புனைவின் அடிப்படைகள்

புனைதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்தே நம்மிடம் உள்ள சக்தி – எவரும் புனைய முடியும். ஆனால் புனைதலுக்கு நாம் முனைவதில்லை.

(புனைதல் – முனைதல்). முனைகின்றவர்கள் புனைகதையாளர்களாகவோ கவிஞர்களாகவோ ஆகின்றனர்.

எழுத ஆரம்பியுங்கள்!

புனைதலும் கலையே, புதிதாக இங்கு சற்றே

முனைதலும் கலையே, மழையில் சற்றே

நனைதலும் கலையே, புதிதாக எதையும்

வனைதலும் கலையே

என்று எழுதிக் கொண்டே போய்விடலாம்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக்குணம்.

சுருக்கம்தான் கவிதைக்கு அடிப்படை. ஹைக்கூ வடிவம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். சுருக்கமாக, படிமங்களை நெஞ்சில் உருவாக்குவதாக இருக்கவேண்டும். சுஜாதாவின் ஹைக்கூ ஒன்று.   

‘விண்வெளிக்கு சென்று திரும்பினான்

வயதாகிவிட்டது  காதலிக்கு’

இதை அடிப்படையாக வைத்தே ஒரு கதை எழுதிவிடலாமே.

இருமை எதிர்வுகளைக் கையாளுதல் கவிதையின் அமைப்புக்கு அடிப்படை. உதாரணமாக அருணகிரிநாதர் எவ்வளவு இயல்பாக- இறைவனை வருணிப்பதில்- இருமைகளைக் கையாளுகிறார் பாருங்கள். (ஆனால் எல்லாமே எதிர்வுகள் அல்ல) 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் குகனே.

உடனே நீங்கள் எழுதத் தொடங்கலாம்–

தருவாய் தருவாய் என்று அரசாங்கம் எனைப் பிடுங்க

வருவாய் மொத்தமும் தந்து ஓட்டாண்டியாய் நிற்கிறேன்

குருவாய் நீ வரவேண்டாம் இடமில்லை வீட்டில்

தருவாய் வரியற்ற வருவாய் முருகா.

என்று எழுதிக் கொண்டே செல்லலாம்.

அண்மைகளை நிறுத்திக் கவிதை ஆக்குவதற்கு மற்றொரு உதாரணம்–

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி

உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி யான் எனது என்று அவரவரைக்

கூத்தாட்டுவானாகி நின்றாய்…

வெறுமனே எதிர்வுகள் அல்லது அண்மைகளை நிறுத்துவதை விட ஒரு சூழலுக்கேற்ப நிறுத்துவது மிக நல்ல கவிதையாகிறது. கூடவே ஒரு சந்தம் அமைந்துவிட்டால், ஆஹா, அற்புதம்தான்.

லிமரிக் என்ற கவிதை வடிவத்தைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா பேசியிருக்கிறார்.

ஓர் ஆங்கில உதாரணம் பார்க்கலாம்.

There was a young lady named Bright
Who travelled much faster than light,
She started one day
In the relative way
And returned on the previous night

இங்கே ஒளியைவிட வேகமாகச் செல்லக்கூடிய பொருளோ அலையோ எதுவும் இல்லை என்ற பெளதிகம் தெரிந்திருந்தால் இதன் பொருள் எளிதில் தெரியும். ரிலடிவ் வே என்பது ஐன்ஸ்டீனின் ரிலடிவிடி தியரியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. சுஜாதாவுடைய லிமரிக் ஒன்று.

வள்ளுவரும் மாணவராய் ஆனார்

திருக்குறளில் தேர்வெழுதப் போனார்

முடிவு வெளியாச்சு

ஃபெயிலாகிப் போச்சு

பாவம் அவர் படிக்கவில்லை கோனார்.   

நமக்குக் கவிதை எழுத குறுந்தொகை நல்ல முன்மாதிரியாக அமையும். 

யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்…

குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென்றது என் தூஉ நெஞ்சம்…

இம்மாதிரி ஒருமாதிரி சொற்களைத் தேர்ந்தெடுத்தல் கவிதைக்கு அடிப்படை. அத்துடன் உங்கள் உள்ளத்திலும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு நெருப்பு இருந்தால் அங்கே உயர்ந்த கவிதையே பிறந்துவிடும்.

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…

கவிதைக்கு யாப்பு கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது கவிதைக்கு இசைந்ததாகத் தானாக வரவேண்டும். உதாரணமாக ஞானக்கூத்தன் கவிதை ஒன்று. வழக்கமான நான்குசீர் பாணியிலிருந்து மாறி மூன்று சீர் அடி என்ற பாணியை எவ்வளவு ஜாலியாகக் கையாளுகிறார் பாருங்கள்.   

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனை பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

யாப்பு என்பதற்காக மட்டும் இதை மேற்கோள் காட்டவில்லை. இதிலுள்ள நயமான அங்கதத்தை இரசிக்க வேண்டும்.

இப்போது கவிதைக்கு மிகவும் அடிப்படையாகத் தேவையான மற்றொரு பண்பை அடைகிறோம். அங்கதம்.

அலெக்சாண்டர் போப் என்று ஒரு ஆங்கிலக் கவிஞர். The Rape of the Lock என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு சிறு விஷயத்தைக் காவிய நடையில் எழுதிய கவிதை இது. பெலிண்டா என்ற உயர்குலப் பெண்ணின் தலைமுடிச் சிறுகற்றை ஒன்றை ஒரு பிரபு வெட்டித்திருட முயற்சி செய்கிறான். அதுதான் ரேப் ஆஃப் தி லாக்.

அதனால் கவிதைகள் எல்லாமே அங்கதமாகத்தான் இ்ருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஞானக்கூத்தன் அப்படிப்பட்ட கவிதைகளை நிறைய எழுதியிருக்கிறார். பொதுவாக ஒரு நல்ல மனச்சித்திரம் இருந்தாலே ஒரு கவிதை ஆகிவிடும். உதாரணம். கிணற்றில் விழுந்த நிலவு. வைத்தீஸ்வரனுடைய கவிதை. முதல் கவிதை.

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு

நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு

மணக்கும் அவள் உடலை மணல்மீது தோயவிடு… என்று செல்கிறது அந்தக் கவிதை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள், யாப்பு, எதுகை, மோனை, சந்தம் எவ்வளவு இயல்பாக அமைகின்றன என்பது.

இதைச் சொல்லும்போது கவிஞர் சி. மணி எழுதிய நரகம் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. மூன்று மூன்று அசையாக அவர் எழுதும் காட்சி சுவையானது.

உள்ளங்கைக் கோடுகள் / இருளில் மறையும் வேளை / தந்த துணிவு செங்கையை / உந்த நின்ற தையலர் / தலைவன் வரவும் சற்றே / உயரும் தலைவி விழியாக / மறைக்கும் சேலை சாண்தூக்கி / காக்கும் செருப்பை உதறிவிட்டு…

இப்படி இயல்பான யாப்புடன் எழுதுவதுதான் நமது பாரம்பரியம். ஆனால், பாவம் சி.சு. செல்லப்பா பாராட்டிய நல்ல கவிஞர்கள் பெரும் இழித்துரைப்புக்கு ஆளானார்கள். மாறாக ராஜவீணை ராஜ ராகம் இசைக்கிறது என்றெல்லாம் அடுக்கிய வெற்றுச் சொற்றொடர்கள் கவிதைகளாகக் கருதப்பட்டு அந்தப் பாரம்பரியம் வைரமுத்து வரை தொடர்கிறது.

கவிதை எழுதுவது ஈசியா, உரைநடை–சிறுகதை எழுதுவது ஈசியா? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிவம் கைவருகிறது. இந்த இரண்டுமே கைவந்தவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் கவிதைகளை அநேகமாக யாரும் கண்டுகொள்வதில்லை.

      “வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்

                சாதத்துக் காகச் சங்கரனை விற்றிடுவோம்!

