தமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்

தமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்

–பேராசிரியர் க. பூரணச்சந்திரன்.

(‘திறனாய்வுச் செம்மல்’ என்ற விருது திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சார்பாக எனக்கு 02-02-2018 அன்று அளிக்கப்பட இருக்கிறது. அதன் ஏற்புரையாகத் தயாரிக்கப்பட்ட கட்டுரை இது.)

கால வரிசைப்படி நான் எழுதிய திறனாய்வு நூல்களாக இங்கு தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள், கவிதையியல், கதையியல், சான்றோர் தமிழ், பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைத் தவிர, அமைப்புமையவாதமும் பின்னமைப்பு வாதமும், தொடர்பியல் சமூகம் வாழ்க்கை, க.நா.சு., போன்றவற்றிலும் என் நோக்கு ஓரளவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இவையன்றி, நான் மொழிபெயர்த்த, தொகுத்த சில நூல்களிலும் என் அணுகுமுறைகள் வெளிப்பட்டுள்ளன.

முதன்முதலில் நான் எழுதிய நூல் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு. 1983ஆம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக் கழகக் குறுகியகால திட்டப்பணி ஒன்றிற்காக நான் எழுதிய நூல் அது. முதுகலை ஆங்கில இலக்கியத்தில் திறனாய்வினைச் சிறப்பாகப் படித்திருந்ததாலும், குறிப்பாக அச்சமயத்தில் வெளிவந்திருந்த டேவிட் லாட்ஜின் இலக்கியத் திறனாய்வு பற்றிய தொகுப்பு நூலான Twentieth Century Literary Criticism: A Reader என்ற நூலைப் படித்திருந்ததாலும் துணிச்சலாகவே இந்தத் திட்டப்பணியில் இறங்கினேன். மேலும் இலக்கியச் சிற்றிதழ்களைத் தொடர்ந்து படித்து வந்ததால் என் மனத்தில் உருவவியல் அணுகுமுறை தொடர்பான கருத்துகள் ஊன்றியிருந்தன. திருவாளர்கள் க. நா. சு,, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் கட்டுரைகளைப் படித்ததால் ஏறத்தாழ கலை-கலைக்காகவே என்ற மாதிரியான கருத்தும், உள்வட்டம்-வெளிவட்டம் போன்ற சிந்தனைகளும் பதிவாகியிருந்தன. ஆனால் ஆங்கில இலக்கியத் திறனாய்வைப் பயின்றதன் காரணமாகக் க.நா.சு போன்றவர்களின் அவ்வப்போதான மனப்பான்மைக் கேற்ற பட்டியல் மதிப்பீடுகளில் எனக்கு அக்கறை இருந்ததில்லை. ஆகவே இலக்கியத் திறனாய்வு வரலாற்றை எழுதும்போது, அமெரிக்கப் புதுத் திறனாய்வு அடிப்படையையே நான் முக்கியமாக அதில் முன்வைத்தேன். குறிப்பாக, முதல் இயலில் எவ்விதம் ஒரு நூலை மதிப்பிடுவது என்பதற்கு அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் ஜான் குரோ ரேன்சம் எவையெல்லாம் திறனாய்வு அல்ல என்று குறிப்பிடும் ஒரு பகுதியை அப்படியே மொழிபெயர்த்துத் தந்திருந்தேன்.

உருவவியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருத்துகளைச் சுருக்கமாக
(1) வடிவம்தான் முதன்மையானது, யாவற்றையும் உள்ளடக்குவது (இதில் ஒருமைப்பாடு, சீர்மை, உயிரித்தன்மை ஆகியவை அடங்கும்)
(2) உள்ளடக்கமும் உருவமும் பிரிக்கமுடியாதவை (இதில் இலக்கியத்தைப் பொழிப்புரை செய்ய முடியாது, வடிவத்திற்கு முந்திப் பிறப்பதல்ல உள்ளடக்கம் என்பவை அடக்கம்)
(3) குறிப்புமுரணும் பொருள்மயக்கமும் முதன்மையாக நோக்கப்பட வேண்டிய இலக்கியப் பண்புகள் (இவற்றுள் எதிர்மாறு, இழுவிசை, உள்முரண்கள் பற்றிய கருத்துகள் அடங்கும்)
(4) இலக்கிய மொழி தனித்தது, முதன்மையானது (இதில் அருவம் சாராத, பருமையான மொழியைக் கையாளவேண்டும் என்பது அடக்கம்)
(5) பனுவலை ஆழ்ந்து நுணுகி ஆராய வேண்டும் (உள்நோக்கப் போலிநியாயம், விளைவுப் போலிநியாயம் போன்றவை அடங்கும்)
என்று குறிப்பிடலாம்.

உருவவியல் அடிப்படையில் நான் பல திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். க.நா.சு. பற்றிய மதிப்பீடு, குறுந்தொகையில் பொருள்மயக்கம், திருக்குறளில் பொருள் மயக்கம், சங்க இலக்கியம் மறுவாசிப்பு போன்ற கட்டுரைகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். எனது கவிதையியல், கதையியல் நூல்களில் முதன்மையாக உருவவியல் அணுகுமுறையையே முன்வைத்துள்ளேன்.
1983இல் எழுதி முடிக்கப்பட்ட தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு திரு. வ.அய். சுப்பிரமணியம் பணிமுடிந்து சென்றபின் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பேரா. ஆறு. இராமநாதன் முயற்சியால் 2005ஆம் ஆண்டில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளிவந்தது.

அச்சமயத்தில்தான் தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூல் வெளிவந்து அது மிகுதியாகப் பேசப்படலாயிற்று. அச்சமயத்தில் கோவை ஞானி அவர்கள் என்னை அது பற்றி ஒரு நூல் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அமைப்புவாதம், உருவவியலின் நீட்சியே என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அமைப்பு மொழியியலும் தெரியும். என்றாலும் தமிழவன் பேசிய அமைப்பியம் சரிவர உருப்பெற்று வெளியிடப்பட்டதாகத் தோன்றவில்லை. அக்காலத்தில் எதிர்க்கமுடியாத ஓர் ஆளுமை அவர். எனவே நான் காலந்தாழ்த்தியே எனது அறிமுக நூலான அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் என்பதை எழுத (1989) கோவை ஞானி அதை வெளியிட்டார் (1990). அதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவெனில், அப்பொழுதே எனக்கு அமைப்புவாதத்தின்மீதான பிடிப்பு போய்விட்டிருந்தது என்பதுதான். அந்நூலின் இறுதிப்பகுதியைப் படிப்பவர்கள் அமைப்புமைய வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, கடுமையாக விமரிசனத்தை அதன்மீது வைக்கிறேன் என்பதையும் உணரலாம். இதே நோக்கினை இன்னும் பின்னால், சுந்தர ராமசாமியின் காலச்சுவடு மலரில் எழுதிய கட்டுரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன். எனது அமைப்புமையவாதம் புத்தகத்தின் இறுதிப்பகுதி இது.

