மொழிப்பிரச்சினை-ஒரு நோக்கு

mozhippirachchanai-3
இந்தியா பலமொழிகள் பேசப்படும் ஒரு தேசம் என்கிறார்கள். (இந்தக் கூற்று சற்றே விவாதிக்கப்பட வேண்டியது.) ஒரு தேசம் என்பதற்கு ஒரு மொழிஒரு கலாச்சாரம்ஓர் இனம் என்பது அடிப்படைத் தேவை. இந்தியாவிலோ பல மொழிகள்பல கலாச்சாரங்கள்பல இனங்கள். வேண்டுமானால்பல கலாச்சாரங்கள் சேர்ந்த ஒரு நாடாக (தேசமாக அல்ல) அமைந்தது இந்தியா என்று கூறலாம். தேசம் என்பதை “நேஷன்” என்போம்நாடு என்பதை “கண்ட்ரி” என்போம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உதாரணமாகசிலப்பதிகாரக் காலத்தில்சேரநாடு இருந்தது,சோழநாடு இருந்ததுபாண்டியநாடு இருந்தது. ஆனால் இவையனைத்தும் சேர்ந்தது தமிழ் தேசம்‘. இந்தக் கருத்து சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ளதனால்தான் அதை தேசியக் காப்பியம் என்கிறார்கள்.

இந்தியா ஒரு தேசம் என்று ஏற்காவிட்டாலும்கூடபழங்காலத்திலிருந்தே அருகருகில் இருப்பதன் காரணமாகஒரு மொழி பேசுபவர்கள்இன்னாரு மொழி பேசுபவரிடம் கலந்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயம் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது. இன்னும்கேட்டால் காலப்போக்கில் மிகுதியாகியிருக்கிறது. இந்தியாவில் அரசியலமைப்புப்படி ஆட்சிமொழிகளாகப் பதினெட்டு மொழிகளும் சாகித்திய அகாதெமியின் அங்கீகாரப்படி இலக்கிய வளமுள்ள மொழிகளாக இருபத்திரண்டு மொழிகளும் ஏற்கப்பட்டுள்ளன.

இன்று இந்தியாவில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு-நதிப்பிரச்சினைவேலை வாய்ப்புப் பிரச்சினைவளர்ச்சிப் பிரச்சினை போன்ற பலவற்றிற்கு அடிப்படை மொழிப்பிரச்சினை. பெல்காம் மராட்டியர்களுக்குச் சொந்தமானதா,கன்னடர்களுக்குச் சொந்தமானதா போன்ற இடப்பிரச்சினைகள் உட்படப் பலவற்றிற்கும் அதுதான் காரணம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து போன்ற ஒரே மொழி பேசப்படுகின்ற நாடுகளில்கூடஅவர்கள் தங்கள் தேவைக்கேற்ப பிரெஞ்சுஜெர்மன்லத்தீன்கிரேக்கம் போன்ற பல மொழிகளைப் பயிலுகிறார்கள். இருபத்திரண்டு மொழிகள் இருக்கின்ற நம் நாட்டில் பிறமொழிகளைப் பற்றிய அறிவு எவ்வளவு இன்றியமையாதது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே இந்தியர் ஒவ்வொருவருக்கும் மூன்று நான்கு மொழியறிவு இருப்பது நன்மையே தரும். அவற்றை முறையாகப் படிப்பதும் நல்லதுதான்.

பலமொழியறிவு வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லபண்பாட்டு வளர்ச்சிக்கும் பரந்த மனப்பான்மைக்கும் பிறரைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் அவசியம். தன் ஊருக்குள்ளாகவே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கும்அதே ஊரில் பிறந்தாலும் பலமொழியறிவு பெற்றவனுக்கும்அந்த ஊரிலிருந்து பலவேறு பிரதேசங்களுக்கும்அயல்நாடுகளுக்கும் சென்று சுற்றிவந்தவனுக்கும் நிச்சயமாகப் பண்பாட்டு நோக்கில் பாரதூரமான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு மொழியறிவு என்பது மொழியை அறிவது மட்டுமல்ல,ஒரு கலாச்சாரத்தையும்பண்பாட்டையும் புரியவைப்பது அது. மற்றொருவித வாழ்க்கை முறையைச் சொல்லித் தருவதுமற்றவன் ஏன் நம்மைவிட வேறுபட்டு இருக்கிறான்வாழ்க்கை நடத்துகிறான்வேறுபட்டுச் சிந்திக்கிறான். அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லித் தருவது.

