கற்றதுதமிழ்

என்னிடம் முதுகலை பயின்ற மாணவி திருமதி. அகதா, முகநூலில் ஒரு குழுமத்தில் நிர்வாகியாக இருப்பதாகவும், அதற்காக என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தினைக் கற்றது தமிழ் என்ற தலைப்பில் தரவேண்டும் என்றும் கேட்டார். இவ்விதமே முன்னரும் சில அறிஞர்களின் அறிமுகங்களை வெளியிட்டிருப்பதாகக் கூறினார். அதற்காக நான் அளித்த சொற்றொகுதி இது.

–க. பூரணச்சந்திரன்

 

நான் என் வாழ்க்கைக் குறிப்புகளில் சிலவற்றை ‘நானும் என் தமிழும்’ (திரு. கோவை ஞானி வெளியிட்ட சிறு புத்தகம்), என் இணைய தளம் poornachandran.com ஆகியவற்றில் வெளியிட்டிருக்கிறேன். போதாதற்கு, விக்கிபீடியாவில் என் பெயரிலுள்ள பக்கத்திலும் ஓரளவு அவை சொல்லப் பட்டிருக்கின்றன.

பிறந்தது, வடஆர்க்காடு மாவட்டம் ஆர்க்காடு என்ற ஊரில், 1949இல். குடும்பம், சைவத்தையும் தமிழையும் போற்றுகின்ற ஒன்று. எனவே பிறப்பு முதலாகவே தேவார திருவாசகப் பனுவல்கள் முதலாக பாரதி, பாரதிதாசனார் பாடல்கள் வரை கேட்டு வளரும் வாய்ப்பிருந்தது. என் தாயாரும் இவற்றை எல்லாம் நன்றாகப் பாடக்கூடியவர்.

பொதுவாக, பள்ளிமுதல் கல்லூரி வரை முதல்மாணவனாகப் படித்தவன். கல்லூரியில் படித்தது பி.எஸ்சி இயற்பியல். பிறகு சென்னை ஆசிரியர் கல்லூரியில் பி.டி. சில ஆண்டுகள் பள்ளி ஆசிரிய வாழ்க்கை. தனிப்பட்ட முறையில் எம்.ஏ. தமிழ் பயின்று, பல்கலைக் கழக முதல்மாணவனாக கலைஞர் கையால் பட்டம் பெற்றேன். பிறகு பிஷப் ஹீபர் கல்லூரியில் பணி. 2007இல் ஓய்வு. சிலகாலம் புதுவை மையப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியும் ஆராய்ச்சிப் பணியும்.

பி.எஸ்சி படிக்கும்போதே குறுந்தொகை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களை நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துப் பயின்றவன். மு.வ. புத்தகங்கள் பல, தமிழ் பயிலுவதற்கு வேகம் அளித்தன. பிஎஸ்.சிக்காலப் படிப்புகளில் மிக முக்கியமானது, ஆர்.கே.சண்முகம் செட்டியார் எழுதிய சிலப்பதிகார புகார்க்காண்ட உரை. அதற்கு இணை  கிடையாது.

தமிழ் ஆர்வம் தொடர்ந்ததால் முதுகலைப் படிப்பு தமிழாக அமைந்தது. எனினும் பிறகு எம்.ஏ. ஆங்கிலமும் பயின்றேன். அதற்குப் பிறகு பயின்றவற்றுக்குக் கணக்குக் கிடையாது. மார்க்சியமும், அமைப்புவாதமும், பிற பல கோட்பாட்டுத் துறைகளும் பலதுறை வாசிப்பினை வேண்டுபவை.

1990இல் எனது முதல் புத்தகம், ‘அமைப்பு மைய வாதமும் பின்னமைப்பு வாதமும்’ வெளிவந்தது. தொடர்ந்து தமிழ் இலக்கிய விமரிசகன், இலக்கியக் கோட்பாட்டாளன் என்னும் வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை சொந்தமாகப் பத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இவற்றுள், ‘கவிதையியல்’, ‘கதையியல்’, போன்றவை நன்கு பாராட்டப் படுகின்றன. இதுவரை 42 புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். மொத்தம் 61 நூல்கள். இன்னும் எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன்.

2011இல் ‘வரவர ராவின் சிறைக் குறிப்பு’களை மொழிபெயர்த்தமைக்கு ஆனந்தவிகடன் விருது கிடைத்தது. பிறகு 2014இல் நாமக்கல் சின்னப்ப பாரதி அமைப்பின் சார்பாகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது. 2016இல் ‘இந்துக்கள் மாற்று வரலாறு’ நூலுக்காக மீண்டும் ஆனந்தவிகடன் விருது. ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற நாவல் மொழிபெயர்ப்புக்காக அதே ஆண்டு சாகித்திய அகாதெமி விருது. பிறகு 2017இல் கலைஇலக்கியப் பெருமன்றத்தின் பாராட்டு. அந்த ஆண்டின் இறுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, ‘திறனாய்வுச் செம்மல்’ என்ற பட்டமும் விருதும் வழங்கியது. சென்ற ஆண்டு கோவை திசைஎட்டும் மொழிபெயர்ப்பு அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு செய்தது.

