பறக்கின்றன பட்டங்கள்!

parakkindrana-pattangal1

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். திருச்சியில் கல்லூரி வாழ்க்கை. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம். எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள். “மாவீரன் நெப்போலியனே வருக”. எப்போது பிரெஞ்சு மாவீரன் நெப்போ லியன் உயிர்த்தெழுந்தார் என்று எனக்குச் சந்தேகம். என் மாணவர்கள் என் அறியாமையைக் கண்டு சிரித்தார்கள். “சார்இந்த நெப்போலியன் நடிகர். நம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர். இந்த ஆண்டு விழாவுக்கு செயின்ட் ஜோசப் கல்லூரியில் அவரை அழைத்திருக்கிறார்கள்.” நான் கேட்டேன், “இவர் நடிகர்தானேஎப்படி மாவீரன் ஆனார்?” வீரனாக நடிப்பவனெல்லாம் மாவீரனாவள்ளலாக நடித்தால் வள்ளலாசெத்துப் போவதாக ஒருவன் நடித்தால் உண்மையிலேயே செத்துப்போய்விட்டானாஇதுகூடப் புரியாமலா படம் பார்க்கிறார்கள்?தொழுநோயாளியாக ஒருவன் நடித்தால் உண்மையிலேயே தொழுநோயாளியா அவன்நடிப்புக்கும் நிஜ வாழ்க்கைக்கும் என்னதான் சம்பந்தம்?

ஆனால் இப்படித்தான் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தங்கள் பிம்பத்தைக் கட்டுகிறார்கள். போலியை நிஜம் என்று நம்பவைக்கிறார்கள்.

மிகைப்படுத்தல் நம் வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் ஊறிக்கிடக்கிறது. (தமிழர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம் என்பது இதற்கு ஒரு காரணம்.) இல்லாவிட்டால் வெள்ளைத்தோல் இருந்ததாலேயே நம் நாட்டுக்குள் நுழைந்த ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரர் போன்றவர்களை துரை என்று அழைத்திருப்பார்களா?அவர்களுக்கு அடிமைப்பட்டிருப்பார்களாசாதாரணப்

பூசாரிகளைக் கூட சாமி என்று அழைப்பவர்கள்தானே நாம்?

பொது அரங்கில் தோன்றி விட்டால் சாதாரணமானவர்களைக்கூட மிகப்பெரிய அடைமொழிகள் தந்து அழைப்பது அதனால்தான் சாத்தியமாகிறது. மேடையில் அமர்ந்திருப்பவர் ஓரிரு கவிதைகள் எழுதியிருப்பார். வரவேற்பவர் கூசாமல் அவரைத் தமிழ்நாட்டின் மாபெரும் கவிஞர்எழுத்தாளர் என்பார். மேடையில் மட்டும்தான் என்றல்ல,பத்திரிகைகளும் இதற்குத் துணைபோகின்றன. அடுத்த நாள் செய்தி வெளியிடும் உள்ளூர் செய்தித்தாள் மாபெரும் கவிஞர் இன்னார் ….தலைமை தாங்கினார் என்றே செய்தி வெளியிடும். பிறகு அவரே எல்லா இடங்களிலும் அதைப் போட்டுக் கொள்வார்.

இப்படித்தான் ஒருகாலத்தில் டாக்டர் என்ற பட்டத்தைக் (கௌரவத்திற்காக அளிக்கப்படுவது) கொஞ்சமும் படிக்காதவர்களெல்லாம் போட்டுக்கொண்டு சிரிப்பாய்ச் சிரித்தது. அரசியல்வாதிகளும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்களும் எவ்விதத் தகுதியும் இல்லாமல் டாக்டர் என்று தங்கள் பெயருக்கு முன்னால் கூசாமல் போட்டுக்கொள்வதைப் பார்த்ததனால்ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் முனைவர் என்றே தங்களை அழைத்துக்கொள்ளலானார்கள். (நல்லவேளைஇதில் மருத்துவத்தொழில் சார்ந்தவர்களைச் சேர்த்துக் குழப்ப வில்லை.)

