The Obstacle in the Path

There was once a wealthy king who decided to place a large boulder in the middle of a frequently used road. The king hid behind some bushes along the side of the road to see what the people of the kingdom would do when they encountered the large boulder.
The first people he saw pass were the wealthiest squires and merchants in the kingdom. Some just walked around the boulder, while others complained about the king not making sure the roads were clear. However, not one of them tried to move the boulder out of the way.
Next, the king saw a peasant holding a basket of vegetables coming down the road. When he reached the boulder, instead of walking around it as the others did, he put down his basket of vegetables and started pushing the boulder aside. After much effort, he was finally successful in moving the boulder to the side of the road.
As the peasant picked his basket back up and got ready to continue down the road, he saw a purse lying in place of the boulder. The peasant opened the purse to find it filled with gold coins and a note from the king which said the gold was for the person who moved the boulder.
At that moment, the peasant learnt what many of us could not understand:
“Every obstacle presents an opportunity to improve our situation.”
If you are met with struggles or hard times, or simply just a boulder in the road, try to face it instead of just walking around it. you never know what might be waiting underneath.


Who’s packing your parachute?

One day, when Charles Plumb, a former US Navy jet pilot in Vietnam,and his wife were sitting in a restaurant, a man at another table came up and said: “You’re Plumb! You flew jet fighters in Vietnam from the aircraft carrier Kitty Hawk. You were shot down!”
“How in the world did you know that?” asked Plumb.
“I packed your parachute,” the man replied.
Plumb gasped in surprise and gratitude.
The man pumped his hand and said:”I guess it worked!”
“It sure did,” Plumb assured him.
“If your chute hadn’t worked, I wouldn’t be here today.”
That night, Plumb couldn’t sleep, as he kept thinking about that man.
He thought:
“I kept wondering what he had looked like in a Navy uniform: a white hat; a bib in the back; and bell-bottom trousers. I wonder how many times I might have seen him and not even said ‘Good morning, how are you?’ or anything because, you see, I was a fighter pilot and he was just a sailor.”
Plumb thought of the many hours the sailor had spent at a long wooden table in the bowels of the ship, carefully weaving the shrouds and folding the silks of each chute, each time holding the fate of someone he didn’t know in his hands.
Everyone has someone who provides what they need to make it through the day.
He also points out that he needed many kinds of parachutes when his plane was shot down over enemy territory – he needed his physical parachute, his mental parachute, his emotional parachute, and his spiritual parachute.
He called on all these supports before reaching safety.Sometimes, in the daily challenges that life gives us, we miss what is really important. We may fail to say hello, please, or thank you, congratulate someone on something wonderful that has happened to them, give a compliment, or just do something nice for no reason.
As you go through this week, this month, this year, recognize people who pack your parachutes.
You may not even know these people yet, so allow your kindness to have no boundaries whatsoever.
You’ll never know who might be packing your parachute right now!