கடைசியாக மொழிபெயர்த்து, இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் வெளிவந்தவை, பேராசிரியர் லாஸ்கியின் ‘அரசியல் இலக்கணம்’, ‘வரலாற்றில் பிராமண நீக்கம்’ ஆகிய நூல்கள். வரக் காத்துக் கொண்டிருப்பவை ‘லெனின் சந்தித்த நெருக்கடிகள்’ போன்ற சில. இறுதியாக இந்த ஆண்டு வெளிவந்த என் சொந்தப் புத்தகம், ‘சான்றோர் தமிழ்’. இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பது, அல்தூசரின் ‘மார்க்ஸுக்காக’ என்ற தத்துவ நூல்.

எழுத்திலும் எழுத்துக்கான பாராட்டுப் பெறுவதிலும் ஓரளவு நிறைவான வாழ்க்கைதான் இல்லையா? ஆனால் மனத்தில் வெறுமைதான் மிஞ்சியிருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் மிக மோசமான நிலைதான் முக்கியக் காரணம். பெளதிக, புவியியல் அமைப்பிலும், மனங்களிலும் பாலைவனமாகி வரும் தமிழகம். அதைச் சரிசெய்ய நேரடியாகப் போராட்டங்களில் பங்கேற்க உடல்நலம் இடம் தரவில்லையே என்ற எண்ணம். கால் முறிவு. ஒரு கண் பார்வை முற்றிலும் இன்மை. மறுகண்ணும் அரைகுறைப் பார்வையே. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழர்களின் உணர்வற்ற, மானமற்ற, அநீதிகள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழும் இன்றைய வாழ்க்கை. ஏன் தமிழனாகப் பிறந்தோம் என்ற சலிப்புதான் எஞ்சுகிறது.


உபயோகமற்ற உறவுச் சொற்கள்

அநேகமாக எல்லா நகர்ப்புறப் பிள்ளைகளும் ஆங்கில (அதிலும் பெரும்பாலும் சிபிஎஸ்இ) வழிக்கல்வி பெறும் நாளாகிவிட்டது. (என் வீட்டு வேலைக்காரியின் பேரன் பேத்தி மகரிஷி பள்ளியில் படிக்கின்றனர்.) ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அந்நியரைக் குறிக்கத் தெரிந்த உறவுச் சொற்கள் இரண்டே இரண்டுதான்—அங்கிள், ஆண்ட்டி. எட்டுவயதுக் குழந்தை எழுபது வயதுக் கிழவனான என்னைப் பார்த்து அங்கிள் என்றும், 67 வயதான என் மனைவியைப் பார்த்து ஆண்ட்டி என்றும் விளிக்கும்போது தமாஷாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் தாத்தா வயது என்னை விட மிகக் குறைவு. வேறுவிதமாக விளிக்க அவர்களுக்குத் தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை. நன்மங்கலத்தில் ஒரு பையனை “என்னை அங்கிள் என்று கூப்பிடாதே, தாத்தா என்று கூப்பிடு” என்று சொன்னதற்கு அவன் தாத்தாவிடம் ஏதோ போட்டுக் கொடுத்து சண்டை மூட்டி விட்டான். அதிலிருந்து எப்படியோ போய்த் தொலையட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.
எங்கள் காலனியில் ஒரு எல்கேஜி குழந்தையை பஸ்ஸில் கொஞ்சம் தொலைவில் இறக்கிவிட்டுவிட்டார்கள். வீடு தொலைவில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டிருந்த பைக்-காரன் ஒருவன் அவள் கழுத்து செயினைத் திருடிக் கொண்டு போய்விட்டான். (நல்லவேளை, வேறு எதுவும் செய்யவில்லை.) அது அழுதுகொண்டே வந்து, “அந்த பைக் அங்கிள் செயின் எடுத்துப் போய்ட்டா” என்றது. திருடனுக்கு வந்த மரியாதை!


என் இளமைக் காலம்-2

பல விஷயங்கள் இன்று நினைக்கும்போது எனக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருக்கின்றன. உதாரணமாக எங்கள் காலத்தில் நாங்கள் யாரும் உயர்நிலைப் பள்ளிக்குக் கூட (பதினோராம் வகுப்பு வரை) செருப்பணிந்து சென்றதில்லை. அநேகமாகப் பல வீடுகளில் மின்சாரம் கிடையாது. ஆகவே மின்விளக்கு, மின் விசிறி போன்றவை அபூர்வம்… இப்படிச் சொல்லிக் கொண்டே செல்லலாம். (இன்று என் பேரன்மார்கள், எல்கேஜியிலேயே ஷூ போட்டுக் கொண்டுதான் செல்கிறார்கள், இண்டர்நெட்டில் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.)