நல்ல கவிதைகளே எழுத அறியாத ஒருவர் தன்னைப் பெருங்கவிக்கோ என்று தானே அழைத்துக்கொண்டது மிக நன்றாக எனக்குத் தெரியும். கூசாமல் தன் நூல்களிலும் அப்படியே போட்டுக் கொள்வார். பிறகு எல்லாரும் அப்படியே அவரை அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

திரைப்பட நடிகர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. எனக்கு ஏற்படும் வியப்புயார் இந்த அடைமொழிகளை எப்போது தருகிறார்கள் என்பதுதான். திடீர் திடீரெனப் பட்டங்கள். அடைமொழிகள் சேர்க்கப்பட்டு விடுகின்றன. உதாரணமாகஎந்தப் படத்திலிருந்துதான் வைகைப் புயல்,இளைய தளபதி போன்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டனஒருவேளை இவர்களின் இரசிகர் மன்றங்களைக் கேட்டால் தெரியவரும் போலும். ஏன் சேர்க்கிறார்கள்என்ன பலன் இவர்களுக்கு என்பதெல்லாம் என்னைப் போன்ற மரமண்டைகளுக்கு எளிதில் புரிவதில்லை.

ஒருவேளை நடிகர்களும் அரசியல்வாதிகளும் (முன்பு உதாரணம் காட்டிய கவிஞரைப்போலத்) தாங்களே சொல்லி ஏற்பாடு செய்து இம்மாதிரி பட்டங் களையும் அடைமொழிகளையும் போடச்செய்கிறார்கள் என்றுதான் தோன்று கிறது. அவரவர்களுக்கு என எழுதப்படும் திரைப்படப் பாடல்களைக் கேட்கும் போதும் (சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்..உலகநாயகனே….) அந்தந்தப் பட்டப்பெயராலே நடத்தப்படும் தொலைக் காட்சிச் சேனல்களைப் (கேப்டன் டிவி…) பார்க்கும்போதும் இது ஊர்சிதமாகிறது.

இந்த வியாதி அநேகமாகத் திரைப்படங்களில் சிவாஜி கணேசன்எம்.ஜி.ஆர். காலத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. அரசியலில் எம்.ஜி.ஆரின் காலத்திலிருந்து என்று உறுதியாகவே சொல்லலாம். ஏறத்தாழ 1968-70 காலம் வரை அநேகமாக எம்.ஜி.ஆரின் எல்லாத் திரைப்படங்களிலும் புரட்சி நடிகர் என்ற அடை மொழியை மட்டுமே காணலாம். பிறகு திடீரெனப் புற்றீசல்போலபுரட்சித் தலைவர்மக்கள் திலகம்,பொன்மனச் செம்மல்கொடை வள்ளல் இப்படிப் பெருகிப்போயின. நல்ல வேளையாக சிவாஜி கணேசனுக்கு இப்படிப் பெருக வில்லை. நடிகர் திலகம் ஒன்றுதான் நிலைத்தது.

parakkindrana-pattangal6

புரட்சித்தலைவர்புரட்சித்தலைவி இதெல்லாம் பழையவை. இதுவே சிந்திக்கும் மனத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கஷ்டமாகத்தான் இருக்கும். எந்தப் புரட்சியை இவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள்எந்தப் புரட்சியைப் பற்றியாவது குறைந்தபட்சம் படித்தாவது இருப்பார்களா?புரட்சி என்றால் படித்தவர்களுக்கு ரஷ்யப் புரட்சிசீனப்புரட்சி,பிரெஞ்சுப்புரட்சி என்றுதான் நினைவுக்கு வரும். பட்டம் தருபவர்களுக்கோ (பெறுபவர்களுக்கும்தான்) சாரதாஸ் புரட்சிஜெயச் சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் புரட்சிலலிதாஸ் ஜுவல்லரி புரட்சிக்குமேல் மனக் கண்முன் தோன்றாது என்று நினைக்கிறேன். இன்று போடப்படும் பட்டங்கள்,அடைமொழிகளைப் பார்த்தால் கேலிக்கூத்தாக இருக்கிறது.