திருச்சி நாடக சங்கம் பற்றி-தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் திருச்சி நாடக சங்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு வினாநிரல் அனுப்பியிருந்தது. அதற்கு என் பதில்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
1. குழுவின் பெயர்
திருச்சிநாடகச் சங்கம், திருச்சி மற்றும் சென்னை.
2. முகவரி
(திரு. ஜம்புநாதனின் முகவரி)
3.குழுவின் பெயருக்கான காரணம்
சிறப்பாக ஒன்றுமில்லை. பங்கேற்ற நண்பர்கள் அனைவரும் திருச்சியைச் சேர்ந்தவர்கள் ஆதலின் திருச்சி நாடகச் சங்கம் என்று பெயரிடப் பட்டது.
4. குழு தொடங்கப்பட்ட சூழல்
தமிழ் நவீன நாடகம் என்று பெரிதாக அப்போது எதுவும் இல்லை (ஏன், இப்போதும் இல்லை). பரீக்ஷா, நிஜநாடக இயக்கம், கூத்துப்பட்டறை போன்ற ஒரு சில இயக்கங்கள் மட்டுமே இருந்தன. ஏற்கெனவே நாங்கள் திருச்சி வாசகர் வட்டம், சினிஃபோரம் என்ற அமைப்புகளை நடத்திவந்த நிலையில் நாடகத்துக்கும் எங்கள் பங்களிப்பைச் செய்வோம் என்ற எண்ணத்தில் இது தொடங்கப்பட்டது. 1978இல் என்று நினைக்கிறேன், வங்க நாடகாசிரியர் திரு. பாதல் சர்க்கார் சென்னையில் பயிற்சிப்பணிமனை ஒன்று நடத்தினார். அதில் திரு. ஆல்பர்ட், திரு. கோவிந்தராஜ், திரு. மனோகர், திரு. சாமிநாதன் போன்று திருச்சி நண்பர்கள் சிலர் பங்கேற்றனர். அதனால் நவீன நாடக உருவாக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. சிறுபத்திரிகைகளில் அப்போது வெளிவந்திருந்த நாற்காலிக்காரர்கள், காலம் காலமாக போன்ற நாடகங்களும் அதற்கு ஊக்கம் அளித்தன. திரு. ஆல்பர்ட் அவர்கள் இளம் வயதுமுதலாகவே நாடகங்கள் நடத்தி வந்தவர். கிறித்துவச் சார்பான நாடகங்களையும் நடத்தியிருந்தார். இத்துறை பற்றி நன்கறிந்தவரும் கூட. எனவே அவர் தந்த ஊக்கம் பெரிது.
5. குழு எப்போது தொடங்கப்பட்டது?
இன்ன நாள் என்று குறிப்பாகச் சொல்லமுடியாது. 1980இல் பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித் நாடகத்தை திரு. கோ. ராஜாராம் மொழிபெயர்த்தார். அதை நாடகமாக்க வேண்டும் என்று விரும்பித் தொடங்கினோம், அரங்கேற்றினோம். அந்நிகழ்ச்சியுடன் திருச்சி நாடக சங்கம் தொடங்கியதாகக் கொள்ளலாம்.
6. தொடக்கத்தில் குழுவின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்
திரு. ஆல்பர்ட், திரு. ஜம்புநாதன், திரு. பலராம், திரு. விக்டர் போன்றவர்கள். ஆல்பர்ட் ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். ஜம்புநாதன் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்தார். பலராம், விக்டர் பிஎச்இஎல்-இல் பணிபுரிந்தனர்.
7. தொடக்கத்தில் குழுவின் உறுப்பினர்கள் விவரம்
திருச்சி வாசகர் வட்டம். சினிஃபோரம் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினர்கள் யாவரும் நாடகச் சங்கத்தின் உறுப்பினர்களே. ஏறத்தாழப் பத்துப் பேர் எனலாம். மேற்கூறிய ஆல்பர்ட், ஜம்புநாதன், பலராம், கோ. ராஜாராம் தவிர, அம்ஷன் குமார், மனோகர், கோவிந்தராஜ், பூரணச்சந்திரன், ராஜன் குறை போன்ற சிலர் அதன் முக்கிய உறுப்பினர்கள் எனலாம்.
8. குழு தயாரித்து நிகழ்த்திய முதல் நாடகம்
பிறகொரு இந்திரஜித் (ஏவம் இந்திரஜித்-வங்காளி மூலம்; தமிழில் கோ. ராஜாராம்)
9. குழுவிற்கான சமூக அரசியல் பார்வை
எல்லாரும் தமிழில் நவீனத்துவப் பார்வையும், அரசியலில் பெரும்பாலும் காந்திய அல்லது இடதுசாரிப் பார்வையும் கொண்டவர்கள் எனலாம்.
10. இந்த அரசியல் பார்வையோடுதான் உங்கள் முதல் நாடகம் தேர்வுசெய்யப் பட்டதா?
ஆம். முக்கியமாக அப்போது எழுத்து இதழ் வழிவந்த தமிழின் நவீனத்துவப் (மாடர்னிஸ்ட்) பார்வை எங்களிடையில் பிரபலமாக இருந்தது என்று கூறலாம். அத்துடன் பாதல் சர்க்கார் போன்றவர்களின் மென்மையான இடதுசாரி நோக்கும், ஓரளவு காந்திய நோக்கும், முக்கியமாக சமுதாயத்தில் ஒரு அதிருப்தி நோக்கும் உள்ளார்ந்து இருந்தன.
11. இந்த அரசியல் பார்வை உங்கள் குழு தயாரித்து நிகழ்த்திய அனைத்து நாடகங்களிலும் எதிரொலித்ததா?
ஆம். எங்கள் நாடகங்கள் வெளிப்படையான அரசியல் பேசுபவை அல்ல. ஆனால் பாதல் சர்க்காரின் நாடகங்களையும் பரீக்ஷா ஞானியின் நாடகங்களையும் இன்ன பிறவற்றையும் நோக்குபவர்கள் அவற்றில் வெளிப்படும் அரசியல் பார்வையை உணரமுடியும். அதுவே ஓரளவு எங்கள் பார்வையாகவும் இருந்தது.
12. குழுவில் உள்ள நடிகர்களுக்கான அரசியல் புரிதலை உருவாக்க என்ன முயற்சிகள் மேற்கொள்கிறீர்கள்?
தனித்த அப்படிப்பட்ட முயற்சி எதுவும் கிடையாது. உறுப்பினர்கள் யாவருமே உயர் மத்தியதர, மத்தியதர வகுப்பினர். நன்றாகப் படித்தவர்கள். ஆகவே அவரவர் அரசியல் பார்வையும் விமரிசனமும் அவரவர்க்கு இருந்தன. முன்னர்க் கூறிய போதாமை நோக்கு என்பது அடிப்படையாக எல்லாரிடமும் உணரப்பட்ட ஒன்று.
13. குழுவில் உள்ள நடிகர்களுக்கான பயிற்சிகளை எவ்வாறு கொடுக்கிறீர்கள்? யார் கொடுப்பது?
ஒவ்வொரு நாடகத்துக்கும் பெரும்பாலும் ஒரு மாத அளவுக்கு ஒத்திகை நடக்கும். நடிப்புப் பற்றி ஒன்றும் அறியாதவர்களாக இருந்தாலும் ஒத்திகை வாயிலாக அவர்கள் “ஃபார்முக்கு” வந்து விடுவார்கள். திரு. ஜம்புநாதன்தான் பெரும்பாலும் ஒத்திகையைக் கவனித்துப் பயிற்சி அளிப்பவர். நடிப்பிலும், வசன உச்சரிப்பு போன்றவற்றிலும் திருத்தங்கள் செய்வார். பிறர் கூடியிருந்தால் அவர்களும் சொல்வோம்.
14.உங்கள் நாடகக் குழு இதுநாள்வரை தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்கள் எவை?
ஏறத்தாழப் பதினைந்துக்கு மேல் இருக்கும். பிறகொரு இந்திரஜித், ஹயவதனா, அமைதி-அமைதி கோர்ட் நடக்கிறது, வேடந்தாங்கல் போன்றவை தொடக்கக் கால நாடகங்கள், முக்கியமானவை. பிறகு ஜம்புநாதன் முயற்சியால் பத்து நாடகங்களுக்கு மேல் நிகழ்த்தப் பட்டிருக்கலாம். பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாடகங்கள்.
15. நாடகத் தயாரிப்பிற்கான செலவினங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
