இன்றைய ஒன்றிய ஆட்சி செய்துள்ள குற்றங்கள்

படம்

இது பண்பாட்டுத் துறையில் மட்டுமே பாஜக ஆற்றிய குற்றங்கள் என மார்க்சிஸ்டு கட்சி பட்டியலிட்டிருப்பவை. சமூக, பொருளாதார துறைகளில் அவர்கள் ஆற்றிய குற்றங்கள் இன்னும் மிகப் பல. அவற்றை இன்னொரு நாள் வெளியிடுவோம்.


கடவுளின் அழுகை

கடவுள் ஒரு நாள், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் தன்னைச் சந்திக்க அனுமதித்தார்; அவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் தன்னிடம் எழுப்பலாம் என்றும் சொன்னார்.

“இந்த பூமிப் பந்தில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றும் உன்னதமான நாடாக அமெரிக்கா எப்போது ஆகும்?” என்று கேட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

“இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா அந்த மாதிரியான நிலைமையைப் பெறும்” என்று சொன்னார் கடவுள். அந்த பதிலைக் கேட்டதும், பைடன், “ஐந்து ஆண்டுகளா ? அதைக் காண நான் அதிபராக இருக்க மாட்டேனே!” என்று கதறிக் கண்ணீர்விட்டார்.

அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், “அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பிரிட்டன் எப்போது அதிவேகமாக வளர்ந்து மெச்சத் தகுந்த நிலையினை அடையும்” என வினவினார். “இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்” என்றார் கடவுள். “இன்னும் 25 ஆண்டுகளா? அதைப் பார்க்க நான் இருக்கமாட்டேனே!” என்று அரற்றி அழ ஆரம்பித்துவிட்டார் போரிஸ் ஜான்சன்.

அடுத்து நரேந்திர மோடிக்கான வாய்ப்பு. அவர் நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தார். தூய இந்தியில் கடவுளிடம் கேட்டார்; “இந்தியா எல்லோரும் போற்றும் எழிலார்ந்த நாடாக இன்னும் எத்தனை காலம் ஆகும்?” என்று. இதைக் கேட்டதும் கடவுள், தேம்பி அழத் தொடங்கினார். “அதைக் காண நானே இருக்க மாட்டேன்” என்றார் தேம்பிக்கொண்டே கடவுள்!

(கலைஞர் செய்திகளில் இருந்து)


