நாமும் பார்ப்பனர்களும்

பூர்வகுடி இந்தியர்களாக உங்களைக் கருதிக் கொள்பவர்களே, பார்ப்பனர் அல்லாதவர்களே, சிந்தியுங்கள்..

இன்னும் எத்தனை ஆண்டுகள் பார்ப்பனர்களைக் குறை சொல்லியே வாழப் போகிறோம்? இந்த நோக்குமுறை போதாது.

நாட்டில் வெறும் மூன்றுசதவீதமே உள்ள பார்ப்பனர்களை ஏன் எதிர்க்க வேண்டும்?

உண்மையில் தவறு யார் மீது என்று கேட்டால் பிரித்தாளும் சூழ்ச்சி , மந்திரம், தந்திரம் என்று சொல்லுகிறோம்…இதில் உண்மை இருக்கிறது. என்றாலும்,

அவர்களது சுயநல வாழ்க்கை, சமூக நோக்கம் அறவே இன்மை குறித்த சில விஷயங்களை கவனியுங்கள். அவற்றில் நல்லவற்றை (உதாரணமாக மது அருந்தாமை போன்றவை) நாம் பயன்படுத்த வேண்டும்.

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது 1000 ரூபாய், வேண்டாம்… ஒரு நூறு ரூபாய் டிக்கெட் எடுத்து எந்த சினிமா தியேட்டரிலாவது படம் பார்த்ததுண்டா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து, அந்த நடிகரின் படங்களுக்கு பாலபிஷேகம், கட்அவுட், சுவர் விளம்பரங்கள், போஸ்டர் ஒட்டுதல் போன்ற கண்றாவிகளை செய்து தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், தெரு மின்விளகு, இலவச மனைப் பட்டா, இலவச வீடுகள் கேட்டு எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ, வட்டாட்சியர் அலுவலகம் முன்போ போராடியதைப் பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒயின் ஷாப்பில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானம் குடித்து அவர்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்ததைப் பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத எந்தக் கட்சியிலாவது கூட்டாகச் சேர்ந்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி , சாலை மறியல், ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முன் முற்றுகை, சிறை போன்றவற்றைச் சந்தித்ததை பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது, தேர்தல் நேரங்களில் எந்தக் கட்சியாவது ஓட்டுக்கு பணம் கொடுக்காதா என்று வீட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு, வீட்டு வாசலில் இரவு முழுவதும் கண் விழித்துக் காத்திருக்கும் அவலத்தை பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அரசு அலுவலகங்களிலோ , தனியார் நிறுவனங்களிளோ கடை நிலை ஊழியர்களாக பணி செய்வதைப் பார்த்திருக்கிறோமா?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது, உடலுழைப்பு செய்தோ, விவசாயம் செய்தோ, சாக்கடை அள்ளும் வேலையிலோ, துப்புரவு பணிகளிளோ, இயற்க்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளிளோ ஈடுபட்டதை பார்த்திருக்கிறோமா?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சொந்தப் பணத்தைப் போட்டு கோயில் கட்டி, கூழ் ஊற்றி, முதுகில் அலகு குத்தித் தேர் இழுத்தோ, காவடி எடுத்தோ, வேலை தாடையில் மற்றும் உடல் முழுவதும் குத்திக்கொண்டோ, காலில் ஆணி செருப்பு போட்டுக்கொண்டோ, சாமி வந்து மிரண்டோ பார்த்திருக்கிறோமா ?

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,

மேற்கண்ட எதுவுமே செய்யாத 3 சதவீத பிராமண மக்களுக்கு எல்லாம், குறிப்பாக எல்லா உயர் அதிகாரி வேலைகளும் எப்படி கிடைக்கின்றன?

நாட்டில் 97 சதவீதம் BC மக்களான SC /ST, MBC/OBC Religious minorities, போன்ற சாதி முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் ஏன் இன்னும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், இலவச மனை பட்டா, தெருவிளக்கு, சாலைவசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலைந்து, திரிந்து காத்துக்கிடக்கிறோம்?

உண்மையில் 3 சதவீத பார்ப்பனர்கள் 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான SC /ST, MBC/OBC மக்களை ஏமாற்றி அதிகாரத்தில் இருக்கிறார்களா?

