அளப்புகள்

இந்தியாவைப் போன்றதொரு மோசமான நாட்டில் ஏன் பிறந்தோம் என்று பலசமயங்களில் பெரும் மனச்சோர்வு ஏற்படுகிறது. 1947இல் விடுதலை கிடைத்தது. 2047 வந்தாலும் நம் நாடு முன்னேறப்போவதில்லை. பாதி இந்தியாவை வெளிநாட்டினரிடம் விற்றாகிவிட்டது. மீதி இந்தியாவை அரசியல்வாதிகள், முதலாளிகள், இருப்பவர்கள் பங்குபோட்டுக்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் வரி வாங்குவார்கள், ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள். சாலை வரி வாங்குவார்கள், நல்ல சாலை எங்கும் இல்லை. கல்வி வரி வாங்குவார்கள், கூடவே நாம் கல்விக் கொள்ளையர்களுக்கும் அழ வேண்டும். தண்ணீர் வரி வாங்குவார்கள், ஆனால் அரசாங்கமே தண்ணீரை விற்பார்கள். எதையும் மக்களுக்குச் செய்வது அரசாங்கத்தின் கடமை கிடையாது. மக்கள் வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகமாம். மற்றபடி எந்தக் கேள்வியையும் கேட்கக்கூடாது.
ஐந்தாண்டுகளில் பெரும் பொருளாதாரச் சரிவு காத்திருக்கிறது. பத்தாண்டுகளில் தண்ணீரே இல்லாமல் போய் கும்பல்கும்பலாய்ச் சாகப்போகிறார்கள். இதுதான் இந்தியா!

தினம்-ஒரு-செய்தி