ஆகவே என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் நான்கு மொழிகளேனும் கற்கவேண்டும் என்று பரிந்துரை செய்வேன். அது அவரவர் தேவைக்கும் தொழிலுக்கும் ஏற்ப அமையலாம். உதாரணமாகதமிழில் பக்தி இலக்கியத்தைச் சொல்லித் தருகின்ற ஒரு பேராசிரியர்தமிழுடன் ஆங்கிலம்சமஸ்கிருதம்இந்தி ஆகிய மூன்றையும் படிப்பது பயனுடையதாக இருக்கும். நவீன சமூகவியல் தத்துவக் கருத்துகளைக் கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தால் பிரெஞ்சுஜெர்மன் படிப்பது பயனுடையது. திருச்சியில் ஜாபர்ஷா தெரு முழுவதும் செயற்கைக் கற்கள் உற்பத்தியும் வியாபாரமும் நடப்பது எனக்குத் தெரியும். அவர்கள் வியாபாரத்துக்கென சூரத்,பம்பாய் என்று அலைபவர்கள். அவர்களுக்கு மராட்டிகுஜராத்தி தெரிந்தால் நல்லது. எதுவுமே இல்லைநான் விவசாயி என்பவன்கூட சமஸ்கிருதத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. மனத்தை விரிவுபடுத்த பலமொழிக்கல்வி ஒரு பயனுள்ள சாதனம்.

ஆனால் இங்கே ஒரு தெளிவைச் சொல்லிவிட வேண்டும். எத்தனை மொழிகள் படித்தாலும்முதலில் தாய்மொழியே முதன்மையானது. தாய்மொழி வழிக்கல்விதான் உண்மையான படைப்பாற்றலையும் கண்டுபிடிப்பறிவையும் ஆக்கசக்தியையும் உருவாக்கக்கூடியது. இது இன்று சரிவர இல்லாததனால்தான் தமிழ்நாட்டில் வெறும் மனப்பாடப் பொம்மைகள் உருவாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து இருநூற்றுக்கு ஆயிரத்துநூற்றுத் தொண்ணூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கி வெளிவருபவர்களையும் பார்க்கிறோம். ஒரு பதினைந்து இருபதாண்டுகளாகப் படித்து வெளியில்வந்த மாணவர் கணக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி மதிப்பெண் வாங்கியவர்களெல்லாம் வெறும் வயிற்றுப் பிழைப்புப் பொறியியலாளர்களாகவும் மருத்துவர்களாகவும் ஆனதன்றி வேறு என்ன ஆனார்கள்இதுவே போதும்இதற்குமேல் சமூகம் வேண்டாம்,நாடு வேண்டாம்இனம் வேண்டாம்படைப்பாற்றல் வேண்டாம் என்று தமிழ் நாட்டவர் நினைப்பதனால்தான் ஆங்கிலத்துக்கு முதன்மையும்மனப்பாடக் கல்விமுறையும் நடைமுறையாகிவிட்டன.

mozhippirachchanai-4
இன்னொரு தெளிவையும் சொல்லவேண்டும். பல மொழிகள் கற்பது ஆரோக்கியமானது. ஆனால் பிறமொழிகள் ஓர் இனத்தின்மீது ஆதிக்கம் செய்ய விடலாகாது. இந்தியைக் கற்கவேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒன்றுஅது தமிழைவிட மேம்பட்டது என்ற கருத்து உருவாகக்கூடாதுஅது தேசியமொழி என்று கூறக்கூடாது. இரண்டாவதுதாய்மொழியைத் தவிர வேறு எந்தமொழியைக் கற்பதும் தன்ஆர்வத்தினால் (வாலண்டரியாக) இருக்க வேண்டுமே தவிரக் கட்டாயமாக்கக்கூடாது.