                ஆத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சைக் கதைபேசி

                வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்!

என்று அந்தக் காலத்திலேயே பாடியவர் புதுமைப்பித்தன். வேளூர் கந்தசாமிப் பிள்ளை என்ற பெயரில் எழுதிய அவரது மகாகாவியம், ஓடாதீர், இருட்டு போன்ற கவிதைகளைப் படித்தால் ஏளனமும் கிண்டலும் எப்படி யாப்புடன் வந்து அணி செய்கின்றன என்பதைக் காணலாம். உதாரணமாக, ஓடாதீர் என்ற கவிதை.

சொல்லுக்குச் சோர்வேது, சோகக் கதை என்றால் சோடி இரண்டு ரூபாய் காதல் கதை என்றால் கைநிறையத் தரவேணும் ஆசாரக் கதை என்றால் ஆளுக்கு ஏற்றது போல், பேரம் குறையாது–பேச்சுக்கு மாற்றில்லை…

என்று வளர்த்துக் கொண்டுபோய், “காசை வையும் கீழே, பின் கனவுதனை வாங்கும்” என்று கொண்டுசெல்கிறார்.

அது என்னவோ, சிறுகதையாசிரியர்கள் பலருக்கும் கவிதைமீது ஒரு காதல். ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் போல சிறு கவிதைகளை முயன்றுள்ளார். உதாரணமாக, ஒரு சிறிய கவிதை இது.

கைகேயி கெட்டவள் அல்ல, கூனிகூடக் கெட்டவள் அல்ல,

காடுவரை போனவனைப் பாதிவழிபோய் மறித்து

பாதுகையைப் பறித்துவந்தான் பரதனே பாவி…

கடைசியாக, கதை எழுதுவதைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா? அதைப் பற்றியும் ஒரு சிறு மேற்கோளோடு முடித்துக்கொள்கிறேன்.        

சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப் பற்றி சுஜாதா சொன்னார்.    

முதல் வரியிலேயே  வாசகனை கவருங்கள். தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள். அடுத்தவரியில் தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லைஎன்று மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு…’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.

எதிர்ப்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.

கடைசியாக, இதோ சிறுகதை எழுதுவதைப் பற்றி–எதை எழுத வேண்டும் என்பதைப் பற்றிப் புதுமைப்பித்தன் சொல்கிறார் கேளுங்கள்.

“இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபச்சாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”  ஆகவே நேராக மனத்தில் பட்ட உங்கள் அனுபவங்களை அப்படியே எழுதுங்கள். செயற்கையாகக் கதையையோ கவிதையையோ செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு முடித்துவிடுகிறேன்.


மொழி குறித்த ஒரு சந்தேகம்

கேள்வி (விவேக்): வணக்கம் மாமா, ஆங்கில உரையாடல்களில் ஒருவர், well!, how are you? என்று பேசுகிறார் என்றால், ‘well’ என்ற சொல்லை தமிழில் எப்படி மொழிப்பெயர்ப்பு செய்வது?

பதில் : Well, your question is not correct. In speech, each and every language has its own customs and we need not/ should not translate them.

1) well என்ற சொல் அது ஒரு உரையாடலின் தொடர்ச்சியாக வருகிறது என்பதைக் காட்டுகிறது. கட்டாயம் மொழிபெயர்த்தாக வேண்டுமென்றால், ‘சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்கலாம். (இங்கும் சரி… என்பது உரையாடலின் தொடர்ச்சியே.)

2) ஒரு ஜோக் உண்டு. தமிழில் “நீ உன் குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை?” என்று கேட்பதை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க லாம்? how manyieth issue are you in your family என்றா? அதனால் தான் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பேச்சு மரபு உண்டு என்றேன்.

அவரவர் மொழியின் வழக்காற்றை அந்தந்த மொழியில் பயன்படுத்த வேண்டுமே அன்றி, மறறொரு மொழியின் வழக்காற்றை அல்ல. அதனால்தான் கேள்வி தவறு என்றேன்.
மேலும் ஒரு தெளிவாக்கம்.

3) மொழிப்பெயர்ப்பு அல்ல, மொழிபெயர்ப்பு-தான்.

வல்லினம் மிகும் இடங்களுக்கு வல்லின ஒற்று போடாமல் விடுவதை விட, தேவையற்ற இடங்களில் போடுவது மிகக் கொடுமையானது. இப்போதெல்லாம் தவறான வழக்குகளை யாராவது கொண்டுவந்துவிட, அதை அப்படியே பின்பற்றிவிடுகிறார்கள். உதாரணமாக, புகைப்பிடிப்பது. [ஓரெழுத்துச் சொல் (கைப் பிள்ளை) லுக்குப் பின், இரண்டாம் வேற்றுமையில் ஐ உருபு-க்குப் பின் (அதைச் செய்வது) வல்லெழுத்து வரலாம். மற்ற இடங்களில் வரலாகாது.]

இப்படித்தான் ஒரு கூமுட்டை நடிகன் அருணாசலம் என்ற சொல்லை “அருணாச்சலம்” என்று எழுதப்போக அதையே பின்பற்றுகிறார்கள் மற்ற கூமுட்டைகள். இப்படித்தான் தமிழ் கெடுகிறது. (ஆனால் சினிமாத்துறையில் இருந்த பஞ்சு அருணாசலம், இறுதிவ‍ரை தன் பெயரை அருணாசலம் என்றுதான் எழுதிவந்தார் என்பதை கவனிக்கவும், அந்தக் கூமுட்டை நடிகனுக்காகத் தன் பெயரை அவர் தவறாக எழுதவில்லை).




மகாபாரதம் பற்றி மேலும் சில…

மேலும் உனது கேள்விகளுக்கெல்லாம் பதில்களை இங்கே தொகுத்துத் தருகிறேன். இத்துடன் முடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

க பூரணச்சந்திரன்: 1. சாந்தனு செய்தது, அவன் மனைவி கங்கை செய்தது எல்லாமே தவறுதான். ஓரவஞ்சனை.
2. ஒரு மனிதன் தன் செயல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறான், வெறும் சொற்களால் அல்ல என்பது உண்மை என்றால், மகாபாரதத்தின் அத்தனை கேரக்டர்களும் தவறு செய்தவர்கள், தீயவர்கள்தான். அதில் சந்தேகமேயில்லை.

3. தன் தம்பியின் சுயம்வரத்திற்கு பீஷ்மன் சென்றது தவறு. சென்றது மட்டுமல்ல, மூன்று பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்தது மிகமிகத் தவறு. அது அவனது பிரம்மச் சரியத்துக்கு ஏற்றதும் அல்ல. ஏன் விசித்திரவீரியன் செல்லவில்லை என்று தெரியவில்லை. சுயம்வரத்தில் பெண்தான் நாயகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு பீஷ்மன் ஒரு பெண் தேவைப் பட்டதற்கு மூன்றுபேரை தூக்கிக் கொண்டுவருகிறான். இதுவே முரண்பாடுதான். (எந்த மூலிகை பயன்படும் என்று தெரியாமல் அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தது போல இருக்கிறது இது). அம்‍பை ஏற்கெனவே ஒருவனை வரித்தவள் என்று தெரிந்து அவளை அவள் தந்தையின் இடத்திலேயே விட்டிருக்க வேண்டும். மற்றப் பெண்களை தூக்கி வந்தது காட்டு தர்பார். வல்லான் வகுத்ததே வாய்க்கால். ஆணாதிககத்தின் உச்சம்.
4. மகாபாரதக் கதை மாந்தர்க்கு குடும்ப வரைபடமே தேவை யில்லை. ஒருவனும் முறையாகப் பிறந்தவன் அல்ல. ஆனால் அதுதான் கதையின் தெய்விகத் தன்மையை காட்டுகிறது என்கிறார்கள். (எல்லாமே அற்புதச் செயல்கள் அல்லவா?)மேலும் குந்தியுடனும் மாத்ரியுடனும் உறவு வைப்பவர்கள் எல்லாமே தேவர்கள் அல்லவா? அவ்வளவு உயர்ந்தவர்கள் எல்லாரும். (அல்லது தேவர்கள் அத்தனை பேருமே அவ்வளவு இழிந்தவர்கள் என்றும் கொள்ளலாம். புராண தேவர்களுக்கு பெண்களைக் கூடி பிள்ளை தருவதை விட வேறு வேலை இருந்ததாகத் தெரியவில்லை).