ஆனால் எனக்கு அதிர்ச்சி தருவது மக்கள்தொகை விஷயம்தான். நான் பிறந்த அக்காலம், சுதந்திரம் வந்தபின் இரண்டு ஆண்டுகள். அநேகமாக மக்கள்தொகை 40 கோடிக்குமேல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது எழுபதாண்டுகள் கழித்துப் பார்த்தால் அதைப்போல் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. உண்மையில் பயமாக இருக்கிறது.

ஒரு நாட்டின் புவியியல் பரப்பு அதிகரிப்பதில்லை. உணவு உற்பத்தி ஓரளவு அதிகரிக்கிறது. (மால்துஸ் சொன்னதுபோல அரித்மெடிக் புரொக்ரஷனில்-அதாவது, கூட்டல் வீதத்தில்.) மக்கள் தொகையோ பெருக்கல் வீதத்தில் –அதாவது நான்கு, பதினாறு, அறுபத்தினாலு, இருநூற்று ஐம்பத்தாறு என்பதுபோல– அதிகரிக்கிறது. இவ்வளவு பேருக்கு உணவும் நீரும் எங்கிருந்து கிடைக்கும்?

நியாயமாக நமது அரசாங்கம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த நல்ல முயற்சி எடுத்திருக்க வேண்டும். எடுக்கவில்லை. உதாரணமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசாங்க உதவிகளோ, வேலை வாய்ப்போ கிடையாது என்பது போன்ற நடைமுறைகளைச் செயல்படுத்தியிருக்கலாம். இவற்றைத் தொடக்கத்திலிருந்தே செய்திருந்தால் எவ்வித எதிர்ப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

சரி போகட்டும். எங்களுக்குச் சொத்து சுகங்கள் இல்லை. குத்தனூரில் நாலுகாணி புஞ்சை இருந்தது.  (ஒரு காணி என்பது ஒரு ஏக்கரைவிடச் சற்று அதிக நிலப் பரப்பு.) அதை நாங்கள் மேற்பார்வை செய்ய இயலாததால் சாமி கவுண்டன் என்பவனிடம் குத்தகைக்கு விட்டிருந்தோம். அதில் கடலைக்காய் (வேர்க்கடலை) மட்டுமே விளையும் என்பான். அதில் என்ன பயிரிட்டான், எவ்வளவு விளைந்தது, எவ்வளவுக்கு அவன் விற்றான் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஏதோ வருடத்திற்கு நூறுரூபாய் போல கொண்டுவந்து தருவான்.  கடைசியில் அந்த நிலத்தையும் என் படிப்புச் செலவுக்கு என்ற பெயரில் 1963இல் அவனுக்கே அறுநூறு ரூபாய்க்கு விற்றுவிட்டோம். (அதாவது, ஒரு காணி  புஞ்சை, நூற்றைம்பது ரூபாய்க்கு.  இதுவே இன்றைய நோக்கில் அதிசயம்தான்!)

ஆனால் இது ஒன்றும் பெரிய அதிசயமல்ல. என் தாத்தாவின் தாத்தா-அவர் பெயர் சண்முகம் பிள்ளையாம்–யாரோ ஒரு பார்ப்பனர் கேட்டார் என்று மூன்று காணி நிலத்தை இலவசமாகவே கொடுத்துவிட்டாராம். கேட்டபோது, “பார்ப்பனர்கள் அவர்பூதேவர்கள், அவர்களுக்கு தானம் செய்தால் கோடி புண்ணியம்” என்றாராம்.

என் தந்தைவழிப் பாட்டனாருடன், பாட்டியுடன் பிறந்தவர்கள் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. அடுத்த தலைமுறையில், என் அப்பாதான் வீட்டில் மூத்தவர். அவருக்குப் பின் இரண்டு சகோதரர்கள். முதல் தம்பி, மகாதேவன். இரண்டாவது தம்பி சிவலிங்கம். (பிள்ளை பட்டம் போட்டுக் கொள்வதெல்லாம் என் தாத்தா காலத்தோடு போய்விட்டது.) என் தந்தையார் படித்தது எட்டாம் வகுப்புதான். என் தாயின் படிப்பு ஐந்தாம் வகுப்பு. ஆனால் என் அப்பா, தம் இரு தம்பிகளையும் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைத்து, பிறகு செகண்டரி கிரேடு பயிற்சியும் முடித்துவைத்தார். மகாதேவன் முதலிலிருந்து கடைசிவரை செகண்டரி கிரேடு ஆசிரியராகவே இருந்தார். சிவலிங்கம் பிறகு தாமாக பி.ஏ. பி.டி. படித்து பி.டி. ஆசிரியராக இருந்தார். மகாதேவனுக்கு ஒரு மகள்,  மூன்று மகன்கள். சிவலிங்கத்திற்கு முதலில் மூன்று மகள்கள், கடைசியாக ஒரு மகன்.

என் தாய்வழிச் சொந்தங்கள்தான் அதிகம்.