ஒத்திகை வரை அதிகச் செலவில்லை. தேநீர், நாடகப் பிரதி தயாரிப்பு போன்றவற்றைத் தவிர. முக்கிய ஒத்திகை (கிராண்ட் ரிஹர்சல்)இலும், நாடக அரங்கேற்றத்திலும் தான் செலவு. முக்கியமாக ஜம்புநாதனும் பிற நண்பர்கள் சிலரும் அதைப் பங்கிட்டுக் கொள்வது வழக்கம்.
16. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்திய நாடகங்களை நெறியாள்கை செய்தோர் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்.
தொடக்கத்தில் திரு. ஆல்பர்ட். பிறகு திரு. ஜம்புநாதன் மட்டுமே நாடக இயக்குநர். பிறர் உதவியாளர்கள்.
17. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களின் பேசுபொருள் என்ன?
முன்னமே கூறியதுபோல, அமைப்பின் மீதுள்ள அதிருப்தி. சமூக அக்கறை.
18. அந்நாடகங்களின் வடிவம் குறித்த உமது பார்வை என்ன?
பெரும்பாலும் ஆங்கில, கன்னட, மராட்டி, வங்காளி நாடகங்களின் மொழிபெயர்ப்பாக இருந்ததால், அவற்றின் வடிவங்கள் மூலப்படைப்பைச் சார்ந்திருந்தன. பிரெஹ்ட் போன்ற நாடகாசிரியர்களின் தாக்கம் ஓரளவு உண்டு. அதனால் அவற்றின் வடிவம் பிரதானமாக வேறுபட்டுத் தெரிந்தது. அது தமிழ் மரபிலிருந்து வந்ததல்ல. எனவே பொதுமக்களைச் சென்று சேர்வதில் தடையிருந்தது.
19. உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களின் உடை ஒப்பனை, இசை, மேடை அமைப்பு, ஒளி, ஒலிப் பயன்பாடு குறித்துச் சொல்லுங்கள்.
உடை ஒப்பனை, மேடை அமைப்பு பற்றி நண்பர்களுக்குள் நாங்களே தீர்மானித்துக் கொள்வது வழக்கம். இசையைப் பெரும்பாலும் பல்ராம் கவனித்துக் கொள்வார். ஒளி ஒலிப் பயன்பாட்டை எங்கள் ஆலோசனையின் பேரில்,திருச்சி ரசிகரஞ்சன சபா (ஆர்ஆர் சபா)வின் பணியாளரான சாமிநாதன் என்பவர் கவனித்துக் கொள்வது வழக்கம். அந்தந்த நாடகத்துக்கேற்றவாறு இவை அமைக்கப்படும்.
20. தமிழ்மண் சார்ந்த நிகழ்த்தல் மரபுக்கூறுகளை உங்கள் குழு தயாரித்து நிகழ்த்தியுள்ள நாடகங்களில் எவ்வாறு கையாண்டுள்ளீர்கள்?
இதுதான் பிரதானமான பிரச்சினை. தமிழ் மண்ணின் வெளிப்பாடுகளான கூத்து, அரையர் சேவை, காலட்சேபம் போன்றவற்றின் கூறுகள் கையாளப்படவே இல்லை என்று கூறலாம். ஆங்கிலம் படித்த உயர்மத்திய வகுப்பினரால் அதேபோன்ற வகுப்பினருக்காகத் தயாரிக்கப்பட்டவை இவை. முற்றிலும் அப்போதைய தமிழ்ச் சூழலுக்கு வேறுபட்டிருந்தன என்றுதான் கூறமுடியும்.
21. உங்கள் குழுவிலிருந்து உருவான நடிகர்கள் யார் யார்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?
நடிகர்கள் என்று முக்கியமாக எவரையும் சொல்லமுடியாது. எல்லாம் அமெச்சூர் நடிகர்கள்தான். திரு. அம்ஷன்குமார் கலைத்திரைப்படங்கள் இயக்கும் இயக்குநர் ஆகிவிட்டார். இடையில் அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது என்ற விஜய் டெண்டூல்கரின் நாடகத்தில் தொடங்கி ஒரு சில நாடகங்களில் நடித்தவர், பிஷப் ஹீபர் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்த திரு. ஏ. ஆர். முருகதாஸ். இன்று பெயர்பெற்ற திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர். அவரை உங்களுக்கே தெரியும்.
22. உங்கள் குழுவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஏதேனும் நாடகக்குழுவைத் தொடங்கி நடத்தி வருகின்றனரா?
அப்படி யாரும் இல்லை. ஆனால் திருச்சி நாடகச் சங்கத்தின் பாதிப்பினால், நான் (பேரா. க. பூரணச்சந்திரன்) மட்டும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் என் சொந்த முயற்சியால், ஊர்வலம் போன்ற ஐந்தாறு பாதல் சர்க்கார் நாடகங்கள், எங்கள் சொந்த நாடகங்கள் சிலவற்றைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தேன். சிலசமயங்களில் திருச்சியின் புறநகர்ப் பகுதிகளிலும் நடத்தியுள்ளேன். கடைசியாக நான் நிகழ்த்திய நாடகம், ‘ஈடிபஸ் அரசன்’. 2007இல் கல்லூரியின் முத்தமிழ் விழாவில் நடத்தப்பட்டது. அதற்குத் தலைமை ஏ. ஆர் . முருகதாஸ். என் நாடகங்கள் பெரும்பாலும் சமூகப் பணி முதுகலை படித்தவர்களுக்கும், சில இதழியலாளர்களுக்கும் (சான்றாக திரு. வள்ளியப்பன், தமிழ் இந்து) மக்கள் தொடர்பில் நல்ல பயனளித்தது.
23. உங்கள் குழு எங்கெல்லாம் நாடகம் நடத்தியுள்ளது?
பெரும்பாலும் திருச்சி ஆர். ஆர். சபாவில். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் என் முயற்சியால். திருச்சியின் சில புறநகர்ப் பகுதிகளில். நான் கல்லுக்குழி, பொன்னகர் போன்ற இடங்களில் நடத்தினேன். ஏறத்தாழ 2010 முதல் ஜம்புநாதன் சென்னைக்கு வந்துவிட்ட படியால், சென்னையில், பெரும்பாலும் ஃபிரெஞ்சு கான்சலேட் (அலையாஸ் ஃப்ராங்காய்ஸ்) மன்றம், மாக்ஸ்முல்லர் பவன் போன்றவற்றில்.
24. தமிழ் நவீன நாடகங்களில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
மிகக் குறைவு. திருச்சி நாடக சங்க நாடகங்களில் பெரும்பாலும் புரஃபஷனலாக நடித்துவந்த பெண்கள் சிலரையே ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. கல்லூரியில் அந்தப் பிரச்சினை இல்லை. எனது முதுகலை மாணவியர் நல்ல ஒத்துழைப்பு நல்கினர். நன்றாக நடித்தனர்.
25. உங்கள் குழுவில் பங்குபெறும் கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணி என்ன?
முன்பேகூறியது போல யாவரும் படித்து நல்ல வேலையில் இருந்த மத்தியதர வகுப்பினர். முழுக்க முழுக்க அமெச்சூர்கள். எவ்வித ஊதியமும் கருதியவர்கள் அல்ல. ஆனால் பொழுதுபோக்கான நாடகங்களைத் தயாரிக்கவும் இல்லை.
26. வருடத்திற்கு எத்தனை நாடகங்களை உருவாக்குகிறீர்கள்?
திருச்சி நாடக சங்கத்தில் 1980இல் தொடங்கி 2000 வரை ஏறத்தாழ ஆண்டுக்கு ஒன்று என்ற வீதத்தில் இருந்தது. திரு. ஜம்புநாதன் சென்னைக்கு வந்துவிட்ட பிறகு இயன்றபோது என்று ஆகிவிட்டது.
27. ஒவ்வொரு நாடகமும் எத்தனை நிகழ்வுகள் நடத்த முடிகிறது?
ஹயவதனா, அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது போன்ற ஒரு சிலவற்றைத் தவிரப் பெரும்பாலும் ஒரே ஒருமுறை மட்டுமே.
28. நாடக ஒத்திகைக்கான இடங்கள் கிடைப்பதில் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன?