புதுநெறி ஆத்திசூடி

பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய புதுநெறி ஆத்திசூடி

  1. அனைவரும் உறவினர்
  2. ஆட்சியைப் பொதுமைசெய்
  3. இசைமொழி மேலதே
  4. ஈதல் இன்பம்
  5. உடைமை பொதுவே
  6. ஊன்றுளம் ஊறும்
  7. எழுது புதியநூல்
  8. ஏடு பெருக்கு
  9. ஐந்தொழிற்கு இறைநீ
  10. ஒற்றுமை அமைதி
  11. ஓவியம் பயில்
  12. ஔவியம் பெருநோய்
  13. கல்லார் நலிவர்
  14. காற்றினைத் தூய்மைசெய்
  15. கிழிப்பொறி பெருக்கு
  16. கீழ்மனம் உயர்வுசெய்
  17. குள்ள நினைவுதீர்
  18. கூன்நடை பயிலேல்
  19. கெடுநினைவு அகற்று
  20. கேட்டு விடையிறு
  21. கைம்மை அகற்று
  22. கொடுத்தோன் பறித்தோன்
  23. கோனாட்சி வீழ்த்து
  24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
  25. சாதல் இறுதி
  26. சிறார்நலம் தேடு
  27. சீர்பெறு செயலால்
  28. சுவைஉணர் திறங்கொள்
  29. சூழ்நிலை நோக்கு
  30. செல்வம் நுண்ணறிவாம்
  31. சேய்மை மாற்று
  32. சைகையோடு ஆடல்சேர்
  33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
  34. சோர்வு நீக்கு
  35. தளையினைக் களைந்து வாழ்
  36. தாழ்வு அடிமைநிலை
  37. திருஎனல் உழுபயன்
  38. தீங்கனி வகைவிளை
  39. துன்பம் இன்பத்தின்வேர்
  40. தூயநீ ராடு
  41. தெருவெலாம் மரம்வளர்
  42. தேன்எனப் பாடு
  43. தைக்க இனிது உரை
  44. தொன்மை மாற்று
  45. தோல்வி ஊக்கம்தரும்
  46. நடுங்கல் அறியாமை
  47. நால்வகைப் பிறவிபொய்
  48. நினைவினில் தெளிவுகொள்
  49. நீணிலம் உன்இல்லம்
  50. நுண்ணிதின் உண்மைதேர்
  51. நூலும் புளுகும்
  52. நெடுவான் உலவு
  53. நேர்பயில் ஆழ்கடல்
  54. நைந்தார்க்கு உதவிசெய்
  55. நொடிதோறும் புதுமைசேர்
  56. நோய் தீ யொழுக்கம்
  57. பல்கலை நிறுவு
  58. பார்ப்பு பொதுப்பகை
  59. பிஞ்சுபழுக் காது
  60. பீடு தன்மானம்
  61. புதுச்சுவை உணவுகாண்
  62. பூப்பின் மணங்கொள்
  63. பெண்ணோடு ஆண்நிகர்
  64. பேய்இலை மதம்அலால்
  65. பைந்தமிழ் முதல்மொழி
  66. பொழுதென இரவுகாண்
  67. போர்த்தொழில் பழகு
  68. மறைஎனல் சூழ்ச்சி
  69. மாறுவது இயற்கை
  70. மிதியடியோடு நட
  71. மீச்செலவு தவிர்
  72. முகச்சரக்காய் வாழ்
  73. மூப்பினுக்கு இடம்கொடேல்
  74. மெய்கழிவு அயற்கின்னா
  75. மேலை உன் பெயர்பொறி
  76. மையம் பாய்தல் தீர்
  77. மொடுமாற்றுப் பொது இன்னா
  78. மோத்தலில் கூர்மை கொள்
  79. வறுமை ஏமாப்பு
  80. வாழாட்கு வாழ்வு சேர்
  81. விடுதலை உயிக்குயிர்
  82. வீடுஎனல் சாதல்
  83. வெறும்பேச்சு பேசேல்
  84. வேளையோடு ஆரஉண்
  85. வையம் வாழ வாழ்

நன்றி-பாவேந்தர்பாரதிதாசன் பேரவை


தமிழ் ஆண்டுகளாம்!

தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் ஓர் ஆண்டுப்பெயர் கூட தமிழில் இல்லை. எல்லாம் வடமொழிப் பெயர்கள். மெனக்கெட்டு இவற்றைத் தமிழ்ப்படுத்தி (மொழிபெயர்த்து) இவைதான் தமிழ் ஆண்டுகள் என்று ஒரு குழுவினர் அளித்திருக்கிறார்கள். அதைக் கீழே தருகிறேன் ஆனால் அப்படி நீங்கள் தமிழ்ப்படுத்தி இவைதான் தமிழாண்டுகள் என்று கூறினாலும் சித்திரைதான் முதல் மாதம் என்பதை மாற்ற முடியாதே? தை மாதம்தான் தமிழின் முதல்மாதம் என்பதற்கு அது சான்றும் ஆகாதல்லவா?