 

 

 


என் இளமைக் காலம்-1

நான் ஆர்க்காடு நகரத்தின் ஒரு பகுதியான முப்பது வெட்டியில் பிறந்தேன். ஆண்டு 1949. சித்ராபவுர்ணமி முடிகின்ற விடியற்காலை. அதனால்  எனக்கு நிறைமதி என்று பெயர் வைத்தார் என் தந்தையார். என் தந்தை பெயர் கு.ப. கணேசன். (குத்தனூர் பழனிப்பிள்ளை கணேசன்.)  அம்மா சக்குபாய். அப்பாவின் தந்தை-தாயான, தாத்தாவும் பாட்டியும் எங்களுடனே இருந்தனர். என் தந்தைவழிப் பாட்டனார் பழனிப்பிள்ளை. தந்தைவழிப் பாட்டி தைலம்மாள்.

என் தாத்தாவுக்குப் பாட்டி மூன்றாம் தாரம். வயது வித்தியாசம் கொஞ்சம் அதிகம்தான். முதல் இரண்டு தாரங்கள் அடுத்தடுத்து இறந்துவிட்டனராம். மூன்றாம் தாரமாகிய தைலம்மாளின் பிள்ளைதான் என் தந்தை. என் தாத்தா  குத்தனூரில் கணக்குப் பிள்ளையாக இருந்தாராம். அவர் தந்தை  பெயர் ஆறுமுகம் பிள்ளை. பாரம்பரியமாக (இசும்பாக என்பார்கள்) கணக்கு வேலை என் தாத்தாவுக்கு வந்தது. ஏறத்தாழ நாற்பது வயதிலேயே நரம்பு இழுப்பு வந்து கைகள் உதறத் தொடங்கிவிட்டன. எனவே அவரால் கணக்கு எழுத முடியவில்லை. கணக்கு வேலையை விட்டுவிட்டார். வேறு வேலையும் கிடையாது.  இவையும் இவைபோன்ற பிற குடும்பச் செய்திகளும் பின்னால் நான் தெரிந்துகொண்டவை.

ஏறத்தாழப் பதினோராம் வகுப்பு– 14 வயதில் (1963இல்) முடித்தவரை துண்டுதுண்டான ஞாபகங்கள்தான் இருக்கின்றன.

மூன்று நான்கு வயதளவில் இராணிப்பேட்டை பிஞ்சியில் இருந்தோம் என்ற ஞாபகம் இருக்கிறது. பாலாற்றின் வடக்கில் இராணிப்பேட்டை; தெற்கில் ஆர்க்காடு. (காவிரிக் கரையில் திருவரங்கமும் திருச்சி நகரமும் போல).

ஒரு தலைமையாசிரியர் என் பெயரை பூரணச்சந்திரன் என்று மாற்றியதைப் பற்றி ‘நானும் என் தமிழும்’ கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். (அக்காலத்தில் அது ‘பூர்ணசந்தர்’. பாலச்சந்தர் என்பதுபோல.) அவர்தான் என்னைப் பள்ளியில் சேர்க்கவும் காரணமாக இருந்தவர். நான் மிகவும் அக்காலத்தில் சூட்டிகையாக இருந்திருப்பேன் போலும். ஐந்தாம் வயதிலேயே (ஆயுதபூசை சமயத்தில்) என்னை ‘டபுள் புரமோஷனாக’ இரண்டாம் வகுப்பில் போட்டு விட்டார். முதல் வகுப்பில் நான் சேரவேயில்லை. அதுபோலவே ஐந்தாம் வகுப்பும் படிக்கவில்லை. மறுபடியும் ஒரு டபுள் புரமோஷன். நேராக ஆறாம் வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இதனால் இரண்டாண்டுகள் மிச்சம்தானே என்று நினைக்கிறீர்களா? இதன் பலனைப் பின்னால் அனுபவித்தேன்.

ஐந்தாம் வயதில் இரண்டாம் கிளாஸ், ஆறாம் வயதில் மூன்றாம் கிளாஸ், ஏழாம் வயதில் நான்காம் கிளாஸ், ஐந்தாம் வகுப்பு படிக்காததால், எட்டாம் வயதில் ஆறாம் கிளாஸ் (உயர்நிலைப் பள்ளிக்கு) வந்துவிட்டேன்.

ஏறத்தாழ மூன்று-நான்கு வயதில் என் பாட்டியிடம் கதை கேட்ட சம்பவங்கள் ஏதோ நினைவில் மங்கலாக இருக்கிறது. எனக்கு நான்கு வயது முடிந்த சமயத்தில் இராணிப் பேட்டை வக்கீல் தெருவில் ‘பாயம்மா’ எனப்பட்ட ஒருவர் வீட்டில் வாடகைக்கு இருந்தோம். மார்கழி மாதப் பின்னிலவுக் காலத்தில் ஐந்து மணிக்கெல்லாம் என் தாயார் வீட்டுக்கு வெளியில் நீர்தெளித்துக் கோலமிட்ட காட்சிகள் நிழலாடுகின்றன. காலைக் கடன் முடிக்க வக்கீல் தெருவின் மேற்புறத்தில் மணல்வெளியில் வெகுதூரம் செல்வது வழக்கம். அப்போதே எனக்கு மலச்சிக்கலும் தொடங்கிவிட்டது.