parakkindrana-pattangal3

காதல் இளவரசன்சூப்பர் ஸ்டார்இயக்குநர் சிகரம் என்றெல்லாம் பட்டங்கள் சந்தி சிரிக்கின்றன. உலகின் மிகச் சிறந்த கலைத் திரைப்படங்களை எடுத்த இங்மார் பெர்க்மன்அகிரா குரோசேவா,ஃபெலினிஅவ்வளவு ஏன்சார்லி சாப்லின் முதல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வரைஇன்றைய சிறந்த இயக்குநர்கள் வரை-இவர்களைப் போன்றவர்களையெல்லாம் இயக்குநர் சிகரங்கள் என்று யாரும் போட்டதில்லை. (அவர்களும் போடச் சொன்னதில்லை). இதற்குமேல் கேப்டன்தளபதிஇளைய தளபதி என்றெல்லாம் வேறு. எந்தப் படைக்கு அல்லது (குறைந்தபட்சம்) விளையாட்டு அணிக்குத் தலைமை தாங்கினார் இந்தக் கேப்டன்எந்தப் படைக்குத் தலைமை தாங்கி தளபதிஇளைய தளபதி ஆனார்கள் இவர்கள்சொந்தப் பெயர்களே மறைந்துபோகும் அளவுக்கு இந்தப் பட்டங்கள் ஆட்சி செய்கின்றன.

parakkindrana-pattangal5

இதைவிடக் கொடுமைஅன்னைதாய்அம்மா போன்ற பொதுப் பெயர்களும் கலைஞர் போன்ற சிறப்பு அடைமொழிகளும் பட்டங்களாக மாற்றப்படுவது. என் நண்பர் ஒருவர் இலயோலா கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட சிலம்பு என்ற பத்திரிகையில ஒருமுறை எழுதினார். “ஆழமான கருத்துகள் இல்லாமல் அலங்கார வார்த்தைகளோடும் அணிகளோடும் ஒருவர் பேசினால் அவரில் பலர் மயங்கிவிடுகின்றனர். கீழ்த்தட்டு மக்களிடம் ரொம்பவும் இயல்பாக உள்ள அழகியல் கூறுகளின் வெளிப்பாடுதான் அலங்கார வார்த்தைகளும் அணிகளும் ஆகும்.

parakkindrana-pattangal4

உதாரணமாகவிஜயகாந்த் சண்டைபோடும்போதுவில்லனை சும்மா தோசைமாதிரி புரட்டியெடுக்கிறானுல்ல என்று இயல்பாக வெளிப்படும் வார்த்தைகள்தான் இலாபம் சம்பாதிக்க முயலும் ஊடகங்களால் புரட்சிக் கலைஞர் என்று மாற்றப்படுகிறது.” இரண்டு இடங்களிலும் கோளாறு. புரட்டியெடுக்கிறான் என்று பாராட்டும் நம் சாதாரண மக்களுக்கு புரட்டியெடுப்பதும்புரட்டப் படுவதும் நடிப்பு என்று தெரியாமல் போனதென்னஅடுத்த கோளாறுஇந்தப் பாராட்டை அடைமொழியாக மாற்றும் ஊடகங்கள்,நடிகர்கள்இரசிகர் மன்றங்கள்… (இன்னும் வேறு யார் யார்?)

அந்த நண்பரே மேலும் சொன்னார்: “போலித்தன்மைகளைப் பலநிலைகளில் கொண்ட மனித அனுபவமானது,சினிமா நாயகர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் பேச்சிலுள்ள அப்பட்டமான போலித்தன்மைகளோடு கைகுலுக்கிக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது.” மெய்யாகவே இருக்கலாம். ஆனால் இந்தத் தன்மை ஏன் தமிழ்நாட்டுக்கு மட்டும் (சில சந்தர்ப்பங்களில் இந்தியா முழுமைக் கும்) சொந்தமாகப் போனதுஏன் பக்கத்திலுள்ள ஈழத்தில்கூட இந்தத் தன்மை இல்லைபோலித்தனம் என்பதென்ன தமிழனுக்கு மட்டும் தனிச்சொத்தா?