“மானிடக் கர்த்தாக்கள் இயற்கை பற்றிய சரியான அறிவின்றி கலாச்சார உற்பத்திச் செயல்முறைகள் பற்றிய அறிவை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே. மேலமைப்புவாதங்களின் வருகைக்கு முன்பு, சுயத்துவம் என்பது இடைவிடாத அனுபவம் பெறற்குரியது என்ற நம்பிக்கையில் ஆய்வுகள் நிகழ்ந்தன. மேலமைப்புவாதங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தன. ஆனால் அடுத்து எதனை மையமாக வைத்து உலகை அறிவது என்ற பிரச்சினை எழுகிறது…வரலாற்று நோக்கின்மை, மனிதனைக் கரைத்தழித்தல் போன்ற யாவற்றையும் ஒருங்குவைத்து நோக்கும்போது வெறும் சூனியவாதமே எஞ்சுகிறது.”

அமைப்புமைய வாதம் நூலுக்கு முன்னரே எழுதப்பட்டு ஆனால் பின்னால் வெளிவந்த நூல் தொடர்பியல் சமூகம் வாழ்க்கை. அதில் குறியியல் பற்றி மிக நன்றாகவே அறிமுகம் செய்திருக்கிறேன். மேலும் அதன் இறுதிப்பகுதி யில் மார்க்சிய அடிப்படையில் ஊடகங்களை நோக்குவதற்கான தேவையை நன்றாகவே உணர்த்தியிருக்கிறேன். 1990களில் திருச்சி பால்’ஸ் செமினரியிலிருந்து வெளிவந்த அன்னம் இறையியல் சிற்றேடு, லயோலா கல்லூரியிலிருந்து வெளிவந்த ஊடக ஏடுகள் போன்றவற்றில் மார்க்சிய அணுகுமுறையிலான கட்டுரைகளை மிகுதியாக எழுதியிருக்கிறேன். திரு. ஞானி அவர்களின் தொடர்பினால் மார்க்சிய அணுகுமுறை என்னிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே ஆனது. நான் மொழிபெயர்த்த சிறைப்பட்ட கற்பனை, இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு போன்ற நூல்களிலும் அந்த அணுகுமுறை சிறப்பாகவே பயன்பட்டுள்ளது. மார்க்சிய அணுகுமுறை பற்றி ஓரளவு மாணவர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள் என்பதால் அதனை நான் இங்கு விளக்க முற்படவில்லை.

1990களின் இடைப்பகுதியில் நான் எழுதிய முக்கியமான நூல் கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும். அதில் தகர்ப்பு, குறியியல், வாசக மையத் திறனாய்வு ஆகிய கொள்கைகளை மிகச் சிறப்பாகவே பயன்படுத்தி யிருக்கிறேன். இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் என்ற அடுத்த நூலில் வாசக எதிர்வினைத் திறனாய்வு இன்னும் நன்றாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றோர் தமிழ் என்ற நூல், சங்க இலக்கியம் பற்றிய எனது சில கட்டுரைகளின் தொகுப்பு. இறுதியாக 2016இல் வெளிவந்த நூல் பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்.

பொருள்கோள் மிகவும் அடிப்படையான விஷயம். ஒருவகையில் பார்த்தால் இந்த நோக்குதான் எனது பிற நோக்குகளுக்கு அடிப்படையாக முதலிலிருந்தே அமைந்துள்ளது என்பதையும் உணர்கிறேன். காலச்சுவடில் குறிஞ்சிப்பாட்டு பற்றிய என் கட்டுரையைப் படித்த பேராசிரியர் அ. ராமசாமி அப்போது அக்கட்டுரையில் என் அணுகுமுறை என்ன என்ற கேள்வியை அந்த இதழுக்குக் கடிதமாக எழுதியிருந்தார். அப்போது நான் அவருக்கு விடை சொல்லவில்லை. இப்போது அதைத் தெளிவாகவே சொல்கிறேன் – அது பொருள்கோள் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு என்பதுதான். சாகித்திய அகாதெமியில் என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்துப் பேசியபோது, எனது உரை இப்படித் தொடங்குகிறது.

“As a teacher of literature in Tamil, I know the smallest deviations in interpreting a text results in huge differences in the meaning of the text. While teaching literature, we interpret a text to children of our own language. While doing a translation, we interpret a text to the people of another language and culture. Hence in my experience, teaching and translating is one and the same act, but done to different kinds of audience. But in translation we have to be more careful; it involves interpreting the text to another people on one hand; and, if found with flaws, it will not deliver the correct ‘thing’ to those people who have not read it; and it will degrade the quality of the interpreter (and hence his own community) to the people outside his culture.”

இதில் நமது மாணவர்களுக்கு இலக்கியத்தை விளக்குவதுபோல வேறொரு கலாச்சாரத்தினருக்கு ஒரு நூலை விளக்கப்படுத்துவதே மொழிபெயர்ப்பு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த விளக்கப்படுத்தும் தொழில்தான் பொருள்கோள். அதனால் வடிவவியல் நோக்கோ, மார்க்சிய நோக்கோ, குறியியல் நோக்கோ, வாசகத்திறனாய்வு நோக்கோ எதுவாயினும், அதன் அடிப்படையில் பொருள்காணுதல், விளக்குதல் என்ற செயல்கள் – அதாவது பொருள்கோள் முறைகள் முக்கியமானவை ஆகின்றன. அதிலும் குறிப்பாகத் தகர்ப்புச் செயலில், அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

“பொருள்கோள் என்பதை ஒரு பனுவலுக்குப் பொருள் விளக்கம் தருதலும் அதைப் பகுத்தாராய்தலும் பற்றிய கோட்பாடு என்று விளக்குவார்கள்… பொருள்கோளில் உரைசெய்வது என்பது ஒரு பகுதியாக அமையக்கூடும். ஆனால் அதற்கும் மேலாக, அதை எப்படிச் செய்கிறோம் என்பது பற்றிய ஆய்வுத் துறையாக அமைவதுதான் பொருள்கோள்.”

எப்படிச் செய்கிறோம் என்பதில் வெவ்வேறுவித திறனாய்வு அணுகுமுறைகளைக் கொண்டுவரும்போது அந்தந்த வகைத் திறனாய்வாக அது மலர்கிறது என்று கருதுகிறேன். அதனால் தொடக்கத்திலிருந்து எனது அடிப்படை அணுகுமுறை பொருள்கோள் சார்ந்தது என்று ஓரளவு குறிப்பிடலாம். இது ஏற்கெனவே தமிழில் உள்ள எழுத்தெண்ணிப் படித்தல், இலக்கண அடிப்படையிலான ஆய்வு போன்ற முறைகளை உள்ளடக்கியதுதான்.

