FDI

பொறியாளர் பக்கிரிசாமி என்பார் கூறியன, ஆர்வலர் அய்யநாதன் வழியாக–

FDI என்கிற அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகள் மூலம் பல நிறுவனங்கள் உள்ளே நூழைந்துவிட்டன. உதாரணமாக 300 million euro (2500 crore INR) மதிப்பில் ஒரு பிரான்ஸ் தொழிற்சாலை(1200MW Turbine Generator) அண்மையில் குஜராத்தில் நிறுவப்பட்டது. முதலில் ஒரு இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இங்கே களத்தில் இறங்கியது. நிலம் தொழிற்சாலை கட்டுமானம் மனித ஆற்றல் முழுவதும் இந்திய நிறுவனம் ஏற்றது அதாவது வங்கி கடன் மூலம் மூலமே; அவர்கள் வெறும் தொழில்நுட்பத்தை தருவார்கள் என்கிற புரிதல் ஒப்பந்தம்!
ஆனால் முழுவதும் இந்திய பொருளாதாரத்திலேயே அமைக்கப்பட்டது.

கட்டுமானம் முடிந்து சாவி கைக்கு போனதும் இந்திய நிறுவனம் கழற்றிவிடப்பட்டது மற்றுமன்றி, இதை வாங்கிய பிரான்சு நிறுவனம் அப்படியே 30% இலாபம் வைத்து அமெரிக்க நிறுவனத்துடன் விற்றுவிட்டு கழன்றுகொண்டதோடு, இந்தியாவில் அதன் தடமே இல்லை குறிப்பாக டர்பைன் ஜெனரேட்டர் தயாரிப்பில்!

தற்போது இதை வாங்கிய அமெரிக்க நிறுவனம் எதிர்பார்த்த break even point ஐ எட்ட முடியாமல் ஒவ்வொரு யூனிட்டாக மூடிக்கொண்டு வருகிறது என்றால் இந்தியா பொருளாதாரத்தின் முக்கிய பங்கு யாரிடம் உள்ளது?

இது ஒரு நிறுவனத்தைப்பற்றிய கதை மட்டுமே, குஜராத்தில் உள்ள ஒட்டுமொத்த நிறுவனங்களின் கணக்கை போட்டால் நமக்கு மயக்கம் வரும் என்கிற நிலையில், இந்திய பொருளாதாரம் முற்றிலும் அந்நிய முதலீடு என்கிற விளையாட்டில் காணாமல் போய் நெல்லிக்காய் அளவிற்கு வந்துவிட்டது!

உள்ளே புகுந்துள்ள நிறுவனங்கள்–
ABB(old & existing)
SIEMENS (old &existing)
Schneider (old& existing)
Alstom (formal company)
GE (new)
MHI(new)
எனவே இவர்கள் இங்கிருக்கும் L&T, ESSOR, Relience, sapoorji palonji, Dalmia, mital, OP ZINDAL. TATA, ADHANI, VEDANTA மற்றும் பொதுத்துறை நவ மகா ரத்னா BHEL, BEL, SAIL, VIZAK, NOCL, CAI, STEEL, NLC போன்ற நிறுவனங்களுடன் கூட்டுவைத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஏன் நம்மை ஆளுகிற எண்ணம் வராது சொல்லுங்கள்? இதுதானே தாராளமயமாக்கல்? இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்?

சமூகம்