முன்னுரைப்பகுதி

“ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்” என்ற எனது முதல் மொழி பெயர்ப்பு நூலின் முன்னுரைப்பகுதி

பம்பாய் மாக்ஸ்முல்லர் பவனின் இயக்குநர், ஜோகிப் ப்யூலர் இந்
நூலின் ஆங்கிலப் பதிப்பிற்கு அளித்த புகுமுகம்

கிண்டர் செந்த்ரும் மூன்ஷென் (Kinder Centrum Munschen) என்பது மியூனிக் நகரிலுள்ள குழந்தைகள் மையம் ஆகும். அது குழந்தைகள் பற்றிய நோய் ஆய்வு மையங்களில் ஒன்று. இதன் மருத்துவர் பேராசிரியர் ஹெல் பிராய்க்கெ (குழந்தைகள் மையத்தின் இயக்குநர்)யின் மேற்பார்வையின்கீழ், மியூனிக் வளர்ச்சிமுறை நோய்காணல் (டயக்னாசிஸ்) என்னும் சிறப்பு நோய்காணல் முறையினை உருவாக்கியுள்ளனர். இந்நோய்காணல் முறையினை நடைமுறைப்படுத்தியதன் விளைவாகப் பெறப்பட்ட முக்கிய அனுபவங்களைக் கொண்டுள்ளது இந்த நூல்.

சமீப ஆண்டுகளில், கிண்டர் செந்த்ரும் மூன்ஷென், சர்வதேச அரங்கில் ஏற்புப் பெற்றுள்ளது. பேராசிரியர் ஹெல் பிராய்க்கெ இந்தியாவிலுள்ள குழந்தை மருததுவ நிபுணர்களுடன் தொடர்புள்ளவர். இதனால் பம்பாய் மாக்ஸ்முல்லர் நிறுவனம், கருத்தரங்குகள்-பயிலரங்குகள் வாயிலாகக் குழந்தைகள் பற்றிய ஆய்வு அனுபவங்களை இந்திய மருத்துவர்களும், மியூனிக் குழந்தைகள் மைய மருத்துவர்களும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பைத் தந்தது. இக்கருத்தரங்குகள் முதலியன, பம்பாயில் உள்ள ஜே. ஜே. மருத்துவமனைக் குழு சார்ந்த குழந்தைகள் மருத்துவ நிலையத்திலும், உடலியல் மருந்துகள் மற்றும் மறுவாழ்வுக் கான நிறுவனத்திலும் நிகழ்த்தப்பட்டன. இந்தச் சோதனைத் திட்டங்களின்போது ஐரோப்பாவில் ஏற்கெனவே பயனுறக் கையாளப்பட்டு வரும் மியூனிக் வளர்ச்சி முறை நோய்காணல், இந்தியக் குழந்தைகளுக்கும் பயன்படுத்திப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகத் தொடர்பே, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சிகிச்சை, குறிப்பாக இந்தியாவில் சிறப்பான அறிமுகம் பெற்றுள்ள மாண்டிசோரி முறை விளையாட்டுப் பொருள்களின் குணப்படுத்தல் (நோய்நீக்கல்) பயன்மீதான மருத்துவ நூல்கள், நிபுணர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் பரிமாற்றத்துக்கு மிகவும் பயன்பட்டது.

இந்த ஒத்துழைப்பின் இன்னொரு விளைவுதான் ‘ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்’ என்ற இந்த நூலின் ஆங்கில ஆக்கம். இந்நு£ல் முதலில் ஜெர்மன் மொழியில் ஆக்கப்பட்டது. இந்தியக் குழந்தை மருத்துவர்களும், சமூகப்பணியாளர்களும், பெற்றோர்களும் இந்நூலில் மிகுந்த அக்கறை காட்டினர். ஆகவே பம்பாய் மாக்ஸ்முல்லர் பவன், இந்நு£லை ஆங்கிலப் படுத்தி வெளியிடும் முன்முயற்சியில ஈடுபட்டது. இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகள் கழித்து, வணிக நிறுவனங்கள் எவ்வாறேனும் இந்த முயற்சியில் ஈடுபட்டுத்தான் இருக்கும்.

இந்நூல, மருத்துவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மிகவும் குறிப்பாகக் குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு குழந்தையானது, உடல்சார்ந்த குறை இருப்பதனால் மட்டுமே பிரச்சினைக்குரிய விஷயமாவதில்லை. உடலியல் குறை மிகவும் காலம் தாழ்த்திக் கண்டுபிடிக்கப்படுவதனாலும், பிரச்சினை ஏற்படுகிறது. இவ்வாறு உடலியல் குறைகள் காலந்தாழ்த்திக் கண்டறியப்படுவதனால் ஏற்படும் மனத்தின் பாதிப்புகள், சமூகம் சார்ந்த வளர்ச்சி நலிவு ஆகியவற்றைப் பற்றிப் பேராசிரியர் ஹெல் பிராய்க்கெ விரிவாக ஆராய்ந்துள்ளார். இதில் தான் இந்த நு£லின் தவிர்க்கவியலாத முக்கியத்துவம் அமைந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் வளர்ச்சியினை எவ்வளவு எச்சரிக்கையாக கவனிக்கவேண்டும் என்பதை இந்த
நூல் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு இந்நூலிலுள்ள எளிமையான உதாரணங்களும், விளையாட்டுச் சோதனைகளும் உதவும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் காணப்படும் பிறழ்வுகள் எளிதாகக் கண்டறியப்படும்.

இந்தியப் பெற்றோர்களுக்கு மிகத் தேவையான கருத்துகளை அறிமுகப்படுத்துவதில் முதல்நிலையே இந்த ஆங்கிலப் பதிப்பு என நாங்கள் நம்புகிறோம். இந்நூல் பிற இந்திய மொழிகளிலும் வெளிவருதல், இந்தப் பணிக்களத்தின் இந்தோ-ஜெர்மன் ஒத்துழைப்பிற்கான து£ண்டுகோலாக இருக்கும் எனவும் கருதுகிறோம்.

தினம்-ஒரு-செய்தி