முக்கியமாக பால் ரிக்கோர் முன்வைக்கும் அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பதைப் பற்றிச் சில சொல்லவேண்டும். அதைப் பற்றி எனது நூலில் விளக்கும் ஒரு பகுதியை இங்குத் தருகிறேன்.
“ஒரு நபர் வெளிப்படுத்தும் சொற்களும் சிந்தனைகளும், உடல் இருப்புநிலை, வாய்தவறுதல் உள்ளிட்ட அவருடைய நடத்தை முறைகளும் சில சமயங்களில் அர்த்தமற்றவைபோலத் தோன்றலாம். ஆனால் அவை அவருடைய உண்மையான சிந்தனைகளை வெளிக்காட்டுகின்றன. புறத்தில் அவற்றுக்கு எதிரான சிந்தனைகள் அல்லது செயல்கள் வெளிப்பட்டாலும் அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. இதுதான் அவநம்பிக்கைப் பொருள்கோளின் முக்கியக் கூறு. இதற்குச் சான்றுகளாக,
ஃ கருத்தியல்கள் வர்க்கச் சார்புகளில் நிலைகொண்டுள்ளன என்ற மார்க்ஸின் கோட்பாட்டையும்,
ஃ ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுதல் போன்ற கிறித்துவச் சிந்தனைகள், உண்மையில் பிறர் வெறுப்பிலும் தன் வெறுப்பிலும் உருவாகியவை என்ற நீட்சேயின் கோட்பாட்டையும்,
ஃ அர்த்தமுள்ள, அர்த்தமற்ற நடத்தை முறைகள் எவையாயினும் அவை நனவிலி உந்தல்களையும் அர்த்தங்களையும் காட்டுகின்றன என்ற ஃப்ராய்டின் கோட்பாட்டையும் காட்டுவார்கள். இவை புற மற்றும் உட்கிடையான மனநிலைகளின் ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. எனவே இவை பொருள்கோள் முறைகள் ஆகின்றன.”