தமிழர் ஒழுக்கம் இலட்சியப் படுத்தப் பட்டதுதான் (stylized). ஆனால் உலகியலுடன் நெருக்கமானது. மகாபாரதம் முற்றிலும் புனைவு. அதாவது உயர்ந்த மேன்மையான மனிதர்கள் முயன்றால் தமிழர்தம் இலட்சிய வாழ்வை அடையலாம். பாரதத்தில் போல எந்த மேன்மையான மனிதனும் சூரியனுடனும் யமனுடனும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது.

5. மகாபாரதம் ஒரு பங்காளிச் சண்டை என்பதற்கு மேல் வேறில்லை என்பது உண்மை.

6. கிருஷ்ணனைப் பற்றி நீ‍ கேட்கும் கேள்விகளைக் கேட்டால் அதெல்லாம் அவரவர் தலைவிதி என்று கூறிவிடுவாரகள். கர்ணன் குந்தி புத்திரன் என்பதை வெளிப்படுத்தியிருந்தால் மகா பாரதப் போரே நடந்திருக்காது. பாண்டவர்கள் கர்ணனிடம் தஞ்சமடைந் திருப்பார்கள். துரியோதனனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். எல்லாம் சுபம். ஆனால் அப்படி நடக்கலாகாது என்பதற் காகத்தான் இந்தக் கதைத் திருப்பங்கள் வைக்கப் படுகின்றன.

கடைசியாக, பாரதத்தை நீ நல்ல விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறாய். இதில் கதையமைப்பில் உள்ள தவறுகளாக நீ சுட்டிக் காட்டுவன சரியானவை, ஏற்கத் தக்கவை. ஆனால் ஒரு புராணக் கதையில், ஒரு பக்கம் கடவுளர்களும், மறுபக்கம் மனிதர்களும் ஊடாடும் ஒரு கதையில், எப்படி நல்லது கெட்டது என்பதை தீர்மானிப்பது? கேரக்டர்களும் அப்படியே தீர்மானிக்கப்பட முடியாதவை. பாரதக் கதையில் எனக்கு முக்கியமாகப் படும் சில நீதிகள்.

பங்காளிச் சண்டை, குறிப்பாக மண்ணுக்காகச் சண்டை கூடாது. அது அனைத்தையும் அழித்து விடும்.

பெண்களை இழிவுபடுத்தக் கூடாது (பாஞ்சாலியை துரியோதனன் செய்ததைப் போல, அல்லது மூன்று பெண்களை பீஷ்மன் தூக்கி வந்தத‍ைப் போல…)இவை அனைத்துமே மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. பாஞ்சாலி சபதம் செய்ய வில்லை என்றால் பாரதப் போர் நடக்கக் காரணம் இல்லை. பாண்டவர்கள் எதுவும் வாங்காமல்கூடப் போயிருப்பார்கள். துகில் உரிக்கும்போதுதான் பீமன் துரியோததனைக் கொல்வதாகச் சபதம் செய்கிறான். அதேபோல அமபையும சிகண்டியாப் பிறந்து பீஷ்மனைக் கொல்கிறாள். பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது இராமாயணத்தைவிட மகாபாரதத்தில் முனைப்பாக இருக்கிறது.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல பண்புகள், தீய பண்புகள் அனைத்துமே உள்ளன. உண்மையில் முற்றிலும் நல்லவன் என்றோ, தீயவன் என்றோ ஒருவனும் இல்லை. பலசமயம் நடத்தைப் பிறழ்வுகள்தான் உண்டு. இது இன்றைய உளவியல் நோக்கிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே எந்த மனிதனையும் அநாவசியமாக வெறுக்கவோ, அளவுக்கு அதிகமாக நேசிக்கவோ தேவையில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு நடுநிலை தேவைப் படுகிறது.

இம்மாதிரிக் கருத்துகளைச் சொல்ல வந்ததாகத்தான் பாரதம் தோன்றியதாகப் படுகிறது. ஆனால் அந்தக்கால பிராமணர்களுக்கு இது போதியதாக இருந்திருக்காது. அதனால் எவனோ ஒருவன் தங்களுக்குச் சார்பாக, சாதியை வலியுறுத்த வேண்டி பகவத்கீதையை எழுதி இடையில் புகுத்திவிட்டான்.

கர்ணனை அவமானப் படுத்துமிடங்களிலும் ஏகலைவன் கதையிலும்…இப்படிப் பல இடங்களில் சாதி நிலைநிறுத்தத்தான் படுகிறது. அதில் சந்தேகமில்லை. மிக முக்கியமாக கவனத்தில் வராத சின்னச் சின்ன இடங்களில்கூட சாதித் தன்மை நோக்கப் படுகிறது. உதாரணமாக, குந்தி பாண்டவர்களுக்கு பதிலாக, ஒரு காட்டுச் சாதியினர் பிள்ளைகள் ஐவரையும் அவர்கள் தாயையும் அரக்கு மாளிகையில் படுக்க ஏற்பாடு செய்கிறாள். அவர்கள் கீழ்ச்சாதி என்பதால் திட்டமிட்டு எரிக்கப்படுகிறார்கள்.
பகவத் கீதை ஏற்கெனவே உள்ள சாதியமைப்பை இன்னும் அதிகமாக வலியுறுத்துகிறது. பிராமணர்கள், ஊழ்வினை, ஜாதிக்கொரு நீதி ஆகிய தங்கள் முக்கியமான கருத்துகளைக் கதையில் புகுத்தியும் ஆயிற்று. முடிந்தது மகாபாரதம்.

விவேக்: நன்றி மாமா.


மகாபாரதம் பற்றிய சிந்தனைகள்…

Vivek GK: ஆனால் ஏன் இந்த கண்ணோட்டத்தில் கீதை ஆராயப்படுவதில்லை…. இந்தியாவில் காந்தி, நேரு முதல் அப்துல் கலாம் வரை கீதையை புகழ்ந்திருக்கிறார்கள்…. மற்றும் western philosphers like Thoreau, Emerson, Herman Hesse to scientist Robert Oppenheimer… இவர்கள் அனைவரும் அதை புகழ்கிறார்கள்….
ஆனால் காந்தியை கொன்ற கோட்ஸேவும் கீதை தான் தன்னை influence செய்ததாக கூறுகிறான்… This is the reason I hate the concept of religious texts… The moral is twisted by people according to their desires…
என்னுடைய ஆதங்கம்… திருக்குறள் போன்ற அறம் போற்றும் தமிழ் text கீதை போன்ற sanskrit text overshadow செய்வது தான்…
ஒருவேளை கீதை மக்கள் self-identity செய்து கொள்ளும் வகையில், ஒரு grand romantic narrative கொடுப்பதால் (தர்மத்தின் பக்கம் தான் நின்று போர் செய்யும் தருவாயில் தன் சொந்தங்களே தனக்கு எதிராக நிற்பது) தான் popular ஆக‌ இருக்கிறதோ?…

