யதார்த்தம் 1

நேற்று தற்செயலாக, ஒரு பால் பண்ணை வைத்திருக்கும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
ரொம்ப நாளாக எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்.
“முன்னெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய … பசும்பாலுடன் எருமைப் பாலைக் கலந்து விற்பது சாதாரணமாக நடக்கக் கூடியது. தண்ணீர் கலப்பார்கள்..சொல்ல வேண்டியதே இல்லை”
“திருவல்லிக் கேணியிலும் மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் தெருக்களில் எல்லாம் மாடுகள் நின்னுக்கிட்டிருக்கும். அந்தக் காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான டிமாண்ட் மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு நிறைய பால் பவுடர்கள் புழக்கத்தில் இருந்தன..
“ஆனால் இப்போ எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம். விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை. என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் லாஜிக் இடிக்குதே!..
“கண்ணு போட்டாத் தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே … எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ?”
“” தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்..”
“அப்படின்னா ”
” 20 % தாங்க மாட்டுப் பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் பேக்டரி இருக்குதே .. தெரியாதா? இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டுப் பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பணும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்?”
“எந்தத் தண்ணிய ஊத்துவீங்க?”
“ஹி .. ஹி .. ஊருணி, குளம், கம்மாத் தண்ணி தான்.. பின்ன அக்குவாபினா வாங்கியா ஊத்த முடியும்?”
“இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ?”
“பாப்பாங்க”
“அப்புறம்?”
“பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப.…”
“சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படித்தானா ?”
“அப்படி சொல்ல முடியாது…அதெல்லாம் ரேசியோ கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவுதான்.. ஆனா மாட்டு பால் 20% – 30% தான் தம்பி.. அது போக டிடர்ஜெண்ட்டு, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ”
“சின்னப் புள்ளைங்க இந்த பாலை குடிச்சா… யோவ்…
சோயாவுக்கே நிறைய சயிடு எபெக்டு இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா, அலர்ஜி, Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன இம்பாலன்ஸு்…”
“அதுக்கு?”
“நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா?”
“நீங்கதான் பசு மாடு வளர்க்கணும்….சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே../வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட்., பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட்…கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட்…கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட்…இப்படி நிறைய இருக்கே…..
“முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்திரிலேயும் போய் பாருங்க… எத்தனை பேரு…”
“நான் முன்னாடி சாமி கும்பிட மாட்டேன் .. தி.க. குடும்பம் தம்பி.. இப்போ நான் கும்பிடாத கடவுள் இல்ல… பயம் தம்பி…பயம்!”

தினம்-ஒரு-செய்தி