இத்தகைய ஓர் அணுகுமுறையைத்தான் எனது கவிதைமொழி நூலிலும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் நூலின் சில கட்டுரைகளிலும் கையாண்டிருக்கிறேன். எனது அணுகுமுறைகள் பற்றி மேற்கூறிய கருத்துகள் போதுமானவை என்று கருதுகிறேன். பிற கட்டுரைகள், கால வரிசைப்படி நான் எழுதிய திறனாய்வு நூல்களாக இங்கு தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள், கவிதையியல், கதையியல், சான்றோர் தமிழ், பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைத் தவிர, அமைப்புமையவாதமும் பின்னமைப்பு வாதமும், தொடர்பியல் சமூகம் வாழ்க்கை, க.நா.சு., போன்றவற்றிலும் என் நோக்கு ஓரளவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இவையன்றி, நான் மொழிபெயர்த்த, தொகுத்த சில நூல்களிலும் என் அணுகுமுறைகள் வெளிப்பட்டுள்ளன.
முதன்முதலில் நான் எழுதிய நூல் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு. 1983ஆம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக் கழகக் குறுகியகால திட்டப்பணி ஒன்றிற்காக நான் எழுதிய நூல் அது. முதுகலை ஆங்கில இலக்கியத்தில் திறனாய்வினைச் சிறப்பாகப் படித்திருந்ததாலும், குறிப்பாக அச்சமயத்தில் வெளிவந்திருந்த டேவிட் லாட்ஜின் இலக்கியத் திறனாய்வு பற்றிய தொகுப்பு நூலான Twentieth Century Literary Criticism: A Reader என்ற நூலைப் படித்திருந்ததாலும் துணிச்சலாகவே இந்தத் திட்டப்பணியில் இறங்கினேன். மேலும் இலக்கியச் சிற்றிதழ்களைத் தொடர்ந்து படித்து வந்ததால் என் மனத்தில் உருவவியல் அணுகுமுறை தொடர்பான கருத்துகள் ஊன்றியிருந்தன. திருவாளர்கள் க. நா. சு,, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் கட்டுரைகளைப் படித்ததால் ஏறத்தாழ கலை-கலைக்காகவே என்ற மாதிரியான கருத்தும், உள்வட்டம்-வெளிவட்டம் போன்ற சிந்தனைகளும் பதிவாகியிருந்தன. ஆனால் ஆங்கில இலக்கியத் திறனாய்வைப் பயின்றதன் காரணமாகக் க.நா.சு போன்றவர்களின் அவ்வப்போதான மனப்பான்மைக் கேற்ற பட்டியல் மதிப்பீடுகளில் எனக்கு அக்கறை இருந்ததில்லை. ஆகவே இலக்கியத் திறனாய்வு வரலாற்றை எழுதும்போது, அமெரிக்கப் புதுத் திறனாய்வு அடிப்படையையே நான் முக்கியமாக அதில் முன்வைத்தேன். குறிப்பாக, முதல் இயலில் எவ்விதம் ஒரு நூலை மதிப்பிடுவது என்பதற்கு அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் ஜான் குரோ ரேன்சம் எவையெல்லாம் திறனாய்வு அல்ல என்று குறிப்பிடும் ஒரு பகுதியை அப்படியே மொழிபெயர்த்துத் தந்திருந்தேன்.
உருவவியல் அணுகுமுறையின் அடிப்படைக் கருத்துகளைச் சுருக்கமாக
(1) வடிவம்தான் முதன்மையானது, யாவற்றையும் உள்ளடக்குவது (இதில் ஒருமைப்பாடு, சீர்மை, உயிரித்தன்மை ஆகியவை அடங்கும்)
(2) உள்ளடக்கமும் உருவமும் பிரிக்கமுடியாதவை (இதில் இலக்கியத்தைப் பொழிப்புரை செய்ய முடியாது, வடிவத்திற்கு முந்திப் பிறப்பதல்ல உள்ளடக்கம் என்பவை அடக்கம்)
(3) குறிப்புமுரணும் பொருள்மயக்கமும் முதன்மையாக நோக்கப்பட வேண்டிய இலக்கியப் பண்புகள் (இவற்றுள் எதிர்மாறு, இழுவிசை, உள்முரண்கள் பற்றிய கருத்துகள் அடங்கும்)
(4) இலக்கிய மொழி தனித்தது, முதன்மையானது (இதில் அருவம் சாராத, பருமையான மொழியைக் கையாளவேண்டும் என்பது அடக்கம்)
(5) பனுவலை ஆழ்ந்து நுணுகி ஆராய வேண்டும் (உள்நோக்கப் போலிநியாயம், விளைவுப் போலிநியாயம் போன்றவை அடங்கும்)
என்று குறிப்பிடலாம்.
உருவவியல் அடிப்படையில் நான் பல திறனாய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். க.நா.சு. பற்றிய மதிப்பீடு, குறுந்தொகையில் பொருள்மயக்கம், திருக்குறளில் பொருள் மயக்கம், சங்க இலக்கியம் மறுவாசிப்பு போன்ற கட்டுரைகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். எனது கவிதையியல், கதையியல் நூல்களில் முதன்மையாக உருவவியல் அணுகுமுறையையே முன்வைத்துள்ளேன்.
1983இல் எழுதி முடிக்கப்பட்ட தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு திரு. வ.அய். சுப்பிரமணியம் பணிமுடிந்து சென்றபின் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பேரா. ஆறு. இராமநாதன் முயற்சியால் 2005ஆம் ஆண்டில்தான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வெளிவந்தது.
அச்சமயத்தில்தான் தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூல் வெளிவந்து அது மிகுதியாகப் பேசப்படலாயிற்று. அச்சமயத்தில் கோவை ஞானி அவர்கள் என்னை அது பற்றி ஒரு நூல் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். அமைப்புவாதம், உருவவியலின் நீட்சியே என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அமைப்பு மொழியியலும் தெரியும். என்றாலும் தமிழவன் பேசிய அமைப்பியம் சரிவர உருப்பெற்று வெளியிடப்பட்டதாகத் தோன்றவில்லை. அக்காலத்தில் எதிர்க்கமுடியாத ஓர் ஆளுமை அவர். எனவே நான் காலந்தாழ்த்தியே எனது அறிமுக நூலான அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் என்பதை எழுத (1989) கோவை ஞானி அதை வெளியிட்டார் (1990). அதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவெனில், அப்பொழுதே எனக்கு அமைப்புவாதத்தின்மீதான பிடிப்பு போய்விட்டிருந்தது என்பதுதான். அந்நூலின் இறுதிப்பகுதியைப் படிப்பவர்கள் அமைப்புமைய வாதத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை, கடுமையாக விமரிசனத்தை அதன்மீது வைக்கிறேன் என்பதையும் உணரலாம். இதே நோக்கினை இன்னும் பின்னால், சுந்தர ராமசாமியின் காலச்சுவடு மலரில் எழுதிய கட்டுரையிலும் வெளிப்படுத்தியிருக்கிறேன். எனது அமைப்புமையவாதம் புத்தகத்தின் இறுதிப்பகுதி இது.
“மானிடக் கர்த்தாக்கள் இயற்கை பற்றிய சரியான அறிவின்றி கலாச்சார உற்பத்திச் செயல்முறைகள் பற்றிய அறிவை உருவாக்க முடியுமா என்பது சந்தேகமே. மேலமைப்புவாதங்களின் வருகைக்கு முன்பு, சுயத்துவம் என்பது இடைவிடாத அனுபவம் பெறற்குரியது என்ற நம்பிக்கையில் ஆய்வுகள் நிகழ்ந்தன. மேலமைப்புவாதங்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தன. ஆனால் அடுத்து எதனை மையமாக வைத்து உலகை அறிவது என்ற பிரச்சினை எழுகிறது…வரலாற்று நோக்கின்மை, மனிதனைக் கரைத்தழித்தல் போன்ற யாவற்றையும் ஒருங்குவைத்து நோக்கும்போது வெறும் சூனியவாதமே எஞ்சுகிறது.”
அமைப்புமைய வாதம் நூலுக்கு முன்னரே எழுதப்பட்டு ஆனால் பின்னால் வெளிவந்த நூல் தொடர்பியல் சமூகம் வாழ்க்கை. அதில் குறியியல் பற்றி மிக நன்றாகவே அறிமுகம் செய்திருக்கிறேன். மேலும் அதன் இறுதிப்பகுதி யில் மார்க்சிய அடிப்படையில் ஊடகங்களை நோக்குவதற்கான தேவையை நன்றாகவே உணர்த்தியிருக்கிறேன். 1990களில் திருச்சி பால்’ஸ் செமினரியிலிருந்து வெளிவந்த அன்னம் இறையியல் சிற்றேடு, லயோலா கல்லூரியிலிருந்து வெளிவந்த ஊடக ஏடுகள் போன்றவற்றில் மார்க்சிய அணுகுமுறையிலான கட்டுரைகளை மிகுதியாக எழுதியிருக்கிறேன். திரு. ஞானி அவர்களின் தொடர்பினால் மார்க்சிய அணுகுமுறை என்னிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவே ஆனது. நான் மொழிபெயர்த்த சிறைப்பட்ட கற்பனை, இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு போன்ற நூல்களிலும் அந்த அணுகுமுறை சிறப்பாகவே பயன்பட்டுள்ளது. மார்க்சிய அணுகுமுறை பற்றி ஓரளவு மாணவர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள் என்பதால் அதனை நான் இங்கு விளக்க முற்படவில்லை.
1990களின் இடைப்பகுதியில் நான் எழுதிய முக்கியமான நூல் கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும். அதில் தகர்ப்பு, குறியியல், வாசக மையத் திறனாய்வு ஆகிய கொள்கைகளை மிகச் சிறப்பாகவே பயன்படுத்தி யிருக்கிறேன். இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் என்ற அடுத்த நூலில் வாசக எதிர்வினைத் திறனாய்வு இன்னும் நன்றாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றோர் தமிழ் என்ற நூல், சங்க இலக்கியம் பற்றிய எனது சில கட்டுரைகளின் தொகுப்பு. இறுதியாக 2016இல் வெளிவந்த நூல் பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்.
பொருள்கோள் மிகவும் அடிப்படையான விஷயம். ஒருவகையில் பார்த்தால் இந்த நோக்குதான் எனது பிற நோக்குகளுக்கு அடிப்படையாக முதலிலிருந்தே அமைந்துள்ளது என்பதையும் உணர்கிறேன். காலச்சுவடில் குறிஞ்சிப்பாட்டு பற்றிய என் கட்டுரையைப் படித்த பேராசிரியர் அ. ராமசாமி அப்போது அக்கட்டுரையில் என் அணுகுமுறை என்ன என்ற கேள்வியை அந்த இதழுக்குக் கடிதமாக எழுதியிருந்தார். அப்போது நான் அவருக்கு விடை சொல்லவில்லை. இப்போது அதைத் தெளிவாகவே சொல்கிறேன் – அது பொருள்கோள் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு என்பதுதான். சாகித்திய அகாதெமியில் என் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் குறித்துப் பேசியபோது, எனது உரை இப்படித் தொடங்குகிறது.
“As a teacher of literature in Tamil, I know the smallest deviations in interpreting a text results in huge differences in the meaning of the text. While teaching literature, we interpret a text to children of our own language. While doing a translation, we interpret a text to the people of another language and culture. Hence in my experience, teaching and translating is one and the same act, but done to different kinds of audience. But in translation we have to be more careful; it involves interpreting the text to another people on one hand; and, if found with flaws, it will not deliver the correct ‘thing’ to those people who have not read it; and it will degrade the quality of the interpreter (and hence his own community) to the people outside his culture.”
இதில் நமது மாணவர்களுக்கு இலக்கியத்தை விளக்குவதுபோல வேறொரு கலாச்சாரத்தினருக்கு ஒரு நூலை விளக்கப்படுத்துவதே மொழிபெயர்ப்பு என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த விளக்கப்படுத்தும் தொழில்தான் பொருள்கோள். அதனால் வடிவவியல் நோக்கோ, மார்க்சிய நோக்கோ, குறியியல் நோக்கோ, வாசகத்திறனாய்வு நோக்கோ எதுவாயினும், அதன் அடிப்படையில் பொருள்காணுதல், விளக்குதல் என்ற செயல்கள் – அதாவது பொருள்கோள் முறைகள் முக்கியமானவை ஆகின்றன. அதிலும் குறிப்பாகத் தகர்ப்புச் செயலில், அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
“பொருள்கோள் என்பதை ஒரு பனுவலுக்குப் பொருள் விளக்கம் தருதலும் அதைப் பகுத்தாராய்தலும் பற்றிய கோட்பாடு என்று விளக்குவார்கள்… பொருள்கோளில் உரைசெய்வது என்பது ஒரு பகுதியாக அமையக்கூடும். ஆனால் அதற்கும் மேலாக, அதை எப்படிச் செய்கிறோம் என்பது பற்றிய ஆய்வுத் துறையாக அமைவதுதான் பொருள்கோள்.”
எப்படிச் செய்கிறோம் என்பதில் வெவ்வேறுவித திறனாய்வு அணுகுமுறைகளைக் கொண்டுவரும்போது அந்தந்த வகைத் திறனாய்வாக அது மலர்கிறது என்று கருதுகிறேன். அதனால் தொடக்கத்திலிருந்து எனது அடிப்படை அணுகுமுறை பொருள்கோள் சார்ந்தது என்று ஓரளவு குறிப்பிடலாம். இது ஏற்கெனவே தமிழில் உள்ள எழுத்தெண்ணிப் படித்தல், இலக்கண அடிப்படையிலான ஆய்வு போன்ற முறைகளை உள்ளடக்கியதுதான்.
முக்கியமாக பால் ரிக்கோர் முன்வைக்கும் அவநம்பிக்கைப் பொருள்கோள் என்பதைப் பற்றிச் சில சொல்லவேண்டும். அதைப் பற்றி எனது நூலில் விளக்கும் ஒரு பகுதியை இங்குத் தருகிறேன்.
“ஒரு நபர் வெளிப்படுத்தும் சொற்களும் சிந்தனைகளும், உடல் இருப்புநிலை, வாய்தவறுதல் உள்ளிட்ட அவருடைய நடத்தை முறைகளும் சில சமயங்களில் அர்த்தமற்றவைபோலத் தோன்றலாம். ஆனால் அவை அவருடைய உண்மையான சிந்தனைகளை வெளிக்காட்டுகின்றன. புறத்தில் அவற்றுக்கு எதிரான சிந்தனைகள் அல்லது செயல்கள் வெளிப்பட்டாலும் அவருடைய மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. இதுதான் அவநம்பிக்கைப் பொருள்கோளின் முக்கியக் கூறு. இதற்குச் சான்றுகளாக,
ஃ கருத்தியல்கள் வர்க்கச் சார்புகளில் நிலைகொண்டுள்ளன என்ற மார்க்ஸின் கோட்பாட்டையும்,
ஃ ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டுதல் போன்ற கிறித்துவச் சிந்தனைகள், உண்மையில் பிறர் வெறுப்பிலும் தன் வெறுப்பிலும் உருவாகியவை என்ற நீட்சேயின் கோட்பாட்டையும்,
ஃ அர்த்தமுள்ள, அர்த்தமற்ற நடத்தை முறைகள் எவையாயினும் அவை நனவிலி உந்தல்களையும் அர்த்தங்களையும் காட்டுகின்றன என்ற ஃப்ராய்டின் கோட்பாட்டையும் காட்டுவார்கள். இவை புற மற்றும் உட்கிடையான மனநிலைகளின் ஆழமான அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. எனவே இவை பொருள்கோள் முறைகள் ஆகின்றன.”
இத்தகைய ஓர் அணுகுமுறையைத்தான் எனது கவிதைமொழி நூலிலும், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் நூலின் சில கட்டுரைகளிலும் கையாண்டிருக்கிறேன். பிற கட்டுரைகள், நூல்களின் இதற்கு எதிரான உடன்பாட்டு அல்லது நம்பிக்கைப் பொருள்கோள் என்பதைக் கையாண்டிருக்கிறேன். எனது அணுகுமுறைகள் பற்றி மேற்கூறிய கருத்துகள் போதுமானவை என்று கருதுகிறேன்.