மற்றொரு காட்சி. இது பாயம்மாள் வீடு அல்ல. வேறொரு வீடு. அதே வக்கீல் தெருவில். வீட்டின் முன்புறம் கிணறு. மரங்கள். நிழலில் அண்ணாந்து படுத்தவாறு (முற்பகல், ஏறத்தாழ பத்து-பதினொரு மணி) நீல வானம்-அதில் மிதந்து வேகமாகச் செல்லும் வெண்பஞ்சுப் பொதிகள்- மறைந்து மறைந்து ஒளிவீசும் சூரியன். பின்நிலவுக் காலம் ஆனதால் நிலவின் கீற்றும் இருந்தது. ஏனோ தெரியவில்லை, அக்காலம் முதல் இன்று வரையிலும்கூட- வானத்தில் வெண்மேகங்களையும் சூரியனையும் நிலவையும் பார்த்தவாறு இருப்பது  எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

வக்கீல்தெருவின் வடமேற்குக் கோடியில் இராணிப்பேட்டை பஸ் நிலையம். நாங்கள் சற்றுத் தென்புறம் தள்ளிக் குடியிருந்தோம். பஸ்நிலையம் நோக்கிச் சென்றால், ஒரு பத்து வீடுகள் தள்ளி, ஒரு பெரிய வீட்டில்-ஒரே ஒரு வீட்டில்தான்- அந்தக் காலத்தில் ரேடியோ ஒலிக்கும். எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு பெரிய பீரோ சைஸில் உள்ள ரேடியோ. அதில் பல சிவப்புக் கோடுகள் இருக்கும். அதில் நகர்கின்ற ஒரு முள். இலங்கை வானொலிதான் அதிகமாக வந்தது என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

பிறகு பக்கத்திலேயே வேலுமுதலித் தெருவுக்குக் குடிபெயர்ந்தோம். இராணிப் பேட்டை பஸ்நிலையத்திற்கு மிக அருகில். அதே தெருவில் கிழக்கே போய் இடப்புறம் திரும்பினால் உள்ள தெருவில்தான் நான் படித்த தொடக்கப் பள்ளி. இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்புகள் படிக்கும்போதெல்லாம் பகலில் பள்ளியிலேயே தூங்கிவிடுவது வழக்கம். மாலையில் அம்மாவோ பாட்டியோ யாரோ வந்து அழைத்துக் கொண்டோ   தூக்கிக் கொண்டோ போவார்கள். எலிமெண்டரி பள்ளி வாத்திமார்கள் எவரும் என் நினைவில் இல்லை. இரண்டு டீச்சர்கள்- ஒருவர் பெயர் திருமதி ஜாய், மற்றொருவர் லூர்து மேரி– என் பள்ளி போட்டோவில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. ஆறாம் வகுப்பில் டீச்சராக இருந்தவர்கள்.

ஏதோ ஒரு வகையில் தமிழும் இசையும் என் வீட்டில் கலந்திருந்தன.  எனக்கும் என் தங்கையர்க்கும் என் தந்தையார் இட்ட பெயர்களே அதற்கு நல்ல சான்று. பொதுவாகவே எங்கள் வீட்டில் திருப்புகழ், தேவாரம், தாயுமானவர், வள்ளலார் போன்றவர்களின் பாக்கள் ஆகியவை பாடப்படும். என் தாயாருக்கு நல்ல இசைஞானம் உண்டு. கேள்வி ஞானம்தான். முறையாகக் கற்றுக்கொள்ள அக்காலத்தில் வக்கேது? அக்காலத்தில் திரைப்படங்களில் வந்த பாரதியார், பாரதிதாசனார் பாடல்களை  எல்லாம் அதேபோல நன்றாகப் பாடுவார். ‘எப்படிப் பாடினரோ’, ‘பராத்பரா  பரமேஸ்வரா’ போன்ற பாக்களை எல்லாம் பாடுவதோடு, திரைப்படங்களில் வந்த ‘மாடுகள் மேய்த்திடும் கண்ணன்’ ‘தலைவாரிப் பூச்சூடி உன்னை’ ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ போன்ற பாடல்களைப் பாடுவார். அதனால் பொதுவாக எனக்கு இசையில் நல்ல ஈடுபாடு இருந்தது. அக்காலத் திரைப்படப் பாடல்களை எல்லாம் நானும் பாடுவேன். அநேகமாக எனக்கு ஐந்துவயதான சமயத்தில்தான் ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படம் வந்ததாக ஞாபகம். பள்ளிக்கூடத்தில் பாடச் சொன்னதால், ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ’, ‘முள்ளில் மலர்ந்த என் ரோஜா’ போன்ற பாடல்களைப் பாடியது நினைவிருக்கிறது.