பிரபவ – நற்றோன்றல்
Prabhava1987-1988

விபவ – உயர்தோன்றல்
Vibhava 1988–1989

சுக்ல – வெள்ளொளி
Sukla 1989–1990

பிரமோதூத – பேருவகை
Pramodoota 1990–1991

பிரசோற்பத்தி – மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992

ஆங்கீரச – அயல்முனி
Aangirasa 1992–1993

ஸ்ரீமுக – திருமுகம்
Srimukha 1993–1994

பவ – தோற்றம்
Bhava 1994–1995

யுவ – இளமை
Yuva 1995–1996

தாது – மாழை
Dhaatu 1996–1997

ஈஸ்வர – ஈச்சுரம்
Eesvara 1997–1998

வெகுதானிய – கூலவளம்
Bahudhanya 1998–1999

பிரமாதி – முன்மை
Pramathi 1999–2000

விக்கிரம – நேர்நிரல்
Vikrama 2000–2001
Photo

விஷு – விளைபயன்
Vishu 2001–2002

சித்திரபானு – ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003

சுபானு – நற்கதிர்
Subhaanu 2003–2004

தாரண – தாங்கெழில்
Dhaarana 2004–2005

பார்த்திப – நிலவரையன்
Paarthiba 2005–2006

விய – விரிமாண்பு
Viya 2006–2007

சர்வசித்து – முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008

சர்வதாரி – முழுநிறைவு
Sarvadhari 2008–2009

விரோதி – தீர்பகை
Virodhi 2009–2010

விக்ருதி – வளமாற்றம்
Vikruthi 2010–2011

கர – செய்நேர்த்தி
Kara 2011–2012
Photo

நந்தன – நற்குழவி
Nandhana 2012–2013

விஜய – உயர்வாகை
Vijaya 2013–2014

ஜய – வாகை
Jaya 2014–2015

மன்மத – காதன்மை
Manmatha 2015–2016

துன்முகி – வெம்முகம்
Dhunmuki 2016–2017

ஹேவிளம்பி – “பொற்றடை”
Hevilambi 2017–2018

விளம்பி – அட்டி
Vilambi 2018–2019

விகாரி – எழில்மாறல்
Vikari 2019–2020

சார்வரி – வீறியெழல்
Sarvari 2020–2021

பிலவ – கீழறை
Plava 2021–2022
(இவ்வருடம் “கீழறை” தமிழ் புத்தாண்டு)

சுபகிருது – நற்செய்கை
Subakrith 2022–2023

சோபகிருது – மங்கலம்
Sobakrith 2023–2024

குரோதி – பகைக்கேடு
Krodhi 2024–2025

விசுவாசுவ – உலகநிறைவு
Visuvaasuva 2025–2026

பரபாவ – அருட்டோற்றம்
Parabhaava 2026–2027

பிலவங்க – நச்சுப்புழை
Plavanga 2027–2028

கீலக – பிணைவிரகு
Keelaka 2028–2029

சௌமிய – அழகு
Saumya 2029–2030

சாதாரண – பொதுநிலை
Sadharana 2030–2031

விரோதகிருது – இகல்வீறு
Virodhikrithu 2031–2032

பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033

பிரமாதீச – நற்றலைமை
Pramaadhisa 2033–2034

ஆனந்த – பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035

ராட்சச – பெருமறம்
Rakshasa 2035–2036

நள – தாமரை
Nala 2036–2037

பிங்கள – பொன்மை
Pingala 2037–2038

காளயுக்தி – கருமைவீச்சு
Kalayukthi 2038–2039

சித்தார்த்தி – முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040

ரௌத்திரி – அழலி
Raudhri 2040–2041

துன்மதி – கொடுமதி
Dunmathi 2041–2042

துந்துபி – பேரிகை
Dhundubhi 2042–2043

ருத்ரோத்காரி – ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044

ரக்தாட்சி – செம்மை
Raktakshi 2044–2045

குரோதன – எதிரேற்றம்
Krodhana 2045–2046

அட்சய – வளங்கலன்
Akshaya 2046–2047

இவ்வாறே தமிழ் மாதங்கள் பெயர்கள் இவையாம்–

  1. சுறவம் (தை)
  2. கும்பம் (மாசி )
  3. மீனம் ( பங்குனி)
  4. மேழம் ( சித்திரை)
  5. விடை (வைகாசி)
  6. ஆடவை (ஆனி)
  7. கடகம் (ஆடி)
  8. மடங்கல் (ஆவணி)
  9. கன்னி (புரட்டாசி )
  10. துலை (ஐப்பசி )
  11. நளி (கார்த்திகை)
  12. சிலை (மார்கழி)

இவற்றைக் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெருமக்களுக்கு என் வணக்கங்கள். ஆனால் உருவாக்கும்போதே, இவை வடமொழியில்தான் இப்பெயர்கள் முதலில் இருந்தன, நாங்கள் அவற்றைத் தமிழில் மாற்றிக் கொள்கிறோம் என்று வடவருக்கு முதன்மை தருகின்ற செயலாக இது மாறிவிடுகிறதே.