இன்றைய இந்தியா

இந்தியாவில் ஏறத்தாழ 21 மாநிலங்களில் 1000 ஆண்களுக்கு 854 பெண்கள் அல்லது அதற்கும் குறைவாக இருப்பதாக நிதி ஆயோக் குழு தெரிவித்துள்ளது. இது கவலையளிக்கும் ஒரு விஷயம் என்பதோடு, மற்றொன்றையும் கவனிக்க வேண்டும்.

எல்லாம் பழையகால மால்தூஸ் கோட்பாடுதான். வேறு எதில் இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தொகையில் நாம் 140 கோடியை நோக்கி “முன்னேறிக் கொண்டிருக்கிறோம்”.

(நான் உயர் பள்ளியில் படித்த நாட்களில், அறுபதுகளின் தொடக்கத்தில், 1961 மக்கள் தொகைக் கணக்கின்படி, நமது நாட்டின் மொத்த மக்கள் தொகை 45 கோடி).

நம்மைப்போல மூன்று மடங்கு நிலவியல் பரப்புக் கொண்ட சீனாவெல்லாம் தன் மக்கள் தொகைப் பெருக்கத்தை நிறுத்தி எத்தனையோ காலம் ஆகிவிட்டது.

மூன்றாம் உலகப்போர் ஏற்படப் போவது தண்ணீருக்காகத்தான் என்கிறார்கள.

நம்நாட்டு மக்கள் தொகைப் பெருக்கத்தினால் அதற்கு முன்னாலேயே கொடிய வேலை வாய்ப்பின்மை, வளங்களின் சுருக்கம், உணவின்மை, நீரின்மை எல்லாம் ஏற்பட்டு நாம் பஞ்சத்தினால் சாகப்போகிறோம்.

ஏற்கெனவே விவசாய நிலங்கள் தரிசாகிவிட்டன. இந்தியாவில் பாலைவனப் பரப்பு அதிகரித்து வருகிறது. நிஜக் காடுகளுக்கு பதிலாக கான்கிரீட் காடுகள்தான் முளைத்திருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஊழல் திருட்டு கொள்ளை தலைவிரித்தாடுகிறது. மக்களை கவனிக்க ஆளில்லை.