எதுவும் இல்லை. காரணம், திரு. ஜம்புநாதன் அவரது வீட்டிலேயே நாடக ஒத்திகைகளை நடத்துவது வழக்கம்.
29. உங்கள் குழுவின் நாடகங்களுக்கெனக் கட்டணம் வசூலிப்பதுண்டா?
ஆர். ஆர். சபாவில் நிகழ்த்தியவற்றுக்குக் கட்டணம் உண்டு. ஆனால் வசூல் மிகமிகக் குறைவாகவே இருக்கும். காரணம், தெரிந்தவர்கள், நண்பர்கள், குழுவினர் யாரும் கட்டணம் செலுத்திப் பார்த்ததில்லை.
30. கட்டணம் வசூலிப்பதாக இருந்தால் கட்டணத் தொகை எவ்வளவு?
ஆர். ஆர். சபாவின் அக்காலக் கட்டணத் தொகைதான். பெரும்பாலும் பத்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய்க்குள்தான் இருக்கும்.
31. பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தித்தான் பார்க்கிறார்களா?
வினா 29இன் விடைதான் இதற்கு.
32. உங்கள் குழுவின் நாடகங்களுக்கென தொடர் பார்வையாளர்கள் இருக்கின்றனரா?
ஓரளவு அப்படித்தான். பார்வையாளர்களில் வெகுசிலரைத் தவிர, பெரும்பாலும் மற்றவர்கள் நாடகச் சங்க நண்பர்கள் தங்கள் தங்கள் நண்பர்களை அழைத்துவருவதுதான் வழக்கம்.
33. உங்கள் குழுவில் நடிக்க வரும் கலைஞர்கள் தொடர்ந்து நாடகச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனரா?
இல்லை. ஜம்புநாதன் ஒருவர் மட்டுமே நாடகங்களை இப்போதும் தயாரித்து வருகிறார்.
34. கல்வி வளாகங்களில் உங்கள் நாடகங்கள் நிகழ்த்தப்படுவதுண்டா?
எனது நாடகங்கள் மட்டும் பிஷப் ஹீபர் கல்லூரியிலேயே தயாரிக்கப்பட்டு அங்குள்ள திறந்த வெளி அரங்கில் நடத்தப்பட்டன.
35. கல்வி வளாகங்களில் நாடகத்திற்கான தேவை குறித்த தங்கள் பார்வை என்ன?
கண்டிப்பாக மாணவர்களுக்கு நாடகங்கள் தேவை. நாடகங்கள் மாணவர்களின் கலைத்திறனையும் வாழ்க்கைப் பார்வையையும் விசாலப்படுத்துகின்றன, நல்ல குடிமக்கள் ஆக்குகின்றன என்று கூறலாம். அவர்கள் அதில் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக சோஷியல் ஒர்க் படிக்கும் மாணவர்கள் பலர் இப்பயிற்சியால் தாங்கள் மிகவும் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் பயிற்சி தரும் ஆசிரியர்கள்தான் மிகமிகக் குறைவு. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை, நான் திரு. மு. இராமசாமி, திரு. பரீட்சா ஞாநி, திரு. சண்முகராஜா போன்ற ஆர்வலர்கள் பலரை அழைத்துப் பயிற்சி தந்திருக்கிறேன். மு. இராமசாமியின் ஸ்பார்டகஸ் நாடகம் எங்கள் பிஷப் ஹீபர் கல்லூரியில் மூன்று முறை நிகழ்ந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையில் நவீன நாடகத்தைக் கொண்டு சென்றால்தான் அது வளருவதற்கான வாய்ப்பிருக்கிறது.
36. தமிழகத்தில் நாடக முயற்சிகளுக்கு அரசு சார்ந்த பங்களிப்பு எவ்வாறு உள்ளது? அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
இப்போது நாடக முயற்சிகளுக்கு அரசு சார்ந்த பங்களிப்பு அறவே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை பல்கலைக்கழக நாடகத் துறைகளுக்கு அரசு பணம் செலவிடக் கூடும். ஆனால் எந்தத் தனியார் குழுவுக்கும் அரசு நிதி உதவியதாகத் தெரியவில்லை. மேலும் தனி நாடகக் குழுக்கள் நடத்தும் பெருமளவு நாடகங்கள் அரசு கருத்தியலுக்கு எதிராகத்தான் அமைய இயலும். அதனால் அரசின் புறக்கணிப்புதான் இருக்குமே ஒழிய ஆதரவுக்கு வழியில்லை. தமிழக அரசு பல்வேறு தலைப்புகளில் வழங்கும் பரிசுகளும் அதன் ஆதரவாளர்களுக்கே தரப்படுகின்றன. பொதுவாக தமிழில் நாடகத்துறை அரசைச் சார்ந்து வளர இயலாது. அரசு இவற்றின் பணிகளில் குறுக்கிடாமல் இருந்தாலே போதுமானது.
37. தமிழகத்தில் நவீன நாடகத்தை முழுநேரத் தொழிலாகக் கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டா?
இப்போது இல்லை. நாடகங்களைப் போட்டு வருமானம் பெற்றுக் கலைஞர்கள் வாழ முடியாது. கூத்து போன்ற பழங்கலைகளுக்கும் இதே நிலைதான். வாழ்க்கைத் தொழிலை வேறு ஒன்றாக வைத்துக்கொண்டு, அமெச்சூராகத்தான் இன்று கலைஞர்கள் இயங்க முடியும்.
38. தமிழகத்தில் கடந்த காலச் செயல்முறைகளின் மூலம் நாடகத்துறை கண்டடைந்துள்ள வளர்ச்சி எவ்வாறு உள்ளது?
பெரும்பான்மை மக்களிடையில் நவீன நாடகங்கள் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே என் கணிப்பு. பொதுமக்கள் பங்கேற்பு அதிகரிக்காமல், பரவாமல், எந்தக் கலையும் வளர முடியாது. பாமர மக்கள் பார்வையில், “இதெல்லாம் வேலையத்த வசதியான பயலுக செய்யற வேலை”.
39. நீங்கள் அறிந்துள்ள நவீன நாடகக் குழுக்கள் பற்றிச் சொல்லுங்கள்.
நான் பழைய ஆள். ந. முத்துச்சாமியின் கூத்துப்பட்டறை, மு. ராமசாமியின் நிஜநாடக இயக்கம், ஞாநியின் பரீட்சா நான் நன்கறிந்தவை. மங்கையின் நாடக அமைப்பு, முருகபூபயின் நாடக அமைப்பு, ஆறுமுகத்தின் முயற்சிகள் போன்றவற்றைக் கேள்விப்பட்டுள்ளேன். மார்க்சியக் கட்சிகள் (தமுஎச, மகஇக…) சார்ந்த நாடமுயற்சிகள் பற்றியும் அறிவேன். மற்ற பிற பற்றி எனக்குத் தெரியாது.
40. தமிழகத்தில் நவீன நாடகத்திற்கான சூழல் எவ்வாறு உள்ளது?
நன்றாக இல்லை என்பது என் கணிப்பு. சினிமா, தமிழ் நாடகத்தை முற்றிலும் அழித்துவிட்டது. அதுதான் மிகப் பெரிய எதிரி. சபாக்களில் நடத்தினாலும், மக்களிடையில் நடத்தினாலும், முதலில் பணம் தேவையாக இருக்கிறது. அரசோ, பெருமுதலாளிகளோ யாரும் இப்படிப்பட்ட நிதி உதவியில் ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை. அதனால்தான் நவீன நாடகக் குழுக்கள் குறுங்குழுக்களாகத் தங்கள் ஆர்வத்தைத் தணித்துக் கொள்வதாக உள்ளன. இவற்றில் சில அயல்நாட்டு, உள்நாட்டு அடிப்படை நிறுவனங்களை (Foundations) நம்பியும் உள்ளன.
41. மற்ற நாடகக் குழுவினரோடு உங்களது தொடர்பு எவ்வாறு உள்ளது?
பெருமளவு இல்லை என்றே கருதுகிறேன். நாடகம் நடத்தினால் அழைப்பு அனுப்புவது அளவில் உள்ளது எனலாம்.
42. உங்கள் குழு நடத்திய நாடகங்களின் ஒளிப்படங்களை இணைக்கவும்.
இணைக்கப் பட்டுள்ளது.
ஒப்பம்- முனைவர் க. பூரணச்சந்திரன்,
முன்னாள் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி-17.