க பூரணச்சந்திரன்: மக்கள் தர்மம் (நீதி) என்பது தர்மனின்/யுதிஷ்டிரனின் (பெயரையே பார்) பக்கமே இருப்பதாக மூளைச் சலவை செய்யப்படுகிறது என்பதுதான். மகாபாரதத்தில் நீதி எவர் பக்கமும் இல்லை. காரணம், மண்ணாசை என்று சொல்லப்படுகிறது. சாந்தனுவின் வம்சத்தில் மூத்தமகன் திருதராஷ்டிரன். அவனது மூத்தமகன் துரியோதனன். பழங்காலத்தில் மூத்த மகன்களே வாரிசுகள். அப்படியிருக்க பாண்டுவின் மகன்களுக்கு ஆட்சியுரிமை எங்கிருந்து வரும்? பாண்டு திருதராஷ்டிரன் சார்பாக ஆண்டுவந்தவன்தானே? இப்படி ஆரம்பத்திலிருந்தே கோளாறுகள். எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் திணிக்கப்படுகின்றன. அதனால்தான் புவிமன்னர்கள் யாவரும் சமமாகவே இரு பக்கமும் பிரிந்து நிற்கிறார்கள். உண்மையில் தர்மம் என்பது ஒன்றானால், அனைவருக்கும் அது தெரிந்தது தானே? கடைசிவரையிலும் பாண்டவர்களும் தவறுதானே செய்கிறார்கள்? (கிருஷ்ணனின் தூண்டுதலால் துரியோதனை இடைக்குக் கீழ் அடித்துக் கொல்லவில்லையா பீமன்? ஜெயிக்க வேறு வழி இல்லையே?) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற பொய்சொல்லியே ஜெயிக்கிறான் தருமன். இதெல்லாம் தருமம்தானா? பிறகு அஸ்வத்தாமன் பழிவாங்க முனைந்து அனைத்துப் பாண்டவ வமிசத்தையும் கொல்கிறான். இறுதியில் பாண்டவர் ஐவர், பாஞ்சாலி, உத்தரை தவிர வேறு எவரும் மிச்சமில்லையாம். போர் என்றால் இப்படித்தான் இருக்கும் – இரண்டு பக்கமும் முற்றிலும் அழியும் என்றுதான் மகாபாரதம் காடடுகிறது.

மக்கள் பாண்டவர் பக்கம் ஐடெண்டிஃபை செய்துகொள்கிறார்கள் என்பது வாஸ்தவம். இன்று ஹீரோக்கள் பக்கம் அடையாளப்படுத்திக் கொள்வதுபோல. நான் பலமுறை யோசித்திருக்கிறேன். எல்லா சினிமாவிலும் வில்லனைக் கொல்லும் முன்பு அவன் அடியாட்கள் அனைவரையும் கதாநாயகன் கொல்லுவான். அது குற்றம் என்று யாரும் சொல்வதில்லை. ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? வில்லன் ஹீரோவின் தாய்/தந்தை/நெருங்கிய ஓர் உறவைக் கொன்றதற்காக இவன் நூறுபேரைக் கொல்வதாகக் காட்டுவார்கள், ஆனாலும் ஹீரோ செய்ததே சரியென்று நிறுவப்படும் (மூளைச் சலவை செய்யப்படும்). இது போலத்தான்…

(உண்மையாக/கற்பனையாக) போரிடும் எல்லாருக்கும் ஒரு கிருஷ்ணன் தேவைப்படுகிறான். அதனால் அவர்கள் எல்லாருக்குமே கீதை தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். போரிடுபவன் காந்தியாக இருந்தால் என்ன, கோட்ஸேவாக இருந்தால் என்ன? இருவருக்குமே தங்களை நியாயப்படுத்த கிருஷ்ணன் தேவைதானே?
தமிழில் (வடமொழியிலும்கூட) நியாயம்-நீதி என்று இரண்டு இருக்கின்றன. அர்ஜுனன் சொல்வது நியாயம். கிருஷ்ணன் சொல்வது வறட்டு நீதி. (இன்றைய கோர்ட்நீதி). நீதியை விட நியாயமே முக்கியமானது.


மகாபாரதச் சிந்தனைகள்-தொடர்கிறது

ஏன் மகாபாரதக் கதையைத் தவிர இத்தனை நூற்றாண்டுகளாகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் வேறு எ‍தையும் கையாளவில்லை என்பது மிகப் பெரிய ஆய்வினை வேண்டுவது. மழை வேண்டுவது, பாரதம் படிப்பது, அதைக் கூத்தாகப் போடுவது எல்லாம் ஒரு தொடர்போல நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் அந்தக் கதைகளை ஒட்டி மக்கள் தங்கள் கற்பனையைச் செலுத்திக் கூத்துப் பாடல்களையும் வசனங்களையும் தாங்களாகவே உருவாக்கி வந்துள்ளனர். உதாரணமாக, நான் வல்லம் (ஆரணி) என்ற ஊரில் ஆசிரியனாக 1969-70இல் பணியாற்றினேன். அது வந்தவாசிக்கும், செய்யாறுக்கும், சேத்துப்பட்டுக்கும் இடையிலுள்ள ஓர் ஊர். இந்த மூன்று ஊர்களுமே பழங்காலத்தில் தெருக்கூத்தின் பயிற்றுமையங்களாகச் செயல்பட்ட ஊர்கள். என்னிடம் படித்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் தானாகவே பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பாடப்படும் கூத்துப் பாடல்களைப் பாடுவான், அவனாகவே இட்டுக் கட்டவும் செய்வான். எல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்துவிட்டது…காரணம் திரைப்படமா, அரசியலா, கூத்து மட்டுமே நடத்தி வாழ்க்கை நடத்த வசதியற்றுப் போனமையா, மாறிவந்த நவீனமயமாக்கலா, ஆபாசக் கலைகளா…என்னத்தைச் சொல்வது?

4. கேள்வி: தமிழில் இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் இருப்பதாக சொல்கிறார்கள்… ஆனால் அதில் நாடகங்கள் பற்றி குறைவாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…. அதை பற்றிய awareness ஏ மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை…. எனக்கு தெரிந்த நாடகங்கள்…. சினிமா மற்றும் TV நாடகங்கள் தான்…

பதில் : எனக்குத் தெரிந்தவரை இன்று இயலைத் தவிர இசை, நாடகத் தமிழ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பகுப்புக்கான நோக்கமும் தெரியவில்லை. உண்மையில் இவை மூன்றையும் தங்கள் மொழியில் கொண்ட ஏராளமான நாடுகள் உள்ளன. அங்கெல்லாம் இப்படி போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இல்லாத இசைப்பாடல்களா, இசையமைப்பாளர்களா, ஆபராக்கள் முதலிய இசைநாடகங்களா, பிற நாடகங்களா? அவர்கள் மூன்றிங்லீஷ் என்று போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கள் தங்கள் போக்கில் இயல்இசைநாடகம் மூன்றையுமே வளர்க்கிறார்கள். நாம் வாய்ப்பேச்சு வீரர்கள். தமிழ்இசை வளரும் வரை, தமிழில் நாடகங்கள் தனித்துறை என்று சொல்லுமளவுக்கு வளரும் வரை, இருப்பது முத்தமிழ் அல்ல, ஒரேஒரு இலக்கியத் தமிழ்தான். முத்தமிழ் என்பது அதுவரை பொய்.

5. கேள்வி: பகவத்கீதை பற்றி உங்கள் கருத்தென்ன?

க பூரணச்சந்திரன்: எந்த ஆய்விலும் பகவத்கீதை நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு மேல் மகாபாரதத்துக்குப் பின் வந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஏனெனில் மகாபாரத காலத்தில் நெகிழ்வாக இருந்த சாதிகள் பகவத்கீதை காலத்தில் முற்றிலும் இறுகிப் போயிருக்கலாம். எனவே பகவத் கீதை சாதிகளை வற்புறுத்தும் ஒரு நூலாகவே அமைந்துவிட்டது.

