வேண்டாம் இது

ஒரு காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வோக்ஸ்டேடு சட்டம் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. மதுவைத் தடைசெய்யும் சட்டம் அது. ஆகவே மது விற்பனை தடைசெய்யப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் குளிர்நாடாகையினாலும், அங்கு மது அருந்துவது பலகாலமாகப் பழகிவிட்ட ஒன்றானபடியினாலும் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவேயில்லை. கள்ளச்சாராயம் பெருகி, அரசாங்கத்துக்குக் கிடைக்கவேண்டிய வரி கிடைக்காமல் போயிற்று. ஊழல் பெருகிறது. இறுதியில் அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
இந்தியாவிலும் இதே கதிதான். 1970க்குப் பின் எத்தனைமுறை தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கும் மது ஏற்பும் மாறிமாறிக் கொண்டுவரப்பட்டுள்ளன? இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கைதான் என்ன? ஒருபுறம் எங்கு பார்த்தாலும் அரசாங்கமே “குடி குடியைக் கெடுக்கும்”, “மது அருந்துவது உடலுக்குத் தீங்கு பயக்கும்” என்று விளம்பரம் செய்கிறது. மறுபுறம் அதுவே மதுக்கடைகளை ஏராளமாகத் திறந்து மது விற்பனையும் செய்கிறது. அப்படியானால் குடியைக் கெடுப்பதும், மக்கள் உடலுக்குத் தீங்கு பயப்பதும்தான் அரசாங்கத்தின் கொள்கையா? ஒன்று, மதுக்கடைகளை மூடுங்கள். அல்லது போலியான விளம்பரத்தையாவது நிறுத்துங்கள். அண்மையில் மத்திய மதுவிலக்கு அமைச்சர்வேறு, மதுக்கடைகளுக்கு ஆதரவாக, அவற்றை மூடக்கூடாது என்று பேசியிருக்கிறார். ஒன்றில் உறுதியாக இருக்கலாமே?

தினம்-ஒரு-செய்தி