வாழ்க்கையில் சில பக்கங்கள் -1

ரொம்பக் காலத்துக்கு முன்னால் நடந்த விஷயம். 1990 இறுதி அல்லது 1991 ஆக இருக்கலாம். பெரிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் என்று புகழ்பெற்ற எம்.எடி.எம்-ஐ (முத்துக்குமாரசாமியை) திருநெல்வேலியில் சந்தித்தேன். அப்போது எனது தகவல் தொடர்பு பற்றிய புத்தகம் வெளிவந்திருந்தது. “உங்கள் மொழிபெயர்ப்பில் குறைகள் உள்ளன” என்றார். “சரி சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன், சரியாக இருந்தால்” என்றேன். “(கம்யூனிகேஷன்) ‘மாடல்’ என்பதற்கு ‘நிகழ்மாதிரி’ என்று ஏன் போட்டிருக்கிறீர்கள்? நாங்கள் ‘மாதிரி’ என்றுதான் மொழிபெயர்ப்போம்” என்றார். ஒரு மொழிபெயர்ப்பாளன் இதையெல்லாம் யோசிக்காமல் செய்வதில்லை.
This model, that model என்று வரும்போதெல்லாம், இந்த நிகழ்மாதிரி, அந்த நிகழ்மாதிரி என்று எழுதினால் பொருள் விளங்கும், மயக்கம் இருக்காது. வெறுமனே ‘இந்த மாதிரி’, ‘அந்த மாதிரி’ என்று மொழிபெயர்த்தால் என்ன ஆகும்? (இதுபோல, அதுபோல என்ற அர்த்தத்தைக் கொடுத்துவிடும்.) ஆங்கிலப் பேராசிரியரான அவருக்கு அவ்வளவு ஞானம் தமிழில்!
இம்மாதிரி ஆசாமிகள்தான் எனது சல்மான் ருஷ்தீ மொழிபெயர்ப்பைக் குறைசொல்லி, அதைப் பாப்புலர் ஆகாமல் செய்தார்கள். மூல ஆசிரியர்களிடம் பேசும் அளவுக்கு அவர்களுக்குச் செல்வாக்கு இருக்கிறது. பாவம் நாங்கள் எல்லாம் விலாசம் அற்றவர்கள். என்ன செய்வது? அவர்கள் போன்றவர்கள் சொல்வதைத்தான் மற்றவர்களும் நம்புகிறார்கள்.


மேல்மட்டத்தில் இவர்கள்…

இரவு விடிந்த உடனே
ஒவ்வொருவரின் பணியும் இதுதான்:
‘வட்டாட்சியரிடம்’ செல்கிறார்கள்
‘விஏஓவிடம்’
‘மாவட்ட ஆட்சியரிடம்’
இன்னும் பல அலுவலகங்களுக்குச்
சென்று மறைகிறார்கள்.

நீங்கள் அலுவலகங்களுக்குள் நுழைந்தவுடன்
காகிதத்தாள் தொழில் பொழிகிறது
கரன்சியும் பொழிகிறது.
பெருமழைபோல கணினிகள் வந்தும்
‘நூற்றில் ஒன்றைப் பொறுக்கியெடு–
மிக முக்கியமானதை! — இவர் கேட்பதை அல்ல’.

அலுவகக் கூட்டங்களில்
சென்று மறைகிறார்கள் அதிகாரிகள்.

நான் சென்று கேட்கிறேன்:
‘இங்கே ஒருகாலத்தில் வந்திருக்கிறேன்.
அப்போது சங்கர் என்பவர் இருந்தார்
இப்போது யாரைப் பார்க்க வேண்டும்?’
‘பவானி சங்கர் இஆப
சென்றிருக்கிறார் புயல் நிவாரண
அமைச்சரிடம் ஆலோசனைக்கு’.

எண்ணற்ற படிக்கட்டுகள் காலை ஒடிக்கின்றன
ஏதோ கொஞ்சம் ஒளி மினுக்குகிறது
மறுபடியும்:
‘அடுத்தவாரம் வரச் சொல்கிறார்.
–கூட்டத்தில்: –
மின்கம்பங்கள் வாங்க வேண்டுவது தொடர்பாக
மத்தியக் குழுவிடம் நிதிக்காக’.