Wife

My darling, my lover, my beautiful wife,
Marrying you messed up my life.

I see your face when I am dreaming,
That’s why I always wake up screaming.

Kind, intelligent, loving and hot;
This describes everything you are not.

I love your smile, your face and your eyes,
Damn, I’m good at telling lies!

My feelings for you, no words can tell,
Except for maybe ‘Go to hell.’

What inspired this amazing rhyme?
A bottle of Feni, little Salt n Lime !

–Joao Caitan, from Goa, written for a competition.


உடல்நலம் காக்க அன்றாடம் ஒரு சாறு

திங்கட்கிழமை
☕வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்துக்
குடித்தால் நாக்கு தூய்மையாகும் ; கபம் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை
☕ கடுக்காய்ப் பொடியும் பனங்கற்கண்டும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.

அறிவன் (புதன் )கிழமை
☕ தூதுவளை, கர்ப்பூரவல்லி, துளசி மூன்றையும் சமஅளவு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது. சளி இளகி மலத்துடன் வெளியேறிவிடும்.

வியாழக்கிழமை
☕ சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து , ஒரு தேக்கரண்டி போட்டுப் பனங்கற்கண்டுடன் கொதிக்க வைக்கவேண்டும். வடிகட்டிக் குடித்தால் செரிமானம் ஆகும், வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

வெள்ளிக்கிழமை
☕வெந்தயம், கொத்துமல்லி சமஅளவு சேர்த்து வறுத்துப் பொடிசெய்து , ஒரு தேக்கரண்டி போட்டுப் பனங்கற்கண்டும் உப்பும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

காரி (சனி )க்கிழமை
☕ முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் , உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்புச் சத்து கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை
☕சுக்கு மல்லிச் சாறு (காப்பி) குடிக்கலாம்.

  • சூலூர் பாவேந்தர் பேரவை


Plastics

In the desert outside Dubai, piles of sun-bleached bones dot the landscape. These are the remains of Arabian camels that once roamed the dunes. But they’re not just bones. Beneath a layer of windswept sand lies something truly alarming.

In hundreds of these hollowed out ribcages, researchers at 5 Gyres have found enormous tangles of plastic. Made up of plastic bags and polypropylene rope, the masses vary in size — some as small as a basketball and others as big as a large suitcase. Each one has caused a camel’s death, by way of gut blockages, bacterial sepsis, dehydration, or malnutrition.

It’s heartbreaking, but what’s happening to camels is not unique.

In the desert, food sources are limited. To a camel’s eye, if it’s not sand, it’s food. As a result, masses called bezoars naturally form in camels’ guts, made up of indigestible matter like hair or plant fibers. But when synthetic material enters the digestive tract, like a plastic bag clinging to the branches of an acacia tree, the masses turn deadly. Researchers have dubbed these “polybezoars,” and dissection reveals that they’re made up of thousands of individual bags.

In 5 Gyres’ recent study, polybezoars led to a regional camel mortality rate of 1%. The news has caused heightened concern in the Middle East, where camels have proven essential to a traditional nomadic lifestyle. In fact, the study’s findings have prompted the government of the United Arab Emirates — a country whose economy is dominated by oil and petroleum, the building blocks of plastic — to signal its strong support for a global plastic treaty.

Now is the time to build on this momentum.



மதமற்ற குழந்தை வளர்ப்பு

மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது… சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங்கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. How Secular Family Values Stack up என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் ((Phil Zuckerman) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறை யில் பேராசிரியராக அமெரிக்காவின் Pitzer கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.

2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவ தில்லை. போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள். அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப் படும் குழந்தைகள் பல அம்சங்களிலும் சிறந்தவர்கள் ஆகிறார்கள் என்ற ஆய்வு முடிவுகள் பழைய நம்பிக்கைகளைத் தகர்ப்பனவாக உள்ளன.