வேலுமுதலித் தெரு பஸ்நிலையத்திலிருந்து மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் தெரு. நாங்கள் இருந்த தெற்கேபார்த்த வீட்டில் நடுவில் ஒரு கூடம். அதன் மூன்று புறமும் மூன்று குடும்பங்கள். நான்காம் பக்கம் கொல்லைப் புறம் செல்லும்  வழி. மூன்று குடும்பங்களில் எங்களுடையது நடுவில். தெற்குப் புறமாக (வாசல் பக்கம்) ஒரு முதலியார் வீடு. வடக்குப் புறம் எங்களைப் போன்றே ஒரு பிள்ளைமார் வீடு. வீடு என்றால், ஒரு சிறிய அறை, ஒரு சமையலறை -அவ்வளவுதான். வெளியில் வந்தால் கூடம்தான். தெற்குப் புறவீட்டருகிலேயே தெருவுக்குச் செல்லும் நடை.  தெருவை ஒட்டிய தெற்குப் புற வீட்டில் ஒரு கிழவர் இருந்தார். வெளியே இருந்த சிறிய திண்ணையில் பெரும்பாலும் உட்கார்ந்திருப்பார். என்னிடம் காலணா அல்லது அரையணா கொடுத்து பஸ்நிலையத்துக்கு பக்கத்திலிருந்த கடையில் ‘கவாப்பு’ வாங்கிவரச் சொல்வார் (அது ஏதோ மாமிச உணவு போலும்.) நான் வாங்கி வந்து தருவேன். இதை அறிந்து என் அம்மா கடுமையாகக் கண்டித்தார். அந்தக் கிழவரையும் திட்டினார். (நாங்கள் வள்ளலார் வழிவந்த சுத்த சைவக் குடும்பம்!).

அந்தக் காலத்தில்தான் – ஏறத்தாழ 1956ஆக இருக்கலாம்- ஜவகர்லால் நேரு- இந்தியப் பிரதமர்- இராணிப்பேட்டைக்கு வந்தார். உடன் குருஷ்சேவ், புல்கானின் இருவரும் வந்ததாக ஞாபகம். இராணிப் பேட்டையில் ‘ஐவிபிஎம்’ எனப்படும் கால்நடை மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார் நேரு. ஒருவாரம் ஒரே கோலாகலமாக, திருவிழாப் போல இருந்தது. எங்களை எல்லாம் நேருவைப் பார்க்க (அல்லது நேரு எங்களைப் பார்க்க) வரிசையாக முத்துக்கடையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லுகின்ற  நெடுஞ்சாலை ஓரங்களில் காரை என்ற ஊருக்குப் பிரிகின்ற சாலைவரை நிற்க வைத்திருந்தார்கள். அதன் எதிர்ப்புறம் ஒரு சீர்திருத்தப் பள்ளி. (ஜெயில் ஸ்கூல் என்று  சொல்லுவார்கள்.) அதிலிருந்து வாராவாரம் பிள்ளைகள் யூனிபாரம் அணிந்து பேண்டு வாசித்துக் கொண்டு ஊர்வலமாக வருவார்கள். காசு வாங்கிக் கொண்டு போவார்கள்.

நான் அப்போதெல்லாம் முத்துக்கடைப் பக்கம் சுற்றி வருவேன். அது சென்னை-சித்தூர்-பம்பாய் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்த முக்கியமான நிறுத்தம். பல ஊர் லாரிகளும் அங்கே நிற்கும். குறிப்பாக வடக்கே ஆந்திராவில் சிகந்தராபாத், கர்னூல், மெகபூப் நகர் என்றெல்லாம். அந்த டிரைவர்கள் கொண்டுவரும் தீப்பெட்டிகளில் அந்த ஊர்ப் பெயர்கள் இருக்கும். அத்தீப்பெட்டிகளில் என்னை மிகவும் கவர்ந்தது, சீட்டா பைட் என்று பெயரிட்ட, ஒரு ஆடவன் அரிவாளுடன் சிறுத்தையுடன் சண்டையிடும் படத்தைக் கொண்ட தீப்பெட்டி.

ஐந்துவயதில் மலேரியா காய்ச்சல் வந்து ஏறத்தாழ செத்துப் பிழைத்தேன். இராணிப் பேட்டையில் அப்போது புகழ்பெற்றிருந்த ‘ஸ்கடர்’ ஆஸ்பத்திரியில்தான் சேர்த்திருந்தார்கள். அப்போதெல்லாம் ஸ்கடர் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள ‘நேரோகேஜ்’ ரயில்பாதையில் வாலாஜாரோட்டிலிருந்து இராணிப்பேட்டைக்கு இரயில் வரும். ஈ.ஐ.டி. பாரி கம்பெனி இராணிப் பேட்டையில் இருந்ததால்  அரசாங்கம் செய்த ஏற்பாடு அது.