அடுத்த வாரம் —
எழுத்தர் ஒருவரும் வரவில்லை
அலுவலகப் பையனும் வரவில்லை
இருக்கைகள் காலி!
அத்தனை பேரும்
ஐந்தாம் மாடியில் அறிக்கைகள் தயாரிக்கும் கூட்டத்தில்.

இரவும் வந்துவிட்டது.
எனது தற்காலிக இருப்பிடத்தின் மிக உயரமான தளத்திற்கு
ஏறிக் கொண்டிருக்கிறேன்.
‘அதிகாரி வந்துவிட்டாரா?”
‘இன்னும் சந்திப்பில் இருக்கிறார்
தம்பானி குழுமப் பிரதிநிதிகளுடன்.’

அந்தக் கூட்டத்திற்குள்
பாய்கிறேன் எரிமலைக் குழம்புபோல
காட்டுத்தனமான வசைகள் உதிர்கின்றன.
அப்புறம் பார்:
அதிகாரிகள் துண்டு துண்டாக அமர்ந்திருக்கிறார்கள்
மேலே ஒன்றுமில்லை!
அவர்களின் மற்ற துண்டுகள் எங்கே?
‘வெட்டப் பட்டார்கள்!
கொல்லப் பட்டார்கள்!’

பித்துப்பிடித்தவன் போல் ஓடிக் கூச்சலிடுகிறேன்.
என் மனம் பேதலிக்கிறது.
மிக அமைதியாக ஒருவர்
சுட்டிக்காட்டுகிறார்:
‘அவர்கள் பல கூட்டங்களில் ஒரேசமயத்தில்
பங்கேற்கிறார்கள்’.
இருபது கூட்டங்களில் நாங்கள்
பங்கேற்க வேண்டும்.

இந்தவிழா அந்தவிழா நடத்த வேண்டும்
பத்துவழிச் சாலை போடவேண்டும்
பார்க்காமலே அறிக்கை தயாரிக்க வேண்டும்
மத்திய, மாநில… கேட்கவேண்டும்
தினமும்—
இன்னும் பல மிச்சம் இருக்கின்றன.
ஆகவே நாங்கள் எங்களை வெட்டிக் கொள்கிறோம்
துண்டுகளாக!

இங்கே இடுப்பு வரை
மீதிகளை அங்கே பார்.
எங்களுக்கு வேலை அதிகம்.
“கவனிக்கவேண்டும்” எங்களை
இல்லையேல் தேடியவர் கண்ணில் படுவாரா?

புதிர்நிலையில் தூங்க இயலவில்லை.
உணர்வு மழுங்கிய நிலையில்
விடியலைச் சந்திக்கிறேன்.
ம்ம், இன்னும் ஒரே ஒரு கூட்டம்
போடுங்கள்…
பாதிக்கப்படும் அனைவரையும்
ஒழிப்பதற்காக.


என் வாழ்க்கையில் ஓர் அலை

இன்று சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கை’ என்ற படத்தைப் பார்த்தேன். அதை நான் முதல் முறை பார்த்தது அநேகமாக 1966ஆம் ஆண்டு இறுதியாக இருக்கலாம். பிஎஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். ஒரு காரணத்தினால் அந்தப் படம் கொஞ்சம் என்னை மிகவும் பாதித்தது. வேறொன்றுமில்லை. அதில் வரும் கதாநாயகனுக்குக் காசநோயால் அவதிப்படும் ஒரு தங்கை இருப்பாள். அதேபோல எனக்கும் ஒரு தங்கை இருந்தாள்.
எனக்கு மூன்று வயது இளையவள். என் அப்பா ஆசையாக அறச்செல்வி என்று பெயரிட்டிருந்தார். எனக்குச் சிலகாலம் உயிராக இருந்தாள். ஆனால் காசநோய் அவளுக்கு.
காசநோய் மருத்துவ மனையில் சேர்க்கவேண்டும் என்ற அறிவுகூட என் தந்தை-தாய்க்கோ எனக்கோ இல்லை. தினமும் இருமி இருமி இரத்தம் உமிழ்ந்து அவள் படும் பாடு எவர் நெஞ்சையும் உருக்கும். பிறகு பெரிய இளைப்பு வந்து சோர்ந்து படுத்துக் கொள்வாள். சிறிய வயதிலிருந்தே அந்த நோய் தொற்றிக்கொண்டதால் அவள் வளர்ச்சியே குன்றியிருந்தது. படத்தில் வந்த தங்கை பிழைத்துக் கொண்டாள். கதாநாயகனின் காதலியாக இருந்த டாக்டர் அவளைக் காப்பாற்றிவிட்டாள். எனக்கு அப்படி யாரும் இல்லை. என் தங்கை இறந்துபோனாள்.
1968 மேயில் பட்டப்படிப்பை முடித்தேன். அநேகமாக ஜூன்மாதம் ரிசல்ட் வந்திருக்கலாம். 1968 ஆகஸ்டு 29ஆம் நாள் அணைக்கட்டு உயர்நிலைப் பள்ளியில் பயிற்சிபெறாத ஆசிரியனாகச் சேர்ந்த பிறகாவது அவளை நான் ஆஸ்பத்திரியில் சேர்த்து கவனிக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. விட்டுவிட்டேன்-எப்படியோ. அடுத்த ஆண்டு வல்லம் ஆரணி உயர்நிலைப் பள்ளிக்கு மாறினேன். (எல்லாம் தற்காலிகப் பதவிகள், ஜூன் முதல் ஏப்ரல்வரைதான் போஸ்டிங்). எழுபதாம் ஆண்டு ஜனவரியாக இருக்கலாம்-இப்போது நாள் மறந்துவிட்டது-அவள் துடிதுடித்து இறந்து போனாள். ஓரளவு சம்பாதித்தும், காப்பாற்ற முடியாத ஒரு மடத்தனமான அண்ணனாக இருந்தது பின்னர்தான் எனக்கு உறைத்தது.
அதற்குப் பிறகுதான் வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் அரசாங்கக் காசநோய் மருத்துவ மனை தொடங்கினார்கள் என்று நினைக்கிறேன். முன்னாலேயே இருந்திருந்தால் ஒருவேளை அவள் அங்குச் சேர்க்கப் பட்டிருக்கக்கூடும். நிச்சயமாகத் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கும் அளவுக்கு எங்களிடம் காசு இல்லை. அதைவிடப் பெரியது எங்கள் மடத்தனம், அறியாமை. என் பெற்றோர் மட்டுமல்ல, நானும்கூட கிராமத்தின் கள்ளமற்ற தன்மையோடு இருந்துவிட்டோம்.
அந்தக் காலத்தில் கந்துவட்டிக்குப் பணம் கடன் வாங்கியாவது என்னை என் பெற்றோர் படிக்க வைத்தார்கள். பட்டப்படிப்பை மிகவும் முதல்தரமாக (பௌதிகத்தில் டி= வாங்கி) பத்தொன்பதாம் வயதின் தொடக்கத்திலேயே முடித்திருந்தும் வழிகாட்ட ஒருவரும் இல்லை. என் கல்லூரி பௌதிகத் துறைத் தலைவர் நினைத்திருந்தால் வழிகாட்டி யிருக்கலாம். ஆனால் அந்த சுந்தரராஜ ஐயங்கார், பார்ப்பனச் சாதியினருக்கு மட்டும்தான் வழிகாட்டினார். எங்களைச் சீயென்று விரட்டிவிட்டார், ஏமாற்றினார் என்றுகூடச் சொல்லலாம். அன்று எனக்குத் தெரிந்த ஒரே வேலை ஆசிரியர் வேலைதான். மேற்கொண்டு வேறு என்ன படிக்கலாம், என்ன வேலை செய்யலாம்-எதுவும் தெரியாது.