வேலைவாய்ப்புக் கேட்கும் இளைஞர்களைப் பக்கோடா விற்கச் சொல்லும் அரசியல் வியாதிகள் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு நடைபாவாடை விரித்து நாட்டை இன்னும் வறுமையில் தள்ளுகிறார்கள். இருக்கும் கொஞ்ச வளங்களும் பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளாலும் உள்நாட்டு முதலாளிகளாலும் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்திய மக்களின் வியர்வை ஸ்விஸ் பாங்குகளில் நிரப்பப்படுகிறது.

என்ன செய்யப் போகிறோம் நாம்?


just for fun

நான்கு பேர் ஒரு பூங்காவில் தற்செயல் நிகழ்வுகள் ஒன்றுசேர்ந்து வருவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார், “என் மனைவி இரு நகரங்களின் கதை படித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில்தான் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.”
மற்றொருவர் சொன்னார், “ஆச்சரியம். என் மனைவி மூன்று துப்பாக்கிவீரர்கள் கதையைப் படித்தாள். அந்தச் சமயம்தான் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றாள்.”
மூன்றாம் ஆள், இதெல்லாம் என்ன ஆச்சரியம்!சொர்க்கத்தில் சந்திக்கும் ஐவர் என்ற புத்தகத்தை என் மனைவி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றாள், தெரியுமா?” என்றார்.
நான்காம் ஆள் கவலை தோய்ந்த முகத்துடன் ஓடப்போவது போல் வேகமாக எழுந்திருப்பதைப் பார்த்தார்கள். “என்ன சார் விஷயம்?” என்று கேட்டார்கள். “என் மனைவியைப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன். அவள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்” என்றார் அவர்.


Jesus Christ

The Greatest Man in History (or Mythology, as you may like)

HE had no servants,
yet they called Him Master.

Had no degree,
yet they called Him Teacher.

Had no medicines,
yet they called Him Healer.

He had no army,
yet kings feared Him.

He won no military battles,
yet He conquered the world.

He committed no crime,
yet they crucified Him.

He was buried in a tomb,
yet He lives today.


மோடியின் ரபேல் விமான ஊழல்

மோடியின் ரபேல் விமான ஊழலும், ஊடகங்களின் கள்ள மௌனமும்!

ஒரே ஒப்பந்தம் மோடியின் சுதேசி , ஊழல் என அனைத்து பொய்களையும் உடைத்தெறிந்து மோடியின் உண்மை முகமுடியை உலகிற்கு உணர உதவியது என்றால் அது ரபேல் விமான ஊழல் தான். அது கடந்து வந்த பாதை:

MIG-21 வகை விமானங்கள் அதிகப்படியான விபத்துகளை சந்தித்திருந்தன. இதனைக் கருத்தில் கொண்டு 2007 ஆம் ஆண்டு 126 MMRCA (Medium multi-role combat Aircraft) விமானம் வாங்கும் பொருட்டு டெண்டர் (RFP) விடப்பட்டது

2008 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மிக்-35, சுவீடன் JAS-39 (SAB ), பிரான்ஸ் Rafale (Dassult ), அமெரிக்கா F-16 Falcon (Lockheed Martin), Boeing F/A-18 Super Hornet, Eurofighter Typhoon போன்ற கம்பெனிகள் டெண்டரில் பங்கெடுத்தனர். பல கட்ட மதிப்பீட்டின் முடிவில், 2012 ஆம் ஆண்டு குறைந்த விலைப் புள்ளிகள் அளித்த நிறுவனம் என்ற அடிப்படையில் ரபேல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சுமார் 10.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 126 போர் விமானங்களை ரபேல் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும். அதில் 18 பறக்கும் நிலையில் முழுவதுமாக செய்து தர வேண்டும். மீதம் 108 இந்தியாவில் HAL நிறுவனம் மூலம் டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் முறையில் செய்ய வேண்டும் போன்ற விதிகளை இந்தியா விதிக்கிறது

இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் இரண்டு .

1. டெக்னாலஜி ட்ரான்ஸ்பர்: MMRCA போர் விமானம் செய்ய தேவையான அனைத்து டெக்னாலஜியையும் பொதுத் துறை நிறுவனமான HAL நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் அதன் மூலம் நாமே தேவைப்படும் விமானத்தை உருவாக்கும் திறனை பெறலாம் (இப்பொது “Make in India” என்று வெள்ளையடிக்கப்பட்ட திட்டம் அப்போது “National Manufacturing Policy”) என்று இருந்தது. ToT (transfer of technology ) என்பது எப்படி செய்யவேண்டும் என்பது மட்டும் அல்ல, எதனால் இப்படி செய்யவேண்டும் என்பதுவும் கூட ஏற்கனவே இருந்த தேசிய உற்பத்திக் கொள்கையில் வரையறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு புது வண்ணம் பூசிதான் மோடி மேக் இன் இந்தியா என்று உருமாற்றம் செய்தார்.

2. Offset Clause :இந்த கான்ட்ராக்ட்டின் மூலம் வரும் வருமானத்தில் 50% Dassult நிறுவனம், விமான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும்.

முதலில் எல்லா விதிகளுக்கும் தலையசைத்த Dassult நிறுவனம் மெல்ல நமது நிபந்தனைகளை மாற்ற முயற்சி செய்தது. HAL உருவாக்கும் விமானத்திற்கு உத்தரவாதம் தர மறுத்தது. டெக்னாலஜி ட்ரான்ஸபெர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தது. இது பின் என்ன ஆயிற்று என்பதை பின்னர் பார்க்கலாம்.

இது நடந்தது 2012ம் ஆண்டு. காங்கிரஸ் அரசின் மிக மோசமான காலகட்டம். 2G ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என அடுக்கடுக்கான பிரச்னைகளை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் L1 வெண்டராக Dassult நிறுவனத்தை அறிவித்ததும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி மைசூரா ரெட்டி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறார்.

அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது, மேலும் ஆட்சி முடிவில் இருக்கும் தருவாயில் மிக பெரிய முடிவு எடுக்க வேண்டாம் என்று அப்பொழுதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார்.

