பதினெண்கீழ்க்கணக்கு

திருக்குறள் நாலடியார் உட்படப் பதினெட்டு திருக்குறள் நாலடியார் உட்படப் பதினெட்டு நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயரில் தொகுத்துவைத்திருக்கிறார்கள், இலக்கிய வரலாற்றில் சேர்த்திருக் கிறார்கள். அவற்றைப் பற்றிப் பெருமையாகவும் எழுதிவருகிறார்கள். இவற்றில் அற நூல்கள் பதினொன்று. திருக்குறள் நாலடியாரைக் கழித்துவிட்டால் ஒன்பது. இந்த ஒன்பது நூல்களிலும் அறக்கருத்துகளைக் கூறுவதில்கூட ஓர் ஒழுங்கோ, முறைப்படுத்தலோ, இலக்கியத்துககுரிய வெளியீட்டுத் தன்மையோ கிடையாது. இன்றைய கற்றுக்குட்டி இளைஞர்கள்கூட இவற்றிலுள்ள அறக்கருத்துகளையே மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தி எழுதுவார்கள், இலக்கியப்பண்போடு சொல்லுவார்கள். சங்க இலக்கியங்களும் திருக்குறளும் இலக்கியம் எனப் பாராட்டப்பட்ட நாட்டில் இவற்றை எப்படி இலக்கியம் எனக் கருதினார்கள் என்பது மிகவும் ஐயத்துக்குரியது. இதைவிட வேடிக்கை, இப்படிப்பட்ட புலவர்கள் (இவர்களை இப்படிச் சொல்வது அநியாயம்) எல்லாம் சேர்ந்துதான் திருக்குறளை இலக்கியமா என்று கேட்டிருக்கிறார்கள், அரங்கேற்ற விடாமல் தடுத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் காணும்போது உண்மையிலேயே சங்ககாலத்துக்குப் பிந்திய காலம் (களப்பிரர் காலம்) இருண்டகாலமோ என்றுதான் நினைககத் தோன்றுகிறது. இவற்றை எல்லாம் இலக்கியம் என்றால், இவற்றை எழுதியவர்களைவிட ஆயிரம் மடங்கு மேம்பட்ட அகிலனையோ, பார்த்தசாரதியையோ, அவர்கள் தரத்தில் இன்று எழுதும் பிறரையோ இகழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கேட்கவும் தோன்றுகிறது.
முதலில் தமிழ்இலக்கியம் முழுவதையும் மறுபார்வைக்குள்ளாக்கி எது குப்பை, எது நல்ல பொருள் என்று நோக்கி மறுதொகுப்புச் செய்ய வேண்டும். சும்மா சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பது கேவலம்.

தினம்-ஒரு-செய்தி