mozhippirachchanai-5
வடமாநிலத்தவர்கள்-குறிப்பாக மையமாநிலத்தவர்கள் எனப்படுவோர் (மத்தியப்பிரதேசம்ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம்பிஹார் போன்றவை இதில் அடங்கும்) இந்தியை மட்டும் படித்தால் போதும்தாங்கள் வேறு எந்த மொழியையும் உள்படப் படிக்கமாட்டோம் என்கிறார்கள். இந்த மனப்பான்மைதான் பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. இந்தியா ஒரே தேசமாம்ஆனால் உ.பி.க்காரன் ஒரே மொழிதான் படிப்பானாம்ஆனால் தமிழ்நாட்டுக்காரன் தாய்மொழியாகத் தமிழ்வேலைக்காக ஆங்கிலம்தேசபாஷை என்பதற்காக இந்தி,வேலைக்காக இன்னும் ஏதாவது ஒரு மொழி என்று படிக்கவேண்டுமாம். ஏன் இந்த வேற்றுமைபாரபட்சம்?தமிழன் இந்தி படித்தால்இந்திக்காரன் நான்கில் ஒரு தென்னாட்டு மொழியாவது படிக்கட்டுமேஆந்திராக்காரன் வங்காளி படித்தால்வங்காளத்தவன் மலையாளமாவது படிக்கட்டுமேஇன்று லக்னோவில் இருப்பவன் இந்தியில்-தன் தாய்மொழியில்-ஐஏஎஸ் எழுதி எளிதில் வெற்றி பெறமுடியும். ஆனால் தமிழன் ஆங்கிலத்திலோ,இந்தியிலோ எழுதியாக வேண்டும். இரண்டுமே அவனுக்குத் தாய்மொழியல்லபிறமொழிகள்.

மும்மொழித்திட்டம் என்பதை நடைமுறைப்படுத்தினால்இந்தியா முழுவதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு சில மாநிலங்களில் ஒரு மொழி படித்தால் போதும்இன்னும் சில மாநிலங்களில் இருமொழி படித்தால் போதும்வேறுசிலவற்றில் மூன்று மொழிகள் படிக்கவேண்டும் என்பது சரியான முறை அன்று. இதற்குக் கல்வி மத்தியஅரசின் பொறுப்பில் இருக்கவேண்டும். மாநில அரசு இதில் தலையிடக்கூடாது. ஒரு மலையாளி மலையாளம்இந்திஆங்கிலம் என மூன்று மொழி படித்தால்ஒரு மத்தியப்பிரதேசக்காரனும் இந்தி,ஆங்கிலம்தென்னாட்டு மொழி ஒன்று என மூன்றுமொழிகள் படிக்கவேண்டும். கண்டிப்பாக வடக்கிலுள்ளவர்களுக்குத் தென்னகத்து மொழி ஒன்று கற்பிக்கப்பட வேண்டும். தெற்கில் இருப்பவர்கள் இந்தியோ,வேறு எந்த வட மாநிலத்து மொழியோ ஒன்று கண்டிப்பாகக் கற்கவேண்டும்.

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மூன்று தலைமுறைகளுக்குமேல் ஒரு பகுதியில் தங்கினால் அந்தப் பகுதியின் மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டியதும் அவசியம். மூன்று தலைமுறைகள் என்பது ஏறத்தாழ நூறாண்டுகள். உதாரணமாகமூன்று தலைமுறைக்கு மேல் நிலையாக மைசூரிலோ பெங்களூரிலோ நிலையாகத் தங்கி வீடுவாசலோடு வாழும் தமிழர்கள் கன்னடத்தைத்தான் தாய்மொழியாகக் கொள்ளவேண்டும். பம்பாயில் ஐந்து தலைமுறையாக வாழும் பிஹார்க்காரன்மராட்டியையே தன் தாய்மொழி எனக் கற்கவேண்டும்,குறிப்பிட வேண்டும். இதில் போய்ப்போய் வருபவர்கள் (floating population) பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நிலையான சொத்து-பழைய காலச் சொற்படி ஸ்தாவர ஆஸ்தி என்பதின்றி அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் பணிக்காக அலைபவர்களை இதில் சேர்க்கத் தேவையில்லை. ஒரு தமிழன் அசாமுக்குப் போய் அரசுப்பணி செய்யலாம். அவன் தன் பணிக்காலம் முழுவதையும் அங்கே கழிததுவிட்டுபிறகு தமிழகத்திற்குத் திரும்பிவந்தால் அவனை அசாமிப் பட்டியலில் சேர்க்கமுடியுமாஆனால் அங்கேயே வீடு வாங்கி,பிள்ளைகளுக்கும் அங்கேயே வேலைவாங்கிக்கொடுத்துஅங்கேயே நிலையாகத் தங்கிஅவன் தலைமுறையினர் அங்கு வாழத்தொடங்கினால் அவர்களை அசாமியர்களாகவே கருதவேண்டும்.

இன்றைய மக்கள் கணக்கெடுப்பு முறையில் இந்தக் கணக்கீட்டைச் செய்வது எளியது. இது தேசிய இனப்பிரச்சினைச் சவாலுக்கு ஒரு தீர்வாகவும் அமையும்.

சமூகம்