அது சாதியை வற்புறுத்துகிறது என்பது எனக்கு முக்கியமில்லை. அது அதன் இயல்பு. ஆனால் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கு நடக்கும் விவாதம் ஜாதி பற்றியதல்ல. கடமை பற்றியது. அர்ஜுனன் கேள்வி, முன்னால் இருக்கும் உறவினர் மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்த பல லட்சக்கணக்கான பேர்களையும் தருமத்தின் பெயரால் கொல்வது தகுமா என்பதுதான். கிருஷ்ணன் சொல்லும் பதில் இதற்கு ஏற்புடையதல்ல. அவன் சொல்வது, “எத்தனை பேரானால் என்ன, சொந்தமாக இருந்தால் என்ன, தருமம் (உன் சாதிக்கடமை யான கொல்லுதல்)தான் முக்கியம், ஆகவே கொல்” என்பது. பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும் தாண்டி அது என்ன தருமம், நீதி? தருமம் பற்றி எலலாருக்கும் இருப்பது ஒரு பார்வை தான். (நோஷன்). இது தருமமா, அது தருமமா என்றெல்லாம் ஆராய்ந்து எதையும் நிலைநிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் கேட்டால் எது உண்மை என்பது போலவே, ஆராய முடியாத முடிவற்ற ஒன்றாக இருப்பதுதான் எது தர்மம் (நீதி) என்பதும். (இங்கே தர்மம் என்ற வடசொல்லின் அர்த்தத்தை வைத்து (மதம்) பலபேர் குட்டை குழப்புகிறார்கள்.) நாம் பொதுவான எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற சமூகநீதியைப் பற்றித்தான் பேச இயலும். எல்லாருக்கும் உணவு தேவை. எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் என்பது சமூக நீதி.
கிருஷ்ணன் கூறும் நீதி, சிங்களர்கள் தமிழ் ஈழ மக்களைக் கொன்ற நீதிதான். அல்லது யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று கருதி ஹிட்லர் செய்த நீதிதான்.
mass destruction எதற்கும் பின்னால் கிருஷ்ணனின் நீதிதான் இருக்கிறது.
அதைக் கேள்வி கேட்கும் அர்ஜுனனின் (பொதுமக்களின்) வாயைச் சாமர்த்தியமாக அடைப்பதுதான் பகவத்-கீதை.


மகாபாரதச் சிந்தனைகள்-‍ தொடர்கிறது

கேள்வி 2. ஆமாம் மாமா… இந்த கேள்வியை நான் பிராமண நண்பர் களிடமே கேட்டிருக்கிறேன்… அவர்கள் கூறுவது, வேதத்தில் எங்கும் பிறப்பு அடிப்படையில் சாதி பிரிவுகள் இல்லை என்பதுதான். பின் பிற்காலத்தில் எப்படி பிறப்பு அடிப்படையில் மாறியது…. தற்போதும் ஏன் தொடர்கிறது என்றெல்லாம் தெரியவில்லை…

நீங்கள் கூறியது போல எனக்கும் ராமாயணம் விட மகாபாரதம் பிடிக்கும் தான். மனித இயல்புகளின் சிக்கல்களை காட்டுவதால். என்னுடைய எதிர்ப்பு அதை (மற்றும் சனாதான தர்மம்) மட்டுமே நம் அடையாளமாக மாற்றுவதில் தான் உள்ளது…
உதாரணமாக ஏன் தெருக்கூத்து பாரதத்தை மட்டுமே நம்பி இருந்தது… ஏன் பிற நாடகங்களோ (ஆங்கிலத்தில் Shakespeare முதல் Bernard Shaw வரை இருப்பன போல), பிற இலக்கியங்களோ படைக்கப்படவில்லை?

பதில். வேதத்தில் பிறப்படிப்படையில் சாதி இல்லை என்பது சரி, ஆனாலும் அது ஒரு மூடநம்பிக்கைக் களஞ்சியம்தான். எனினும் சாதிக்கான வேர்கள் அதர்வத்தில் உள்ளன. மூலமின்றி ஒன்று பிறந்து விட்டது என்பது தர்க்கத்திற்கு ஒவ்வாது. சரி, சாதிதான் வேதத்தில் இல்லை என்கிறார்களே, பிறகு அதை விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் மனுதர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? அதில்தான் சாதி பற்றி விரிவான சூத்திரம் வருகிறது.

சாதியின் வேரைத் தேடுவது சநாதனிகளுக்கு ஆபத்தானது, பிறகு இப்போதுள்ள அவர்களுக்கு வசதியான இந்த சாதிமுறையைக் கைவிட வேண்டி வரும். அதனால் அதில் பிடிவாதமாக ஈடுபட மறுக்கிறார்கள்.
தற்போது வரை சாதி தொடர்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இது பிரித்தாளும் சூழ்ச்சிதான். ஆங்கிலேயனாவது மொழி, இன, சாதி போன்ற இருக்கின்ற குழுக்கள் அடிப்படையில் பிரித்தாள்வதைத் தொடங்கினான். ஆரியர்கள் சாதி அடிப்படையிலும் தனிமனித அடிப்படையிலும் பிரித்தாள்வதைத் தொடங்கி விட்டார்கள்.

சாதிகளைப் பிரிக்கும்போதே நீ உயர்ந்தவன், அடுத்துள்ளவன் தாழ்ந்தவன் என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதுபோல, அமைப்புகள். சிலசாதிகள், சிலபேர் மட்டும் பூணூல் அணியலாம் போன்ற சலுகைகள் இத்யாதி. அதனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் கூட உபசாதிகள் தோன்றி நான் பெரியவனா நீ பெரியவனா என்ற ஓயாத போராட்டம்.

முக்கியமாக தலைவிதி-முற்பிறப்பு என்ற இரண்டின் வாயிலாகவும் தனிமனிதர்களைப் பிரித்து விட்டார்கள். உதாரணமாக பக்கத்தில் ஒருவன் கஞ்சியில்லாமல் சாகிறான் என்றால் அவனுக்கு உதவுவதற்கு பதிலாக, அது அவன் தலையெழுத்து, நாம் நன்றாக இருப்போம் என்ற இந்திய மனநிலை. எவன் என்ன செய்தாலும் எங்கு பிறந்தாலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும் அது அவன் தலையெழுத்து என்று தலைமுழுகிவிடலாம்.

மனிதர்கள் எந்த அடிப்படையிலும் ஒன்‍று சேரவே முடியாத ஒரு கோட்பாடு இது. இது அரசுகளுக்கும் ஆள்வோருக்கும் எதிர்ப்புகளையும் கலகங்களையும் சமாளிக்க மிக உதவியாக இருந்ததால் அவர்கள் பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால்தான் இந்தியாவில் புரட்சி வரவே வராது, வரமுடியாது என்று நான் சொல்வதுண்டு. அடுத்தவன் மேல் அபிமானமும் அன்பும், அதன் அடிப்படையில் ஒன்றுசேர்தலும் இருந்தால்தானே புரட்சி வரும்?
ஆனால் நான் முன்பே சொன்னதுபோல இராமாயணம் அளவுக்கு மகாபாரதம் பார்ப்பனர்களின் அடையாளமாக இல்லை. எல்லாச் சாதியினரின் அடையாளமுமாகப் பார்க்கப்பட்டது.
தெருக்கூத்து மகாபாரதத்தை மட்டுமே நம்பியிருந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை இங்கே தொகுப்பது கடினம். ‍அதைப் படித்தால் மழைவரும் என்பன போன்றவை நம்பிக்கை அடிப்படையிலானவை. இன்னும் பல சமூகம் சார்ந்தவை. முக்கியமாகப் பிற சாதியினர் படிக்கலாகாது என்ற பார்ப்பனரின் கட்டுத்திட்டம். அப்படியானால் பிராமணன் மட்டும்தானே நாடகங்களை உருவாக்கவும் எழுதிவைக்கவும் முடியும்? இதுதான் இசையிலும் இப்போது நடக்கிறது.

இயல் மட்டும் தப்பிப் பிழைத்ததன் காரணம், தமிழிலக்கியம் ஆரம்பத்திலிருந்தே வேளாளர் கையில் ‍எடுக்கப்பட்டது, சமஸ்கிருதத்திற்கு எதிரானதாகக் கட்டமைக்கப் பட்டு விட்டது. இசையும் நாடகமும் இயலைவிடப் புரவலர் ஆதரவை வேண்டுபவை. இது ஓரளவு விடைதான். முடிந்தால் போகிற போக்கில் இதற்கான விடையையும் மேலும் தேடவேண்டும்.