பதினேழு வயதில் இறந்துபோன என் தங்கையை இன்று நினைத்துக் கொள்கிறேன். 49 ஆண்டுகள் ஆயிற்று. அவள் முகம் என்னைக் குற்றம் சாட்டுகிறது. ஆனால் என்னசெய்ய?
சரி, இன்னொரு நாள் இன்னொரு அலையைக் காணலாம்.


ஜீவனாம்சம்

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மணவிலக்கு நடைபெறுவது அதிகம் என்பது நமக்குத் தெரியும். அச்சமயத்தில் ஆண், பெண்ணுக்கு மணவிலக்குத் தொகை (ஜீவனாம்சம்) பல சமயங்களில் தரவேண்டி வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் மிக அதிகமான மணவிலக்குத் தொகை தரவேண்டி ஆடவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இது:

ஒரு நீதிபதி பெண்ணுக்கு மேலும் அதிக ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்: கணவன் ஏற்கெனவே தன் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியை மனைவிக்கு ஜீவனாம்சமாகத் தர ஒப்புக் கொண்டுவிட்டான்.

“நீ இரண்டாம் 1/3 பகுதியைத் தரவேண்டும்” என்றார் நடுவர்.
“முடியாது, நான் ஏற்கெனவே அதைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றான் அந்த ஆள்.
“அப்படியா? அப்போது மூன்றாம் 1/3 பகுதியையும் தரவேண்டும்”.
“முடியாது, அதையும் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.”
“என்ன சொல்கிறாய்? உனது ஊதியம் முழுவதையும் முன்னாள் மனைவியருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? அப்படியானால் எதை வைத்து வாழ்கிறாய்?”
“என் மனைவி வேறு ஐந்து ஆண்களிடமிருந்து பெறும் ஜீவனாம்சத்தை வைத்து” என்றான் அந்த ஆள்.


பெண்கள் பற்றி லெனின்

ஒரு சமூகத்தின் முன்னேறிய அல்லது பின்தங்கிய இயல்பினை ஒரே ஒரு அடிப்படையில் மதிப்பிட முடியும் என்று லெனின் ஆழமாக நம்பினார். அதாவது, அது பெண்களை எவ்விதம் நடத்துகிறது என்பது. லெனின் தமது பேச்சுகளில் அவ்வப்போது சமூகத்தை மதிப்பிட ஃபூரியரின் அமிலச் சோதனையைத் திரும்பக் கூறுவது வழக்கம். அது Charles Fourier, ‘Degradation of Women in Civilisation’, in The’orie des Quatre Mouvements et des Destine’es Ge’ne’rales, 3rd ed., Paris, 1808 என்ற நூலில் இடம் பெற்ற கருத்தாகும்.

“பெண்களுக்கு நேரிட்ட விதியில் நீதியின் நிழலேனும் இருக்கிறதா? ஒரு இளம் பெண் தனது முழுச்சொத்தாக நினைக்கும், மிக அதிகமான விலைகொடுப்பவனுக்கு வெறும் வியாபாரப் பொருளாகக் காட்சியில் வைக்கப்படவில்லையா? ஓர் ஏளனமான திருமணப் பிணைப்புக்கு அவள் தரும் சம்மதம், அவளது குழந்தைப் பருவத்திலிருந்து பேயாட்டம் இடுகின்ற முற்சாய்வுகளின் கொடுங்கோன்மையினால் அவள்மீது திணிக்கப்பட்டது அல்லவா? மக்கள் அவளது சங்கிலிகள் பூக்களால் ஆக்கப்பட்டவை என்று கருதவைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவள் தன் கீழ்மையில் ஏதேனும் சந்தேகம் கொள்ள முடியுமா?
தத்துவங்களில் ஊதிப் பெருத்த இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் ஆடவன் ஒருவனுக்குத் தன் மனைவியைக் கழுத்தில் கயிற்றைக் கட்டி சந்தைக்குக் கொண்டு சென்று ஒரு சுமைதூக்கும் விலங்கைப் போல நல்ல விலைக்குக் கேட்பவனுக்கு விற்றுவிடும் உரிமை இருக்கிறது.
ஒரு நாகரிகமற்ற காலத்தில் மெய்யாகவே நாசவேலைக்காரர்களின் கழகமாக இருந்த கத்தோலிக்க மேகன் கவுன்சில், பெண்களுக்கு ஆன்மா உண்டா இல்லையா என்று வாதிட்டு, மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் இருக்கிறது என்று உடன்படவில்லையா? அதைவிட இப்போதுள்ள பொதுமக்கள் கருத்து உயர்வாக இருக்கிறதா?
ஒழுக்கவாதிகள் ஆங்கிலச் சட்டத்தை மிக உயர்வானதென்று புகழ்கிறார்கள். அது ஆடவனுக்குத் தன் மனைவியின் ஏற்கப்பட்ட காதலன்மீது வழக்கிட்டுப் பண இழப்பீடு கேட்கின்ற உரிமை உள்பட எத்தனையோ உரிமைகளைப் பெண்களை இழிவுபடுத்துவதற்கு அளிக்கவில்லையா? ஃபிரெஞ்சு வடிவங்கள் சற்றே கடுமை குறைந்தவையாக இருந்தாலும் அடியில் எப்போதும் அதேமாதிரி அடிமைத் தனம்தான் இருக்கிறது…
பொதுவானதொரு கொள்கையாக: “பெண்கள் சுதந்திரத்தை நோக்கி முன்னேறும் அளவுக்கு சமூக முன்னேற்றமும் வரலாற்று மாற்றங்களும் உண்டாகின்றன. பெண்களின் சுதந்திரம் குறையும்போது சமூக ஒழுங்கின் நசிவு ஏற்படுகிறது.”
இன்று உலகத்திலிருக்கும் சமூகங்களின் மதிப்பீட்டுக்கான அடிப்படைகளில் ஒன்றாக (இது ஒன்றே போதாது என்றால்) மேற்கண்ட கடைசி வாக்கியம் அமைகிறது.