இதில் பெருமளவு உண்மை யிருக்கிறது. அவர்கள் தங்கள் புராணங்களால், கட்டுக்கதைகளால் நம்மை இன்றுவரை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் மனுநீதி போன்ற வற்றை அழிக்கச் சொல்லுகிறோம். அவர்கள் ஏமாற்றுவதை நாம் மறுக்கும்போது அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் நீதித்துறை, அதிகாரங்கள், பதவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி நம்மை அழிக்கிறார்கள். இருந்தாலும், பெருமளவில்

97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான நாம் வெறும் 3 சதவீத பார்ப்பனர்களிடம் ஏமாந்து போகிறோம் என்பதிலும் உண்மை இருக்கிறது.

காலணாவுக்குப் பொறாத பூணூல் கும்பலுக்கு , அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்தையும் நாம் தான் அவர்களுக்கு கொடுக்கிறோம்…

கல்யாணம் தொடங்கி கருமாதி , நினைவு நாள் போன்ற வீட்டில் நடக்கும் அத்தனை சுக துக்க நிகழ்வுகளுக்கும் பிராமணர்களை வரவழைத்து வேட்டி, துண்டு உட்பட, பச்சரிசி, பழம், தேங்காய், நெய் போன்ற பொருட்களை கொடுத்து தட்சணையாக 2000, 3000 கொடுத்து “போய்ட்டு வாங்க சாமி” என்று அனுப்புவது நாம்தான்,

அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம், சினிமா, விளையாட்டு, பத்திரிகைகள், ஊடகங்கள் இவைகளில் கோலோச்சுவது பார்ப்பனர்களே, ஆனால் இவை அனைத்திற்கும் பணத்தை மட்டுமே விரயம் செய்துகொண்டிருக்கும் கூட்டம் வேறு யாருமல்ல நாம்தான்,

சினிமா, ஊடகம், பத்திரிகைகள், விளையாட்டை நாம் புறக்கணித்து விட்டாலே ஒன்று முதல் ஒன்றரை சதவீத பார்ப்பனக் கூட்டம் துண்டை தலையில் போட்டுக்கொள்வார்கள்.

(BC, SC /ST, MBC/ OBC மற்றும் மதச் சிறுபான்மையினர்)-பொது மக்கள் தங்கள் புத்தியை தீட்டி அரசியல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்…

இதற்குத் தடையாக இருக்கும் சாதிய, மத, இன, மொழி வாதப் பிரிவினைகளை விதைக்கும் பார்ப்பனியச் சனாதனத்தைத் (Brahminism) தூக்கி எறிந்துவிட்டு

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற ஜனநாயக( Democracy) ஒற்றை முழக்கத்தோடு நாம் யாவரும் ஓரணியில் திரண்டு விட்டால்..

மீதி 1-1 1/2 சதவீத பார்ப்பனக் கூட்டத்தின், கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் சாதிய ஏற்றத்தாழ்வு அடிமை முறைக்கு முடிவுகட்டமுடியும்..

இதையெல்லாம் விட்டுவிட்டு ..
சுய சாதிப் பெருமை, மதவாதப் பிரச்சினைகள், நான் பெரியவன், நீ பெரியவன் என்று பார்ப்பனிய-சாதிய அடிமைச் சிந்தனையோடு நமக்குள்ளே அரைவேக்காட்டுத் தனமாகச் சண்டை போட்டுக் கொண்டு , ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்கொண்டு செத்து போவோமானால்,

அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் தற்போது 3 சதவீதமாக உள்ள பிராமணர்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றும் கும்பலும் இருந்து கொண்டே இருக்கும்…

மாறவேண்டியது நாம்தானே அன்றி, பார்ப்பனர்களோடு வீண் போராட்டம் வேண்டாம்.

முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம், “நம்முடைய அனைத்து துன்பப் பூட்டுகளுக்கும் “ஆட்சி அதிகாரமே திறவு கோல்”.

ஆட்சியை மாற்றி ஆட்சியாளராக மாறுவதே நம்முடைய இலக்கு…
எதிர்த்து அழித்து ஒழிக்க வேண்டியது பார்ப்பனர்களை அல்ல…

பார்ப்பனியத்தைத்தான்.

பார்ப்பனியக் கொள்கைகளான சாதி மதத்தைத் தாங்கி வாழும் பார்ப்பனியர்களாக இருந்து நம்மால் ஒரு போதும் அதைச்செய்ய முடியாது.

நாம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட வேண்டும்.

அப்போது தான் இந்தியாவும், இந்தியர்களும், உயர்வடைவார்கள்.

சமூகம்