Pew Research யின் முடிவுகள் மதமற்றவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. (http://www.pewforum.org/2012/10/09/nones-on-the-rise/

தற்போது அமெரிக்காவில் மதமற்றவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடாக உயர்ந் திருக்கிறது. 1950களில் அமெரிக்காவில் மதமில்லாதவர்களின் எண்ணிக்கை வெறும் 4 விழுக்காடு மட்டுமே. கடவுள் இல்லை என்ற போக்கு அதிகரித்து வருவதால், மதமில்லாதவகையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதுபற்றி ஆய்வாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

ஜுகர்மேன் சொல்வதைக் கேளுங்கள் : மதம் அளிக்கின்ற பாதுகாப்பும் தர்ம சிந்தனையும் இல்லை யென்றால் செயலற்றவர்களாக, நம்பிக்கையிழந்தவர்களாக, நோக்கமற்றுத் திரிபவர்களாக ஆகிப்போவார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் அது அப்படி இல்லை. மதமற்ற குடும்பங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருகிறார்கள். இதனைப் பேராசிரியர் வார்ன் பெங்ஸ்டன் (Vem Bengston) உறுதி செய்கிறார். வார்ன் பெங்ஸ்டன் பல தலை முறைகளின் மாற்றம் பற்றிய நீண்டகால ஆய்வினை மேற்பார்வை செய்பவராவார். இந்த ஆய்வுதான் அமெரிக்கத் தலைமுறைகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வாகும். மத நம்பிக்கையற்ற குடும்பங்களின் எண் ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருவதைக் கண்ட பெங்ஸ்டன், 2013இல் மதச்சார்பற்ற குடும்பங்கள் என்ற அம்சத்தை யும் ஆய்வில் இணைத்தார்.

“மத நம்பிக்கையுள்ள பெற்றோர்களைக்காட்டிலும் மத நம்பிக்கையில்லாத பெற்றோர்கள் தங்களின் நேர்மை-தர்மம் பற்றிய கொள்கையில் இழை பிசகாதவர்களாக இருக்கிறார் கள்” என்று பென்ஸ்டன், ஜுகர்மேனிடம் தெரிவித் தார். “மதச்சார்பற்ற குடும்பங்களின் பெரும் பகுதியினர் ஒரு நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்து கின்றனர். அவர்களின் இலக்குகள் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் நன்னெறி உணர்வுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்” என்றும் அவர் சொன்னார்.

மதநம்பிக்கையற்றவர்களுக்கு நன்னெறி என்பது மிகவும் எளிய கோட்பாடு. மற்றவர்களைப் புரிந்துகொண்டு அதற்கு இணங்க செயல்படு என்பதுதான் அந்தக் கோட்பாடு. மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக் கிறாயோ, அதனையே நீ அவர்களுக்குச் செய் என்பது எல்லாக் காலத்துக்குமான கோட்பாடாகும். அதற்கு அதீதச் சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தேவையானதாக இல்லை.

அப்புறம் மற்றொரு ஆச்சரியமான செய்தியைக் கேளுங்கள். “அமெரிக்கச் சிறைகளில் உள்ளவர்களில் நாத்திகர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண் டும். 1990களுக்குப் பின்னர் சிறைப்பட்ட நாத்திகர்கள் அநேகமாக இல்லை” என்று அமெரிக்க மத்திய அரசின் சிறைத்துறை தெரிவிக்கிறது.

இதே விஷயத்தைத்தான், கடந்த ஒரு நூற்றாண்டுக் குற்றவியல் ஆவணங்களும் காட்டுகின்றன என்று, ஜுகர்மேன் சொல்கிறார். “எந்த மதத்தையும் சாராத வர்கள் அல்லது மதத்தொடர்பு இல்லாதவர்கள் குற்றம் செய்தவர்களின் பட்டியலில் மிகக் குறைவாகத்தான் காணப்படுகிறார்கள்” என்றார் அவர்.

