யாருக்குத்தான் இல்லை கூர்த்தமதி?

மாருதி நிறுவனத்தில் கார்கள் தயாரிக்கப்பட்டு ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. காரை வெளியே கொண்டுவரும் போது சிக்கல் ஏற்பட்டது.

காரின் உயரத்தைவிட வாயிலின் உயரம் ஒரு அங்குலம் சிறிதாக இருந்தது. எப்படி வெளியே கொணர்ந்தாலும் மேற்கூரை இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக்கூடும்.

“கீறல் விழுந்தால் பரவாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம்” என்றார் மேலாளர்.
“வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்துவிடுவோம். பிறகுமீண்டும் சிமெண்ட் பூசிவிடலாம்” என்றார் அந்த கட்டிடத்தின் இஞ்சினியர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த வயதான காவலாளி சொன்னார்: “அதெல்லாம் வேண்டாம், கார்களின் சக்கரத்தின் காற்றைச் சற்றே இறக்கிவிடுங்கள். சரியாகப் போய்விடும்!”

கேட்டுக் கொண்டிருந்த கம்பெனியின் டைரக்டர் பொட்டில் அடித்தது போல் நிமிர்ந்தாராம்.
(மின்னம்பலம் செய்தி)

தினம்-ஒரு-செய்தி