அக்கால வேலுமுதலித் தெருவில் ஒவ்வொரு வீட்டிலும் வாசற்படி தாண்டி வீடு முடியும் இடத்தில் கக்கூஸின் வெளிப்புறம்  ஒரு தகட்டில் மூடப்பட்டிருக்கும். யாரோ ஒருவர் காலை 6-7 மணி வாக்கில் கையில் ஒரு மலவாளியுடனும் மறுகையில் தகரத்துடனும் வருவார். தகட்டைத் திறந்து, தகரத்தால் மலத்தை வழித்து வாளியில் போட்டுக் கொண்டு மெதுவாக நடந்து அடுத்த வீட்டுக்குப் போவார். அக்கால நகர்ப்புறங்களில் மலம் எடுக்கும் நடைமுறை இதுதான். பின்னாட்களில் இதைப் பற்றி நினைத்தபோது, இவர்கள் எல்லாம் சேக்கிழார் பாடினாரே “ஓடும் செம்பொனும் ஒக்க நோக்குவார்” என்று, அதையும் தாண்டிய முதிர்ச்சி பெற்ற முனிவர்களாக, சித்தர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றும். அவர்கள் வாழ்க்கை நிலையையும் சேரிகளுக்குச் சென்று கவனித்திருக்கிறேன். முடிந்தால் அது பற்றிப் பின்னால்.

தெருவின் ஒருபுறம் சாக்கடை இருக்கும். மறுபுறம் இருக்காது. இருந்தாலும் வேறுபாடின்றி சிறியவர் பெரியவர் எல்லாம் சிறுநீர் கழிக்க தெரு ஓரங்களைப் பயன்படுத்துவார்கள்.

எனக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்து என்வீட்டில் ஒரு தங்கை பிறந்தாள். அவளைத் தங்க (தங்கை)ப் பாப்பா என்று திரும்பத் திரும்ப எனக்குச் சொல்லப்போய், தங்கம் என்று நானே அவளுக்குப் பெயர்வைத்ததாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் அவள் நீண்டநாள் இருக்கவில்லை. ஒன்றரை வயதிலேயே எக்காரணத்தினாலோ அக்குழந்தை இறந்து போயிற்று. அந்த துக்கம் ஆறாமல் அந்தக் காலத்திலேயே மனத்தில் இருந்தது கனவுபோல் இருக்கிறது.  அடுத்து எனக்கு மூன்றரை வயதானபோது  மற்றொரு பெண் குழந்தை எங்கள் வீட்டில் பிறந்தாள். என் தந்தையார் அவளுக்கு அழகாக அறச்செல்வி என்று பெயரிட்டிருந்தார். ஆனால் அவளுக்கும் பிறந்தது முதலே ஆஸ்துமா, காசநோய் இரண்டுமே இருந்தன என்று நினைக்கிறேன். அவளுக்கு வளர்ச்சி இல்லை. கால்கள் மெலிந்து நோஞ்சானாக இருக்கும். என் அப்பா, அம்மா, நான் மூவரும் அவளைத் தூக்கிக் கொண்டு பாலாற்றுக்குச் சென்று வருவோம். ஆற்றுமத்தியில்  மணலில் கால்களைப் புதைத்து வைத்தால் அவை வலுப் பெறும் என்று சொன்னார்கள். நான் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போதுதான் அவள் நடக்க ஆரம்பித்தாள். ஆறாம் வகுப்பு படிக்கும் வரைதான் நான் இராணிப்பேட்டையில் இருந்தேன். அப்போது என் தந்தையாரை திமிரி போர்டு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். திமிரியில் என் வாழ்க்கை ஒன்பதாம் வயது முதலாகத் தொடர்ந்தது.

இராணிப்பேட்டை அரசு (அக்காலத்தில் மாவட்ட போர்டு)  உயர்நிலைப் பள்ளியில் நான் கடைசியாக ஆறாம் வகுப்பு படித்தேன். அக்காலப் பாடத்திட்டம் மிக நன்றாக இருந்தது. ஆறாம் வகுப்பில்தான் ஆங்கிலம் ஆரம்பம். தமிழில் பொதுத்தமிழ், சிறப்புத் தமிழ் என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. சிறப்புத்தமிழில் ஆறாம் வகுப்பிலேயே எங்களுக்குச் சிலப்பதிகாரக் கதை நான்-டிடெயிலாக இடம் பெற்றிருந்தது. பிறகு கணக்கு, அறிவியல், சமூகப் பாடம். இவை அல்லாமல் குடிமை வகுப்பு என்று ஒன்று இருந்தது. பாரதியார் பாடல்கள் போன்ற தேச(பக்தி)ப் பாக்கள் முதலாகப் பயனுள்ள பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். கடைசியாக ‘ட்ரில்’ வகுப்பு. கட்டாயம் மூன்றரை மணிமுதல் நாலரை மணிவரை ட்ரில் பீரியடு இருக்கும். உடற்கட்டு உள்ள பையன்களுக்கு வாய்ப்பாக உயரத்தாண்டுதல், நீளத்தாண்டுதல் முதலிய ஸ்போர்ட்ஸ்களிலிருந்து கால்பந்து, கைப்பந்து, தடிப்பந்து வரை விளையாட்டுகளும் கற்பிக்கப் பட்டன.

