மீத்தேன் என்னும் நஞ்சு

முற்றிலும் பாலைவனமாய் மாறப்போகும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகும் மாவட்டங்கள் திருவாரூர், நாகை
இன்னும் வேலூர் மாவட்டத்திலும் இராணிப்பேட்டை அருகே இலாலாப்பேட்டை முதலிய இடங்களில் மீதேன் எரிவாயு பெற ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கேயோ போடப்போகும் ஆழ்துளைக் கிணறுதானே நமக்கு என்ன வந்தது என்று எண்ண வேண்டாம் நண்பர்களே,
1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும். நிலநடுக்கங்கள் ஏற்படும்.
7.குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இடப் பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும். இச்செயல் முறை மண்ணையும் நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
தஞ்சையில் ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும் இடம் 691 சதுர
கிலோமீட்டர். ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுர கிலோமீட்டர், அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கப் போகும் மாவட்டங்கள் வேலூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூர் தான். இதனால் காற்றும் மாசுபடப் போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கப்போகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம். ஒட்டுமொத்தமாக இப்போதைக்குத் தஞ்சை புதுக்கோட்டையின்
பகுதி பாலைவனமாய் மாறப் போவதால் எத்தனையோ லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாய் நிற்கிறது. தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டம் காரணமாய் அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.இந்த ஒப்பந்தம் மீண்டும் தொடர்ந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற
இயலாது. அதற்கு முன் மக்கள் விழித்தெழ வேண்டியது மிக அவசியம், அவசரமும் கூட.


ஏழை அம்மா

ஏழை ஜெயலலிதா போய் ஒரு வருடம் ஆகி விட்டது.
அவரால் தன்னுடன் எதையுமே எடுத்துச் செல்ல முடியவில்லை.
ஆம். சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்.
இன்று வெறும் நமது நினைவுகளில் மட்டுமே இருக்கிறார்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
என்று ஒரு ஆறடி மண்ணில் புதைக்கப்பட்டு மறைந்து விட்டார்.
எந்த வழியிலோ சம்பாதித்த செல்வங்களை யாரோ அனுபவிப்பதற்காக விட்டு விட்டுச்சென்று விட்டார்.
[ 1197 ஏக்கர் நிலம் திருநெல்வேலியில்,
200 ஏக்கர் வாலாஜாப்பேட்டையில்,
100 ஏக்கர் ஊத்துக்கோட்டையில்,
25 ஏக்கர் சிறுதாவூரில்,
300 ஏக்கர் காஞ்சீபுரத்தில்,
14.5 ஏக்கர் திராட்சைப் தோட்டம் – ஜீடிமெட்லா (ஆந்திராவில்),
1600 ஏக்கர் தேயிலைத் தோட்டம்
ஒரு பங்களாவுடன் கொடநாடு, நீலகிரி மலையில்.
இவை தவிர சென்னையில் போயஸ் தோட்டத்தில் 24,000 சதுர அடியில் கட்டப்பட்ட 100 கோடி மதிப்புள்ள (வேதா நிலையம்) பங்களா,
4 வணிக வளாகங்கள்,
800 கிலோ வெள்ளி,
28 கிலோ தங்கம்,
750 ஜோடி காலணிகள்,
10,500 புடவைகள்,
91 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள்,
இவை தவிர பல வாகனங்கள், சொகுசு கார்கள்.
(இந்தக் கணக்கில் பினாமி சொத்துக்கள் சேரவில்லை.) ]

யாராலுமே தடுத்து நிறுத்த முடியாத ஒரு பயணம் நம் எல்லோருக்கும் காத்திருக்கிறது.

இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் வெறும் பயணிகள் தான். அவரவர் தாம் எங்கே இறங்க வேண்டுமோ அங்கே இறங்கித்தான் ஆகவேண்டும். ஆகையால்:

அகந்தையை ஒழித்திடுவோம், நாம் யார் என்பதை உணர முயற்சி செய்வோம், வாழும் கடைசி நிமிடம் வரை நல்லவர்களாக அடுத்தவர்களை மதித்துப் பயனுற வாழ்வோம்.


Before marriage and After marriage

A Husband and Wife are talking just before their marriage, like this:

Husband: At last! I can hardly wait!