இதன் பின் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைத்த பின்பு பாதுகாப்புத் துறை, அதுவரை கிடப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கையில் எடுத்து மிக மும்முரமாக துரிதப்படுத்த துவங்கியது.
Febrauary 2015 ஆம் ஆண்டு பெங்களூர் வந்த Dassult தலைமை செயல் அதிகாரி, எரிக் ட்ரேப்பியர், விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒப்பந்தப்படி 10.2Bn$ தான் என்பதை உறுதி செய்கிறார்

March 25,2015 ஆம் ஆண்டு 126 போர் விமானத்தை HAL உடன் இணைந்து தயாரிப்பதை உறுதி செய்து ஒரு விழாவில் IAF முன்னணியில் Dassult நிறுவனம் அறிவிக்கறது

March 27,2015 ஆம் ஆண்டு Dassult கம்பெனி சேர்மன் அளித்த பேட்டியில் 126 போர் விமானம் வாங்கும் டீல் 95% முடிவடைந்தது என கூறுகிறார்
April 2015, இப்படி நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும் போது அரசு முறை பயணமாக மோடி பிரான்ஸ் செல்ல திட்டமிடப்படுகிறது. அங்கு வழக்கமாக வெளியுறவுத் துறைச் செயலாளர் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்படுகின்றது
அதற்கு அவர் அளித்த பதில்
“இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரெஞ்சு கம்பெனிக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது அதையும் மோடியின் விஜயத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து பார்க்க வேண்டாம்” என்று கூறுகிறார்

அதன்பின் பிரான்ஸ் அதிபரும் மோடியும் பயண இறுதியில் கூட்டறிக்கை விடுகின்றபோது ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இதுவரை போட்டு வைத்த மொத்த கோடுகளையும் அழித்து விட்டு புதிதாக ஒப்பந்தம் உறுதி செய்யப்படுகிறது.

அதன் படி 81 போர் விமானம் மட்டுமே வாங்குவது, டெக்னாலஜி ட்ரான்ஸபெர் முறையை கை விடுவது என முடிவு செய்யப்பட்டது. மற்ற விபரங்கள் பின்னால் தெரிவிக்கப்படும் என்று முடித்துக்கொண்டனர்.

ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குகையில் மிக மிக முக்கியமான கூறு, தொழில்நுட்ப மாறுதல். ஏனெனில், தொழில்நுட்ப மாறுதல் அம்சம் ஒப்பந்தத்தில் இருந்தால், நமது ராணுவ தளவாட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலம், நாமே எதிர்காலத்தில் அவற்றை தயாரிக்க முடியும். ஆகையால் எந்த ஒப்பந்தத்திலும் இது அவசியம்.

ஆனால், இப்படி ஒரு முக்கியமான கூறை ரத்து செய்ய, இந்தியா இது வரை சந்தித்திராத, மகாத்மா காந்தியை விட மிக தீவிரமான தேசபக்தரான மோடி எப்படி ஒப்புக் கொண்டார் என்பதுதான் புரியாத புதிர்.

இது முன்னாள் ராணுவ தளபதிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது 81 போர் விமானம் மிக குறைந்த அளவு என்று வாதிட்டனர். சரி இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் ? என்னதான் பிரதமர் என்பவர் நாட்டின் தலைமை அமைச்சர் என்றாலும், பாதுகாப்புத் துறை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு மிக மிக முக்கியம். ஏனெனில் நாள்தோறும், முப்படை தளபதிகளோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் அவருக்குத்தான், நம் நாட்டின் பாதுகாப்புக்கு எது தேவை, எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் ரபேல் ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்பட்டு கையெழுத்தானபோது அவர் கோவாவில் மீன் கடை திறப்பு விழாவில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார்

முதலில் சுப்ரமணிய சுவாமி இந்த ஒப்பந்தத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் அதில் ரபேல் விமானம் தரமற்றது அதனை வாங்க முடிவு செய்தால் பொது நல வழக்கு தொடருவேன் என்று பேட்டியும் கொடுக்கிறார். . 2016ல் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டவுடன் இந்த பிரச்சனையைக் கைவிடுகிறார். அதன் பிறகு, மோடிக்கு அடுத்த தீவிர தேசபக்தரான சுவாமியும் இது குறித்து வாயே திறக்கவில்லை.

இப்படிப் பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியாமல், நிதி அமைச்சரையும் கேட்காமல் யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்திருப்பார் ? ஒரு வேளை பாரிசிற்கு மோடியுடன் சென்ற அம்பானியைக் கேட்டு எடுத்திருப்பாரோ ? அம்பானிக்கும் பாதுகாப்புத் துறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழும்பி இருக்கிறது.

முதலில் எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்த நிறுவனம் திடீர் என முறுக்கி கொள்ள காரணம் என்ன ? L1 அந்தஸ்து பெற்ற இரண்டே வாரத்தில் எதேச்சையாக Dassult நிறுவனம், முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கிறது. அதன் பின்பு தான் Dassult RFP யில் உள்ள ஒரு ஒரு விதியையும் மாற்ற முயல்கிறது, குறிப்பாக எப்படியாவது HAL நிறுவனத்தை ஓரம் கட்டும் வேலையை பார்க்கிறது.
மூத்த அம்பானி வந்து விட்டார். இளைய அம்பானி மட்டும் சளைத்தவரா என்ன ? ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனத்தை அனில் அம்பானி தொடங்குகிறார். அவர் அந்நிறுவனத்தை தொடங்கியது 28/03/2015. சரியாக மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் 3 வாரம் முன்பு.

August 2014, பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49% சதவீதமாக உயர்த்துகிறது அரசு. அதன் அடிப்படையில் 51:49 சதவிகித முறைப்படி Dassult நிறுவனத்துடன், அனில் அம்பானி கூட்டணி அமைக்கிறார். பிரான்ஸ் ஒப்பந்தத்தின் பின் Offset Clause அடிப்படையில் விமான உதிரி பாகம் செய்யும் ஒப்பந்தம் அவர் கைகளுக்கு செல்கிறது .
மற்ற விபரங்கள் பின்னால் உறுதி செய்யப்படும் என்று கூட்டறிக்கையில் சொன்னார்கள் அல்லவா அதில் தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பழைய ஒப்பந்தப்படி 126 விமானங்கள் 90,000 கோடிக்கு வாங்க இருந்ததை கைவிட்டு வெறும் 36 விமானங்களை 60,000 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன் படி ஒரு விமானம் 714 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 1611 கோடிக்கு வாங்கவிருக்கிறோம்.

இப்பொழுது இந்த விலையுயர்வை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் காரணங்களைப் பார்ப்போம்
அதிக நாட்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் இந்த விலை உயர்வு என்று கூறினால் அது தவறு. ஏனெனில் RFPயில் மிக தெளிவாக பண வீக்க விகிதம் 3.9% நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படியில் கணக்கிட்டால் 3 மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்பே இல்லை.

UPA செய்த ஒப்பந்தத்தில் இருந்த specification உயர்த்தியுள்ளதால் இந்த விலை ஏற்றம் என்பது இரண்டாவது காரணம். விலை மாற்றம் என்ற கேள்வியை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலை தான் இது. அப்படி என்ன மாற்றம் என்று பார்த்தால் meteror missile பொருத்தப்படுகிறது (அதன் விலை 2Mn$ 13 கோடி.

மற்றொரு மாற்றம் Helmet Mounted Display System (HMDS) அதாவது helmet முன் உள்ள திரையில் தேவையான விபரம் தெரியும். அதன் மூலம் எதிரி விமானத்தை குறி வைத்து லாக் செய்ய முடியும். இதன் விலை 0.4mn$ (2.5 கோடி). ஆக இந்த இரு upgrade செலவுகளையும் சேர்த்தால் கூட 730 கோடி தான் வருகிறது.