மிக முக்கியமான ஒன்று, ஆரியர்கள் தங்களுக்கு எதிரானவற்றை ஒன்று தங்களிடம் ஏற்கெனவே உள்ளதாக உள்வாங்கிக் கொள்வார்கள், அல்லது அதற்கு ஒத்துவராத பனுவலாக இருந்தால் அழித்துவிடுவார்கள். அதனால் சாதியின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வு சிக்கலாகியது. முக்கியமாக சார்வாகம், நாத்திகம், ஆசீவகம் போன்ற எதிர் மதங்களுடைய நூல்கள் யாவும் அழிக்கப்பட்டன. பெளத்தம் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்ததால் இந்த விபத்திலி ருந்து தப்பியது.

நூல்களை அழிக்க முடியாதபோது ஆரியர்கள் ஆட்களையே அழித்துவிடுவார்கள். உதாரணமாக மன்னர்கள் ஆதரவுடன் சமணர்கள் அழிக்கப்பட்டது (தமிழகத்திலும் 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டது) போன்றவை இத்தகையவை. ஆரம்பமுதலே ஆரியமும் சநாதனமும் ஆபத்தானவையாகத்தான் இருந்து வந்துள்ளன. இப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

தமிழ் இலக்கியத்திலும் மருத்துவத்திலும் பிற கலைகளிலும் முக்கியமானவை ஆரியர்களால் அழிக்கப்பட்டன. சித்தமருத்துவம் ஆயுர்வேதம் என்ற வடிவத்திற்குள் கொண்டுசெல்லப் பட்டது. கட்டடக்கலை, சிற்பக்கலை (தமிழகத்தில் ஊர் ஊருக்குக் கோயில்கள் இருந்தன, சிற்பங்கள் இருந்தன, யோசித்துப் பார், இவை பற்றிய நூல் எதுவும் தமிழில் கிடையாது.) நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, மூல நூல்கள் ஒன்று கூட இல்லாமல் அழிக்கப்பட்டன. இப்படி அவர்கள் அழித்ததை எதிர்ப்பதற்கு அறிஞர்களுக்கோ சாதாரண மக்களுக்கோ போதுமான அரசாங்க ஆதரவோ, பணமோ, செல்வாக்கோ எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அரசாங்கமே ‘அவாளுக்கு’ ஆதரவு…எங்கு பார்த்தாலும் அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள்…எல்லாக் கொடையும் பார்ப்பனருக்கே. ஒரு வேளாளனுக்கோ, மருத்துவனுக்கோ, பறையனுக்கோ, வைசியனுக்கோ கொடையளித்ததாக கல்வெட்டு இருக்கிறதா? அவர்கள் யாவரும் வாழப் போராடியாக ‍வேண்டும், அவர்களிடம் வரி பிடுங்கப் படும். ஆனால் இவர்களுக்கு ஊர்களும் நிலங்களும் இனாமாக அளிக்கப் படும், இவற்றுக்கு வரியும் கிடையாது (இறையிலி, வரியிலி நிலங்கள்). வேடிக்கை என்னவெனில், பின்வந்த நவாபுகள்கூட இதே இறையிலி நிலங்களைப் பார்ப்பனருக்கு அளிக்கும் முறையைப் பின்பற்றியிருக்கிறார்கள். படித்தவர்கள் ஆதரவு வேண்டுமல்லவா? தங்களை மட்டுமே படித்த சாதியாக, பிறரைப் படிப்பதற்குத் தகுதியில்லாதவர்களாகக் கட்டமைத்தது பார்ப்பனர்களின் பாரிய சூழ்ச்சிகளில் ஒன்று.


மகாபாரதம் – சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி 1 (கேட்பவர் விவேக்). தன்னுடைய காம இச்சைக்காக சாந்தனு தன மகனான பீஷ்மனை ப்ரஹ்மச்சரிய விரதம் மேற்கொள்ள செய்வது தவறில்லையா? Actually பீஷ்மனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து குலத்தை தழைக்க செய்வது தானே ஒரு நல்ல தந்தைக்கு அழகு/ ஒழுக்கம் ?

பதில் (பூரணச்சந்திரன்). உன் முதல் கேள்வி மிகவும் ஏற்புடையது. இந்த நியாயமான கேள்விக்கு பதில் கிடையாது. சத்யவதி மாதிரி கீழ்ச்சாதிப் பெண்களை நினைத்தால் அந்தக்கால அரசர்கள் ஒரு நொடியில் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள முடியும். (இப்பொழுதே உ.பி.யில் அப்படித்தான் நடக்கிறது). இவனும் அப்படியே செய்திருக்கலாம். அப்படியிருக்கும்போது இது ரொம்ப மிகையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இதற்காக ஒரு தேவதைக்கதை படைக்கப்படுகிறது.

அவள் சேதிநாட்டரசனின் மகள். மீன்வடிவ அப்சரஸ் ஒருத்தியை அவன் காதலித்ததால் மீன்நாற்றத்துடன் பிறந்து மச்சகந்தி எனப் பெயர் பெற்றவள். ஆனால் அவளுக்கு வியாசனை திருமணத்துக்குப் புறம்பான பந்தத்தில் கொடுத்த பராசர முனிவன் ஒரு யோசனை தூரம் அவள் உடலிலிருந்து நறுமணம் வீசுமாறு ‍செய்கிறான். அதனால் யோஜனகந்தி என்ற பெயர் பெறுகிறாள். பல காத தூரம் நறுமணம் வீசக்கூடிய உடலைப் பெற்ற ஒருத்தி சாதாரணப் பெண்ணாக இருக்கமுடியுமா? அதனால் அவள் (பின் வரப்போவதை அறியாமல்) “கண்டிஷன்” போடுகிறாள். (இங்குதான் காவியத்தின் அற்புதம் ஆரம்பிக்கிறது. a beautiful irony. எந்தப் பிள்ளைகளின் வம்சம் தழைப்பதற்காக பீஷ்மனை பிரம்மச்சாரியாக இருக்கச் சொல்கிறாளோ, அந்தப் பிள்ளைகள் அற்பாயுசில் மாண்டு போகிறார்கள். பீஷ்மனையும் பிரம்மச்சாரி ஆக்கிவிட்டதால் உதவாமல் போகிறான். திருமண உறவுக்கு முன் மற்றொருவனிடம் பெற்ற அவளது முதல்பிள்ளை வியாசன்தான் கெளரவ வம்சத்தை உருவாக்கவேண்டி வருகிறது.)
எப்படியிருப்பினும் சத்யவதி செய்ததும், சாந்தனு செய்ததும் தவறுகள்தான். ஆனால் அந்தத் தவறுகளில்தான் கதை தொடங்குகிறது. கதையின் தொடக்கத்தில் தவறுகளும், நம்பத்தகாத விஷயங்களும் இடம் பெறலாம் என்ற நோக்கில் இது ஏற்கப்படுகிறது.
இந்தத் தவறுகளின் விளைவுதான் (‍பெற்றவர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை பாதிக்கும் எனப் படுகிறது) வியாசனின் முதல் மகன் குருடனாகப் போவதும், இரண்டாவது மகன் தோல்நோய் (பாண்டு) பீடித்தவன் ஆவதும். மூன்றாவது மகன் அரச பரம்பரை அல்லாதவன் ஆவதும் (விதுரன்).