நமது நிலவுடைமைசார்ந்த அடிமை மனப்பான்மை இதற்குக் காரணம் என்றும் தோன்றுகிறது. கீழ்சாதிக்காரன் மேல்சாதிக்காரனைச் சாமி என்று கும்பிடுவதற்கும்இடுப்பில் துண்டைக் கட்டி நடப்பதற்கும் இதுதான் காரணம். கீழ்சாதியினரிடம் மட்டுமல்லதமிழர் எல்லாரிடமுமே இந்த மனப்பான்மை இருக்கிறது. இல்லாவிட்டால் சாதாரணமாக நீதிபதி அல்லது நடுவர் என்று அழைக்கப்பட வேண்டியவர் நீதியரசர் ஆவானேன்எல்லாரையும் அரசராகவும் அரசியாகவும் மந்திரியாகவும் பார்த்தே நமக்குப் பழக்கம். அரசாங்கச் சேவை (அதாவது மக்கள் சேவை) யிலிருக்கும் ஒருவரைக்கூட அரசர் என்று தூக்கிவைத்தால் அப்புறம் என்ன இருக்கிறது?

அரசியல்திரைப்படம் இவற்றிற்கு அடுத்தபடியாக மக்கள் மிகவும் உயரத்தில் வைத்துப் பார்ப்பது கிரிக்கெட் நாயகர்களை. கிரிக்கெட் ஒரு சூதாட்டம். (அன்றைக்கும்தான்இன்றைக்கும்தான். இது ஏதோ ஐபிஎல் காரணமாக ஏற்பட்ட வியாதி அல்ல. அந்தக் காலத்தில் சரியாகப் பந்தை அடிக்காமல் கவாஸ்கர் போன்ற கட்டைபோட்ட நாயகர்களே காசுவாங்கிவிட்டு அப்படிச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. பலபேர் மீது வழக்கும் உண்டு.) பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறுவது தெரியாமல்கிரிக்கெட் நாயகர்களைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுவது கேலிக் கூத்து.

தலைமை வழிபாட்டை உருவாக்கும் பெருவியாதி பட்டங்களையும் அடைமொழி களையும் சேர்ப்பது. அரசியல்வாதிகளாக இருந்தாலும் அவர்கள் நம்மால்நம் சேவைக்காகச் சில ஆண்டுகள் பதவியில் வைக்கப்படுபவர்கள். (பிரதமர் மோடியாக இருந்தாலும் சரிஉள்ளூர்க் கவுன்சிலராக இருந்தாலும் சரி.) அதிகாரிகள் என்றால் மக்களுக்குப் பணிசெய்ய (ஆங்கிலத்தில் கவுரவமாக சிவில் சர்வீஸ்பப்ளிக் சர்வீஸ் என்று சொல்லிக்கொள்வார்கள்) ஏற்பட்டவர்கள். (யூனியன் அல்லது ஸ்டேட்) பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி வேலைக்கு வந்தவர்கள் வேலையில் சேர்ந்தவுடனே பப்ளிக்கை மறந்துபோவது நம் நாட்டின் துரதிருஷ்டம்.

இந்தத் தலைமை வழிபாட்டினால்தான் எங்கு பார்த்தாலும் லஞ்சமும் ஊழலும் தாண்டவமாடுகின்றன. தொழிலைக் குறித்த அடைமொழிகளைச் சேர்ப்பதில் தவறில்லை. பிரதமர் மன்மோகன்பொறியாளர் நமச்சிவாயம்மின்வாரியத் தலைவர் சிவராமன் என்பதுபோல. ஆனால் மக்கள் நாயகன் பொறியாளர் நமச்சிவாயம் என்று சேர்க்காதீர்கள். அங்குதான் ஏற்படுகிறது தவறு. இனி மேலாவது இந்த நிலை மாறினால் நன்றாக இருக்கும். (மாறுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.) படித்தவர்களுக்கும்ஊடகங்களுக்கும்செய்தித் தாள்களைச் சேர்ந்தவர்களுக்கும்திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். யாராக இருந்தாலும்தயவுசெய்து யாருக்கு முன்னும் எந்த அடைமொழியையும்பட்டத்தையும் சேர்க்காதீர்கள்.

சமூகம்