமற்றுப் போய்விட்டது? வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இல்லையா? வெறும் ஒத்துப்போதல்கள், போலித்தனங்கள், வணிகச் சிரிப்புகள், நாகரிக அடக்குமுறைகள், ஒடுக்குதல்கள்தான் வாழ்க்கையா?

இந்தக் கேள்விகளை ஆழமாக எழுப்பி, இவற்றிற்கு நம்மையே விடைதேட விட்டுவிடுவதுதான் இந்த நவீன நாவலாசிரியர்களின் பணி. முன்பில்லாத வகையில் அந்நியமாதல் என்பது இவர்களால் பொருளாக ஆளப்படுகிறது. 1965க்கு முன்வரைந்த நாவலாசிரியர்கள் போல இவர்கள் காவிய அமைதியோடு நாவலைப் படைப்பதில்லை. அதாவது வாழ்க்கையின் ஓரத்தில் நின்று பார்க்கச் சொல்லிக் கைப்பிடிகள் தருவதில்லை. மாறாக அதிலேயே பிடித்துத் தள்ளிவிட்டு, தத்தளிக்க வைத்து, இடர்ப்படுத்தி விடுகிறார்கள். லா.ச. ராமமிருதம், தி. ஜானகிராமன் மாதிரி உடன்பாட்டு மதிப்புகளை இவர்கள் முன்வைப்பதும் இல்லை. இன்று மதிப்புகள் முற்றிலுமாக மாறிக்கொண்டிருக்கும் நேரம். ஆகவே இவர்கள் பழைய மதிப்புகளை நியாயப் படுத்துவதில்லை. நியாயம் கற்பித்தல், தப்பித்தலின் வெளிப்பாடு. சிந்திக்கும் தொல்லையைத் தந்து வாசகனை உலுக்கி, ஓர் ஆளுமை மாற்றத்தினை ஏற்படுத்தி, புதிய பண்பாட்டின் அடித்தளங்களைத் தேடமுயல்கிறார்கள் இவர்கள். மாற்றம் என்பது காப்பியடிப்பதல்ல. உள்ளத்தின் ஆழததில் இருந்து வெளிப்பட வேண்டும்.

மேற்கூறிய நாவலாசிரியர்களின் உளவியல் சித்திரிப்பு சரியாக அமைந்த போதிலும், சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையோ கலாச்சாரத்தின் சிறுசிறு தோற்றங்களையோதான் இவர்கள் பார்வைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின முழுக் கலாச்சாரத்தையும் ஒருநோக்கில் வைத்துச சித்திரிக்கும் நாவல் இதுவரை எழவில்லை. தமிழகத்தின் சமூகப்பண்பு முற்றிலுமாக, முழுதுமாக இன்னும் நாவல்களில் வெளிப் படவில்லை. அதனால்தான் இன்னும் உலகத்தரத்தில் சிறந்த நாவல் என்று இன்னும் தமிழில் உருவாகவில்லை.

முடிவுரை
ஒரு சமூகத்தின் பொதுவான நம்பிக்கைகளில், சடங்குகளில், கற்பனைகளில் இலக்கியங்களும் கலைகளும் தோற்றம் பெறுகின்றன. அவை அச்சமுகம் உருவாக்கிய லோகாயத-ஆன்மிக மதிப்புகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளன. இவை அனைத்தையும் பண்பாடு என்னும் சொல் குறிக்கிறது.