அந்தக் காலப் பழக்க வழக்கங்கள் பலவற்றை இது எடுத்துக் காட்டுகிறது. ஓர் அரசனுக்குப் பிள்ளை இல்‍லை என்றால் வேறு எவனிடமாவது அவன் பெண்டாட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதாவது தாய்வழிச் சமூகமாக இருக்கிறது. ஆனால் அரச வம்சத்தைச் சேராதவர்கள் (விதுரன் போன்றோர்) அரசனாக முடியாது…

சுயம்வரத்தில் மணாளனைத் தேர்வு செய்வதும், பாஞ்சாலி ஐந்து பேரை மணப்பதும் தாய்வழிச் சமூக வழக்கங்கள்தான். ஆகவே பாரதம், தந்தை வழிச் சமூகம் முற்றிலும் உருவாகாத ஒரு காலத்தைக் காட்டுகிறது என்றுதான் தோன்றுகிறது. இதிலேயே உன் கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. தாய்வழி கொண்ட அந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது என்றால், சந்தனு தன் மனைவியை (எதிர்கால ராஜமாதாவை) எவ்வளவு ‍எச்சரிக்கையுடன் ‍தேர்ந்தெடுக்கவேண்டும்? அதுவும் ராஜவம்சத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே ஆளவேண்டும் என்பதால்? ஆகவே இரண்டாவது அதீத சக்தி பெற்ற ஓர் இளம் பெண் கிடைக்கிறாள் என்னும்போது முதல் மனைவி பெற்ற மகனை பலிகொடுத்துவிட்டான் சாந்தனு.

ஒரு வேடிக்கையை நீ கவனிக்கவேண்டும். இராமாயணத்தை உருவாக்கியவன் வால்மீகி என்ற வேடன். மகாபாரதத்தைத் தொகுத்தவன் வியாசன் என்ற மீனவப்பெண் வயிற்றில் பிறந்த கீழ்ச்சாதிக்காரன். ஆனால் இந்தச் சாதிகளெல்லாம் மட்டும் பார்ப்பனர்களுக்கு ஆகவே ஆகாது. இது எப்படி? இவ்வளவு அறிவாற்றல் கொண்டவர்களாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்களால் தங்களுக்கென தங்கள் சாதியால் ஒரு இதிகாசத்தை உருவாக்க முடிந்ததா?


மகாபாரதம் – சில எண்ணங்கள்

கேள்வி – பதில் வடிவத்தில்…

கேள்விகளுக்கு ஒரு முன்னுரை (கேட்பவர் விவேக்): மகாபாரதம் தான் இந்திய கலாச்சாரத்தின் (தமிழ்நாடு உட்பட) ஆகப்பெரிய படைப்பு என்பது போன்ற பிம்பம் இன்று உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம். மகாபாரதக் கதையை ஆய்வு செய்து பார்த்ததில் அது ஒரு சாதாரணப் பழிவாங்கும் கதையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. இவாளெல்லாம் கூப்பாடு போடுவது போல பெரிய ஒழுக்கப் பண்புகள் கூட அதில் இருப்பதாக தெரியவில்லை. அதன் தொடர்ச்சியாகவே எனக்கு தோன்றிய சந்தேகங்களை கீழே தொகுத்துள்ளேன்.

பதில் (பூரணச்சந்திரன்) : மகாபாரதத்தில் எனக்கு ஒரு நிறைவு உண்டு. இராமாயணம் போல ‘உயர்ந்த’ ‘இலட்சியத் தலைவனைக் கொண்ட’ என்று வேஷம் போட்டுக் கொண்டு அது வரவில்லை. சாதாரண மக்களை, உள்ளது உள்ளது போல குற்றம் குறைகளுடன் படைப்பதில் அது இன்றைய நாவல் களை ஒத்துள்ளது. அதுதான் அதன் சிறப்பு. மகாபாரதத்தில் கண்ணன், பீஷ்மர் உள்பட எவனும் சிறந்தவனும் இல்லை, தலைவனும் இல்லை. எல்லாம் குறைகள் கொண்ட மனிதர்களே. கிருஷ்ணன் கீதை உரைத்ததும் அவன் இறைவன் அவதாரம் என்பதும் பின்னால் (நான்கைந்து நூற்றாண்டுகளேனும்) பின்னால் சேர்க்கப்பட்டது. அதனால் உன் முன்னுரையை பரிசீலிக்கலாம் என நினைக்கிறேன். மகாபாரதத் கிருஷ்ணன், துவாரகை நகரத்தைச் சேர்ந்த ஓர் இடையன். சாதாரண மனிதன்.
மகாபாரதம் போன்ற காவியங்களைப் படிக்கும்போது காவியப் பாத்திரம் இறைவன் என்று சொல்லி, அவன் செயல்களாக நிறைய இடைச் செருகல்கள் இருக்கும். அவற்றை ஒதுக்க வேண்டும். முதலில் நாம் அற்புதச் செயல்கள் தவிர்த்த நமக்கான ஒரு Plotஐ உருவாக்க வேண்டும். பிறகுதான் ஆய்வு செய்ய முடியும். இறைவன் செயல்களையோ, அற்புதச் செயல்களையோ யாராவது ஆய்வு செய்ய முடியுமா? நம் உச்சநீதிமன்றம் போல “நம்பிக்கை” என்று சொல்லிவிடுவார்கள்.
பார்ப்பனர்கள் இதை உயர்த்திப் பிடிப்பதில்‍லை. இராமன், சீதை பெயரை எல்லாம் வைத்துக் கொள்ளும் பிராமணர்கள் யாராவது தருமன், அர்ஜூனன், பீமன், திரெளபதி என்றெல்லாம் பெயர்வைத்துப் பார்த்திருக்கிறாயா? (கிருஷ்ணன் விதிவிலக்கு-கடவுள்). உண்மையில் மகாபாரதப் பெயர்கள் எல்லாம் கீழ்ச் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெயர்கள். அதுவே அதன் பண்பை எடுத்துக் காட்டுகிறது.

தலித்துகள் நிறையப்பேர் அர்ஜுனன், பீமன், திரவுபதி என்று பெயர் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். திரவுபதி கீழ்ச்சாதிகள் வணங்குவதற்கென்று ஒதுக்கப்பட்ட கடவுள். நம் ஊரில் எல்லாம் கூட திரவுபதி கோயில் உண்டு. அவளும் ஒரு அம்மன் ஆகிவிட்டாள். திரவுபதி கோவிலில் சாதாரண மக்கள் பொங்கலிட்டு கூழ் ஊற்றுவதைப் பார்த்திருக்கலாம்.
அற்புதச் செயல்கள் தவிர்த்த ‘நமக்கான ஒரு பிளாட்’ என்பது முக்கியம். உதாரணமாக கிருஷ்ணன் திரவுபதிக்காக சேலையை வானத்திலிருந்து அனுப்பியதை அப்படியே ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்? சபையிலிருந்த சாதாரண மக்கள் சிலர் சேலை கொடுத்து திரவுபதியைக் காப்பாற்றிய செயலாக இதைக் கொள்ளலாம். ஏனென்றால் ஆள்பவர்களைவிட ஆளப்படுபவர்களுக்கு மனிதாபிமானம் நிறைய உண்டு.

அதேபோல, அர்ஜுனனுக்கு சிவபெருமானே வேடன் வடிவத்தில் வந்து பாசுபத அஸ்திரம் கொடுத்தார் என்பது பாரதக் க‍தை. உண்மையில் ஏகலைவன் (ஏக-லவ்யன்) என்ற வேடன் அர்ஜுனனை விட அதி வில்வீரனாகத் திகழ்ந்திருக்கிறான். (அதனால் கட்டைவிரலை ஒரு பிராமணனுக்கு பலி கொடுக்க வேண்டிவந்தது.) அதனால் வில்வித்தையில் சிறந்த ஒரு வேடனே (மனிதனே) அர்ஜுனனுக்கு அஸ்திரம் வழங்கியிருக்கிறான் என்றே கொள்ளவேண்டும்.