Wife: Do you want me to leave?

Husband: No! Don’t even think that.

Wife: Do you love me?

Husband: Of course! Always have and always will!

Wife: Have you ever cheated on me?

Husband: No! Why are you even asking?

Wife: Will you kiss me?

Husband: Every chance I get!

Wife: Will you hit me?

Husband: Hell no! Are you crazy?!

Wife: Can I trust you?

Husband: Yes.

Wife: Oh my Darling!

After marriage their life has changed. Now they speak like this – Just start from below (Oh my Darling!) and go up.
(Taken from a foreign magazine)


Youth and Age, by S. T. Coleridge

Youth and Age

Verse, a breeze mid blossoms straying,
Where Hope clung feeding, like a bee—
Both were mine! Life went a-maying
With Nature, Hope, and Poesy,
When I was young!

When I was young?—Ah, woful When!
Ah! for the change ‘twixt Now and Then!
This breathing house not built with hands,
This body that does me grievous wrong,
O’er aery cliffs and glittering sands,
How lightly then it flashed along:—
Like those trim skiffs, unknown of yore,
On winding lakes and rivers wide,
That ask no aid of sail or oar,
That fear no spite of wind or tide!
Nought cared this body for wind or weather
When Youth and I lived in’t together.

Flowers are lovely; Love is flower-like;
Friendship is a sheltering tree;
O! the joys, that came down shower-like,
Of Friendship, Love, and Liberty,
Ere I was old!
Ere I was old? Ah woful Ere,
Which tells me, Youth’s no longer here!
O Youth! for years so many and sweet,
‘Tis known, that Thou and I were one,
I’ll think it but a fond conceit—
It cannot be that Thou art gone!

Thy vesper-bell hath not yet toll’d:—
And thou wert aye a masker bold!
What strange disguise hast now put on,
To make believe, that thou are gone?
I see these locks in silvery slips,
This drooping gait, this altered size:
But Spring-tide blossoms on thy lips,
And tears take sunshine from thine eyes!
Life is but thought: so think I will
That Youth and I are house-mates still.

Dew-drops are the gems of morning,
But the tears of mournful eve!
Where no hope is, life’s a warning
That only serves to make us grieve,
When we are old:
That only serves to make us grieve
With oft and tedious taking-leave,
Like some poor nigh-related guest,
That may not rudely be dismist;
Yet hath outstay’d his welcome while,
And tells the jest without the smile.


ஒரு குட்டிக்கதை

கிராமத்தில் ஒரு சிறு வணிகராக இருந்த தந்தை. அவருக்கு ஒரு மகன். அவனுக்கும் இருபது வயதாயிற்று. இந்தக் காலத்திலுள்ள எல்லா இளைஞர்களையும் போலவே அவனும் எதையும் செய்யாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தான். தந்தைக்குத் தன் மகன் என்ன ஆகப் போகிறான் என்பது பற்றிக் கவலை. இதற்கு ஒரு சோதனை வைத்துப் பார்க்கவேண்டும் என்று நினைத்தார்.

படிப்பு, படுக்கை இத்யாதிகளுக்கு அவனுக்கு வீட்டில் ஒரு சிறிய அறை இருந்தது. அவன் அறைக்குள் நுழைந்த தந்தை அவன் தலைமாட்டில் ஒரு பகவத்கீதை, ஒரு பத்துரூபாய் நாணயம், (அவர் தகுதிக்குமீறி அவனுக்காக அவர் எடுத்த) சற்றே விலையுயர்ந்த உடை, பைக் சாவி ஒன்று ஆகியவற்றை வைத்தார்.

“வந்தவுடன் எதை எடுக்கிறான் பார்ப்போம். பகவத்கீதையை எடுத்தால் ஒரு சாமியாராகப் போவான் என்று நினைக்கிறேன். பத்து ரூபாய் நாணயத்தை எடுத்தால் ஏதாவதொரு வியாபாரத்தில் ஈடுபடும் மனப்பான்மை அவனுக்கு இருக்கிறது. உடையை எடுத்தால் ஆடம்பர சொகுசு வாழ்க்கை நடத்துவதற்கு மனம் இருக்கிறது. பைக் சாவியை எடுத்தால் ஊர்சுற்றும் வேலை எதற்கேனும் போகக்கூடும்” என்று தனக்குள் கூறிக்கொண்டார்.