மனிதன் சிறுகுழுக்களாகவே வாழஇயலுமாதலின் ஒரே கலாச்சாரத்தில் பல்வேறு சிறு பண்பாட்டுக் குழுக்கள் (சப்-கல்ச்சர்ஸ்) இயங்குகின்றன. இவற் றிற்குள் ஏற்படும் மோதல்களைப் பண்பாட்டுச் சிக்கல்கள் எனலாம். அல்லது தனிமனித அளவில், ஒரு தனிமனிதனுக்கும், அச்சமூகத்தின் மதிப்புகளுக்கும் பொருந்தாமற் போய் பண்பாட்டுச் சிக்கல் ஏற்படலாம். இவையிரண்டையும் எளிமைப்படுத்தி, ஒருவகையில், பண்பாட்டுச் சிக்கல்கள் என்பன ஒரு கலாச்சாரத்தினுள், யதார்த்தத்தின் பண்பாட்டிற்கும் இலட்சியத்தின் பண்பாட் டிற்கும் ஏற்படும் மோதல்கள் என்று குறிக்கலாம் என மலினோஸ்கி சொல்கிறார். இதற்கு டோப்ரியன் தீவினர் பண்பாட்டிலிருந்து எடுத்துக்காட்டும் தருகிறார். ஒரு சமூகம், தனது சமய நூல்களில் கொண்டுள்ள மதிப்புகள், தான் மதிப்பதாகக் காட்டிக்கொள்ளும் மதிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பினை இலட்சியப் பண்பாடு எனலாம். அது நடை முறையில் பின்பற்றும் மதிப்புகளை யதார்த்தப் பண்பாடு எனலாம். இவ்விரண்டிற்கும் எப்போதும் மோதல் நிகழ்ந்தவாறே உள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்கள், பழையகால முதல் தொடர்ந்துவந்து, சிறுசிறு மாற்றங்களுக்கு மட்டுமே உட்பட்டு வந்த பழைய பண்பாட்டுக் குழுக்களின் தனித்தன்மைகளை அழித்துவிட்டன. புதிய பண்£ட்டுக்குழுக்கள் பல தோன்றி வளர்ந்துள்ளன. இவை வணிக மதிப்பீடுகளால் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படைத்தன்மை மனிதனின் அன்பை வளர்ப்பதாக இல்லை. ஆனால், வளராமற்போன மனித அன்பு என்ற கரு, கலைகள் வளர்வதற்கு இன்று அடிநிலமாக உள்ளது. ஒவ்வொரு சிறந்த கலைஞனும், வாழ்வைப் பற்றிய ஆழமான அர்த்தங்கள், அடி வேர்கள் ஆகியவற்றில் பிடிப்பு வைத்திருப்பதால், பெருகிவரும் தனித்தன்மை யற்ற, பொத்தாம்பொதுவான, மானிட இயல்புகளை அழிக்கின்ற, மந்தைத் தனத் தை வளர்க்கின்ற வணிக ரீதியான கலாச்சாரத்தினால் தவிர்க்கவியலாமல் தனிமைக்குள்ளாகிறான். அன்பு அற்றுப்போன உலகின் பொருளியல் மதிப்பீடுகள் அவனை உறுத்துகின்றன, தொல்லை செய்கின்றன, திணறவைக்கின்றன.

மானிட உறவுகள் சிறுசிறு பொருளாதார நிர்ப்பந்தங்களுக்கும் அற்றுப் போவதால் கலைஞன் தாக்குண்டு சித்திரவதைக்குள்ளாகிறான். தன்னைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில், இதுபற்றித் தன் கருத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தனது அனுபவங்களினின்றும் பிறந்த முரண் நிலைகளை வெளிப்படுத்துகிறான். இதுதான் இன்றைய கலைப்படைப்பு. நாவல் என்ற கலைச்சாதனம் தனிமனிதனுக்கும் அவனது சமூகத்திற்கும் உள்ள முரண் பாட்டில் பிறந்தது என்று குறிப்பிடுவதன் அர்த்தம் இதுதான். இதனை வேறுவகையில், மனிதனின் முழுமையைத் தேடும் உந்துதலுக்கும், அவனது அந்நியப்பட்ட நிலைக்குமான முரண்பாட்டில் நாவல் பிறக்கிறது என்று ஜார்ஜ் லு£காச் குறிப்பிடுகின்றார்.

நாவலாசிரியன், தனது பாத்திரப் படைப்புகளின் உளவியல் சித்திரிப்புகள் வழியாகவே பண்பாட்டுச் சிக்கல்களை வெளிப்படுத்துகிறான். ஒரு நாவலாசிரியன் எத்தகைய பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறான் என்பது முக்கியமல்ல. எந்த வாழ்க்கை வட்டத்தைச் சித்திரிக்கிறான் என்பதும் முக்கிய மல்ல. பிரச்சினையின் தீவிரத்துக்கேற்ப எவ்வளவு ஆழமாகச் சென்று அதனைச் சித்திரிக்கிறான் என்பதுதான் முக்கியம். ஒரு கலாச்சாரத்தின் இலட்சியப் பண்பாடு, அதன் போதனைகள், நூல்கள், சமயப்பிரச்சாரங்கள், சடங்குகள் வழி மனிதனின் நனவிலி மனத்தில் (Unconscious) புதைந்து கிடக்கின்றன. அதேசமயம், அதன் நடைமுறைகள், அது தரும் மரியாதைகள் கவுரவங்கள் முதலியன அவனைது பிரக்ஞையில் (Conscious mind) சதாகாலம் இருக்கின்றன. இதனால் ஒருவன் நனவு மனத்திற்கும் நனவிலிக்கும் உள்ள போராட்டமாகவும் பண்பாட்டுச் சிக்கல்கள் வெளிப்படுகின்றன. உளவியல் நாவலாசிரியர்கள் இதனை நன்கு பயன்படுத்துகின்றனர். ஆகவே உளவியல் சித்திரிப்பு என்பது வெறும் உத்தியல்ல. நாவலின் நோக்கமும் அதுதான், நாவலே அதுதான்.

திறனாய்வு