கூடுதல் செய்தியொன்று! மத நம்பிக்கையற்ற குழந்தைகள், மத நம்பிக்கையுள்ள குழந்தைகளைக் காட்டிலும் சிறப்பாகக் கற்பனையையும் புனைகதை களையும் யதார்த்தத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க் கிறார்கள் என்று, கடந்தஆண்டு பி.பி.சி. (B.B.C..) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஆய்வின் இணைப்பையும் அளித்துள்ளது.. http://www.bu.edu/learninglab/files/2012/05/corriveau-chen-harris-in-press.pdf ஆய்வை நடத்தியது போஸ்டன் பல்கலைக்கழகம் ஆகும்.

ஆய்வின்போது கற்பனைக் கதைகளை அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தனர். பின்னர், விசாரித்த போது மதநம்பிக்கையுள்ளவர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் அந்தக் கற்பனைகள் அனைத்தும் உண்மை என்று நம்பினர். ஆனால், மதம் சாராதவர்கள் வளர்த்த குழந்தைகள் இவையெல்லாம் கற்பனை என்று தெளிவாகச் சொன்னார்கள்.

மதச்சார்புள்ளவர்களின் குழந்தைகள்ஏன் கற்பனைக் கதைகளை யதார்த்தம் என்று குழப்பிக் கொள்கிறார்கள். ஏனென்றால், குழந்தைகளின் ஆய்வு உணர்வை மதம் குழப்பிவிடுவதால் அவர்களால் கற்பனையையும் யதார்த்தத்தையும் பிரித்தறிய முடியவில்லை. குழந்தைகளை சுயமாக சிந்திக்கவிடுங்கள்.

(கோவை ஞானி இலக்கியப் பேரவையைச் சேர்ந்த ஒரு நண்பரின் இன்றைய வாட்சப் பதிவிலிருந்து.)


பொங்கல், ‍தைப் புத்தாண்டு வாழ்த்துகள்

இந்தப் பொங்கல் நன்னாள், பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள், உருவம் அருவம் என்ற பேதமற்று ஆதவனை வழிபடும் நன்னாள்,

உலகத்தில் உள்ள அனைவருக்கும், இன பேதமற்று, சாதி பேதமற்று, மத பேதமற்று, எல்லாரும், நல்லவரும் பொல்லாதவரும் அனைவரும் சிறப்புற்று வாழுகின்ற பொலிவுறும் ஆண்டாக இது மலர வேண்டும் என்னும் என் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறேன்.

நல்லவரும் தீயவரும் மாக்களும் மனிதர்களும் விலங்குகளும் பூச்சிபுழுக்களும் தாவரங்களும் கண்ணுக்குப் புலப்படாச் சிற்றுயிர்களும்- அனைத்தும் நல்லவிதமாக வாழவேண்டும்.

அததற்கு, உயிருள்ளதற்கும் இல்லாததற்கும்கூட – ஒரு பணி இயற்கையில் இருக்கிறது. அதனதன் பணியை அதுஅது ஆற்றவேண்டும்.

ஆனால் எல்லையற்றதாகிய – இன்ஃபினிடி யாகிய இயற்கையே, ஒரே ஒரு வேண்டுகோள்.

நல்லவர்கள் தலைவர்களாகட்டும். நாட்டை ஆள்வோராகட்டும். அவரவர்க்கேற்ற அறிவுப் பதவிகளில் அமரட்டும்.

தீயவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப கீழ்நிலையிலே இருக்கட்டும்.

அப்போதுதான் இயற்கையாகிய நீ உய்வாய், பூமி வாழும், மக்கள் வாழ்வார்கள். இல்லையேல் மக்களுக்கு முன்னாலேயே இந்தத் தாயகமாகிய எங்கள் பூமியும் பல்வேறு வித இயற்கைச் சூழல் மாசுபாடுகளால் அழிந்து போகும்.

உலகில் எந்தப் பிராணியும் தனக்குள் சண்டையிட்டுத் தன்னையே அழித்துக் கொள்வதில்லை, தான் வாழும் இயற்கையையும் அழிப்பதில்லை. மனிதன் மட்டும் ஏனோ அவ்விதம் செய்கின்ற கேடான பிராணியாக உருவெடுத்துவிட்டான். இம்மனிதர்க ளிடமிருந்து எங்களைக் காப்பாற்று இயற்கையே…