இனியவை என்றும்

நேற்றுக் காலை திரைப்படங்களுக்கும் பாடல்களுக்கும் இசையமைத்த திரு. எம். எஸ். விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உண்மையில் அவர் ஒரு மாமேதைதான். ஏறத்தாழ 1953 முதலாக இசையமைத்தவர். சிறு வயது முதலாகவே பெயர் அறியாமலே நான் அவருடைய இரசிகன் என்றாலும் அவர் இசையமைத்து உணர்வு பூர்வமாக நான் இரசித்த சிறப்பான பாடல் (காலத்தால் அது எவ்வளவு பழமையானது என்பது தெரிய வந்தது பின்னால்தான்) ‘கூவாமல் கூவும் கோகிலம்’ என்பதாக இருக்கலாம் (1954). பிறகு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் மனத்தைக் கொள்ளை கொண்டவை. ‘நினைக்கத தெரிந்த மனமே’ முதலான சோக கீதங்கள், ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’… என எத்தனை எத்தனையோ. அவருக்கு பெரிய கௌரவங்கள் ஒன்றும் தேடிவரவில்லை என்றாலும் எத்தனை எத்தனையோ பாடல்கள் வழியாக எத்தனை எத்தனையோ இரசிகர்கள் மனங்களில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். என்றும் கேட்க இனியவை அவருடைய இசையமைப்புகள். குறிப்பாக, மலைக்கோட்டை திரு. வி. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் இசையமைத்த பாடல்கள் இனியவை, என்றும் இனியவை.

தினம்-ஒரு-செய்தி