அவன் வரும் நேரத்தில் கதவுக்குப் பின்னால் ஒளிந்திருந்தார். பையன் வந்தான். பகவத்கீதையை ஒரு கையால் எடுத்துக் கக்கத்தில் வைத்துக் கொண்டு மற்றொருகையில் காசையும் பைக் சாவியையும் எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். பிறகு உடையை எடுத்துவைத்துச் சற்றே அழகுபார்த்துவிட்டுப் போட்டுக் கொள்ளத் தொடங்கினான்.

“அடடே, இவன் கண்டிப்பாக நம் பாரதத்தின் அடுத்த பிரதமர் ஆகி விடுவான்” என்று மகிழ்ச்சி கொண்டார் தந்தை.


பிரிவுப்பாட்டு

என்னவளே என்னவளே உன்ன விட்டுப் போறேன்
என்ன செய்ய காசில்லையே உன்ன நம்பிப் போறேன்

எங்கப்பனும் உங்கப்பனும் லட்சாதிபதி இல்ல
ஏழுநாளும் வீட்டிலருந்தா வயித்துக்குச் சோறு இல்ல (என்னவளே)

ரொம்ப தூரம் பிரிஞ்சிபோறேன்னு கவலப்படாதே
நாலுமாசம் கழிச்சி வந்து உன்னப் பாக்க வருவேன்

தாலிஒண்ணு வாங்கிவந்து கல்யாணத்த முடிப்பேன்
தடிப்பய மவன் வரலையிண்ணு ஓடிப்போவாதே (என்னவளே)

எவனயாவது கல்யாணங்கட்டி ஏமாந்து போவாதே
எதுக்கும் நானு வந்திடுவேன் கவலப்படாதே

வர்ற வரைக்கும் ஆசைய நீ காப்பாத்தி வையி
இங்கிட்டுதான் சொர்க்கலோகம் சேந்துநாம போலாம் (என்னவளே)


பெண்ணின் அழகு

பெண்ணின் அழகு அவள் கண்களில் இருக்கிறது. கண், இதயத்தின் வாசல். இதயம் அன்பின் இருப்பிடம்.
பாவம், இது தெரியாத சில பெண்கள், தங்கள் அழகு அலங்காரத்தில், உடைகளில், மேக்-அப்பில் இன்னும் பிறவற்றில் இருப்பதாக நினைத்து மயங்குகிறார்கள்.


பார்ப்பன சாம்ராஜ்யம்

பார்ப்பன சாம்ராஜ்யம்
முதலில், இந்தியாவில் பார்ப்பனர்கள் மக்கள் தொகையினைப் பார்ப்போம்.
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள்..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பனர்கள்..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.பேர்
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஸ்கட் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கண்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரப் பிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாசல பிரதேசம்: 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.
பாரப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரப் பிரதேசம்.
பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.
பார்ப்பன..ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.
பார்ப்பனர்…அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மக்கள் தொகையில் 20% பார்ப்பனர்….
பொருளாதாரத்தில் பார்ப்பனர் பின்தங்கிய மாநிலம் := கேரளா
பொருளாதாரத்தில் பார்ப்பனர் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.
பார்ப்பனர் அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.
பார்ப்பன MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரப் பிரதேசம்
லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%
ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%
பார்ப்பன கவர்னர்கள் := 50%
பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%
மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பனர்கள் = 54%
இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பனர்கள் =.62%
பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன…70%
பல்கலைக்கழகங்களில் பார்ப்பனத் துணை வேந்தர்கள் := 51%
சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%
ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%
வெளிநாட்டுத் தூதர்களில் பார்ப்பனர்தள் := 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பனர்,. மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%
வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%
ஏர்லைன்சில் பார்ப்பனர்கள் := 61%
IAS இல் பார்ப்பனர்கள் := 72%
IPS இல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%
CBI மற்றும் Custom ஸில் பார்ப்பனர்கள் := 72%
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் எல்லாத் துறைகளிலும் அதிக இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்! இன்று இப்படி என்றால், ஆங்கிலேயர் காலத்தில்? சிந்தித்துப் பாருங்கள்.
யாவருடைய சிந்தனைக்கும். திருச்சி கணேசன்.