(தொடரும்)

 

 

 

 

 

 

 


Karpman Triangle

The most popular model of interpersonal, family relationships is Karpman Triangle. It was first proposed in 1968 by Steven Karpman, a classical scholar of transactional analysis. 

Within such a triangle of relationships, there can be two, three or more people. But there will always be 3 distinct roles present: a victim, a persecutor, and a rescuer, and the roles of the participants may often overlap or become switched. Despite such fluctuations, one thing remains unchanged – all participants are manipulators, and end up bringing pain and suffering to themselves and others.

The Victim

For someone with the victim role, life has become an unyielding cycle of misery. They believe that everyone treats them unjustly, and constantly feel too exhausted to cope with life’s challenges. Victims often feel offended, afraid or ashamed, and tend to become jealous or envious far too easily. They usually only expect bad things to come of life, and often lack the will, power or time to change their situation for the better.

The Persecutor

For someone with the persecutor role, life is seen as an opponent, which is the source of all woe. They are often angry, tense, irritated or scared, and find it difficult to let go of past quarrels. Persecutors also often tend to constantly predict future problems, and frequently criticize and attempt to control those around them. They typically feel that they bear an unreasonably heavy load, and often end up completely drained of energy and willpower.

The Rescuer

The rescuer is the role that ties the other two roles together, since they display anger towards the persecutor, while feeling pity for the victim. Rescuers usually feel that they are more important than others, and are proud of their seemingly important role. However, this self-perception of importance is merely an illusion, since they only end up interfering where they aren’t needed, and often end up aggravating negative situations. A rescuer’s only goal is to achieve self-affirmation, and are typically offended when their ‘help’ goes unapprised or unrewarded.

Persecutors find it hard to leave a victim alone, and often criticize and drill them. The victim then tries hard, but end up becoming exhausted, and begin to complain. Rescuers then give some advice to the victims, and offer them comfort and a shoulder to cry on.

This cycle can go on for many years, with many of the participants changing roles from time to time, often without even realizing what’s taking place. They may even believe that everything is as it should be. This is because the persecutor gets the opportunity to release their frustration, the rescuer rejoices in their role as a hero, and the victim gets comfort from the rescuer’s effort.

They all depend on each other to ease the burden of their responsibilities, and end up manipulating each other to fulfill their own needs. Such a relationship can never be called loving, since it is all about the desire to dominate, without any thought for nurturing real support, love or happiness.

What’s more, living within a Karpman triangle has a highly destructive influence on the future of any children involved. Most probably, such kids will end up suffering from self-confidence issues, and will find it very difficult to make rational choices throughout their lives.

How to Escape the Triangle

1. Advice For Victims
• Stop complaining, and start searching for constructive ways to improve your situation.
• Stop waiting for salvation, and accept once and for all that nobody owes you anything and that the world is constantly changing.
• Stop making excuses, and don’t feel bad if you fail to live up to somebody else’s expectations.
• Start taking responsibility for your own choices, and be more assertive when making a decision.

2. Advice for Persecutors
• Try to resolve disputes without aggression or anger.
• Stop blaming other people and circumstances for your struggles.
• Stop asserting dominance over those who appear to be weaker than you.
• Stop expecting people to act based on your feelings and beliefs, and accept that everyone is different in their own way.

3. Advice for Rescuers
• If nobody asks for your advice, then don’t give it.
• Stop thinking that you know how to deal with life’s problems better than everyone else.
• Help because you want to, and not because you want to be praised or rewarded.
• Before doing ‘good deeds’ you should ask yourself if your involvement is really required.

Transforming the Triangle

To change a negative pattern into a positive one, you’ll first need to identify what role you are currently occupying. Then, simply follow the advice above, and you should see a new pattern begin to emerge:

1. A victim can turn into a hero. Instead of complaining, a hero will face life’s challenges with enthusiasm and will end up feeling stronger and more confident after each challenge they overcome.
2. A persecutor can turn into a philosopher. Watching a hero’s actions as a bystander, a philosopher is ready to accept any result since they know that everything will work itself out in the end.
3. A rescuer can turn into a motivator. They stimulate the hero for showing courage, and help inspire them to do even greater things in the future.

The Perfect Model
With enough willpower and love, the positive pattern shown above can become even greater, and may eventually turn into the perfect triangle:

1. A hero may become a winner. They perform actions not to be praised, but to apply their creative urges in a constructive manner. Winners don’t need approval from others, but enjoy the process of creation, and the change to change their environment in a positive way.
2. A philosopher may become a contemplator. They see connections that others can’t, and create new ideas, while acting on opportunities.
3. motivator may become a strategist. They provide the contemplator with constructive advice and encouragement, which will help to bring their dreams to life.