இன்றைய செய்தி

இன்று வையவன் என்ற எழுத்தாளர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். என்னை விட வயதில் பத்தாண்டுகள் மூத்தவர். அடையாறு வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நூலை வெளியிட்டது பற்றியும் அவர் அனுப்பிய பிடிஎஃப் கோப்பில் தகவல்கள் இருந்தன. பேச்சிலேயே பிராமணர் என்பது தெரிந்தது. வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் (பள்ளிகொண்டாவில் பணி செய்தவர்). அவர் சொன்னதில் என்னை உறுத்திய விஷயம் ஒன்றே ஒன்று. தான் உறுதியான மாறாத சலனமற்ற மனநிலையை அடைந்து விட்டதாகக் கூறினார். அதில் வெளியான “நான்” என்பது என்னை உறுத்தியது. நான் என்ற விஷயத்தைத் தகர்க்காமல் எதை அடைய முடியும்? உறுதி என்பது மரணம்தான். அதுவரை மாறிக் கொண்டுதான் இருக்கிறோம். அதைத்தான் க்ஷணபங்க நியாயம் என்பதன் வாயிலாக புத்தர் கூறினார்.
முதலில் அவர் தமது அமைப்பில் என்னை அழைத்துப் பாராட்டுவதாகக் கூறினார். பேச்சின் போக்கில் நான் கடவுளை நம்பாதவன் என்று தெரிவித்தேன், ஆனால் அவரோ பகவத்கீதையை மொழிபெயர்த்தவர், ஆழ்ந்த பக்திமான் என்பதற்குமேல் இந்து என்பதில் பெருமை கொண்டவர். அவர் கருத்துகளுக்கு உடன்படாதவன் நான் என்றதும் தனது பேச்சை மாற்றிக் கொண்டார். சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடினேன். ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பார்ப்பனியத்தை நம் நாட்டிலிருந்து ஒழிக்க முடியாது என்பதும் புரிந்தது.
பேசிய பிறகு அவருக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பினேன். அதன் சாராம்சம் இதுதான். சலனமின்றி இருப்பது, தியானம், ஏன் முக்தியடைதல் எல்லாம் ஒருவருடைய நன்மைக்கு உதவலாம். சமுதாயத்திற்கு அதனால் என்ன பயன்? ஆதிகாலத்திலிருந்து அதைத்தானே இந்தியாவில் வலியுறுத்தினார்கள்? அதனால் சமூக அவலங்கள் ஏதேனும் தீர்ந்ததா? “சமூகத்திற்கு நம்மாலான பணியைச் செய்தால் அது போதும் எனக்கு” என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவரை உரையாடல் இறுதியில் கசப்புதான் மிஞ்சியது. பார்ப்பனர்கள் யாரோடு கருத்தியல் ரீதியாகப் பேசினாலும் ஏற்படுவது அதுதான். (இதற்கு ஒரே விதிவிலக்காக நான் கண்டவர் ஈழத்து பத்மநாப ஐயர்.)


நான் ஒரு வாத்யாருங்க…

This poem is dedicated to all TEACHERS

I AM A_ TEACHER…

I May be a School Teacher,
I May be a College Lecturer,
I May be a University Professor !

Behind That Doctor,
It is Me, a Teacher •••

Behind That Engineer,
It is Me, a Teacher •••

Behind That Statistician,
It is Me, a Teacher •••

Behind That Nuclear Physicist,
It is Me, a Teacher•••

Behind That Mathematician,
It is Me, a Teacher •••

Behind That Scientist,
It is Me, a Teacher •••

Behind That Zoologist,
It is Me, a Teacher •••

Behind That Entomologist,
It is Me, a Teacher •••

Behind That Botanist,
It is Me, a Teacher •••

Behind That Economist,
It is Me, a Teacher •••

Behind That Entrepreneur,
It is Me, a Teacher •••

Behind That Lawyer,
It is Me, a Teacher •••

Behind That Political Scientist,
It is Me, a Teacher •••

Behind That Psychologist,
It is Me, a Teacher •••

Behind That Architect,
It is Me, a Teacher •••

Behind That Astrologer,
It is Me, a Teacher •••

Behind That Astronomer,
It is Me, a Teacher •••

I Carry the Light Even though they mostly make Fun of Me by their Uncharitable Jokes •••

But I am a Teacher •••

I don’t Qualify for a Bungalow or a Villa nor Earn enough to buy an Expensive House or a Car like Corrupt Officers and Corrupt Politicians.

But Yes, I am a Teacher •••

Some Think or even Say that I have too many Holidays. They never know that I Spend those Holidays either correcting Papers or Planning what and how I am going to Teach when I go back to Blackboard or Whiteboard …

Because I am a Teacher •••

Sometimes I get Confused and even get Stressed by the Ever-changing Policies over what and how I have to Teach …

Despite All That, I am a Teacher and I Love to Teach and I am Teaching •••

On Pay-days I don’t Laugh as Corrupt Officers and Others do, But by the Next day I Love to come with a Smile to those that I Teach …

Because I am a Teacher •••

The main Source of My Satisfaction is when I see them Grow. I See them Succeed. I See them having all those Assets. I See them Bravely Face the World and its Challenges. And I Say yes I have Taught in Spite of Living in a World Opened by Google…

Because I am a Teacher ••• Yes I am a Teacher •••

It doesn’t Matter how they Look at Me, It doesn’t Matter how much more they Earn than I Do.

It Doesn’t Matter that they Drive while I Walk because All what they have is through Me, A Teacher …

Whether they Acknowledge Me or Not … I am a Teacher ….