இந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. செய்தித்தாள்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் தான். ஆனால் அதிக அளவில், மிகுந்த பொருட்செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்குகையில், பேச்சுவார்த்தை நடத்தி, விலையை நிச்சயமாகக் குறைக்க முடியும்.

இந்த HMDS தயாரிப்பது இஸ்ரேலை சேர்ந்த Elbit என்ற நிறுவனம். அந்நிறுவனம் March 2016 ஆம் ஆண்டு Aero defence system என்ற இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் HMDS இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. அந்த Aero defence systems நிறுவனம் நம் அதானி குழுமத்தினுடையது.

அம்பானிக்குக் கொடுத்துவிட்டு அதானிக்குக் கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன ? இவரும் இந்த நிறுவனத்தை எதேச்சையாக 17/07/2015 நிறுவுகிறார். அதாவது மோடி பிரான்சில் இருந்து திரும்பிய 2 மாதத்தில்.

சரி எதேச்சையாக இந்த நண்பர்கள் அடைந்த பயனை விடுத்து இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் நாம் இழந்தது என்ன என்பதை பார்ப்போமா ?

1) 126 விமானம் 90,000 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 36 விமானம் மட்டுமே 60,000 கோடிக்கு வாங்க இருக்கிறோம். இதில் offset clause விதிபடி மொத்த வருவாயில் (58,000 கோடி) 50% சுமார் 22,000 கோடி அனில் அம்பானிக்கு செல்கிறது.

2) முடிவு செய்து வைத்த பட்ஜெட்டின் பெரும் பகுதியை வெறும் 2 squadron விமானங்கள் வாங்க செலவிட்டதால் இது நம் விமானப் படைக்கு பெரும் பின்னடைவு என ஓய்வு பெற்ற தளபதிகள் கருத்து தெருவிக்கின்றனர். பாகிஸ்தான், சீனாவுடனான இரண்டு முனைப் போர் ஏற்படும் போது இந்த விமானங்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று கவலை தெரிவிக்கின்றனர்.

3) தொழில்நுட்ப மாற்ற முறைப்படி பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்திற்கு வரவிருந்த அத்தனை பயன்களும் இனி அம்பானி நிறுவனத்திற்கு செல்லும்.

4) 108 விமானங்கள் HAL நிறுவனம் தயாரிக்க இருந்தது. இது தற்போது நிறுத்தி வைக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.

இதை எல்லாம் சுட்டிக் காட்டி காங்கிரஸ் நடத்திய November 14/2017 பத்திரிக்கையாளர் சந்திப்பை ஊடகங்கள் எதுவும் கவர் செய்யவில்லை. அதன் பின் புதிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என்றும், போர்க்கால அடிப்படையில் அதை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டதற்கு அரசை பாராட்டவேண்டுமே தவிர குறை கூறக் கூடாது என்று கூறினார்.

காங்கிரஸ் முன்வைத்த கீழ்க்கண்ட கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை:

1) பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை 2013இன் படி “ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு” மற்றும் “விலை நிர்ணய குழு” இவை இரண்டையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டது ஏன் ?

2) 13.03.2014 அன்று செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி HAL பொதுத்துறை நிறுவனத்திற்கு வரவிருந்த ஒப்பந்தம் தனியாருக்கு சென்றது எப்படி?

3) விமானக் கட்டமைப்பில் பல வருட அனுபவம் உள்ள HAL தவிர்த்து இதுவரை முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன் ?

4) தொழில்நுட்ப மாற்றம் இல்லாதபட்சத்தில் விமானம் பழுதுபார்ப்பது, பராமரிப்பது அனைத்துக்கும் Dassult நிறுவனத்தை எப்போதும் சார்ந்திருப்பது சரியா ?

இவையெல்லாம், காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ள சில கேள்விகள். இவற்றை, தேசிய ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பி, மத்திய அரசை பதில் சொல்ல வைக்குமாறு நிர்பந்தித்திருக்க வேண்டும். இது நாடு முழுக்க பெரும் விவாதப் பொருளாக ஆகியிருக்க வேண்டும். ஆனால், பத்மாவதி திரைப்படம் வெளி வருமா வெளி வராதா, மணி சங்கர் அய்யர், பிரதமரை தாழ்ந்த சாதி என்று சொன்னாரா சொல்லவில்லையா, ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, ஸ்டார் வார்ஸ் படம் பார்த்தாரா இல்லையா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடினால் தேசபக்தி வளருமா வளராதா என்பதிலேயே நமது ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.


Questions to ‘superstar’ Rajinikanth

20 Questions that we all want to know answers from Rajinikanth, who wants to enter the politics of Tamilnadu and become a leader here.

1. How are you going to fund your Political party? If you are receiving/going to receive any external funding who will it be from?

2. Will any of your family members be involved with your political party?

3. How exactly do you propose to change the system which you say has become rotten? What are your specific plans for changing the system?

4. What are your views on issues like Cauvery,Mullaiperiyar, Fishermen,NEET etc.,issues that confront the State?

5. Who are your advisors guiding you and who are going to be your key associates in your political journey?

6. Is your political party going to be a secular one?

7. What is your view on the BJP and their vision of Hindutva?

8. What will be the role of your Fans Associations and their office bearers in your political Party? Will they be office bearers in your party too?

9. Are you ruling out alliances with existing parties? If you are not, then what kind of parties would you enter into an alliance with?

10. Will you stop acting now that you are entering politics? Will you be a full time politician?

11. Will you accept politicians from other parties (those parties that you say have spoiled the system) into your party?

12. What is your response to those who say only a Tamilian by birth should rule Tamil Nadu?

13.How good is your health? Can you assure the people that, to your knowledge, your health will permit you this challenging battle?

14. Will you clarify the details regarding all the existing Court Cases against members of your family?

15. Will you proactively publish the list of your assets at the start of your political journey? You have said that combating corruption is your primary political plank.

16. What are your economic beliefs? Do you support a larger role for Government or do you back Privatization?

17. How will you deal with your fans who may want a return on the investments they make in politics? Do you seriously believe that all your fans are motivated only by altruistic and noble motives in supporting your party?

18. Will you reach out to Kamal Haasan and invite him to join you in your political journey?

19. When will you start meeting the people and touring the State?

20.In what time frame can the public get answers to the above 19 Questions?


எட்டு மாயைகள்

The 8 Illusions Keeping You from Happiness and Success
1. The feeling of not having enough time to do the things you want to do
2. Trying to take shortcuts in life
3. Thinking that you have control over life
4. Waiting for happiness from an external factor
5. Attempting to control other people
6. Waiting for a source of inspiration or energy
7. Believing that failure is a final and undesirable stage
8. Feeling that you are not good enough to succeed
–From: Sadat Khan’s Discover Yourself
Though all these points can be elaborated, I leave that for your own imagination. (Poornachandran)