கலைஞர்

முந்தாநாள் மாலை 6.10க்கு கலைஞர் காலமானார். 94 வயது. நேற்று அவரது அடக்கம் மெரீனாவில் அண்ணா சமாதிக்கு அருகில் நடந்தது. ஏறத்தாழ இந்தியாவின் எல்லா மாநிலத் தலைவர்களும் அதில் பங்கேற்றனர் என்பது மிகப் பெரிய விஷயம். அவரது சமநீதிக் கொள்கைக்குக் கிடைத்த மரியாதை அது.

கலைஞர்மீதும் திராவிடக் கட்சிகள் மீதும் எனக்கு ஏராளமான, கடுமையான விமரிசனங்கள் உண்டு. ஆனாலும் தமிழகத்திற்கு நன்மை செய்தவர்களில் முக்கியமானவர் கலைஞர் என்பதை எவரும் மறுக்க முடியாது. வாழ்க அவர் புகழ்.