வாழ்க வையகம்

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்பது வள்ளுவர் அக்காலத்தில் மனைவிக்கு வகுத்த இலக்கணம். இதைப் பெண்ணடிமைத்தனம் என்று சொல்வாரும் உண்டு. ஆனாலும் இந்தப் பழந்தமிழ் இலக்கணப்படி வாழ்பவர்கள் தமிழகத்தில் என்றும் உண்டு. அவர்களில் ஒருவ ரான என் மனைவிக்கு இந்தப்பகுதியை அர்ப்பணித்து, எங்கள் திருமண வாழ்க்கையின் நாற்பதாம் ஆண்டு தொடங்கும் இந் நன்னாளில் ‘தினம் ஒரு செய்தி’ என்னும் இப்பகுதியைத் தொடங்குகிறேன். வாழ்க வையகம்!

தினம்-ஒரு-செய்தி