பாரதத்தை நான் போற்றுவதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது மக்கள் கதை. என் காலம் வரை மகாபாரதக்கதை மேமாதத்தில் (கோடையில்) மழை வேண்டி கிராமப்புறங்களில் வாசிக்கப்படுவதும், கதாகாலட்சேபம் செய்யப்படுவதும் உண்டு. அன்றன்று (மதியம் 2 முதல் 5 வரை) நடத்திய பாரதக் கதையை இரவில் 10 மணிக்கு மேல் கிராமங்களில் கூத்துத்திடல்களில் ஆட்டமாக (தெருக்கூத்தாக)ப் போடுவார்கள். மக்கள் விடியவிடிய அவற்றைப் பார்ப்பது வழக்கம். இந்தச் சிறப்பு இராமாயணத்துக்குக் கிடையாது.
நான் திமிரியில் 1957 முதலாகப் படித்தபோது, அங்கு பாரதக்கதையும் தெருக்கூத்தும் தவறாமல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது.
மகாபாரதக் கதையை என்று கிராமங்களில் போடுவதை நிறுத்தினார்களோ, அன்றே தெருக்கூத்துக் கலை அழிந்து விட்டது.


20 Questions to Ask Yourself at The End of Every Week

20 Questions to Ask Yourself at The End of Every Week
By: Natalie Smith

Once a week, we should all take a moment and pause our daily lives, to breathe deeply and think about the big picture, the essential things in life. The following questions are a great way to capture new goals and achieve success in your personal and professional life, all you have to do is just answer them honestly to yourself.
1. What did I learn this week? If it is difficult for you to answer this question, it is time for a change. No matter how old you are you should be learning something new every week.
2. What was my greatest achievement this past week? Writing your achievements is a healthy and easy way to raise your self-confidence, set new goals for yourself and track your progress.
3. What is the most memorable moment of the past week? In this way you can open your mind to new goals and desires you didn’t know were burning within you. It’s also a great way to keep good memories for the future.
4. What is the first thing I have to accomplish next week? Setting an initial goal will help you distinguish between what’s important and what isn’t when it comes to your task list, and also give you a new angle on things you may not have noticed before.
5. What can I do right now to make next week less stressful? Whether it’s jotting down reminders, filling up gas, or putting in a good workout, consider how you can spend a little time this week to make time next week.
6. What have I struggled with in the past that could help me this week?The idea behind this question is to think about what you’ve learned from the mistakes and challenges of the past that can serve you for the future. You might be surprised to discover that many times in the past you’ve dealt with problems similar to the problems you face in the present.
7. What was my biggest distraction this past week?Just knowing what you spent most of your time (physically and mentally) in the past week can bring you to a state where you think twice before you fall into the same distraction next week.
8. Am I carrying baggage from the previous week with me into the coming week?Whether it’s an emotional storm, unfulfilled errands or other kinds of “baggage”, there are many things we carry with us that can be left behind to start the new weak on a clean new page.
9. What task did I progress in this week?It does’t matter whether it’s personal professional, we all avoid “annoying” tasks. It’s time to stop dodging them and finish what you have to do. If these tasks take 20 minutes or less, schedule them in for next Sunday, and if they take longer, schedule them in throughout the week and commit to doing them.
10. What opportunities are on the table?If you have an opportunity that is just waiting for you to pick up, decide that this week is the time. Plan everything from the execution plan to the timetable. Remember – if opportunities were given over and over, they wouldn’t be called “opportunities”.
11. Is there anyone I intended to talk to and didn’t this last week?Communication is the basis for solving problems even before they start, don’t give up a healthy conversation with those around you, and contact with old friends or relatives.
12. Is there anyone who deserves thanks from you?When you invest thought in your week, think of the people who helped you. Gratitude is the most important thing in human relationships, so show others that you care about them. As you would probably want to hear thanks for your actions, make sure to show your friends your appreciation.
13. How can I help someone in the coming week?The best way to get what you want is to help others achieve what they want. It isn’t a matter of hidden interest or hypocrisy, but of courtesy that brings with it courtesy.
14. What are my top 3 goals for the next 3 years?In order to advance in life, you must set realistic goals for the long-term and meet them. Remind yourself every week what it is you want to accomplish, and where you want to go.
15. Did my last decision bring me closer to achieving these goals?If the answer to this question is no, you probably need to rethink your decisions.
16. What is the next step in achieving the ultimate goal?In order to reach a big goal, it must be divided into small stages. Each week, ask yourself what step you need to take next.
17. What am I looking forward to this coming week?The answer to this question will fill you with motivation for the new week, and make the week more meaningful. If you don’t have an answer to this question, make fun plans with friends, family or just yourself, anything that’ll have you looking forward to the week.
18. What am I afraid of?Recognizing your fears, again and again, every week is a slow progression towards overcoming them. With small steps at your fingertips, you can finally conquer the thing you are afraid of.
19. What am I most thankful for?To be thankful for things in your life is a great way to stay in perspective, give up resentment and remember what really matters.
20. If this was my last week on earth, what would I do? This is a small reminder of how short life is, and that you should spend some time this week with your favorite people.


மதம்

உங்கள் கருத்தில் மதம் என்றால் என்ன?

இக்கேள்வியை நிறையப் பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதனால்தான் கேள்வி-பதில் முறையில் இதைச் சொல்ல முனைந்தேன்.
மதம் என்பதற்குப் பிடிவாதமான, அசைக்கமுடியாத நம்பிக்கை அல்லது கருத்து என்று அர்த்தம். ஆங்கிலத்தில் Dogma என்று சொல்வதற்கு ஒப்பானது இது. அதனால்தான் வள்ளலார் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றார். பல இடங்களிலும் இவ்வாறு மதத்தைச் சாடியிருக்கிறார்.
இன்றுள்ள எல்லா மதங்களும் வெறும் Faith என்று சொல்லக்கூடிய விசுவாசமாக மட்டும் இல்லை. அவை ‘டாக்மா’க்களாகத்தான் இருக்கின்றன. இதற்கு இந்து மதம் பற்றி வடமாநிலங்களில் நிலவும் மனப்பான்மையே நல்ல உதாரணம்.
வடமொழியிலும் இந்தியிலும் மதம் என்பதைக் குறிக்க ‘தர்மம்’ என்ற சொல்லைக் கையாள்கிறார்கள். தர்மம் என்பதற்குத் தமிழில் நாம் கொள்ளும் அர்த்தப்படி நோக்கினால் இந்து தர்மம் என்று சொல்வது தவறு. மதத்துக்கும் அறத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
என் சான்றிதழில் என் மதம் இந்து என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும், நான் இந்து அல்ல. எனக்கு மதம் கிடையாது, சமயம் என்ற ஒன்று கிடையாது என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். இன்றைய இந்து மதம் செல்லும் போக்கில் எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை. கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் ஆகியவை ‘டாக்மேடிக்’ மதங்கள். அதாவது பிடிவாதமான மதங்கள். திருமணம் செய்தாலும் கூட நீங்கள் தான் கிறித்துவராகவோ முஸ்லிமாகவோ ஆகவேண்டுமே தவிர அவர்கள் இந்துவாக மாட்டார்கள். அதனால்தான் ‘டாக்மேடிக்’ என்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதம் தளர்ச்சியான, ‘எந்தச் சாமியையும் நீ கும்பிடலாம்’, ‘கும்பிடாமல் நாத்திகனாகவும் இருக்கலாம்’ என்று சொல்கின்ற மதமாகத்தான் அது இருந்திருக்கிறது. இப்போது வடநாட்டு ‘டாக்மேடிக்’ தன்மையை இங்கு புகுத்தப் பார்க்கிறார்கள். கூடவே சமஸ்கிருதத்தையும், இந்தியையும். இதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.
நான் கோயிலுக்குச் செல்வதில்லை. கடவுளைக் கும்பிடுவது என்ற செயல் ஒருபக்கம் பிடிக்காதிருந்தாலும், அங்கு நிகழும் சுரண்டலும், பார்ப்பனிய மேலாண்மையும், பணத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும் தன்மையும் எனக்குச் சற்றும் ஒவ்வாதவை. மிக இளமையிலிருந்தே இந்த மனப்பான்மை எனக்கு வருவதற்கு என் தந்தையும் என் சித்தப்பாக்களும்தான் காரணம்.